புதன், 17 மே, 2023

விலகியே இருத்தல் நலம்.

விலகியே இருத்தல் நலம்.



டவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்,
மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும்,
தடவரை முலைமா தேயித் தரணியில் உள்ளோர்க் கெல்லாம்,
மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.

இளம் பெண்ணே! முடவன் (எதிர்க்கும் ஆற்றல் இல்லாதவன்) ஒருவனை முரடன் ஒருவன் துன்புறுத்தினால் அவனை அவனினும் வலியவன் வதைப்பான்.  அவ்வலியவனை எமன் கொல்வான். இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் இது நியதி. ஏழையைக் அடித்த கோல் ( விதி மாறும்போது) வலியவனையும் அடிக்கும் என்று அறிந்து கொள்வாயாக!

#விவேக் சிந்தாமணி#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள