வியாழன், 5 ஜனவரி, 2017

இயற்கை வைத்தியம்iv.

இயற்கை வைத்தியம்5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — ஊக்குவிக்கப்பட்டவராக உணர்கிறார்.
உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும் சத்துக்கள் நிறைந்த பூண்டு..
வைட்டமின் சி, பி6, மாங்கனீஷ் நிறைந்துள்ளன. அணுக்களின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. பூண்டில் உள்ள சல்பர் கிருமிகளை அளிக்க வல்லது. இது இரண்டு வகையான ஆண்டி பயாடிக்சைஸ உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் உடலைத் தாக்கும் 15 வகையான பாக்டீரியாக்களை அழித்து, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பாதுகாத்து நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.

* இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும். பூண்டில் உள்ள விட்டமின் பி மற்றும் கே உடலுக்கு தேவையான சக்தியை சீராக செம்மை படுத்தி பலம்பெற செய்கிறது.
* காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். குடலில் ஏற்படக்கூடிய தொற்றுகளைத் தடுக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.
* இரத்தத்தில் கலந்துள்ள கொலஸ்ட்டிராலை கரைத்து வெளியேற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு. மேலும் இரத்தத்தின் கடினத் தன்மையைக் குறைத்து ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற வேதிப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தம் நீங்கி, ரத்தம் ஓட்டம் சீராக இருக்க ஏதுவாகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பூண்டில் உள்ள சல்பர்,மற்றும் குளோரின் நமது மூளையில் உள்ள பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டிவிட்டு கொழுப்புச் சத்தையும், கார்போஹைட்ரேட் சத்தையும் ஜீரணிக்க உதவுகிறது கெட்ட கொழுப்பை (LDL) குறைத்து நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கிறது.
* எலும்புகளை உறுதி செய்யும். பல் வலியைக் குறைக்கும். மறதி நோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும். உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும். பூண்டில் உள்ள சல்பர் மற்றும் ஆண்டி ஆக்ஸ்டன்ஸ் கருப்பையை வலுவாகி மாதவிடாய்க் கோளாறுகளை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். மலச்சிக்கல் உண்டாகி வாய்வு உண்டாகி அஜீரணக்கோளாறு புளிப்பு வயிற்று பொறுமல் வயிற்று எரிச்சல் போன்றவை உண்டாகி பாடாய் படுத்தும் தினமும் உணவில் பூண்டை சேர்த்து வந்தால் இவை அனைத்தையும் தடுத்து குடலில் உள்ள புழுக்களை அகற்றி பசியைத் தூண்டும்.

இயற்கை வைத்தியம் 111

இயற்கை வைத்தியம்5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — ஊக்குவிக்கப்பட்டவராக உணர்கிறார்.
மலக்குடல் சுத்தம் மற்றும் வயிற்றுப்புண்ணை சரிசெய்யும் அத்திக்காய்!!
அத்திக்காய் தேவையான அளவு வாங்கி வந்து அவற்றை நான்கு துண்டுகளாக நறுக்கி அதில்லுள்ள விதைப் பகுதியை சுரண்டி எடுத்துவிட வேண்டும். அதிக்காயின் நடுவில் பூச்சு மற்றும் பூழு இருக்கலாம் அதை நன்கு கவனித்து சுத்தப்படுத்த வேண்டும். நறுக்கிய பின் தண்ணீரில் போட்டு நன்கு கழுவ வேண்டும்.
அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம். அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் A யும் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தும் அதிக அளவில் இருக்கின்றன.
அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளை ஒழுக்கை நிறுத்தும். சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது. உடலிலுள்ள இரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும். அத்திக்காய் வயிற்று புண்னுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றில் புண் இருக்கும் காலங்களில் இதை உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே போதும் நல்ல பலனை உணரலாம்.
அமர்ந்து தியானம் செய்வதற்கு இந்த அத்தி மரத்திலிருந்து பலகைகளை செய்வார்களாம். இந்த மரப்பலகைகள் தியானத்தின் சக்தியையும் மன ஒருமைப்பாட்டையும் நமக்கு அளிக்கவல்லது என்று சொல்லவார்கள்.
இந்தக் காயின் சுபாவம் குளிர்ச்சி. அத்திப் பிஞ்சினால் மூலம், வாயு, மூலக் கிராணி, வயிற்றுப்புண், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும். மேலும் இது பத்தியத்திற்கு ஏற்றது ஆகும்.
அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன. மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க, அத்திப்பழங்களைக் காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊறவைத்து, அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மோசமான ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி மன்னார்குடி கும்பலிடம் கொடுத்து விட்டு மறைந்து விட்டார்!
=====================================


தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறை எடுத்த நட வடிக்கை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரவைத்திருக்கிறது. அரசியல் வாதிகளின் கமிஷன் ராஜ்ஜியம் அதிகாரிகளிடம் மாற்றிக் கொடுக் கப்பட்டதன் விளைவு ராமமோகன ராவ் சிக்கிக்கொண்டார் என்கின்ற ஐ.ஏ.எஸ்.வட்டாரம்,
""தமிழக அரசை ஊழல்மயமாக்கியதில் அவருடன் இன்னும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பங்கு இருக்கிறது'' என்கின்றது கைமாற்றப்பட்ட கமிஷன் ராஜ்ஜியம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்த அந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நம்மிடம், ""2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பொதுப் பணி, நெடுஞ்சாலை, தொழில், சுகாதாரம், உயர்கல்வி, போக்குவரத்து, பத்திரப் பதிவு, எரிசக்தி (மின்சாரம்), மதுவிலக்கு ஆயத்தீர்வை, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, கூட்டுறவு, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை உள்பட 20-க்கும் மேற் பட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்களிடம், தினமும் 20 எல் கார்டனுக்கு வந்து விடவேண்டும் என எழுதப் படாத ஒரு சட்டத்தை அமல்படுத்தியிருந்தார். மற்ற துறைகளின் தன் மைக்கேற்ப தொகை தீர் மானிக்கப்பட்டிருந்தது.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 14 பேரையும் கார்டனி லிருந்து ஜெயலலிதா வெளியேற்றியதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மீதும் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. அப் போதைய தலைமைச்செய லாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் தனது செயலாளர்களான ஷீலா ப்ரியா, ராமமோகனராவ், வெங்கட்ரமணன், ராம லிங்கம் ஆகியோரிடம் ஆலோசித்தார் ஜெய லலிதா. அதில், "ஒவ்வொரு அமைச்சரும் தினமும் கார்டனுக்கு தருவதைவிட இரண்டு மடங்கு சம்பாத் தியத்தைப் பார்த்துள்ளனர்.
அவர்கள் அபரிமிதமான வளர்ச்சியடைவது பின் னாளில் உங்களுக்கு சிக்கலை உருவாக்கும்' எனச் சொல்லி, ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு கலெக்ஷன் புழங்குகிறது'' என்கிற புள்ளி விபரத்தை விவரித்தனர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
அதோடு, கமிஷனுக்கு சத வீதத்தை (பெர்சண்டேஜ்) முடிவு செய்யலாமென்ப தையும் எடுத்துச்சொன்னார் கள். அதனை வசூலித்து தரும் பொறுப்பையும் அதிகாரி களிடமே ஒப்படைத்தார் ஜெ.
ஆரம்பத்தில் 12% கடைசியில் 42%
ஒவ்வொரு துறையி லும் நிறைவேற்றப்படும் திட்டங்களில் 12 சதவீதம் என முடிவு செய்யப்பட்டது. இதில், 10 சதவீதம் கார்ட னுக்கு. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தலா ஒரு சதவீதம். அனைத்து துறை களுக்குமான திட்டங்களில் வரும் சதவீதத்தை ராமமோகனராவ் வசூலித்து கார்டனில் ஒப்படைத்து விட வேண்டும்.
டிசம்பர் 2012-ல் தலைமைச்செயலாளராகவும் பிறகு அரசின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், இந்த கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதேநேரத்தில், துறைரீதி யாக உள்ள நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாறுதல்கள் உள் ளிட்டவைகளை அந்தந்த அமைச்சர்களே கவனிக்க வேண்டும். அதில் நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை ஒவ்வொரு அமைச்சரிடமிருந்தும் வசூலித்து கார்டனில் ஒப்படைக்கும் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் தந்தார் ஜெயலலிதா.
சசிகலா, மீண்டும் கார்டனுக்குள் வந்ததற்குப் பிறகு இந்த பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு மாற்றப்பட்டது. துவக்கத்தில் 12 சதவீதமாக இருந்த கமிஷன், கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் 25 சதவீத மாகவும் அதிகபட்சம் 42 சதவீதமாகவும் உயர்ந்து நிற்கிறது'' என்று சுட்டிக்காட்டி னார் அந்த அதிகாரி.
ராமமோகனராவின் அடேங்கப்பா வளர்ச்சி
""அனைத்து துறைகளுக்குமான டெண்டர் விவகாரங்களை கவனிக் கும் மொத்தப் பொறுப்பும் ராமமோகனராவிடம் இருந்ததால், தொழி லதிபர்கள் அனைவரும் ராவை சந்தித்தே டீலை முடித்துக்கொள்வார்கள்.
டீல் விவகாரங்களை முடிவு செய்வதற்காகவே தாஜ் ஹோட்டலில் நிரந்தரமாக ஒரு ரூம் அவருக்கு இருக்கிறது. இரவு 11 மணிக்கு மேல்தான் ராவுடனான தொழிலதிபர்களின் மீட்டிங் நடக்கும். திட்டங்களின் மதிப்பீட்டுத் தொகைக்கேற்ப, நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தைத் தாண்டி தனக்கென 3 சதவீதத்தை அந்த மீட்டிங்கிலேயே முடிவு செய்துகொள்வார் ராவ்'' என்கிறார்கள் தமிழக தொழில்துறையினர்.
பொதுப்பணித்துறையில் மணல் காண்ட்ராக்ட் விவகாரம் தொடங்கி ஒவ்வொரு துறையிலும் இவர் கோலோச்சிய டெண்டர் விவகாரங்களை மத்திய அரசுக்கு சக அதிகாரிகளே போட்டுக்கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதா அரசில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் திட்டமிட்டு, அவைகளுக்கான ஆதாரங்களைத் திரட்டி அனுப்புமாறு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் சிலரை நியமித்தது பா.ஜ.க.டெல்லி தலைமை.
அந்த வகையில், பொதுப்பணி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, எரிசக்தி, மதுவிலக்கு, வனத்துறை, தொழில்துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நடந்த டெண்டர் விவகாரங்களில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி லாபம் பார்த்திருப்பதாக ஆதாரப்பூர்வ தகவல்களை திரட்டியுள்ளதாம் டெல்லி.
கூட்டுப் பொறுப்பு
நம்மிடம் பேசிய புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் ஓய்வு பெற்ற அதிகாரியான புதுவை பாலு, ""ஜெயலலிதா நிர்வாகத்தில் தனி ஒரு அதிகாரி ஊழல் செய்திட முடியாது. ராமமோகனராவ் ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த போதும் சரி, தலைமைச்செயலாளராக இருந்த போதும் சரி ஆட்சியில் நடந்த ஊழல்களுக்கு அவர் மட்டும் பொறுப்பல்ல.
அரசு ஆலோசகரான ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர்களான வெங்கட்ரமணன், சிவ்தாஸ் மீனா, விஜயக்குமார், ராம லிங்கம் உள்ளிட் டோரின் கண்கா ணிப்பை மீறி எந்த ஊழலும் நடந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படிப்பட்ட ஒரு செட்- அப்பைத்தான் ஜெயலலிதா உருவாக்கி வைத்திருந்தார். அவரை கண்காணிக்க இவரையும், இவரைக் கண்காணிக்க அவரும் என்கிற செட்-அப் அது. இவர்கள் தவிர ஒவ்வொரு துறையின் செயலாளர்களும் ஊழல்களில் பங்குதாரர்கள்தான். அதனால் இது ஒரு கூட்டுப் பொறுப்பு'' என்கிறார் மிக அழுத்தமாக!
ஊழல் ராஜ்ஜிய அதிகாரிகள்
ஜெயலலிதா அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடத்திய ஊழல் கொள்ளைகள், ஆந்திரா, தெலுங்கானா, கேரள மாநிலங்களில் ரியல் எஸ்டேட்டு களாகவும் வெளிநாடுகளில் முதலீடுகளாகவும் விரிந்துகிடக்
. 200 கோடிகளுக்கு அதிகமான அரசு திட்டங்களுக்கான டெண்டர்களில் எடுக்கப்படும் முடிவுகளின்படி ஜெய லலிதாவை சுற்றியிருந்த அனைத்து உயரதிகாரிகளுக்கும் கமிஷன் சதவீதம் சரிசமமாகவே பிரித்து தரப்பட்டது என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, நெடுஞ்சாலைதுறை ராஜீவ் ரஞ்சன், பால்வளத்துறை நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால், முதல்வரின் செயலாளர்கள் விஜயக்குமார், சிவ்தாஸ் மீனா, வணிகவரித்துறை கமிஷனர் சந்திரமௌலி, பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.செல்வராஜ், கணிம வளத்துறை எம்.டி.வள்ளலார் உள்ளிட்ட 40 ஐ.ஏ.ஏஸ்.கள் ராமமோகனராவின் நேரடி கட்டுப்பாட்டில் நியமிக்கப் பட்டவர்கள்தான்.
டாஸ்மாக் கமிஷன் அம்மாடியோவ்
உள்துறைச்செயலாளர் அபூர்வ வர்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது டாஸ்மாக். தமிழகத்திலுள்ள மதுபான உற்பத்தி ஆலைகளிலிருந்து மாதத்திற்கு 80 லட்சம் கேஸ் (12 பாட்டில்கள் கொண்ட பெட்டி) லிக்கரும் 1 கோடி பியர் பாட்டில்களையும் கொள்முதல் செய்கிறது டாஸ்மாக் நிர்வாகம். ஒரு லிக்கர் பெட்டிக்கு 60 ரூபாயும், பியர் பெட்டி ஒன்றுக்கு 35 ரூபாயும் பிரிமியர் லிக்கர் பெட்டி ஒன்றுக்கு 10 ரூபாயும் மற்றவைகளுக்கு 2 ரூபாயும் கமிஷனாக அரசுக்கு தருகிறார்கள் ஆலை தொழிலதி பர்கள்.
இதில், கார்டனுக்கு 60 சதவீதமும், அதிகாரிகளுக்கு 35 சதவீதமும், மந்திரிக்கு 5 சதவீதமும் பகிர்ந்தளிக்கப் பட்டுவிடும்.
நத்தம்விஸ்வநாதனுக்கு ஒரு அன்புநாதன் இருந்தது போல, அபூர்வ வர்மாவுக்கும் வட இந்திய அதிகாரிகளுக்கும் மேகநாதன் என்பவர்தான் ஃபைனான்ஷியல் புரோக்கராக இருக்கிறார். மது ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப் படும் சரக்குகளுக்கு 58 சதவீதம் வாட் வரி விதிப்பு செய்யப் படுகிறது. வணிகவரித்துறையின் விதிகள்படி இந்த வாட் வரியை பிடித்தம் செய்துகொண்டுதான் மது ஆலைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் பணத்தை செட்டில் செய்ய வேண்டும்.
ஆனால், வாட் வரியை பிடித்தம் செய்வதில்லை. இதனால் மாதத்திற்கு சுமார் 2,500 கோடி ரூபாய் வணிகவரித்துறைக்கு வருவாய் இழப்பு. இந்த பணத்தை 2 மாதம், 3 மாதம் ரொட்டேஷனில் விட்டுவிடுகிறார்கள் மதுபான ஆலை அதிபர்கள். இதற்காக சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை ஆலை அதிபர்கள் செமையாக கவனித்துவிடுகின்றனர். வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி, "எங்க டிபார்ட்மெண்டுக்கு வர வேண்டிய வரியை பிடித்தம் செய்யாமல் இருப்பது தவறு' என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
பொங்கும் பால்வளம்!
பால்வளத்துறையில், 2014-2016- க்கான ஃப்லிம் டெண்டர் ( பாலித்தீன் கவர் ) 250 கோடிக்கு விடப் பட்டது. கடந்த 30 வருடமாக, இந்த டெண்டரை ஓசூரில் இருக்கும் பத்மா பேக்கேஜ் மற்றும் ப்ளாசம் பேக்கேஜ் என்ற நிறுவனமே எடுத்து வருகிறது. மில்லர் தலைமையிலான போர்டில், அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டு கள் இருப்பதால் அவர்களுக்கு ஆர்ட ரை தரக்கூடாது என முடிவு எடுக் கின்றனர். அதனை சுனில்பாலிவால் நிராகரித்ததுடன், ஓப்பன் டெண்டரில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமே கலந்துகொள்ளும்படி சில நிபந்தனை களை மாற்றியமைத்து அவர்களுக்கே கொடுத்துள்ளார்.
