புதன், 17 மே, 2023

அநித்ய சுகம்.

 அநித்ய சுகம்




கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம்,
விண்ட நாகத்தின் வாயினில் வெருண்ட வன் தேரை,
மண்டு தேரையின் வாயினில் அகப்படு தும்பி,
வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.

ஒரு கருடன்  தன் வாயில் நாகத்தை இரையாகக் கொண்டு பறந்தது. அந்த நாகத்தின் வாயில் தவளையும்,  தவளையின் வாயில் தும்பியும் இருந்தன. தும்பிவண்டு நாவில் விழுந்த ஒருதுளி தேனை ருசித்து  அனுபவித்தது. இதைப் போன்றதே (மரணதேவனின் வாயில் இருக்கும்) மனிதர் அனுபவிக்கும் இன்பம்.

(ஆகவே அற்பமான உலக இன்பத்தை விடுத்து நிலையான பேரின்பத்தை தேடு.)

விலகியே இருத்தல் நலம்.

விலகியே இருத்தல் நலம்.



டவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்,
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும்,
தடவரை முலைமா தேயித் தரணியில் உள்ளோர்க் கெல்லாம்,
மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.

இளம் பெண்ணே! முடவன் (எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவன்) ஒருவனை முரடன் ஒருவன் துன்புறுத்தினால் அவனை அவனினும் வலியவன் வதைப்பான்.  அவ்வலியவனை எமன் கொல்வான். இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் இது நியதி. ஏழையைக் அடித்த கோல் ( விதி மாறும்போது) வலியவனையும் அடிக்கும் என்று அறிந்து கொள்வாயாக!

#விவேக் சிந்தாமணி#

சொல்லுவார்,வார்த்தை கேட்டு.



சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை யிகழ்வார் புல்லர்

நல்லவர் விசாரி யாமற் செய்வரோ நரிசொற் கேட்டு

வல்லியம் பசுவுங் கூடி மாண்டதோர் கதையைப் போலப்

புல்லிய ரொருவ ராலே போகுமே யாவும் நாசம். (45)


  • கேட்பார் சொல்லைக் கேட்டுத் தன் தோழனை இகழ்வாகக் கருதுபவர் ‘புல்லர்’.
  • நல்லவர்களை விசாரிக்காமல் தோழனை இழப்பார்களோ?
  • நரியின் சொல்லைக் கேட்டுப் புலியும் பசுவும் கூடி வாழ்ந்த கதை போல் புல்லியன் ஒருவனால் நல்லவன் வாழ்வு முடிந்துவிடும்.

# பட்டினத்தார் பாடல்#

 மாலைப்பொழுதில் நறுமஞ்சல் அரைத்தே குளித்து

வேலை மினுக்கிட்டு விழித்திருந்து- சூலாகிப்

பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை

பித்தானால் என்செய்வாள் பின்.

    # பட்டினத்தார்    பாடல்#