வியாழன், 26 ஜனவரி, 2023

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரத் தயார் – ஜெய்சங்கர் வந்த சூட்டோடு ரணில் சம்பந்தனுக்கு உறுதியளித்தார்

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்குத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து திரும்பியதை அடுத்து அவசர அவசரமாக நேற்றுமுன்தினம் பிற்பகல் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து இதனைத் தெரிவித்துள்ளார்.
‘தேசிய காணி ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைவு தயாராகி வருகின்றது. அது நிறைவடைந்தவுடன் காணி அதிகாரங்கள் மாகணங்களுக்கு வழங்கப்படும். மாகாணங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் எண்ணிக்கையை 10 ஆக வரையறுப்பதற்கும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்பது மாகாணங்களுக்கும் தலா ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரும், கொழும்பு மெற்றோபொலிட்டன் பிரிவுக்கு ஒருவருமாக பத்து நியமனங்கள் வரையறுக்கப்படவுள்ளன. அதன் பின்னர் அவர்களை மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரா. சம்பந்தனிடம் உறுதியளித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.


புதன், 25 ஜனவரி, 2023

ஜப்பானின் அழகு,


சொல்வதற்கில்லை இந்த அழகு,---அதைச்

சொல்ல முடியவில்லை சுந்தரத் தமிழில்.

வெல்லத்தான் முடியுமா வேல் விழியழைகை,--இனி

கொல்லத்தான் துணிந்துவிட்டீர்கள்,கொஞ்சம் பொறுமை.


うまでもなく、この美しさ――あの

美しいタミル語で言えません。

勝つことしかできませんが、ビリヤロカイ、--もうありません

あなたはあえて殺します、少しの忍耐。

(தமிழின் ஜப்பான் மொழிபெயர்ப்பு)



 இது,எனது இளைய மகளின்,திருமணத்தின் போது,திருமணத்திற்காக இவர் இலங்கை வந்து கலந்து   கொண்டபோது, இவருக்கு நமது நாட்டுடையணிந்து எடுத்த படம். 

செவ்வாய், 24 ஜனவரி, 2023

சிந்திப்போம்.....

 

சிந்திப்போமா...

 தமிழகத்தில் வளரும் மூதேவிகளும் அவர்களைப் பெற்ற பெரும் மூதேவிகளுக்கும்


நேற்று வேலையிலிருந்து வந்து வீட்டில் தொலைக்காட்சியை ஆன் செய்தால்  அஜீத்தின் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் பொங்கல் வெளியிடான அஜித்தின் படம் பார்க்கச் செல்கையில் ஒரு லாரி மீது ஏறி ஆட்டம் போட்டு கீழே விழுந்து இறந்து போய்விட்டான்.. உடனே வழக்கம் போல ஊடகங்கள் அதனைக் கவர் செய்து அவர் ஏதோ நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டது மாதிரி செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அந்த பையனின் குடும்பத்தினரும்  நண்பர்களும் இரக்கம் வருவது மாதிரி பேசுகிறார்கள்.


இதில் அந்த பையனின் அம்மா நடிகனின் பின்னால் போகாதீர்கள் அவர்களாக வந்து உதவப் போகிறார்கள் என்று ஊடகங்களிடம் சொல்லி அழுகிறார். அட கூறு கெட்டவளே இதை ஊடகத்திடம் சொல்லுவதற்குப் பதில் உன் புள்ளைக்கு சொல்லி வளர்த்து இருந்தால் இன்று உன் புள்ளையாவது உயிரோடு இருந்திருப்பான். ஒருவேளை அப்படிச் சொல்லி வளர்த்து இருந்தாலும் அதன் பின் உன் பையன் அதைக் கேட்காமல் கூறு கெட்டு வளர்ந்து இருந்தால் அவன் இருப்பதோடு போய்ச் சேர்ந்ததே நலம் என்று சந்தோஷமாக இருக்கவேண்டும்


 கஷ்டப்படும் குடும்பத்தைச் சார்ந்த  இந்த பையன்தான் அந்த குடும்பத்திற்கு ஆதாரமாம். அப்படி இருந்தும் தனது தகுதிக்கும் மீறிக் கஷ்டப்பட்டு  உழைத்து  சம்பாதித்த ஊதியத்தை, 2,500 ரூபாய் கொடுத்துப்  படத்தைப் பார்க்க டிக்கெட் வாங்கியிருக்கிறான்  அதுவே மிகத் தவறு அதோடு நிறுத்தாமல்  படம் பார்க்கப் போனால் படத்தைத்தானே பார்க்க வேண்டும் ஆனால் அப்படிச் செய்யாமல் வழியில் வந்த லாரியின் மீது மற்றவர்களுடன் சேர்ந்து ஏறி ஆட்டம் போட்டு  நிலை தடுமாறி கீழே விழுந்து முதுகுத் தண்டுவடத்தில் அடிபட்டுச் செத்துப் போய்விட்டான். இப்படித்தான் படம் பார்க்க வேண்டும் என்று எந்த நடிகரும் சொல்லவில்லை. இவன் களாக இப்படிக் கூறு கெட்டு நடந்து கொண்டு கடைசியில் நடிகர்களால் இந்த நாடே கெட்டுப் போய்விட்டது என்று அவர்கள் மீது பழி சொல்லுவது அவர்கள் வந்து இப்படிக் கூறு கெட்ட ரசிகர்களுக்கு உதவவில்லை என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்.


அதிலும் அஜித் மற்ற நடிகர்கள் போலச் சமுகத்திற்குக் கருத்து சொல்லுரேன் மயிறு சொல்லுரேன் என்று ரஜினிகாந்த் மாதிரி இல்லாமல் வந்தோமோ படத்தில் நடித்தோமா அதற்கான ஊதியத்தை வாங்கினோமா தன் குடும்பத்தோடு நேரம் செலவழித்தோமா தனது பொழுது போக்கான கார் பைக் ரேஸில் கலந்து கொண்டோமா என்று அமைதியாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார். அவர் எந்த கட்சியையும் கட்சி தலைமையும் ஆதரித்தோ எதிர்த்தோ பேசுவதில்லை போலியான சமுக அக்கறை உள்ளவர்கள் போலவும் நடிப்பது இல்லை தன்னால் முடிந்த உதவிகளை  எந்த வித சத்தமும் ஆர்ப்பாட்டமும்  விளம்பரமும் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார்.


அப்படிப்பட்டவர் இந்த பையன் தன் ரசிகனாக இருந்ததால் அவரின் குடும்பத்திற்கு உதவ வேண்டுமாம் அடேய் கூறு கெட்ட பயல்களா போய் வேலை மயிரை போய் பாருங்களாடா...


சமுகமும், எந்த அமைப்பும் , எந்த நடிகரும் இது போலக் கஷ்டத்திற்கு உள்ளாகும் குடும்பத்திற்கு உதவவே கூடாது அதுதான் இந்த சமுகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கும் பாடம்....அப்படி இல்லாமல் உதவ  முன் வந்தால் அது ஒரு மோசமான முன் உதாரணமாகத்தான் இருக்கும் .அந்த குடும்பம் அந்த பையன் இருந்தாலும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் காரணம் இப்படிப் பொறுப்பில்லாமல் 2500 ரூ டிக்கெட் வாங்கும் அந்த பிள்ளை நாளை பொறுப்புடனும் கஷ்டத்தில் இருக்கும் தன் குடும்பத்தைப் பெற்றோர்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிச்சயமாக நினைக்கவே மாட்டான் இந்த பையன் 2500 ரு கொடுத்து முதல் ஷோ பார்க்கவேண்டும் என்று டிக்கெட் எடுப்பவன்  வரும் காலத்தில் முதல் ஷோ முதல் டிக்கெட் எனது டிக்கெட்டாகவே இருக்க வேண்டும் என்று 10000 ம் கொடுத்து முதல் டிக்கெட்டை வாங்க வேண்டும்தான் என்று நினைப்பான் அதைத்தான் தன் சாதனையாகக் கருதுவான் அப்படிப்பட்ட இந்த பையன் இருந்தால் என்ன செத்தால்தான் என்ன?


இழப்பு இழப்புதான் அதற்காக நாம் வருந்த வேண்டுமே தவிர அந்த இழப்பை வைத்து மற்றவர்களின் அனுதாபத்தைப் பெற்று அவர்களின் உதவிக்  கொண்டு  வாழ் முயற்சிக்க கூடாது


இந்த பையன் மட்டுமல்லாமல் முதல் ஷோ  அல்லது  முதல் வாரத்தில் படம் பார்த்துவிட வேண்டும் என்று அப்பத்தான் பெருமை என்று குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ செல்லும்  படித்த  இந்திய வாழ் மற்றும் மேலை நாடுகளில் வாழும் இந்திய அனைத்து மக்களுக்கும் இந்த பையனுக்கும் வித்தியாசங்கள் ஏதுமில்லை எல்லோரும் ஒருவிதமான கூமுட்டைகள்தான் என்னைப் பொருத்தவரை


அன்புடன்

மதுரைத்தமிழன்.

படித்ததில் பிடித்தது. 

முத்தழகு.

அகவை "80ல்"
 தடம்பதிக்கும்
இலங்கையின் மூத்த பாடகரும் எனது நன்பருமாகிய திரு.வி.முத்தழகு அவர்களுக்கு இனிய அகவைதின நல்வாழ்த்துகள் உரித்தாகுக..
       ★★★★★★★★



வி. முத்தழகு !

இலங்கையின் பிரபல மெல்லிசை, திரையிசைப் பாடகர். கண்டியில் பேராதனையில் பிறந்து மெல்லிசைப் பாடகராக கலை உலகிற்கு வந்தவர் வி. முத்தழகு. சிங்களம், தமிழ், இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார். மெல்லிசைப் பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் என அவர் பங்களிப்பு இருந்திருக்கிறது.

1957 ம் ஆண்டு இலங்கை வானொலியில்
 "தொழிலாளர் வேளை" எனும் நிகழ்சியில் திரு.
"கே.எம்.சவாஹிர்"
அவர்களின் இசையில் முதன் முதலாக பாடிய

"குயிலே செந்தமிழால் பண்பாடுவாய்,

"எனை ஆளும் தேவனே ஏசுவின் நாமமே"

என்ற பாடல்கள்  இலங்கை வானொலியின் "1"ம் இலக்க கலையகத்திலிருந்து நேரலையாக ஒலிபரப்பாகியது..

அன்றிலிருந்து  பாட ஆரம்பித்து இன்று வரை ஏறத்தாழ 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்.

முத்தழகு கண்டி மாவட்டம், பேராதனையில் வெள்ளச்சாமி, சரசுவதி ஆகியோருக்கு 1943 ஆம் ஆண்டில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

பிறந்த ஓரிரு ஆண்டுகளில் குடும்பத்துடன் கொழும்பு, திம்பிரிகசாய என்ற இடத்தில் குடிபுகுந்தார்.
பம்பலப்பிட்டி புனித மேரி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

இவருடைய தந்தையாரும் நன்றாகப் பாடக்கூடியவர். காரைக்குடியைச் சார்ந்த இவரைப் பாட்டு வாத்தியார் குடும்பம் என்று அழைப்பார்கள்.

1963-இல் பாடசாலையின் சிங்களப் பிரிவில் நடைபெற்ற மெல்லிசைப் பாடல் போட்டி ஒன்றில், இவருக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அதே ஆண்டில் பாக்கித்தான், லாகூர் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. சாரண இயக்கத்தில் அங்கு சென்ற முத்தழகு இந்த இசை நிகழ்ச்சியில் உருது, சிங்கள, தமிழ் மொழிகளில் பாடினார்..

இலங்கை வானொலியில் மெல்லிசை பாடுவதற்கு வி.முத்தழகு தேர்வுபெற்றபின் 1971ல் தனது முதலாவது மெல்லிசைப்பாடலை இலங்கை வானொலியில் பாடும் சந்தர்ப்பத்தை பெற்றார்.

 க. கணபதிப்பிள்ளை பாடல் எழுத ஆர். முத்துசாமி இசையமைத்தார். அன்னை பராசக்தி.... என்ற பாடலை பாடினார்.

தொடர்ந்து ஏராளமான மெல்லிசைப்பாடல்களை இலங்கை வானொலியில் பாடியிருக்கிறார்.

 1970 - 1980 காலப் பகுதியில், இலங்கை   வானொலியின் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப் பாடகராக முத்தழகு விளங்கினார்.


நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பல தமிழ், சிங்கள திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.

 முதன் முதலில் புதிய காற்று படத்தில் பாடும் வாய்ப்பை வி. பி. கணேசன் இவருக்கு வழங்கினார்.

இந்தத்திரைப்படத்தில் இவர் முதலில் பாடிய 'ஓகோ என்னாசை ராதா' மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இலங்கையில் உருவான தமிழ்ப் படங்களில் இவர்தான் அதிகமாகப் பாடியிருக்கிறார் என்று கூறலாம்.

 தொடர்ந்து கோமாளிகள், ஏமாளிகள், நான் உங்கள் தோழன், தென்றலும் புயலும், வாடைக்காற்று, தெய்வம் தந்த வீடு, அநுராகம், எங்களில் ஒருவன், நெஞ்சுக்கு நீதி, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, சர்மிளாவின் இதயராகம் போன்ற படங்களில் பாடினார்.

 புதிய காற்று 1975ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 'சர்மிளாவின் இதயராகம்' 1993ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 20 ஆண்டு இடைக்காலத்தில் உருவான சகல தமிழ்ப் படங்களிலும் முத்தழகு பின்னணி பாடியிருக்கிறார்.

 10க்கு மேற்பட்ட சிங்களப் படங்களிலும் பாடியிருக்கிறார். யசபாலித்த நாணயக்காரவே முத்தழகுவுக்கு சிங்களச் சினிமாவில் பாடும் முதல் வாய்ப்பை வழங்கினார்.

'அஞ்சானா' என்ற படத்தில் விஜய குமாரதுங்கவுக்கு பின்னணி பாடும் வாய்ப்பே அது.

 தமிழில் 'நாடு போற்ற வாழ்க' என்ற பெயரில் வெளிவந்த படமே, சமகாலத்தில் 'அஞ்சானா' என சிங்களத்தில் தயாரிக்கப்பட்டது. இரண்டு மொழிப்படங்களிலும் முத்தழகு பின்னணி பாடினார்.

சப்தஸ்வரம்' என்ற தனி நபர் இசை நிகழ்ச்சியைப் பலமுறை மேடையேற்றியவர்.

1974ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரையுள்ள 30 வருட காலத்தில் 'சப்தஸ்வரம்' நிகழ்ச்சியை 15 முறை மேடையேற்றியிருக்கிறார்.

