வெள்ளி, 27 நவம்பர், 2009

இலங்கைச் சரித்திரம் -22


Posted by Picasaபுதிதாகப் படிப்பவர்கள் முதலில் உள்ள பழைய  பதிவுகளை படித்துவிட்டு இந்தப் பதிவைத் தொடருங்கள்,எழுத்துகள் பெரிதாகத் தெரியபக்கத்தின் மேல்  மௌசை அழுத்திக் கிளிக்கவும் பக்கம் பெரிதாகத் தெரியும் படித்ததும் உங்கள் சிந்தனையில் 
உதிப்பதைப் பதிவாக பின்னூட்டமிடுங்கள்.பக்கம் 23 க்குப் போக  

திங்கள், 16 நவம்பர், 2009

கணவனுக்கேற்ற மனைவி.....!






பத்தாவுக் கேற்ற பதிவிரதை யுன்டானால் எத்தாலுங் கூடியிருக்கலாங் -சற்றேனுங் ஏறு மாறாக விருப்பாளே யாமாயிற் கூறாமற் சன்யாசங் கொள்


சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப்போல் வடிவு கொண்டாளைப் பெண்டேன்று கொண்டாயே -தொண்டர் செருப்படிதான் செல்லாவுன் செல்வேமென்ன செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுத நேர்





மேலேயுள்ள பாடல்கள் இரண்டும் ஔவையார் பாடிய பாடல்கள்,எப்படியான மனைவியுடன் எப்படி வாழலாம் என்பதை தெட்டத் தெளிவாக விளக்கியுள்ளார். முதலாவது பாடலில் சரியான மனைவி வாய்க்கவில்லை என்றால் ஒருவரிடமும் சொல்லாமலே சன்யாசங்கொள்ளலாம் என்றும், இரண்டாவது பாடலில்,இப்படியான மனைவியுடன் வாழ்வதைவிட, நெருப்பிலே வீழ்வது மேல் என்றும் பாடியுள்ளார்.ஔவையார் சொன்னதை நான் ஏன்? சொல்கிறேன் என்றா கேட்கிறிங்க. அக்கம் பக்கம் நடந்தவைகளைப் பார்த்தேன், இந்தப் பாடல்கள் நினைவு வந்தது.இன்னும் ஒன்று நினைவு வந்தது அதுதான், பாடிய புலவரும் ஒரு பெண்தான் என்று,இல்லாவிட்டால் வசை பாடியே கொன்றுவிடுவார்கள்.

ஞாயிறு, 8 நவம்பர், 2009

களுதாவளை கு.பாக்கியராஜா அறிமுகம்


களுதாவளை கு. பாக்கியராஜா அறிமுகம் அன்மையில் இவரது பக்தி பாமாலை அல்பம் வெளியீட்டில் இடம்பெற்றது நமது கலைஞர்களை நாமும் பாராட்டுவோம்

வெள்ளி, 6 நவம்பர், 2009

ஊரான ஊரிழந்தோம்..

                                                          




"ஊரான ஊரிழந்தோம்...
ஒற்றைப்பனைத் தோப்பிழந்தோம்.
பாராள வந்தவரே!
உம்மையும் தான் நாமிழந்தோம்.
கடலே நீ இரையாதே!
காற்றே நீ வீசாதே!
நிலவே நீ அவியாதே!
நெஞ்சமெல்லாம் தீயாச்சே!
ஆற்றோரம் மணல் மேடு.
மணல் மேட்டில் பட்டிபூ!
பட்டிப் பூ பூத்திருக்கு.
யார் வரவைக் காத்திருக்கு"
ஈழத்துக் கவிஞ்ஞர் சேரன்
இணைய வலையில் தேடியபோது கிடைத்தது. தலையிடியும் காய்ச்சலும் தனக்குவந்தால்தான் தெரியும்.அனுபவம்தான் அருமையான கவிதைகளையும், காவியங்களையும் தந்திருக்கிறது,அதை மீண்டும் நிருபித்திருக்கிறார் ஈழத்துக் கவிஞர் சேரன் அருமையான கவிதைக்கும் அவருக்கும் நன்றிகள் கோடி.                      

செவ்வாய், 3 நவம்பர், 2009

கனவின் கருவில்....

நமது இளைஞர்களின் படைப்பு,இருகரம் கொண்டு வரவேற்போம்