செவ்வாய், 24 ஜனவரி, 2023

சிந்திப்போம்.....

 

சிந்திப்போமா...

 தமிழகத்தில் வளரும் மூதேவிகளும் அவர்களைப் பெற்ற பெரும் மூதேவிகளுக்கும்


நேற்று வேலையிலிருந்து வந்து வீட்டில் தொலைக்காட்சியை ஆன் செய்தால்  அஜீத்தின் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் பொங்கல் வெளியிடான அஜித்தின் படம் பார்க்கச் செல்கையில் ஒரு லாரி மீது ஏறி ஆட்டம் போட்டு கீழே விழுந்து இறந்து போய்விட்டான்.. உடனே வழக்கம் போல ஊடகங்கள் அதனைக் கவர் செய்து அவர் ஏதோ நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டது மாதிரி செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அந்த பையனின் குடும்பத்தினரும்  நண்பர்களும் இரக்கம் வருவது மாதிரி பேசுகிறார்கள்.


இதில் அந்த பையனின் அம்மா நடிகனின் பின்னால் போகாதீர்கள் அவர்களாக வந்து உதவப் போகிறார்கள் என்று ஊடகங்களிடம் சொல்லி அழுகிறார். அட கூறு கெட்டவளே இதை ஊடகத்திடம் சொல்லுவதற்குப் பதில் உன் புள்ளைக்கு சொல்லி வளர்த்து இருந்தால் இன்று உன் புள்ளையாவது உயிரோடு இருந்திருப்பான். ஒருவேளை அப்படிச் சொல்லி வளர்த்து இருந்தாலும் அதன் பின் உன் பையன் அதைக் கேட்காமல் கூறு கெட்டு வளர்ந்து இருந்தால் அவன் இருப்பதோடு போய்ச் சேர்ந்ததே நலம் என்று சந்தோஷமாக இருக்கவேண்டும்


 கஷ்டப்படும் குடும்பத்தைச் சார்ந்த  இந்த பையன்தான் அந்த குடும்பத்திற்கு ஆதாரமாம். அப்படி இருந்தும் தனது தகுதிக்கும் மீறிக் கஷ்டப்பட்டு  உழைத்து  சம்பாதித்த ஊதியத்தை, 2,500 ரூபாய் கொடுத்துப்  படத்தைப் பார்க்க டிக்கெட் வாங்கியிருக்கிறான்  அதுவே மிகத் தவறு அதோடு நிறுத்தாமல்  படம் பார்க்கப் போனால் படத்தைத்தானே பார்க்க வேண்டும் ஆனால் அப்படிச் செய்யாமல் வழியில் வந்த லாரியின் மீது மற்றவர்களுடன் சேர்ந்து ஏறி ஆட்டம் போட்டு  நிலை தடுமாறி கீழே விழுந்து முதுகுத் தண்டுவடத்தில் அடிபட்டுச் செத்துப் போய்விட்டான். இப்படித்தான் படம் பார்க்க வேண்டும் என்று எந்த நடிகரும் சொல்லவில்லை. இவன் களாக இப்படிக் கூறு கெட்டு நடந்து கொண்டு கடைசியில் நடிகர்களால் இந்த நாடே கெட்டுப் போய்விட்டது என்று அவர்கள் மீது பழி சொல்லுவது அவர்கள் வந்து இப்படிக் கூறு கெட்ட ரசிகர்களுக்கு உதவவில்லை என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்.


அதிலும் அஜித் மற்ற நடிகர்கள் போலச் சமுகத்திற்குக் கருத்து சொல்லுரேன் மயிறு சொல்லுரேன் என்று ரஜினிகாந்த் மாதிரி இல்லாமல் வந்தோமோ படத்தில் நடித்தோமா அதற்கான ஊதியத்தை வாங்கினோமா தன் குடும்பத்தோடு நேரம் செலவழித்தோமா தனது பொழுது போக்கான கார் பைக் ரேஸில் கலந்து கொண்டோமா என்று அமைதியாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார். அவர் எந்த கட்சியையும் கட்சி தலைமையும் ஆதரித்தோ எதிர்த்தோ பேசுவதில்லை போலியான சமுக அக்கறை உள்ளவர்கள் போலவும் நடிப்பது இல்லை தன்னால் முடிந்த உதவிகளை  எந்த வித சத்தமும் ஆர்ப்பாட்டமும்  விளம்பரமும் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார்.


அப்படிப்பட்டவர் இந்த பையன் தன் ரசிகனாக இருந்ததால் அவரின் குடும்பத்திற்கு உதவ வேண்டுமாம் அடேய் கூறு கெட்ட பயல்களா போய் வேலை மயிரை போய் பாருங்களாடா...