 'சப்த ஸ்வரம்' தமிழ் நிகழ்ச்சியைப் போல் 'காதல் மொட்டுகள் மலர்கின்றன' என்ற தலைப்பில் தனி நபர் சிங்கள நிகழ்ச்சியை 10 முறைக்கு மேல் நடத்தியிருக்கிறார்.

1995ஆம் ஆண்டு சிறந்த பாடகருக்கான ஜனாதிபதி விருதும் 2002 ஆம் ஆண்டு தேசிய பாடகருக்கான 'கலாபூஷணம்' விருதும் கிடைத்தது. 1987 ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சு இவருக்கு 'மெல்லிசைச் செல்வன்' என்ற பட்டத்தை வழங்கியது.

'இன்னிசை மணி', 'கலை மணி' என்பனவும் முத்தழகுவுக்கு கிடைத்த மேலும் சில பட்டங்களாகும்.

மேலும்  இவரின் புகழ் பெற்ற பாடல்களில்..

"புதியகாற்று"
 திரைப்படத்தில் 

"ரி.எப்.லத்தீப்" அவர்களின் இசையில் பாடிய

"ஒஹோ என்  ஆசை ராதா  ,

 அநுராகம் திரைப்படத்தில் ஈழத்து   இரத்தினம் அவர்களின் பாடல் வரிகளுக்கு

சரத் தசநாயக்கா அவர்களின் இசையில்
 இடம்பெற்ற

"எண்ணங்களாலே' இறைவன்தானே"
 பாடல்கள்
இன்றும் கேட்க தூன்டும் ...★★★★






Arunan Meenachchisundaram

சனி, 21 ஜனவரி, 2023

தொலைமனமுணர்தல் (telepathy)

 




நான், பொங்கல் நேரம்,எனது மனைவியுடன்,கதைக்கும்போது,சஹீஸ்னு

எனது பேரன் US,இல் இருப்பவன் இலங்கையில் இருந்து இருந்தால்,KFC

சாப்பாட்டை நல்லா விரும்பிச் சாப்பிடுவான்,வாங்கி வந்ததும்,அந்தப்  பார்சலை 

தூக்கிக்கொண்டு ஓடும் அழகே தனி. சிறு பிள்ளை தானே என இருவரும் 

நினைத்துக் கதைத்தோம்.


அதே நேரம், அமெரிக்காவில்  எனது பேரன் தனது தாயிடம்,"அம்மா,அம்மப்பா

வாங்கி வரும் KFC நல்ல ருசியாக இருக்கும். ஆனால்,இங்கு  வாங்கும் KFC

ஏன்? ருசி குறைவாக இருக்கிறது" என்று கேட்டிருக்கிறான்.


ஒரே, விசயம், இடம் மட்டும் வித்தியாசம்,ஆனால், நேரம், சிந்தனை எல்லாம்

ஒத்துப்போகிறது.இப்படி பல  நிகழ்வுகள்,என் வாழ்க்கையில் நிறைய 

சந்தித்துள்ளேன்.இவரைச் சந்திக்க வேண்டும் என நினைக்கும்போது, அவர்

நேர் எதிரே, நம்மைத்தேடி வந்துகொண்டிருப்பதை  நான் பல முறை 

அவதானித்துள்ளேன்.

உதாரணத்திற்கு சில சினிமாப்பாடல்களை முனுமுனுக்கும்

போது அது வானொலியில் ஒலிபரப்பாகும். உங்கள் வாழ்கையிலும் இப்படியான

நிகழ்வுகள், நடந்திருக்கும், இனி வரும் காலங்களில் கவனியுங்கள். இது 

சம்பந்தமான விவரத்தை விக்கிபீடியாவில்  கீழ் வருமாறு  தந்துள்ளார்கள்.

                                    சஹீஸ்னு  தங்கை லக்ஸ்மிதாவுடன்.

                   
(telepathy) என்பது, புலன் உறுப்புக்கள் எதையும் பயன்படுத்தாமலும், பௌதீகத் தொடர்புகள் இன்றியும், ஒருவருடைய மனத்தில் இருந்து இன்னொருவர் மனத்துக்குத் தகவல்கள் செலுத்தப்படுவது ஆகும். அதாவது,
 பேசுதல், கேட்டல், சைகை காட்டுதல், எழுதிக் காட்டுதல் போன்ற பல்வேறு வழமையான தொடர்பு முறைகளின் பயன்பாடு இல்லாமல் ஒருவர் எண்ணுவதை மற்றொருவர் அறிந்து கொள்வதே "தொலைமனமுணர்தல்" எனப்படுகிறது. அறிவியலாளர்கள் இதனை ஒரு உண்மையான தோற்றப்பாடாகக் கருதுவது இல்லை. தொலைமனமுணர்தல் என்னும் ஒன்று இருக்கிறதா என அறிந்துகொள்ளவும், அதைப் புரிந்துகொள்வதற்கும், பயன்படுத்துவதற்குமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவாயினும், கட்டுப்பாடான சோதனைகளின் கீழ் இதை உண்மை என்று நிறுவுவதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை..

தற்காலப் புனைகதைகளிலும்அறிவியற் புனைவுகளிலும் தொலைமனமுணர்தல் இடம்பெறுவதைக் காணலாம். இவற்றில், வேற்றுக்கோளினரும்மீவியல்பு நாயகர்களும் இத்தகைய ஆற்றல்களைக் கொண்டவர்களாகக் காட்டப்படுவது உண்டு.

பொது அறிவு TÑPSC







 

வெள்ளி, 20 ஜனவரி, 2023

தந்தை.!

 . தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!

அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

2. தந்தையின் கண்டிப்பை பொறுத்துக்  கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....

3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!

4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?

5.தந்தைக்கு முன்பு பார்வையைத்  தாழ்த்திக் கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!

அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக்கொள்ளுங்கள்..

தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...

மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...

அவரின் மரணத்திற்கு முன்பே அவருக்கு மரியாதை செய்வோம்...

அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்

அவர் உன்னுடைய அருகில்
இருக்கும்போது அவர் உடைய
அருமை உனக்குத் தெரியப்போவதுமில்லை.

படித்ததில் பிடித்தது.

புதன், 18 ஜனவரி, 2023

சிறு கதை - 32 / "சத்தம் போடாதே"

 சிறு கதை - 32 / "சத்தம் போடாதே"


இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின் கொஞ்சம் பீர் [beer]  எடுத்துக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தோம்

என் மனைவிதான் கேக்யை வடிவமைத்தார். ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று யாழ் குடா வடிவில், நடுவில் பனை மரம் அமைத்து, அதன் உச்சியில் மெழுகுதிரி வைக்கக் கூடியதாக நுட்பமான கைவண்ணத்துடன் அமைத்தார். அது முடிய ஜூலை 24 , ஞாயிறு அதிகாலை ஒரு மணி ஆகிவிட்டது. நாம் நால்வரும் பிறந்த நாளுக்கான சோடனைகளும் மற்றும் ஏற்பாடுகளும் அதற்க்கு சற்று முன் தான் முடித்தோம். இறுதியாக, எல்லோரும் நித்திரைக்கு போகுமுன்,  ஒரு வலுவான காபி [strong coffee] குடித்துக்கொண்டு, இலங்கை ஆங்கில வானொலியில் பாடல் கேட்டோம். அது தான் எம்மை கொஞ்ச நேரத்தால் 'சத்தம் போடாதே!' என என்னையும், மனைவியையும், பிள்ளைகளையும் மௌனமாகியது!

ஆமாம், நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள். இப்ப நாம் இருப்பது முற்றும் முழுதான சிங்கள கிராமத்தில். அது என்ன புது விடுகதை என்று யோசிக்கிறீர்களா ?. இது விடுகதை அல்ல, அவசர செய்தியாக வானொலியின் அறிவித்தலே அந்த விடுகதை!

1983 சூலை 23 இரவு 11:30 மணியளவில், யாழ் நகருக்கு அருகில் உள்ள திருநெல்வேலியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதல் செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து நடந்த மோதலில், ஒரு அதிகாரியும் பன்னிரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர் என அறிவித்தது தான் அந்த திடுக்கிடும் செய்தி. ஆனால் அதை தொடர்ந்து  பலாலி இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினர் திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கினர். யாழ்ப்பாணத்தில் 51 தமிழ் பொதுமக்கள் பின்னர் பழிவாங்கும் வகையில்

இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் மௌனமாக்கப் பட்டன என்பதும் அதன் உள் நோக்கமும்  பின்பு தான் தெரிந்தது

ஞாயிறு மாலை / இரவு தமிழருக்கு எதிரான வன் முறைகள் பெருவாரியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஆனால் ராஜரத்ன, அவரின் சகோதரர்கள் எம்மை எல்லா நேரமும் கவனித்த படியே இருந்தார்கள். அவர்களின் ஒரே ஒரு வேண்டுகோள், எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அங்கு இருப்பது, அந்த கிராமத்தில் இருக்கும் காடையர்களுக்கும் இனவெறியாளருக்கும் மற்றும் ராணுவத்திற்கும் தெரியக்கூடாது. அதற்கு ஒரே வழி ' சத்தம் போடாதே' . ஏன் என்றால் எமக்கு தெரிந்த மொழிகள் தமிழும் ஆங்கிலமும் தான்! நம் சத்தம் கட்டாயம் காட்டிக் கொடுத்துவிடும் 

மற்றும் அன்று இரவு தான் பிறந்தநாள் கொண்டாடட்டம். கிராம மக்கள் பலர் வருவார்கள். அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு பிடி கொடாமல் சமாளிக்கவும் வேண்டும். பாவம் ராஜரத்ன குடும்பம் . எந்த மன சோர்வும் இன்றி, தைரியமாக  அவர்கள் இருந்ததை நாம் கட்டாயம் போற்றத்தான் வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இப்ப, இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் கேக் வெட்ட வேண்டும். ஆனால் கேக் யாழ்குடா வடிவில், பனை மரத்துடன்! யார் இதை பார்த்தாலும் ஒரு சந்தேகம்  வரக்கூடிய சூழ்நிலை. அது தான் அந்த சிக்கல்!

சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகிக்கு கூறிய காதல் மொழிகள் தான், என் மனைவியின் அழகு பற்றி எண்ணும் பொழுது வரும். அது எனோ எனக்கு தெரியாது. அதில் உள்ள தமிழின் சிறப்பாக கூட இருக்கலாம் அல்லது அதைவிட அவளின் அழகு மேன்மையாக இருக்கலாம்

"மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா? இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னைஒ-என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி,"

குற்றம் இல்லாத [24 கரட்?] பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே, என் உயிரைப் பிடித்து வைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே! உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில் பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா? ... எனக்கே

என்றும் புரியவில்லை. ஆனால் அது இப்ப முக்கியம் இல்லை, ஆமாம்  அவள்  உடலில் மட்டும் அழகு அல்ல, அறிவிலும் அழகானவள். அது தான் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவள் ஒருவாறு மெதுவாக கதைகள் சொல்லி, காரணம் நாம் சாதாரணமாக கதைப்பது தமிழில் தான். எனவே காதும் காதும் வைத்தாற் போல் பிள்ளைகளுக்கு சொல்லி, அவர்களை நித்திரை ஆக்கிவிட்டார். கொண்டாடட்டம் முடியும் மட்டும் அவர்களும் 'சத்தம் போடாதே' தான்!

அவர்கள் தூங்கிய கையோடு, தான்  முன்பு  வடிவமைத்த கேக்கை, கொஞ்சம் கண்டி நகரம் போல் வடிவை சரிப்படுத்தி, பனை மரத்தை கித்துள் மரமாக  மாற்றி அமைத்து, ஓ!  அதன் எழிலில் எழுத்தில் சொல்ல முடியாது. ராஜரத்ன கண்டி சிங்களவன் என்பதால், அது அவர்களுக்கும், ஏன் , கொண்டாட்டத்துக்கு வந்தவர்களுக்கும் உற்சாகமும் மகிழ்வும் கொடுத்தது. ஆனால் எம்மால் அதை நேரடியாக பார்த்து ரசிக்க முடியவில்லை ! , நானும் மனைவியும் பிள்ளைகளுக்கு எந்த சிறு சத்தமும் இடையூறும் வராதவாறு கண்ணும் கருத்துமாக , கொண்டாட்டம் முடியும் வரை இருந்தாலும், நாம் இருவரும் அருகில் அருகில் இருந்தது எமக்கு ஒரு சங்க பாடலையும் [அகநானுறு  136] நினைவூட்டி சென்றது.

இவளை நன்கொடையாக வழங்கி [சத்தம் போடாதே என கட்டளையிட்டு ஒரு அறையில் இருட்டில் அடைத்து]  , ஏற்படுத்திக் குடுத்த, “தலை நாள் இரவில் (இந்த பிறந்தநாள் இரவில்), என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பதால்.. ஒரே புழுக்கமா இருக்கு அவளுக்கு ! அவள்  நெற்றி இப்படி வேர்க்குதே?  கொஞ்சம் காற்று வரட்டும் என எண்ணி [ஒரு சாட்டாக அதை என் கையில் எடுத்து], அவள் அழகை பார்க்கும் ஆவலுடன், ஆடையை திறவாய் எனச் சொல்லி, ஆர்வம் ததும்பும் நெஞ்சோடு, துணியை நான் கவர. அய்யோ [அலற முடியாது, 'சத்தம் போடாதே' தடுக்கிறதே என அவள் முழிக்க] உறையில் இருந்து உருவிய வாளைப் போல, அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையில் இருந்து நீங்கியது. அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். [பிள்ளைகள் ஒரு பக்கம், தூங்கி இருந்தாலும், இயல்பாக பெண்களில் எழும்] வெட்கப்பட்டாள் (ஒய்யாரம்?) ஏய், என்னை விடுடா -ன்னு இறைஞ்சுகிறாள் [ஆனால் சத்தம் வராமலே ?]; வண்டுகள் மொய்க்கும் … ஆம்பல் மாலையைக் கழட்டி வச்சிட்டு; கூந்தலையே இருட்டாக்கி, அந்த இருட்டில் தன்னை, மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து, மறைச்சிக்கிட்டு வெட்கப்படுகிறாள்!   

"தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
‘ உவர் நீங்கு கற்பின் எம் உயிர்உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற ‘ என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஔதத்தே."

