எனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தின் ஒரு தொகுப்பு.ஒரு புகாராக, எழுதியுள்ளேன் வாசித்துப் பாருங்கள்.இப்படி ஒரு நிலைமை உங்களுக்கும் வந்திருக்கலாம், அல்லது இனிமேலும் இப்படி ஒரு நிலைமை ஏற்படலாம்.
Tweet
பிராந்திய
முகாமையாளர்,
மக்கள்
வங்கி,
மட்டக்களப்பு,
ஐயா!
மக்கள்
வங்கி நகரக் கிளை, நடைமுறைக்
கணக்கு இலக்கம் -113-1001-577-12463.
நான்
முப்பது வருடங்களுக்கு மேலாக,மக்கள் வங்கியில் வாடிக்கையாளராக
இருந்து வருகிறேன்.கடந்த 2002 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முதலாந்
திகதி முதல்,மட்டக்களப்புத் திருகோணமலை
வீதியில் இருந்த மெட்ராஸ் கபே என்ற
நிறுவனத்தை வாங்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளருடன் ஐம்பது லட்சம் முற்பணமாகக்
கொடுத்து ஒரு ஒப்ந்தத்தையும் சட்டத்தரணியுடாகச் செய்திருந்தேன்
.
2007
ஆம்
ஆண்டு, எனது வியாபாரத்தை மேம்படுத்தும்
நோக்கத்துடன்,மக்கள்வங்கியில் நிரந்தரமான வங்கி
மேலதிகப்பற்று ரூபா ஐந்துலட்சம், எனது வீடு வளவை அடைமானமாக வைத்து
பெற்றுக்கொண்டேன்.வியாபர
நிலைய உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ,
வியாபார
நிலையம் மூன்று வருடங்கள் பூட்டவேண்டிய
நிலைமை ஏற்பட்டது.இதன் காரணமாக என்னால் எனது கணக்கைச் சரிவர நடத்த முடியாமல்
போய்விட்டது.
பின்னர்
மூன்று வருடங்களின் பின்னர், மத்தியஸ்தர்களின் தலையீட்டினால், வியாபார
நிலையம் விற்கப்பட்டு, எனக்கு வரவேண்டிய பணம் எனது கரம்
கிட்டியது. உடனடியாக, முதல் வேலையாக
மக்கள்
வங்கியில் எனக்கு இருந்த நிரந்தர வங்கிமேலதிகப் பற்றைக்
கட்டிமுடித்து, மட்டக்களப்பு
மாநகரசபையின்
சந்தைக் கடைத் தொகுதியில் ஒரு வியாபாரத்தையும் நடத்தி வருகிறேன்.எனது கணக்கை
மீண்டும் நடைமுறைப் படுத்துவதற்கு முதல் முகாமையாளரிடம் கேட்டு விட்டுத்தான்
காசோலை
எழுதத் தொடங்கினேன்.முதலாவது காசோலை எழுதியதும்,முகாமையாளரிடம்
அறிவித்துவிட்டுத்தான் பணத்தை வைப்புச் செய்து விட்டுச் சென்றேன்.இரண்டாவது காசோலை
வங்கிக்கு
வந்தநேரம் எனதுகாசோலையையும் சேர்த்து கணக்கின்
மீதி ரூபா 48 ,095 .92 சதம்.தங்களுக்கு செலுத்த வேண்டிய
வட்டிப் பணம் ரூபா 51
,903 .04 சதம்.மேலதிகமாக தேவைப்படுவது ரூபா 3807
.12
சதம்.இதைவிட
நான் அன்றே இந்த மீதிக்குப் பதிலாக ரூபா 4000 .௦௦
வைப்புச் செய்து விட்டேன்.எனது சேமிப்புக் கணக்கில் இருந்தது இதைவிடப்
பலமடங்கு.வங்கிக்கு நான் கடனாளியாக இருந்தபோது எனது சேமிப்புக் கணக்கில் இருந்து
ரூபா 160,௦௦௦000.00
ஒரே
தடவையில் எடுக்க முடியுமானால்,ஏன்
எனது சேமிப்புக் கணக்கில் இருந்து இந்த ரூபா 3807. 12 சத்தத்தை
ஈடு பண்ண, வங்கி
முகாமையாளரால் முடியாமல் போனது.வங்கியில் நாங்கள் சேமிக்கும், எமது
பணத்தில் இருந்து, இதைச் செய்ய முடியாத ஒரு வங்கி
முகாமையாளர் எப்படி வங்கிப் பணத்தில் இருந்து, பொதுமக்களுக்கும்,வாடிக்கையாளருக்கும்
உதவிகள் செய்யப்போகிறார்? இதே கேள்வியை முகாமையாளருடன்
கேட்டேன்,அதற்கு அவர் நடைமுறையில் இல்லாமல்
இருந்த கணக்கிற்கு இவையெல்லாம் ஏற்புடையதாகாது என்று என்னை திருப்திப் படுத்த
முயற்சி செய்தார். .
கடந்த
மூன்றாந் திகதி காசோலைப் புத்தகம் ஒன்றைப் பெறுவதற்காக,வங்கிக்குச்
சென்றவேளை
காசோலைப்
புத்தகம் தரமுடியாது,முகாமையளரைச் சந்திக்கும் படி
பணிக்கப்பட்டேன். சந்தித்தபோது
உங்களது
கணக்கு திருப்தியற்ற முறையிலுள்ளதால் கணக்கை மூடுவதற்கு உள்ளதாகவும்,இது
சம்பந்தமாக எனக்கு கடிதம் அனுப்பியதாகவும்,கணக்கை முடப்போவதாகவும்
கூறினார், நான் சொன்னேன்
கொடுத்த
காசோலைகள் வங்கிக்கு வந்து,கொடுத்தவர்களுக்கு காசாகும்வரை
கணக்கை மூடாதிருக்கும்
படியும்,அதுவரை
எனக்கு கால அவகாசம் தரும்படி அவரை கேட்டுக் கொண்டுள்ளேன்.
நாங்கள்
தங்களிடம் வேண்டுவது, இந்தச் சேமிப்புக் கணக்குகளால், வாடிக்கையாளருக்கு, வியாபாரம்
செய்பவர்களுக்கு
என்ன இலாபம்? எனக்கு நடந்த இந்த அநீதி வேறு ஒரு
வியாபாரிக்கும் நடக்க விடாமல்
நீங்கள்
தடுக்க வேண்டும். ஏன் முகாமையாளர் இப்படித்
தான்தோன்றித் தனமாக நடந்துகொண்டார். தொடர்ந்தும் நான் மக்கள் வங்கியின்
வாடிக்கையாளராக இருக்க ஆவன செய்வீர்கள் என ஆவலுடன்
காத்திருக்கின்றேன். தொடர்ந்தும் மக்கள் வங்கியின் பெயர்,மக்கள் மத்தியில் நிலைத்து நிற்க,அதன் ஊழியர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே
எமது எதிர் பார்ப்பு.
இப்படிக்கு,
………………………………………..
அருள்மொழி
உருத்திரா.
"ஐஸ்வர்யா
ஸ்வீட்ஸ் மார்ட்"
இல.
09.மாநகர
சபை சந்தைத் தொகுதி,
பன்சலை
வீதி,
மட்டக்களப்பு.
18-10-2011