சமுகமும், எந்த அமைப்பும் , எந்த நடிகரும் இது போலக் கஷ்டத்திற்கு உள்ளாகும் குடும்பத்திற்கு உதவவே கூடாது அதுதான் இந்த சமுகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கும் பாடம்....அப்படி இல்லாமல் உதவ  முன் வந்தால் அது ஒரு மோசமான முன் உதாரணமாகத்தான் இருக்கும் .அந்த குடும்பம் அந்த பையன் இருந்தாலும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் காரணம் இப்படிப் பொறுப்பில்லாமல் 2500 ரூ டிக்கெட் வாங்கும் அந்த பிள்ளை நாளை பொறுப்புடனும் கஷ்டத்தில் இருக்கும் தன் குடும்பத்தைப் பெற்றோர்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிச்சயமாக நினைக்கவே மாட்டான் இந்த பையன் 2500 ரு கொடுத்து முதல் ஷோ பார்க்கவேண்டும் என்று டிக்கெட் எடுப்பவன்  வரும் காலத்தில் முதல் ஷோ முதல் டிக்கெட் எனது டிக்கெட்டாகவே இருக்க வேண்டும் என்று 10000 ம் கொடுத்து முதல் டிக்கெட்டை வாங்க வேண்டும்தான் என்று நினைப்பான் அதைத்தான் தன் சாதனையாகக் கருதுவான் அப்படிப்பட்ட இந்த பையன் இருந்தால் என்ன செத்தால்தான் என்ன?


இழப்பு இழப்புதான் அதற்காக நாம் வருந்த வேண்டுமே தவிர அந்த இழப்பை வைத்து மற்றவர்களின் அனுதாபத்தைப் பெற்று அவர்களின் உதவிக்  கொண்டு  வாழ் முயற்சிக்க கூடாது


இந்த பையன் மட்டுமல்லாமல் முதல் ஷோ  அல்லது  முதல் வாரத்தில் படம் பார்த்துவிட வேண்டும் என்று அப்பத்தான் பெருமை என்று குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ செல்லும்  படித்த  இந்திய வாழ் மற்றும் மேலை நாடுகளில் வாழும் இந்திய அனைத்து மக்களுக்கும் இந்த பையனுக்கும் வித்தியாசங்கள் ஏதுமில்லை எல்லோரும் ஒருவிதமான கூமுட்டைகள்தான் என்னைப் பொருத்தவரை


அன்புடன்

மதுரைத்தமிழன்.

படித்ததில் பிடித்தது. 

முத்தழகு.

அகவை "80ல்"
 தடம்பதிக்கும்
இலங்கையின் மூத்த பாடகரும் எனது நன்பருமாகிய திரு.வி.முத்தழகு அவர்களுக்கு இனிய அகவைதின நல்வாழ்த்துகள் உரித்தாகுக..
       ★★★★★★★★



வி. முத்தழகு !

இலங்கையின் பிரபல மெல்லிசை, திரையிசைப் பாடகர். கண்டியில் பேராதனையில் பிறந்து மெல்லிசைப் பாடகராக கலை உலகிற்கு வந்தவர் வி. முத்தழகு. சிங்களம், தமிழ், இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார். மெல்லிசைப் பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் என அவர் பங்களிப்பு இருந்திருக்கிறது.

1957 ம் ஆண்டு இலங்கை வானொலியில்
 "தொழிலாளர் வேளை" எனும் நிகழ்சியில் திரு.
"கே.எம்.சவாஹிர்"
அவர்களின் இசையில் முதன் முதலாக பாடிய

"குயிலே செந்தமிழால் பண்பாடுவாய்,

"எனை ஆளும் தேவனே ஏசுவின் நாமமே"

என்ற பாடல்கள்  இலங்கை வானொலியின் "1"ம் இலக்க கலையகத்திலிருந்து நேரலையாக ஒலிபரப்பாகியது..

அன்றிலிருந்து  பாட ஆரம்பித்து இன்று வரை ஏறத்தாழ 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்.

முத்தழகு கண்டி மாவட்டம், பேராதனையில் வெள்ளச்சாமி, சரசுவதி ஆகியோருக்கு 1943 ஆம் ஆண்டில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

பிறந்த ஓரிரு ஆண்டுகளில் குடும்பத்துடன் கொழும்பு, திம்பிரிகசாய என்ற இடத்தில் குடிபுகுந்தார்.
பம்பலப்பிட்டி புனித மேரி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

இவருடைய தந்தையாரும் நன்றாகப் பாடக்கூடியவர். காரைக்குடியைச் சார்ந்த இவரைப் பாட்டு வாத்தியார் குடும்பம் என்று அழைப்பார்கள்.

1963-இல் பாடசாலையின் சிங்களப் பிரிவில் நடைபெற்ற மெல்லிசைப் பாடல் போட்டி ஒன்றில், இவருக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. அதே ஆண்டில் பாக்கித்தான், லாகூர் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. சாரண இயக்கத்தில் அங்கு சென்ற முத்தழகு இந்த இசை நிகழ்ச்சியில் உருது, சிங்கள, தமிழ் மொழிகளில் பாடினார்..

இலங்கை வானொலியில் மெல்லிசை பாடுவதற்கு வி.முத்தழகு தேர்வுபெற்றபின் 1971ல் தனது முதலாவது மெல்லிசைப்பாடலை இலங்கை வானொலியில் பாடும் சந்தர்ப்பத்தை பெற்றார்.

 க. கணபதிப்பிள்ளை பாடல் எழுத ஆர். முத்துசாமி இசையமைத்தார். அன்னை பராசக்தி.... என்ற பாடலை பாடினார்.

தொடர்ந்து ஏராளமான மெல்லிசைப்பாடல்களை இலங்கை வானொலியில் பாடியிருக்கிறார்.

 1970 - 1980 காலப் பகுதியில், இலங்கை   வானொலியின் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப் பாடகராக முத்தழகு விளங்கினார்.


நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பல தமிழ், சிங்கள திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.

 முதன் முதலில் புதிய காற்று படத்தில் பாடும் வாய்ப்பை வி. பி. கணேசன் இவருக்கு வழங்கினார்.

இந்தத்திரைப்படத்தில் இவர் முதலில் பாடிய 'ஓகோ என்னாசை ராதா' மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இலங்கையில் உருவான தமிழ்ப் படங்களில் இவர்தான் அதிகமாகப் பாடியிருக்கிறார் என்று கூறலாம்.

 தொடர்ந்து கோமாளிகள், ஏமாளிகள், நான் உங்கள் தோழன், தென்றலும் புயலும், வாடைக்காற்று, தெய்வம் தந்த வீடு, அநுராகம், எங்களில் ஒருவன், நெஞ்சுக்கு நீதி, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, சர்மிளாவின் இதயராகம் போன்ற படங்களில் பாடினார்.

 புதிய காற்று 1975ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 'சர்மிளாவின் இதயராகம்' 1993ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. 20 ஆண்டு இடைக்காலத்தில் உருவான சகல தமிழ்ப் படங்களிலும் முத்தழகு பின்னணி பாடியிருக்கிறார்.

 10க்கு மேற்பட்ட சிங்களப் படங்களிலும் பாடியிருக்கிறார். யசபாலித்த நாணயக்காரவே முத்தழகுவுக்கு சிங்களச் சினிமாவில் பாடும் முதல் வாய்ப்பை வழங்கினார்.

'அஞ்சானா' என்ற படத்தில் விஜய குமாரதுங்கவுக்கு பின்னணி பாடும் வாய்ப்பே அது.

 தமிழில் 'நாடு போற்ற வாழ்க' என்ற பெயரில் வெளிவந்த படமே, சமகாலத்தில் 'அஞ்சானா' என சிங்களத்தில் தயாரிக்கப்பட்டது. இரண்டு மொழிப்படங்களிலும் முத்தழகு பின்னணி பாடினார்.

சப்தஸ்வரம்' என்ற தனி நபர் இசை நிகழ்ச்சியைப் பலமுறை மேடையேற்றியவர்.

1974ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரையுள்ள 30 வருட காலத்தில் 'சப்தஸ்வரம்' நிகழ்ச்சியை 15 முறை மேடையேற்றியிருக்கிறார்.

 'சப்த ஸ்வரம்' தமிழ் நிகழ்ச்சியைப் போல் 'காதல் மொட்டுகள் மலர்கின்றன' என்ற தலைப்பில் தனி நபர் சிங்கள நிகழ்ச்சியை 10 முறைக்கு மேல் நடத்தியிருக்கிறார்.

1995ஆம் ஆண்டு சிறந்த பாடகருக்கான ஜனாதிபதி விருதும் 2002 ஆம் ஆண்டு தேசிய பாடகருக்கான 'கலாபூஷணம்' விருதும் கிடைத்தது. 1987 ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சு இவருக்கு 'மெல்லிசைச் செல்வன்' என்ற பட்டத்தை வழங்கியது.

'இன்னிசை மணி', 'கலை மணி' என்பனவும் முத்தழகுவுக்கு கிடைத்த மேலும் சில பட்டங்களாகும்.

மேலும்  இவரின் புகழ் பெற்ற பாடல்களில்..

"புதியகாற்று"
 திரைப்படத்தில் 

"ரி.எப்.லத்தீப்" அவர்களின் இசையில் பாடிய

"ஒஹோ என்  ஆசை ராதா  ,

 அநுராகம் திரைப்படத்தில் ஈழத்து   இரத்தினம் அவர்களின் பாடல் வரிகளுக்கு

சரத் தசநாயக்கா அவர்களின் இசையில்
 இடம்பெற்ற

"எண்ணங்களாலே' இறைவன்தானே"
 பாடல்கள்
இன்றும் கேட்க தூன்டும் ...★★★★






Arunan Meenachchisundaram