புதன், 11 ஜனவரி, 2017

பொது அறிவுத் தொடர் 04


பொது அறிவுத் தொடர்  04

01.# அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்போலிக்கால்கள்

02.# வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதுஹார்மோன்கள்

03.# புவி நாட்டம் உடையதுவேர்

04.# இடப்பெயர்ச்சி அடையும் தாவரம்வால்வாக்ஸ்

05.# டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம்புகையிலை

06.# ரேபிஸ்வைரசினால் உண்டாகிறது.

07.# முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வதுஹைடிரா

08.# நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டுகிளாமிடோமானஸ்

09.# மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரிபிளாஸ்மோடியம்

10.# அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டுமண்புழு

11.# தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள்ஆர்.என்.

12.# எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ்எச்ஐவி

13.# பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம்தந்தித் தாவரம்

14.# இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்ஹீமோகுளோபின்

15.# தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டுயானை

16.# ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டுசிங்கம்

17.# அனைத்து உண்ணிக்கு உதாரணம்மனிதன்

18.# விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டதுஅமீபா

19.# ஒட்டுண்ணி உணவூட்டம் உடையதுபிளாஸ்மோடியம்

20.# அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையதுபிளாஸ்மோடியம்

21.# சக்தி தரும் உணவுச் சத்துகார்போஹைட்ரேட்

22.# தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல்முதல் வகை நெம்புகோல்

23.# நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்ஆர்க்கிமிடிஸ்

24.# எதில் நிலையாற்றில் உள்ளதுநாணேற்றப்பட்ட வில்

25.# பற்சக்கர அமைப்புகளின் பெயர்கியர்கள்

26.# புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம்பிரையோஃபில்லம்

27.# ஆடு ஒரு தாவர உண்ணி

28.# தற்சார்ப்பு உணவூட்டம் என்பதுதானே தயாரித்தல்

29.# தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல்வேதி ஆற்றல்

30.# விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவதுசூரிய மின்கலம்

31.# விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.

32.# செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.

33.# செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.

34.# செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.

35.# தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு

36.# விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை

37.# தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு

38.# விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.

39.# தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை

40.# விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.

41.# தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.

42.# விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.

43.# கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்.

44.# கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.

45.# தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.

46.# குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமிகுளோரோஃபில்பச்சை நிற நிறமி.

47.# குளோரோபிளாஸ்ட் பணிதண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.

48.# குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின்ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில்மஞ்சள் நிற நிறமி.

49.# குரோமோபிளாஸ்ட் பணிபூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்

50.# லியூக்கோபிளாஸ்ட் பணிதாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.

51.# செல் ஒவ்வொன்றும் ஒரு குட்டித்தொழிற்சாலை போன்றது.

52.# நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.

53.# மிகவும் நீளமான செல் நரம்புசெல்

54.# நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்

55.# இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்குசெல்கள் ஆகும்.

56.# விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் ஆகும்.

57.# விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.


மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல்!


மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல்!

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது அப்பகுதியில் அத்துமீறி விகாரை அமைத்திருக்கும் பௌத்த பிக்குகள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்னையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதனை நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீதிமன்றத்தின் ஊடாக மகாவலி அபிவிருத்தி சபை பிறப்பித்துள்ள போதும், குறித்த பகுதியில் இன்னும் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரை ஒன்றும், அதனை சுற்றி சில சிங்கள குடியேற்றங்களும் காணப்படுவதாக பண்னையாளர்கள் கூறியுள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று மாடு மேய்த்துக்கொண்டிருந்த வந்தாறுமூலை சித்தாண்டி பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று பண்னையாளர்கள் மீது அவ்விடத்திற்கு வருகை தந்து அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையின் விகாராதிபதியும் அவருடன் வருகை தந்த ஏனைய இரு பௌத்த பிக்குகளும் சேர்ந்து அந்த பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என கூறி கண்ணத்தில் அறைந்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக, தாக்குதலுக்கு உள்ளான குமாரசாமி பேரின்பம் என்பவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மூன்று பண்னையாளர்கள் மீது குறித்த பௌத்த பிக்குகள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அடியை வாங்கிக்கொண்ட மூன்று பண்ணையாளர்களும் இன்று இரவு வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும்,சம்பவம் குறித்து கிழக்குமாகாண விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளதுடன், நாளைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்தது என்ன...? பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகவும் கூறமுடியாது..! சம்பந்தன் விளக்கம்


தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்தது என்ன...? பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகவும் கூறமுடியாது..! சம்பந்தன் விளக்கம்


கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க பாரிய வாக்குகளை எமது மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள்.
அதற்கு காரணம் நாங்களும் இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போல் மதிக்கப்பட வேண்டும். நாங்களும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். எமது சுய மரியாதையும் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த விடயங்களை எதிர்பார்த்தே தமது வாக்குகளை வழங்கினார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருங்கிணைப்பு நல்லினக்க அமைச்சின் ஏற்பாட்டில் நல்லிணக்க வாரம் இன்று கொழும்பு விவேகாநந்தா தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இரண்டு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தற்பொழுது அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாங்களும் அதனையே எதிர்பார்க்கின்றோம்.
சர்வதேசத்தின் மதிப்பை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
சமாதானத்தை ஏற்படுத்த இந்த நாட்டின் அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எமக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிட்டதாக நாம் கூற முடியாது. பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஆடசியாளர்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு வித்தியாசத்தை நாங்கள் அவதானிக்கின்றோம்.
இந்த பிரச்சினைகளை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தீர்க்க எத்தனிக்கின்றார்கள்.
பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாவிட்டாலும் கூட அதற்கான எமது ஒத்துழைப்பை நாம் வழங்காமல் இருக்க முடியாது. ஏனென்றால் நாங்களும் இதில் ஒரு பங்காளிகள்.
எமக்கு இதில் முக்கிய ஒரு பங்கு இருக்கின்றது. அந்த பங்களிப்பை செய்ய நாம் பின்நிற்க கூடாது. காணாமல் போனோர் தொடர்பாக விரைவில் ஒரு முடிவு வர வேண்டும்.
நீண்ட நாட்களாக இது தொடர்பாக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் ஒரு அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எங்கள் மக்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்.
அந்த மக்களுடைய வாழ்ககையில் ஒரு நிம்மதி ஏற்பட வேண்டும். ஒரு சமாதானம் ஏற்பட வேண்டும். அவர்களுடைய மனதில் ஒரு சாந்தி ஏற்பட வேண்டும். அவர்கள் நடந்த உண்மையை அறிய வேண்டும்.
இந்த விடயத்தில் அரசாங்கம் காலத்தை வீணடிக்காது செயற்பட வேண்டும் என நான் கருதுகின்றேன். எமது மக்களுக்கு சொந்தமான காணிகள் இன்னும் கொடுக்கப்படவில்லை.
அவர்களின் விவசாய நிலங்கள் அவர்களுக்கு கையளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த விடயங்களில் தற்பொழுது படிப்படியாக முன்னேற்றம் ஏற்படுகின்றது. ஆனால் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.