1983 சூலை 25 காலை 9:30 மணிக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தனா நாட்டின் பாதுகாப்புப் பேரவையை சனாதிபதி மாளிகையில் கூட்டினார். அதே நேரத்தில் அம்மாளிகையில் இருந்து 100 யார் தொலைவில் இருந்த 'அம்பாள் கபே' தீ மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது எவ்வளவு தூரம் அரச நிறுவனமும் அதன் உறுப்பினர்களும் இந்த வன் முறையில் ஈடுபட்டார்கள் என்பதை சத்தம் போடாமல் சொல்லிக்கொண்டு இருந்தன! அது மட்டும் அல்ல, அருகில் யோர்க் வீதியில் 'சாரதாஸ்' நிறுவனமும் தீக்கிரையானது. தொடர்ந்து சனாதிபதி மாளிகைக்கு முன்னால் இருந்த பெய்லி வீதியில் அனைத்துத் தமிழ்க் கடைகளுக்கும் தீ மூட்டப்பட்டன. பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் முடிவடைவதற்கிடையில், கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த அனைத்துத் தமிழ் நிறுவனங்களும் தீக்கிரையாகின. இவை 'சத்தம் போடாதே. என்ற ஒரு எச்சரிக்கையாக அரசு செய்து இருக்கலாம்? ஏன் இந்த கதை எழுதிக்கொண்டு இருக்கும் ஜுலே 2022 காலப் பகுதியிலும் கொழும்பில், காலி முக ஆர்ப்பாட்ட இளைஞர் குழுவினருக்கு 'சத்தம் போடாதே '  நிறைவேறிக்கொண்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.!

இதை வாசித்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தயவு செய்து இந்த கதை பற்றி

'சத்தம் போடாதே!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

ஆண்டவனைக் கொஞ்சம் மறவுங்கள்-2

 ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்!" / பகுதி:02


 தவளையைப் பற்றி ஒரு பழங் கதை உண்டு.தவளையை ஒரு கொதிக்கும் நீருக்குள் போட் டால்,அது உடனடியாக துள்ளி வெளியே போய் விடும். ஆனால் அப்படி இல்லாமல், சட்டியில் உள்ள நீரில் முதல் தவளையை போட்டு ,பின் மெல்ல மெல்ல சூடேற்றினால் , அந்த தவளை, நீர் கொதித்து,அது இறக்கும் மட்டும் அங்கு இருந்து விடும்.கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனார் என அழைக்கப்பட்ட அப்பர் கூட இப்படியான ஒரு உவமை பாவிக்கிறார். ஆனால் தவளைக்கு பதிலாக ஆமை.

"...உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இல்லாதேன்..."

என்கிறார்.இப்படியான ஒரு நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால், எமது சித்தர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பே, சமயம் என்ற அண்டாவில் இருந்து தம்மை விடுவித்து துள்ளி வெளியே வந்து எமக்கு உண்மையை தெளிவாக காட்டி விட் டார்கள்.இந்த சித்தர்கள் தம்மை பின்பற்றுபவர்கள் என்று எவரையும் வைத்திருக்க வில்லை,அதே போல எந்த ஆசிரமமும் கட்ட வில்லை. அவர்கள் ஒரு தனிப்பட்ட முறையில் பக்தர்களுடன் தொடர்பு கொண்டார்கள்: இவர்கள் பக்தர்களை எந்த கட்டுப் பாடும் இல்லாமல் சுதந்திரமாக சிந்திக்க விட்டார்கள். எல்லா சித்தர்களும் ஐம்புலன்களை கட்டுப்படுத்தி மனதை அலைய விடாமல் வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள்.

'மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப் பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்.. கலையின் பெயராலே காமவலை வீசும், காசு வருமென்றால் மானம் விலைபேசும், நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும், நிம்மதி யில்லாமல் அலை போல மோதும்...'

என்று சும்மாவா சொல்லி வைத்தான்! அது மட்டும் அல்ல மனம் என்னும் இந்த பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன, அதற்காகப் பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டி ச்சித்தர் ஆவார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி...  அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வது போலவே பாடல்களை பாடினார். இவரின் மூன்று பாடல்கள் கீழே தரப்பட் டுள்ளன.

"சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே

பாடல்:98 ]

"இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!"
[பாடல்:61 ]

"ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்
எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே."
[பாடல்:94 ]

சிவவாக்கியர் மற்றும் ஒரு முக்கிய  சிறந்த சித்தர் ஆவார். இவர் பிராமண சட்டத் திற்கு எதிராக கொதித்து எழுந்தவர். சாதி அமைப்பிற்கும், உருவ வழிபாட்டிற்கும், ஆலய சடங்குக்கும் எதிராக சமுதாயப் புரட்சி செய்தவர். இவரின் மூன்று பாடல்கள் கீழே தரப்பட் டுள்ளன.   

"பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!"
[பாடல்:39 ]

"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே"
[பாடல்:47 ]

"கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே."
[பாடல்:34 ]

ஒரு தனிப் பட்டவரை நல்ல மனிதனாக,ஆணவத்தை மையப்படுத்திய இனவாதி அற்றவனாக மாறுவதற்கே, ஆண்டவனோ அல்லது சமயமோ இருக்க வேண்டும். ஒவ்வொரு கிரிஸ்துவரும் ,இஸ்லாமியரும்,இந்துவும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராகவும், 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய வராகவும் இருக்க வேண்டும்.நாம் எல்லோரும் ஒரே ஆண்டவைத் தான் நம்புகிறோம். ஆக, அந்த தெய்வீக சக்தியை நினைவு கூறும் எமது வழி தான் வேறு பட்டது. ஆனால், சமயத்தின் பெயரில், ஆண்டவனின் பெயரில் சிந்தும் குருதியும், வெறுப்பும் , ஆணவமும் அங்கு எதோ சில ஓட்டைகள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இதனால் மனித சமூகம் துன்பப் படுகிறது.

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே'

என்பதை உணர வேண்டும். இந்த உலகம் எல்லை அற்றதாக, யுத்தம் அற்றதாக, சமயம் அற்றதாக இருப்பதாக கற்பனை செய்யுங்கள் .எல்லா அடிப்படையும் வீட்டிலேயே ஆரம்பிக்கின்றன . குடும்பம் ஒன்றாய் இருப்பின் அதுவே ஆரம்பம். சகோதர, சகோதரிகள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையாக வாழ்ந்தால் அதுவே ஆரம்பம்.

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானு றையும் தெய்வத்துள் வைக்கப் படும்'.

நல்வாழ்வை தேடி இந்த உலகின் அழகான வாழ்வை ரசிப்போம். நாம் சமயம், சாதி, சமூகம் நாடு என்ற எல்லைகளை தாண்டுவோம். இந்த உலகின் மைந்தராக வாழ்வோம். தமிழரின் சைவ சித்தாந்தம் ஒரு வாழ்க்கை வழி. மக்களின் சுதந்திரம், விடுதலை,உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக  செயல்படுவதையும் இந்த தத்துவம் என்றும் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித்தனமான விசுவாசத்திற்கும் இங்கு இட மில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை.

"அன்பே  சிவம்","தென்னாடுடைய  சிவனே  போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவ  போற்றி"

என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு  இல்லை . இரண்டும் ஒன்றே! என்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன.

"யாதும் ஊரே, யாவரும் கேளீர்"

என புறநானுறு முழங்குகிறது. எல்லைகளை தாண்டி எல்லோரையும் அணைக்கிறது!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி:03  தொடரும்




ஏறுதழுவுதல்.

 அந்தாதிக் கவிதை - 8 / "ஏறு தழுவல்"


"ஏறு தழுவல் தமிழன் விளையாட்டு
விளையாடி அவன் சேர்த்த வீரம்!
வீரம் கொண்ட காளை அடக்கி
அடங்கா எதிரிக்கும் அச்சம் கொடுப்பான்!
கொடுத்த வாக்கை என்றும் மாற்றாமல்
மாறாத நல்ல ஆட்சி அமைப்பான்!
அமைத்த கட்டிடங்களை அழகு ஆக்கி
ஆக்கிய நெறிகளை அறிமுகம் செய்வான்!
செய்த மல்யுத்தத்தில் தெரியும் வீரம்     
வீரத்தின் சிறப்பே ஏறு தழுவல்!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

பொங்கல் வாழ்த்துகள்...!

 


                                  


அன்பு பெருக,அறிவுவளர,இனிவரும்

துன்பம்  அருக,தூய உறவு தொடர--மனதில்

இன்பம் பொங்கும் இந்த இனிய நன்நாளில்

இறைவன் அருள், என்றும் துணைபுரியட்டும்.

வெள்ளி, 13 ஜனவரி, 2023

வியாழன், 12 ஜனவரி, 2023

புதன், 11 ஜனவரி, 2023

இலங்கை கஞ்சா பிரச்சினைச் செய்திகள்.


 

நாட்டின் பாதுகாப்பின் இலட்சனம். இதற்கு தேசிய வருமானத்தில் இவ்வளவு செலவு செய்து,அம்மி மிதித்து,அருந்ததி காட்டுகிறது அரசாங்கம்.

அழகான ஒரு சோடிக்கண்கள்- பசீல் காரியப்பர்.


அழகான ஒரு சோடிக்கண்கள்- பசீல் காரியப்பர்.
ஈழத்துப்பாடல்கள், நிகழ்ச்சியில்  திரு.ரொக்சாமி இசையில்,பசீல் காரியப்பரின்,பல்கலைக்கழக வாழ்க்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் ஒரு சிறு நிகழ்வைத் தொகுப்பாக்கி வானொலி அறிவிப்பாளரும்,பாடகருமான எஸ்.கே பரராஜ சிங்கம் பாடி அசத்தியுள்ளார். இலங்கை வானொலியில் நடந்த ஒரு நிகழ்ச்சி,பின்னர்
அது,இலங்கைத் தமிழர்கழுக்கு ஈழத்தைப் பெற்றுக்கொடுத்துவிடும் என்ற
பயத்தால், இலங்கை மெல்லிசைப் பாடல்கள் நிகழ்ச்சியாகமாற்றம் பெற்று
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையானது யாவரும் அறிந்ததே.
          




ஒரு சோடிக்கண்கள்- பசீல் காரியப்பர். 
 நன்றி: இரா.நிசாந்தன். பாடல் வரிகள்.

பாடல்