சனி, 29 ஜனவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்:-1



விஜயவமிசகாலம்.
க. அதிகாரம்.
இதன் முற்பகுதியைப் படிப்பதற்கு இங்கு செல்லவும்.
(விஜயராஜன் வந்தது முதல்; முத்த சிவ ராஜன் ஆண்டது பரியந்தம்)
 இச் சரித்திரத்தை செவ்வொழுக்காய் நடத்தி முடிக்கவேண்டி,இலங்கைக்கு
(wijayo ) விஜயராஜன் வந்தமையை, ஆதி சம்பவமாகக் கொண்டு சொல்லுவாம்.

இவ்வரசனுடைய பிறப்பை ஆராயுமிடத்து,தந்தை வழி,வங்க நாட்டு அரச
குலமென்றும், தாய் வழி,கலிங்க நாட்டு அரச பத்தினி வமிச மென்றும்
தெரிய வருகிறது.இவனுடைய மூதாயானவள்,இழிகுலத்தவனாகிய
சிங்கனேன்பவனை விய பிரசார மார்க்கமாய்க் கூடிச் சிங்கவாகு என்பவனைப்
பெற்றாள்.(Singhabahu ) சிங்கவாகு இவ் விஜய ராஜனைப் பெற்றான்.இவ்வுண்மையை
அறியாதார் உள்ளபடியே சிங்கத்தையணைந்து பெற்றாள் என்பார்.

*சிங்கவாகு என்பவன்,மகத தேயத்திலேயுள்ள லாலாநாட்டைக் கட்டிக்கொண்டு,
அதற்கு அரசனாகிச் சிங்க புரமென்னு  நகரத்திளிருந்தரசு செய்து வருகையில்
அவனுடைய மூத்த குமாரனாகிய விஜய ராஜன்,துன் மார்க்கனும் தன்போலிய
துஷ்டர் பலரைச் சேர்த்துக் கொண்டு சனங்களுக்குத் துன்பஞ  செய்பவனுமா
யிருந்தான்.அதனால் ஜனங்கள் சிங்கவாகுவிடத்திலே போய் முறையிட,
சிங்கவாகு,உடனே விஜயராஜனை எழுநூறு மெயக்காப்பாளருடன்,கடல் தாண்டி
யப்புறம்போய் பிழைக்கும்படி அனுப்பிவிட்டான்.விஜயராஜனும் அவ்வாறே
புறப்பட்டு இந்தியக்கரையிலேயே வேறோர் இடத்தையடைய முயன்றும் ,வாய்க்காமையால்,ஈற்றில்,இலங்கையை நாடிச் சென்று புத்தளத்திற்குச்
சமீபத்தேயுள்ள தம்ப பண்ணை என்னுமிடத்தை அடைந்தான்.