இதில் மட்டும் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.ஷீலா பாலகிருஷ்ணனின் சப் போர்ட்டும் சுனிலுக்கு இருப்பதால் ஊழல்கள் தலைவிரித்தாடுகிறது. செங்கோட்டையன் அமைச்சராக இருந்த போது, அவரது உதவியாளராக இருந்த எழில் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
2006-ல் தி.மு.க. ஆட்சியின் போது அவருக்கு செய்தித்துறையில் பணியிடம் தரப் பட்டது. 2014-ல் அவர் ரிட்டயர்டு ஆனபோதும் செய்தித்துறையின் கூடுதல் இயக்குநராக 2 வருடம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.2016-ல் அந்த நீட்டிப்பு முடிந்த போது மீண்டும் 5 வருடம் நீட்டிக்கப்பட்டது. எழிலுக்கு இதனை வாங்கித்தந்தவர் வெங்கட்ரமணன். இதன் பின்னணியில், மிகப்பெரிய தொகை கைமாறியது. கேபிள் டி.வி. நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் குமரகுருபரன், கேபிள் டி.வி.கனெக்ஷன் எண்ணிக் கையை குறைத்து காட்டி அரசுக்கு இழப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.
இதன் பின்னணியில் விளையாடுவது சுமார் 90 கோடி! இப்படி மேலே குறிப் பிட்டுள்ள ஒவ்வொரு அதிகாரிகளும் அவர்கள் துறை சார்ந்த திட்டங் களில் குறைந்தது 100 கோடி ரூபாய் ஊழல்களின் பங்குதாரர்களாகவே இருக்கிறார்கள் என்று விவரிக்கிறது அதிகாரிகள் தரப்பு.
10-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளுக்கு தனிச்செயலாளரை நியமிக்காமல் ஒருவரிடமே பல துறைகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமும், கமிஷன் கலெக்ஷன்தான்.
கலெக்டர்களின் கஜானா
தமிழகத்திலுள்ள 32 மாவட்ட கலெக்டர் களில் கன்னியாகுமரி சஜன்சிங்சவான், திண்டுக்கல் வினய், பெரம்பலூர் நந்தகுமார், மதுரை வீரராக ராவ், திருவண்ணாமலை பிரசந்த் வாட்னேரே ஆகிய 5 கலெக்டர்கள் மட்டுமே நேரடி ஐ.ஏ.எஸ்.கள். மற்ற அனை வருமே கன்ஃப்ர்டு ஐ.ஏ.எஸ்.கள்.. இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த பட்சம் 3 வருடங்களும் அதிகபட்சம் 7 வருடங்களும் கலெக்டர்களாகவே இருக்கிறார்கள்.
ராமமோகனராவ், ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணனின் சிபாரிசுகளில் இவர்கள் கோலோச்சு கின்றனர். வருஷத்துக்கு சுமார் 2 முதல் 3 ஆயிரம் கோடிகளுக்கான நிதியை கையாளுகிறார்கள். இதில் 25 சதவீதம் கலெக்டர்களின் சொந்த கஜானாவுக்குச் சென்றுவிடுகிறது. அங்கிருந்து அவர்களை பாதுகாக்கும் உயரதிகாரிகளுக்குப் பத்து சதவீதம்.
கவர்னரிடம் புகார்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஊழல்கள் குறித்து கவர்னர் வித்யாசாகர்ராவுக்கு புகார் அனுப்பி யிருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன். அவரிடம் நாம் பேசியபோது, ""தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முக்கியத்துறைகள் ஒதுக்கப் படாமல் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் புரளும் முக்கியத்துறைகள் அனைத்திலும் வட மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளே நியமிக்கப்பட்டு ஊழல் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள்.
தமிழகத்திற்கு சென்றால் தடையின்றி ஊழல் செய்யலாம் என்கிற மனநிலையிலேயே தமிழகத்தை தேர்வு செய்கின்றனர். இவர்களின் ராஜ்ஜியத்தை ஒழிக்காமல் ஊழல்களை ஒழிக்க முடியாது'' என்கின்றார் வேல்முருகன்.
மொத்த ஊழலில் கார்டனுக்கு 60% மந்திரிகளுக்கு 5%, அதிகாரிகளுக்கு 35% என பர்சண்டேஜ் பக்காவாக பங்கு வைக்கப்படுகிறது.

நீதி­யைத்தான் கேட்­கின்­றோம் பழிவாங்­க முயற்­சிக்­க­வில்லை

பலா­லியை பிராந்­திய விமான நிலை­ய­மாக மாற்­றத்­ திட்டம்

இயற்கை வைத்தியம் 11

Benefits of eating Wheat - Food Habits and Nutrition Guide in Tamil
நவதானியங்களில் ஒன்றான கோதுமையானது பனிக்காலங்களில் பயிராகின்றது. வட இந்தியாவிலும், வங்காளதேசத்திலும் இதுவே முக்கிய உணவாக மக்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நமது அன்றாட வாழ்விலும் ஒன்றாகிவிட்ட கோதுமையின் மகத்தான பயன்களை இனி தெரிந்துக் கொள்வோமா?
* முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.
* வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
* கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
* கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
* வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.
உடல் பலம் அதிகரிக்க:
கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும்.
உலோகத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு வாய் மூலமாகவோ, சுவாசத்தின் மூலமாகவோ, தோல் வழியாகவோ உலோகம் உடலினுள் சென்று ரத்தத்தில் கலந்து விடுவதால் ஏற்படும் உலோக நஞ்சைப் போக்க, கோதுமை மாவை நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால் போதும். அந்த நஞ்சு முறிந்துவிடும்.
கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும், வேறுவகை நோயினால் அவதிப்பட்டுத் தெளிந்தவர்களும் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.
மாதவிலக்கு பிரச்சினைக்கு:
பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படுகின்ற அதிகப்படியான ரத்தப்போக்கிற்கு கோதுமை கஞ்சியுடன் வெந்தயத்தூள், மஞ்சள் ஒரு சிட்டிகை கலந்து உட்கொள்ள கொடுக்க நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
கோதுமை மாவை நெய்விட்டு வறுத்து, சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல், வெட்டை ஆகியவை குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு கோதுமை அதிக நன்மை தரக்கூடியது, இவர்கள் கோதுமையை ரொட்டி, அடையாக செய்து சாப்பிடுவது நல்லது. சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
முகம் பளபளக்க:
கோதுமை மாவுடன் தயிர் மற்றும் பச்சைப் பயிறு மாவு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவர முகச்சுருக்கம், கரும்புள்ளி, முகத்தில் ஏற்படும் அழுக்கு, தேமல் போன்றவை மறையும். முகம் பளபளக்கும்.
உடல் குளிர்ச்சியால் ஏற்பட்ட நோய்களுக்கும், கட்டிகளின் உள்ளூர எரிச்சலுக்கும், மூட்டுவலி-தசை வலிக்கும் கோதுமை தவிட்டை வறுத்து, துணியில் முடிந்து ஒற்றடமிட நலம் உண்டாகும்.
கோதுமையில் சம்பா கோதுமை, மா கோதுமை, யவா கோதுமை, வால் கோதுமை என பல வகை உண்டு. இவற்றில் சம்பா கோதுமையை இரண்டு, மூன்றாக உடைத்து நீர்விட்டு வேக வைத்தோ, வடித்து அல்லது வடிக்காமல் கஞ்சியாகவோ சாப்பாட்டிற்கு பதிலாக உட்கொள்ள கொடுக்க மதுமேக நோயாளிகளின் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.
கோதுமையில் ஸ்டார்ச், அமினோ அமிலங்கள், நார்ச் சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் உட்கொண்டு நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.
கோதுமையில் உள்ள அற்புதமான ஊட்டச்சத்து:
கோதுமை, பச்சைப்பயிறு, உளுந்து, பொட்டுக்கடலை, கம்பு, அரிசி - இவைகளை வறுத்து பொடித்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவை எடுத்து, அதனுடன் சூடான பால், வெல்லம் சேர்த்து உருண்டைபோல் உருட்டி காலை, மாலை டிபனாக உட்கொள்ளலாம். இந்த உணவு அதிக ஊட்டச்சத்து கொண்டது. ஊட்டச்சத்துக் குறைவினால் அவதிப்படுபவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் இதனை உட்கொண்டால் ஆரோக்கியமான உடல் சக்தியைக் கூடிய விரைவில் பெறலாம்.

யுத்தக்குற்ற விசாரணையில் திருப்பம்...! ஏற்க மறுக்கும் இலங்கை..! ஏமாறப் போகும் தமிழர்கள்..?


யுத்தக்குற்ற விசாரணையில் திருப்பம்...! ஏற்க மறுக்கும் இலங்கை..! ஏமாறப் போகும் தமிழர்கள்..?

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பிலான விசாரணைகளுக்கு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணி இலங்கை அரசாங்கத்துக்கு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
மனோரி முத்தெட்டுவேகம தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இந்த குழுவினர் கடந்த ஒரு வருடமாக வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டது.
அந்த வகையில் குறித்த குழுவின் இறுதி பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கடந்த செவ்வாய்கிழமை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையிலேயே மேற்குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான சர்வதேச குற்றங்கள், குற்றவியல் குற்றங்களாக கருதப்படும் வகையில் இலங்கை சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
மேலும், மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் மூலம் அரசின் மீதும், அரசு இயந்திரங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை காணப்படுவதாக அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் உள்நாட்டு விசாரணை நம்பிக்கைக்குரியதாக இருக்காது என்ற ரீதியில் தீவிரமாக கருத்துக்களை முன்வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எனினும், ஏனையப் பகுதிகளிலும், படையினரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சர்வதேச விசாரணைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றம், மனித குலத்திற்கு எதிரான சர்வதேச சட்டங்களை மீறிய குற்றம், சித்திரவதைகள், நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்கள் மிக மோசமான மனித உரிமை மீறல் குற்றங்களாகும்.
எனவே, இவ்வாறான குற்றங்களுக்கு மன்னிப்பளிப்பது சட்டவிரோதமானதாகும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இலங்கை ஒப்புதல் வழங்கியுள்ளமையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள, நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணி உறுப்பினர் பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்க கூடாது. அத்துடன், கலப்பு நீதிமன்ற பொறிமுறையையே தாங்கள் பரிந்துரை செய்துள்ளோம்.
எனினும், சர்வதேச நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அரச தரப்பு ஏற்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம்5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — ஊக்குவிக்கப்பட்டவராக உணர்கிறார்.
வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் கோவைக்காய்!
Ivy Gourd good for intestinal worms - Food Habits and Nutrition Guide in Tamil
புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இந்த எளிமையான காய்கறி கொடியினத்தை சேர்ந்தது இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.
கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.
நீரிழிவை கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.
பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
வாய்ப்புண் குணமாகும்
கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
தோல்நோய்களை குணமாக்கும்
இலை மற்றும் தண்டு - கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.
கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.
வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.