வெள்ளி, 16 டிசம்பர், 2016

நிம்மதியை சீர் குலைத்துள்ள புத்த குருவின் அடாவடித்தனம்.

நிம்மதியை சீர் குலைத்துள்ள புத்த குருவின் அடாவடித்தனம்.

இரண்­டா­வது தட­வை­யா­கவும் மட்­டக்­களப்பு மங்­க­ள­ரா­மய விஹாராதிபதி சுமண ரத்ன தேரர் ஆரம்­பித்­துள்ள அடா­வ­டித்­தன நட­வ­டிக்கை கடந்த கால யுத்தச் சூழ்­நி­லையால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கில் பகு­தி­களில் வாழ்ந்த மூவின மக்­களின் மீள் குடி­ய­மர்வுப் பணி­களில் எதிர்­கால – தற்­கால நிம்­ம­தியை குழப்­ப­ம­டையச் செய்­துள்­ளது.
1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலை­ய­கத்­தி­லி­ருந்து விரட்டியடிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் மட்­டக்­க­ளப்பு, வவு­னியா போன்ற இடங்­களில் குடி­யே­றியபோது புனா­ணை­யி­லி­ருந்தும் இர­வோடு இர­வாக விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டார்கள்.
உடல்நிலை பூரண சுகம் இல்­லாத நிலையில் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அநீ­தி­க­ளுக்­காக தன்­னையே அர்ப்­ப­ணித்து, அமரர் தொண்­டமான், அமரர் தேவ­நா­யகம் சகிதம் மட்­டக்­க­ளப்­பிற்கு நேர­டி­யா­கவே வருகை தந்­தவர் அமரர் தந்தை செல்­வ­நா­யகம்.
நாட்­டிலே இடம்பெற்ற யுத்தச் சூழ்­நிலை கார­ண­மாக வடக்கு, கிழக்கு பகு­தி­யிலே ஒற்­று­மை­யுடன் வாழ்ந்த மூவின மக்கள் மத்­தி­யிலே ஏற்­பட்ட விரிசல், இடப்­பெ­யர்­வுகள், மீள்குடி­யேற்­றங்கள் விட­யத்­திலே இது வரை­யிலும் இடம்­பெற்ற உயி­ரி­ழப்­புக்கள் ஈடு செய்ய முடி­யா­த­வை­யாகும்.
நல்­லாட்சி அரசு ஆட்­சிக்கு வந்­துள்ள போதிலும் மூவின மக்­க­ளு­டைய நிம்­மதி நிலை­பெ­றா­த­துடன், வரு­மா­னமும் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலையே விசே­ட­மாக வடக்கு, கிழக்கு மூவின மக்­க­ளு­டை­ய­தாக இருந்து வரு­கி­றது.
யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய நிலைமை இன்றுவரையில் முழு­மை­யாகச் சீர­டை­யாத நிலை­யிலே பலன் தந்த மா, தென்னை, பலா போன்ற மரங்­க­ளையும் மற்றும் பழைய வீடு, கிணறு, மல­ச­ல­கூடம் என்­ப­வை­க­ளையும் காட்டு யானைகள் சேதப்­ப­டுத்­து­வதும் மீள்குடி­ய­மர்ந்த மக்­களின் உயிர்­களை காவுகொள்­வதும் மற்­று­மொரு துக்­க­க­ர­மான சம்­ப­வ­மாகும்.
யானை­யினால் ஏற்­ப­டு­கின்ற உயிராபத்­துக்கள் ஒருபுற­மி­ருக்க மறு­பு­றத்தில் மட்­டக்­களப்பு பிர­தேச ஆற்­றிலே என்­று­மில்­லா­த­வாறு இராட்­சத முத­ல­லை­யி­னாலும் உயிர் ஆபத்­துக்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன,
மட்­டக்­க­ளப்பு ஆற்­றிலே மீன்­பி­டித்துக் கொண்­டி­ருந்த ஒரு பிள்­ளையின் தந்­தையை இராட்­சத முதலை இழுத்துச் சென்ற சம்­பவம் கடந்த வரும் இடம்­பெற்­றுள்­ளது. ஒரு பிள்­ளையின் தந்­தை­யான இவர் இன்றுவரை­யிலும் வீடு திரும்­ப­வில்லை,
இதன் கார­ணத்­தினால் ஆற்­றிலே மீன்பிடித்­தொ­ழிலை மேற்­கொள்ளும் மீனவர்கள் தனி­யாக ஆற்­றுக்குச் செல்­வ­தில்லை. தோணி மூலம் இரு­வ­ரா­கவே தமது தொழி­லுக்கு செல்லும் நிலை உரு­வா­கி­யுள்­ளது,
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தைப் பொறுத்­த­மட்­டிலே இங்கு வாழ்­கின்ற மக்­க­ளு­டைய பிர­தான தொழில் விவ­சாயம், மீன்­பிடி. இவற்­றிலே கடற்­தொழில், ஆற்றுத்தொழில் என இரு­வ­கை­யா­க­வுள்­ளது. ஏனை­ய­வர்­க­ளு­டை­யது வியா­பாரம், அரச தொழில், கைத்­தொழில், கூலித் தொழில் என்­ப­ன­வாகும்.
