வியாழன், 8 செப்டம்பர், 2022

அழுகை.!

 இதயத்தின் வலி ஏற்படுத்தும் தாக்கம்

எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகும் தருணம்,

உறவுகளால் ஏற்படும் மன உழைச்சல்

தாறுமாறான தவிர்க்க முடியா நினைவுகள், 

ஆற்றொனாத் துன்பம் அடி மனதில்

ஏற்றிய வலி இதயத்தில் இருக்கும்  வரை,


தங்கத்தை நெரிப்பிட்டு தரமாக்கி

தரத்தை நிர்ணயம் செய்வதுபோல்

உள்ளத்தை உருக்கி உணர்வுகள்  அழிந்து

வெள்ளத்தைப்போல கண்ணீர் புரண்டு

நெஞ்சத்தை தாக்கி யழித்து என்னையும்

கொஞ்சம் அழ வைத்துவிட்டது.


இறைவன்  அழுகையின்   மூலம்,

எதை நமக்கு உணர்த்துகிறான்,

வேதனனையைப் பிழிந்து,

கண்ணீராக்கி மன வலிகளைக் குறைக்கின்றது..

அனுபவம் எவ்வளவு பெரிய ஞானி,

அனுபவித்துப் பாருங்கள்  புரியும்.

  

மனைவிக்குப் பின்.!!!

படித்ததில் பிடித்தது
#கணவன் 😢😢😢

கணவன் இறந்த பின் பெண்கள்
எப்படியோ தான் பெற்ற மக்களை
அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன்
படும் துயர் இருக்கிறதே

* 😴😴😴கொடுமை 😴😴😴*

தானாகவே காப்பி கூட போடத்
தெரியாத கணவன், தண்ணீரைக்
கூடத் தானே மொண்டு குடிக்காத
கணவன் மனைவியின் மறைவுக்குப்
பின் ஏனென்று கேட்க ஆளில்லாமல்
போகிறான்.

ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத்
தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ
சமைலறையில் ஆளும் போது அங்கே
இந்த ஆணால் தன்னிச்சையாக
நுழைய முடியாது.

வேண்டுவனவற்றை தானே சமைத்துக்
கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ
கூசுகிறார்கள்.

என்ன கொடுத்தார்களோ எப்போது
கொடுத்தார்களோ கொடுத்ததை
கொடுத்த போது சாப்பிட்டுக்
கொள்ளணும்.

ரெண்டாவது காபி கூட கேட்க
முடியாது.

தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பப்ட்ட
சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப்
பேசக் கூட ஆளிருக்காது.

இதெல்லாம் என் உறவுக்குள்ளே, 
நட்பு
வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளியும் அதிகப்படியில்லை.

என் கணவர் காலை எட்டரை மணிப் போல
சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச
ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.
காபி குடித்தால் காலை உணவின் அளவு
அவருக்குக் குறைவதால் கொடுக்க
யோசிப்பார்கள்.

இப்போதெல்லாம் காலையில் என்
கணவர் கேட்காமலேயே ரெண்டாவது
காபி கொடுத்துடுவேன்.

எனக்குப் பின் அவருக்கு யார்
கொடுப்பாங்க?

இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப
பாரமாகிடுது.

மனைவி இல்லாத கணவன் உயிரற்ற
உடல் போலே!!

சகோதரிகளே!!
யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின்
வாயில்லாப் பூச்சிதான்!

முடிந்தவரை கணவனிடம்
அனுசரணையாக இருங்கள்!!

ஒரு குடும்பத்தலைவியின் ஆதங்கம்...


Facebook#பதிவு# படித்ததில் பிடித்தது #