திங்கள், 16 நவம்பர், 2009

கணவனுக்கேற்ற மனைவி.....!






பத்தாவுக் கேற்ற பதிவிரதை யுன்டானால் எத்தாலுங் கூடியிருக்கலாங் -சற்றேனுங் ஏறு மாறாக விருப்பாளே யாமாயிற் கூறாமற் சன்யாசங் கொள்


சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப்போல் வடிவு கொண்டாளைப் பெண்டேன்று கொண்டாயே -தொண்டர் செருப்படிதான் செல்லாவுன் செல்வேமென்ன செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுத நேர்





மேலேயுள்ள பாடல்கள் இரண்டும் ஔவையார் பாடிய பாடல்கள்,எப்படியான மனைவியுடன் எப்படி வாழலாம் என்பதை தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளார். முதலாவது பாடலில் சரியான மனைவி வாய்க்கவில்லை என்றால் ஒருவரிடமும் சொல்லாமலே சன்யாசங்கொள்ளலாம் என்றும், இரண்டாவது பாடலில்,இப்படியான மனைவியுடன் வாழ்வதைவிட, நெருப்பிலே வீழ்வது மேல் என்றும் பாடியுள்ளார்.ஔவையார் சொன்னதை நான் ஏன்? சொல்கிறேன் என்றா கேட்கிறிங்க. அக்கம் பக்கம் நடந்தவைகளைப் பார்த்தேன், இந்தப் பாடல்கள் நினைவு வந்தது.இன்னும் ஒன்று நினைவு வந்தது அதுதான், பாடிய புலவரும் ஒரு பெண்தான் என்று,இல்லாவிட்டால் வசை பாடியே கொன்றுவிடுவார்கள்.