கடந்த கால யுத்தச் சூழ்­நி­லை­யினால் விவ­சாயம், வீடுகள், கிண­றுகள், மல­ச­லக்­கூடம் என்­பன பாதிக்­கப்­பட்ட நிலையில் மறு­புறத்தில் மட்­டக்­க­ளப்பு அரச உத்­தி­யோ­கத்­தர்கள், இது­வ­ரை­யிலும் உரிய ஆவ­ணங்­க­ளுடன் விண்­ணப்­பித்து பல வரு­ட­கா­ல­மாக நஷ்டஈடு கிடைக்­காமல் ஏமாற்­றத்­துடன் காத்­தி­ருக்கும் ஓய்வுபெற்ற உத்­தி­யோ­கத்­தர்கள் மறு­புறம் கவ­லை­யுடன் வாழ்­கின்­றனர்.
ஆட்சிமாற்றம் ஏற்­பட்டு அர­சியல் மூலம் புதிய முன்­னேற்றம் மக்­க­ளுக்கு ஏற்­பட்டு விடும் என்ற ஆவலும் தற்­பொ­ழுது மட்­டக்­க­ளப்பில் திடீ­ரென ஏற்­பட்­டி­ருக்­கின்ற அடா­வ­டித்­தன நட­வ­டிக்­கையும், வித்­தி­யா­ச­மான அறிக்­கை­களும் நிம்­ம­தி­யாக வாழ்ந்த மக்­க­ளு­டைய வாழ்வில் இருளை ஏற்­ப­டுத்­து­வதும் காலத்­திற்குக் காலம் ஏற்­ப­டு­கின்ற தொடர் கதை­யா­க­வுள்­ளது.
மட்­டக்­க­ளப்­பிலே 1990 ஆம் ஆண்டு அசா­தா­ரண சூழ்­நிலை ஏற்­பட்ட வேளை­யிலே வந்­தா­று­மூ­லை­யி­லுள்ள கிழக்குப் பல்­க­லைக்­க­ழகம் அக­தி­மு­க­மா­க்கி­யது. இந்த முகாமில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தத்­தினால் இங்கு அக­தி­யாக இருந்­த­வர்­களில் 159 பேர் இன்று வரையில் எங்கே என்று கூடத் தெரி­யாத நிலை உள்­ளது.
வந்­தா­று­மூ­லை­யி­லுள்ள கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் 1990 ஆம் ஆண்டு இயங்­கிய அக­தி­மு­காமில் தஞ்­ச­ம­டைந்த மக்­களில் நல­னுக்­காக இங்கே கட­மை­யி­லி­ருந்த சித்­தாண்டி ஆறு­முகம் வைத்­தி­யரின் மூத்த மகன் செல்­வ­ராசா (தளவாய் கிராம சேவை­யாளர்), வந்­தா­று­மூலை சி.தணி­கா­சலம் (கர­டி­ய­னாறு கிராம சேவை­யாளர்) இவர்கள் இரு­வரும் கடத்­தப்­பட்டு இன்று வரையில் எங்கு இருக்­கி­றார்கள் என்றே தெரி­யாது.
கடந்த 1990 ஆம் ஆண்டு அசா­தா­ரண சூழ்­நி­லையின் போது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே கட­மை­யாற்­றிய 27 கிராம சேவை­யா­ளர்கள் இறந்துபோனார்கள். இவை­த­விர, முதுமை தள­ராமல் சேவை­யி­லி­ருந்து எது­வி­த­மான பதவி உயர்வும் சம்­பள உயர்­வு­க­ளு­மின்ற சேவை­யி­லி­ருந்து குறைந்த சம்­ப­ளத்­துடன் ஓய்வுபெற்றுச் சென்றுவிட்­டார்கள். உயிர் பாது­காப்­பிற்­காக சேவை­யி­லி­ருந்து எவ­ருக்கும் சொல்­லாமல் வெளி­நா­டு­க­ளுக்கும் சென்றுவிட்­டார்கள்.
பொதுச்­சே­வைகள் ஆணைக்­குழு
இவ்­வாறு தொழிலை விட்ட கிராம சேவை­யா­ளர்கள் மீண்டும் தமது சேவை­யினைத் தொடர்ந்து ஓய்வுபெற­ வி­ரும்­பினால் அல்­லது ஒப்­பந்த அடிப்­ப­டையில் சேவை செய்ய விரும்­பினால் உரிய ஆவ­ணங்­க­ளுடன் பிர­தேச செய­லாளர் மற்றும் மாவட்ட அர­சாங்க அதி­பரின் சிபா­ரிசு ஊடாக அர­சாங்க பொதுச் சேவைகள் ஆணைக்­கு­ழு­விற்கு விண்­ணப்­பிக்க வேண்டும்.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே கல்­குடா, மட்­டக்­க­ளப்பு, பட்­டி­ருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகு­தி­க­ளிலும் 14 பிர­தேச செய­லகப் பிரி­வுகள் உள்­ளன. இவை­க­ளிலே 345 கிராம சேவை­யா­ளர் பிரி­வுகள் உள்­ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள