வெள்ளி, 16 டிசம்பர், 2016


அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையில் தரம் 111இற்கு ஆட் சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை -2016
சகல விபரங்களும் விண்ணப்ப முடிவுத்திகதி 2017-01-16




















போதைப்பொருள் சந்­தை­யாக மாறி­யி­ருக்கும் இலங்கை

நிம்மதியை சீர் குலைத்துள்ள புத்த குருவின் அடாவடித்தனம்.

நிம்மதியை சீர் குலைத்துள்ள புத்த குருவின் அடாவடித்தனம்.

இரண்­டா­வது தட­வை­யா­கவும் மட்­டக்­களப்பு மங்­க­ள­ரா­மய விஹாராதிபதி சுமண ரத்ன தேரர் ஆரம்­பித்­துள்ள அடா­வ­டித்­தன நட­வ­டிக்கை கடந்த கால யுத்தச் சூழ்­நி­லையால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கில் பகு­தி­களில் வாழ்ந்த மூவின மக்­களின் மீள் குடி­ய­மர்வுப் பணி­களில் எதிர்­கால – தற்­கால நிம்­ம­தியை குழப்­ப­ம­டையச் செய்­துள்­ளது.
1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலை­ய­கத்­தி­லி­ருந்து விரட்டியடிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் மட்­டக்­க­ளப்பு, வவு­னியா போன்ற இடங்­களில் குடி­யே­றியபோது புனா­ணை­யி­லி­ருந்தும் இர­வோடு இர­வாக விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டார்கள்.
உடல்நிலை பூரண சுகம் இல்­லாத நிலையில் தமிழ் மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அநீ­தி­க­ளுக்­காக தன்­னையே அர்ப்­ப­ணித்து, அமரர் தொண்­டமான், அமரர் தேவ­நா­யகம் சகிதம் மட்­டக்­க­ளப்­பிற்கு நேர­டி­யா­கவே வருகை தந்­தவர் அமரர் தந்தை செல்­வ­நா­யகம்.
நாட்­டிலே இடம்பெற்ற யுத்தச் சூழ்­நிலை கார­ண­மாக வடக்கு, கிழக்கு பகு­தி­யிலே ஒற்­று­மை­யுடன் வாழ்ந்த மூவின மக்கள் மத்­தி­யிலே ஏற்­பட்ட விரிசல், இடப்­பெ­யர்­வுகள், மீள்குடி­யேற்­றங்கள் விட­யத்­திலே இது வரை­யிலும் இடம்­பெற்ற உயி­ரி­ழப்­புக்கள் ஈடு செய்ய முடி­யா­த­வை­யாகும்.
நல்­லாட்சி அரசு ஆட்­சிக்கு வந்­துள்ள போதிலும் மூவின மக்­க­ளு­டைய நிம்­மதி நிலை­பெ­றா­த­துடன், வரு­மா­னமும் பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலையே விசே­ட­மாக வடக்கு, கிழக்கு மூவின மக்­க­ளு­டை­ய­தாக இருந்து வரு­கி­றது.
யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய நிலைமை இன்றுவரையில் முழு­மை­யாகச் சீர­டை­யாத நிலை­யிலே பலன் தந்த மா, தென்னை, பலா போன்ற மரங்­க­ளையும் மற்றும் பழைய வீடு, கிணறு, மல­ச­ல­கூடம் என்­ப­வை­க­ளையும் காட்டு யானைகள் சேதப்­ப­டுத்­து­வதும் மீள்குடி­ய­மர்ந்த மக்­களின் உயிர்­களை காவுகொள்­வதும் மற்­று­மொரு துக்­க­க­ர­மான சம்­ப­வ­மாகும்.
யானை­யினால் ஏற்­ப­டு­கின்ற உயிராபத்­துக்கள் ஒருபுற­மி­ருக்க மறு­பு­றத்தில் மட்­டக்­களப்பு பிர­தேச ஆற்­றிலே என்­று­மில்­லா­த­வாறு இராட்­சத முத­ல­லை­யி­னாலும் உயிர் ஆபத்­துக்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன,
மட்­டக்­க­ளப்பு ஆற்­றிலே மீன்­பி­டித்துக் கொண்­டி­ருந்த ஒரு பிள்­ளையின் தந்­தையை இராட்­சத முதலை இழுத்துச் சென்ற சம்­பவம் கடந்த வரும் இடம்­பெற்­றுள்­ளது. ஒரு பிள்­ளையின் தந்­தை­யான இவர் இன்றுவரை­யிலும் வீடு திரும்­ப­வில்லை,
இதன் கார­ணத்­தினால் ஆற்­றிலே மீன்பிடித்­தொ­ழிலை மேற்­கொள்ளும் மீனவர்கள் தனி­யாக ஆற்­றுக்குச் செல்­வ­தில்லை. தோணி மூலம் இரு­வ­ரா­கவே தமது தொழி­லுக்கு செல்லும் நிலை உரு­வா­கி­யுள்­ளது,
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தைப் பொறுத்­த­மட்­டிலே இங்கு வாழ்­கின்ற மக்­க­ளு­டைய பிர­தான தொழில் விவ­சாயம், மீன்­பிடி. இவற்­றிலே கடற்­தொழில், ஆற்றுத்தொழில் என இரு­வ­கை­யா­க­வுள்­ளது. ஏனை­ய­வர்­க­ளு­டை­யது வியா­பாரம், அரச தொழில், கைத்­தொழில், கூலித் தொழில் என்­ப­ன­வாகும்.
கடந்த கால யுத்தச் சூழ்­நி­லை­யினால் விவ­சாயம், வீடுகள், கிண­றுகள், மல­ச­லக்­கூடம் என்­பன பாதிக்­கப்­பட்ட நிலையில் மறு­புறத்தில் மட்­டக்­க­ளப்பு அரச உத்­தி­யோ­கத்­தர்கள், இது­வ­ரை­யிலும் உரிய ஆவ­ணங்­க­ளுடன் விண்­ணப்­பித்து பல வரு­ட­கா­ல­மாக நஷ்டஈடு கிடைக்­காமல் ஏமாற்­றத்­துடன் காத்­தி­ருக்கும் ஓய்வுபெற்ற உத்­தி­யோ­கத்­தர்கள் மறு­புறம் கவ­லை­யுடன் வாழ்­கின்­றனர்.
ஆட்சிமாற்றம் ஏற்­பட்டு அர­சியல் மூலம் புதிய முன்­னேற்றம் மக்­க­ளுக்கு ஏற்­பட்டு விடும் என்ற ஆவலும் தற்­பொ­ழுது மட்­டக்­க­ளப்பில் திடீ­ரென ஏற்­பட்­டி­ருக்­கின்ற அடா­வ­டித்­தன நட­வ­டிக்­கையும், வித்­தி­யா­ச­மான அறிக்­கை­களும் நிம்­ம­தி­யாக வாழ்ந்த மக்­க­ளு­டைய வாழ்வில் இருளை ஏற்­ப­டுத்­து­வதும் காலத்­திற்குக் காலம் ஏற்­ப­டு­கின்ற தொடர் கதை­யா­க­வுள்­ளது.
மட்­டக்­க­ளப்­பிலே 1990 ஆம் ஆண்டு அசா­தா­ரண சூழ்­நிலை ஏற்­பட்ட வேளை­யிலே வந்­தா­று­மூ­லை­யி­லுள்ள கிழக்குப் பல்­க­லைக்­க­ழகம் அக­தி­மு­க­மா­க்கி­யது. இந்த முகாமில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தத்­தினால் இங்கு அக­தி­யாக இருந்­த­வர்­களில் 159 பேர் இன்று வரையில் எங்கே என்று கூடத் தெரி­யாத நிலை உள்­ளது.
வந்­தா­று­மூ­லை­யி­லுள்ள கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் 1990 ஆம் ஆண்டு இயங்­கிய அக­தி­மு­காமில் தஞ்­ச­ம­டைந்த மக்­களில் நல­னுக்­காக இங்கே கட­மை­யி­லி­ருந்த சித்­தாண்டி ஆறு­முகம் வைத்­தி­யரின் மூத்த மகன் செல்­வ­ராசா (தளவாய் கிராம சேவை­யாளர்), வந்­தா­று­மூலை சி.தணி­கா­சலம் (கர­டி­ய­னாறு கிராம சேவை­யாளர்) இவர்கள் இரு­வரும் கடத்­தப்­பட்டு இன்று வரையில் எங்கு இருக்­கி­றார்கள் என்றே தெரி­யாது.
கடந்த 1990 ஆம் ஆண்டு அசா­தா­ரண சூழ்­நி­லையின் போது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே கட­மை­யாற்­றிய 27 கிராம சேவை­யா­ளர்கள் இறந்துபோனார்கள். இவை­த­விர, முதுமை தள­ராமல் சேவை­யி­லி­ருந்து எது­வி­த­மான பதவி உயர்வும் சம்­பள உயர்­வு­க­ளு­மின்ற சேவை­யி­லி­ருந்து குறைந்த சம்­ப­ளத்­துடன் ஓய்வுபெற்றுச் சென்றுவிட்­டார்கள். உயிர் பாது­காப்­பிற்­காக சேவை­யி­லி­ருந்து எவ­ருக்கும் சொல்­லாமல் வெளி­நா­டு­க­ளுக்கும் சென்றுவிட்­டார்கள்.
பொதுச்­சே­வைகள் ஆணைக்­குழு
இவ்­வாறு தொழிலை விட்ட கிராம சேவை­யா­ளர்கள் மீண்டும் தமது சேவை­யினைத் தொடர்ந்து ஓய்வுபெற­ வி­ரும்­பினால் அல்­லது ஒப்­பந்த அடிப்­ப­டையில் சேவை செய்ய விரும்­பினால் உரிய ஆவ­ணங்­க­ளுடன் பிர­தேச செய­லாளர் மற்றும் மாவட்ட அர­சாங்க அதி­பரின் சிபா­ரிசு ஊடாக அர­சாங்க பொதுச் சேவைகள் ஆணைக்­கு­ழு­விற்கு விண்­ணப்­பிக்க வேண்டும்.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலே கல்­குடா, மட்­டக்­க­ளப்பு, பட்­டி­ருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகு­தி­க­ளிலும் 14 பிர­தேச செய­லகப் பிரி­வுகள் உள்­ளன. இவை­க­ளிலே 345 கிராம சேவை­யா­ளர் பிரி­வுகள் உள்­ளன.

இனவாதத்திற்கு அஞ்சமாட்டோம்!


போராட்டங்களை நடத்துவோர் இலங்கை வரவேண்டும் : வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு
(கோலா­லம்பூ­ரி­லி­ருந்து ரொபட் அன்­டனி)
எமது அர­சாங்கம் இன­வா­தி­க­ளுக்கு பயப்­ப­ட­வி­ல்லை. இன­வாதிகள் பய­மு­றுத்­தி­னாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை. அது­ மட்­டு­மன்றி கடந்த காலத்தில் நாங்கள் இன­வா­தி­க­ளுக்கு அஞ்ச  
வில்லை என்­ப­தனை நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்ளோம். இந்த விடயத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உறு­தி­யாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றனர். கடந்த இரண்டு வரு­டங்­களில் இதனை எமது அர­சாங்கம் நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்­ளது. இன­வா­தத்­துக்கும் அடிப்­படை வாதத்­துக்கும் எவ்­வி­த­மான இட மும் எமது நாட்டில் இல்லை என்­ப­தனை தெளிவாக கூறு­கின்றேன் என்று வெளி வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.  
வெளிநா­டு­களில் வீதி­களில் ஆர்ப்­பாட்டம் செய்யும் குழுக்­க­ளிடம் ஒரு கோரிக்கை விடுக்­கின்றேன். இன­வாத குழுக்­களின் கைப்­பொம்­மை­யாக மாறாமல் இலங்­கைக்கு வந்து என்ன நட­க­கின்­றது என்று பாருங்கள். இன்னும் குறை­பா­டுகள் இருக்­கலாம். அவற்றை எமக்கு சுட்­டிக்­காட்­டுங்கள். வீதி­க­ளுக்கு அருகில் இருந்து கூச்­ச­லி­டு­வதன் மூலம் எத­னையும் சாதிக்­கவோ வெற்­றிக்­கொள்­ளவோ முடி­யாது என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.
இன்று தெற்­கிலும் இன­வா­தத்தை கையில் எடுத்து அர­சியல் செய்ய முயற்­சிக்கும் சாத்­தான்கள் உள்­ளன. அதே­போன்று வட­க­கிலும் இன­வா­தத்தை கையில் எடு:த்து அர­சியல் செய்ய சிலர் முயற்­சிக்­கின்­றனர். முஸ்லிம் மக்­க­ளுக்­குள்ளும் இன்று ஒரு சிலர் இன­வா­தத்தை கையில் எடுத்­துள்­ளனர் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் உத்தியோகபூர்வ விஜயத்தையடுத்து மலேஷியாவுக்கு வந்துள்ள அமைச்சர் மங்களசமரவீர கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அமைச்சர் மங்­கள சம­ர­வீர குறிப்­பி­டு­கையில்
மலேஷியாவில் எதிர்ப்பை வௌிக்­காட்­டு­வ­தாக கூறு­கின்­ற­வர்கள் புலம்­பெ­யர்ந்தோர் என்று கூற முடி­யாது. புலம்­பெ­யர்ந்தோர் என்ற வார்த்­தையை பயன்­ப­டுத்­து­வது அநீ­தி­யாகும். புலம்­பெ­யர்ந்தோர் என்­பது வெளிநா­டு­களில் வாழும் இலங்­கை­யர்கள் ஆவர். அது தமி­ழர்களாக இருக்­கலாம். அல்­லது சிங்­க­ள­வர்களாக இருக்­கலாம்.
ஆனால் இலங்­கையை சேர்ந்த புலம்­பெ­யர்ந்தோர் அனை­வரும் இலங்கை முன்னெடுக்கும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை வர­வேற்­கின்­றனர். இன்று பெரும்­பா­லான புலம்­பெ­யர்ந்தோர் இலங்­கை­யுடன் இணைந்து நல­லி­ணக்க செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கவும் எம்­முடன் இணைந்து செயற்­ப­டவும் முயற்­சிக்­கின்­றனர்.
அது தெளிவாக இருக்­கின்­றது. ஆனால் தற்­போது மலே­ஷி­யாவில் ஆர்ப்­பாட்­டம செய்­பவர்கள் குறைந்த பட்சம் இலங்கை புலம்­பெயர் மக்கள் அல்ல. அதிக­மானோர் இந்­திய தமிழ் பின்­ன­ணியைக் கொண்­ட­வர்கள்.
இந்­நி­லையில் அவர்­க­ளிடம் ஒரு விட­யத்தை கூறு­வ­தற்கு விரும்­பு­கின்றேன். இன­வாத குழுக்­களின் கைப்­பொம்­மை­யாக மாறாமல் இலங்­கைக்கு வந்து என்ன நட­க­கின்­றது என்று பாருங்கள். இன்று இலங்­கை­யா­னது அனைத்­து­ககும் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது. தெய்வேந்திர முனை­யி­லி­ருந்து பருத்­தித்­துறை வரை மக்கள் அனை­வரும் எங்கும் போகலாம். வரலாம். பேசலாம். கட்­டுப்­பா­டுகள் இல்லை. பத்­தி­ரிகை தணிக்கை இல்லை. பத்­தி­ரி­கை­யா­ளர்­களின் பின்னால் யாரும் செல்­வ­தில்லை. அச்­சுறுத்த இல்லை. இதுதான் இலங்­கையின் நிலைமை. எனவே பொய்­யான ஆர்ப்­பாட்­டங்­களை இங்கு செய்­யாமல் இலங்­கைக்கு வந்து உண்மை நிலை­மையை பாருங்கள்.
இன்­னும் குறை­பா­டுகள் இருக்­கலாம். அவற்றை எமக்கு சுட்­டிக்­காட்­டுங்கள். வீதி­க­ளுக்கு அருகில் இருந்து கூச்­ச­லி­டு­வதன் மூலம் எத­னையும் சாதிக்­கவோ வெற்­றிக்­கொள்­ளவோ முடி­யாது.
கேள்வி நல­லி­ணக்­கத்­துக்­காக நீங்கள் அர்ப்­ப­ணிப்­புடன் கஷ்­டப்­ப­டு­கின்­றீர்கள். ஆனால் பாரிய தடைகள் இருப்­ப­தாக தெரி­கின்­றதே?
பதில் நாட்­டுக்குள் அவ்­வாறு பாரிய தடைகள் இல்லை. இன­வா­தத்தை தூண்­டுவோர் சிறிய குழு­வினர். ஆனால் அவர்­களின் குரல் உயர்த்த காட்­டப்­ப­டு­கின்­றது. அவர்கள் சிறு குழு­வி­ன­ராக இருந்­தாலும் அவர்­களின் சத்தம் பெரி­தாக இரு­க­கின்­றது. அதனால் அந்த சிறி­ய­ள­வி­லான இன­வாதம் பெரி­தாக இருக்­குமோ என பலர் எண்­ணு­கின்­றனர்.
ஆனால் இந்த சிறிய இன­வாத குழு­வினர் இலங்­கையை மீண்டும் பின்­ன­டைவை நோக்கி கொண்டு செல்ல முயற்­சிக்­கின்­றனர். இன்று தெற்­கிலும் இன­வா­தத்தை கையில் எடுத்து அர­சியல் செய்ய முயற்­சிக்கும் சாத்­தான்கள் உள்­ளன. அதே­போன்று வட­க­கிலும் இன­வா­தத்தை கையில் எடு:த்து அர­சியல் செய்ய சிலர் முயற்­சிக்­கின்­றனர். முஸ்லிம் மக்­க­ளுக்­குள்ளும் இன்று ஒரு­சிலர் இன­வா­தத்தை கையில் எடுத்­துள்­ளனர்.
ஆனால் இந்த நாட்டின் பெரும்­பா­லான மக்கள் மத்­தி­யஸ்த நிலைப்­பாட்­டுடன் அர­சாங்­கத்­துக்கு பாரிய ஆத­ரவை வழங்­கி­வ­ரு­கின்­றனர். 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் வர­லாற்றில் முதற் தட­வை­யாக அனைத்து மக்­களும் ஆத­ரவு வழங்­கிய தலைவர் ஒருவர் தெரி­வானார்.
தமிழ், முஸ்லிம், சிங்­கள பௌத்த மக்கள் அனை­வரும் இணைந்து ஜனா­தி­ப­தியை ஆத­ரித்­தனர். எனவே பெரும்­பா­லான மக்கள் இன­வாத போக்­கின்றி மிகவும் அமை­தி­யான முறையில் அர­சாங்­கத்­துக்கு பாரிய ஆத­ரவை வழங்­கி­வ­ரு­கின்­றனர். எனவே இன­வா­திகள் கத்­தி­னாலும் நாங்கள் பயப்­ப­ட­மாட்டோம். இலங்­கையில் இனங்­க­ளுக்கு இடையி­லான நல­லி­ணக்­கமும் ஒற்­று­மையும் இன்றி எதிர்­காலம் இல்லை.
சிங்­கப்பூர் போன்ற நாடுகள் எவ்­வாறு முன்­னேற்­ற­ம­டைந்­தன என்­ப­தனை நாம் சிந்­தித்துப் பார்க்­க­வேண்டும். எம்­மை­விட பின்னால் நின்ற நாடுகள் இன்று பாரிய முன்­னே­ற­றத்தை அடைந்­துள்­ளன. இதற்கு என்ன காரணம்?
நாட்டின் இன­வாத பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு முயற்­சித்­த­போதும் அனைத்து எமது தலை­வர்­களும் இன­வா­தி­களின் குர­லுக்கு அடி பணிந்­தார்கள். அது இறு­தியில் யுத்­த­மாக மாறி­யது. எனவே இப்­போ­தா­வது வர­லாற்றில் பாடங்­களை கற்று இலங்­கை­யர்கள் என்ற வகையில் தெற்­கா­சி­யாவில் சிறந்த நாடாக முன்­னே­ற­வேண்டும். நிரந்­தர சமா­தா­னத்தை நாட்டில் ஏற்­ப­டுத்த வேண்டும். இதற்கு இனங்­க­ளுக்கு இடையில் ஒற்­று­மை­யும் நல­லி­ணக்­கமும் அவ­சி­ய­மாகும். அத­னால்தான் நான் கஷ்­டப்­ப­டு­கின்றேன். காரணம் நாம் என்ன செய்­தாலும் மக்­க­ளுக்கு இடையில் ஒற்­றுமை இல்­லா­விடின் இந்த நாட்­டுக்கு எதிர்­காலம் இல்லை.
கேள்வி: ஆனால் உங்கள் அர­சாங்­கமும் இன­வா­தி­க­ளுக்கு அஞ்­சு­கன்­றதே?
பதில்: இல்லை. நாங்கள் இன­வா­தி­க­ளுக்கு பயப்­ப­ட­வி்­லலை.
கேள்வி பய­மு­றுத்­து­கின்­ற­னரே?
பதில் இன­வா­திகள் பய­மு­றுத்­தி­னாலும் நாங்கள் பயப்­ப­ட­மாட்டோம். பயப்­பட தேவை­யு­மில்லை. அது­மட்­டு­மன்றி கடந்த காலத்தில் நாங்கள் இன­வா­தி­க­ளுக்கு பயப்­ப­ட­வில்லை என்­ப­தனை நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்ளோம். நாங்கள் இன­வா­தி­க­ளுக்கு பயப்­ப­ட­வி்ல்லை. இன­வா­தி­க­ளுக்கு பயப்­ப­ட­மாட்டோம் என்­ப­தனை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இன்று உறு­தி­யாக காண்பித்துவருகின்றனர். கடந்த இரண்டு வரு­டங்­களில் இதனை எமது அர­சாங்கம் நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்­ளது. இன­வா­தத்­துக்கும் அடிப்­படை வாதத்­துக்கும் எவ்­வி­த­மான இடமும் எமது நாட்டில் இல்லை என்­ப­தனை தௌிவாக கூறு­கின்றேன்.
கேள்வி நல­லி­ணக்க செயற்­பாட்டின் இறுதி அங்­க­மாக தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விடயம் காணப்­ப­டு­கின்­றது. அந்தத் தீர்வை காண்­ப­தற்கு இன­வா­திகள் குழப்­பு­வார்கள் போன்று தெரி­கின்­றதே?
பதில் நிச்­ச­ய­மாக செல்வோம். நான் முன்னர் கூறி­ய­து­போன்று பழைய அர­சியல் சாத்­தான்கள் இன்னும் தனது வேலையை காட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இறந்த பின்­னரும் பேய்­க­ளாக வந்து தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். குழப்­பு­கின்­றனர். இன­வா­தத்தை வைத்து முன்­னேற முயற்­சிக்­கின்­றனர். ஆனால் அந்த இன­வா­தத்தை மக்கள் நிரா­க­ரிக்­கின்­றனர். அவ்­வாறு நிரா­க­ரிக்கும் மக்கள் மிக அதி­க­மாகும்.
கேள்வி தவ­றான வெளிவி­வ­கார கொள்­கையை முன்­னெ­டுப்­ப­தாக உங்கள் மீது குற்­றச்­சாட்டு உள்­ளதே,
பதில் அந்தக் குற்­றச்­சாட்டு எந்த அடிப்­ப­டையில் வரு­கின்­றது என்று தெரி­ய­வில்லை. இன்று இலங்­கை­யா­னது உலகின் அனைத்து நாடு­க­ளு­டனும் சிறந்த உறவை பேணு­கின்­றது. இலங்­கையை இன்று உலகம் நாடு­கின்­றது. சீனா, அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள், இந்­தியா, ரஷ்யா என அனைத்து நாடு­க­ளு­டனும் இணைந்து செயற்­ப­டு­கின்றோம். இந்த யுகத்தில் முதற்­த­ட­லை­யாக ஜனா­தி­பதி ரஷ்­யா­வுக்கு அரச விஜ­யத்தை மேற்­கொள்­கின்றார். எனவே இதனை ஒரு பக்கம் சார்ந்­தது என்று எவ்­வாறு கூற முடியும். இது பொறா­மையின் வௌிப்­பாடு. கடந்­த­கா­லத்தில் சர்­வ­தே­சத்­திடம் இருந்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட தரப்­பினர் இவ்­வாறு கூறு­கின்­றனர்.
கேள்வி அம்­பாந்­தோட்­டையில் 15000 ஆயிரம் ஏக்கர் காணியை சீனா­வுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பு முழு நாட்டுக்கும் பாதகமானது என்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில் இந்த எதிர்ப்பை வௌியிடுகின்றவர்கள் யார்? உறுதிபத்திரத்தின் ஊடாக அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்க முன்வந்தவர்களே இதனை கூறுகின்றனர். இந்த நாட்டு மக்களுக்கு பொருளாதார முன்னேற்றமே அவசியமாகும். அது அம்பாந்தோட்டையில் சீனாவா? திருகோணமலையி்ல் இந்தியாவா, ? இல்லாவிடின் மற்றுமொரு இடத்தில் அமெரிக்காவா? என்பது சிக்கல் அல்ல. முன்னேற்றமே அவசியமாகும்.
எமது நீதித்துறையின் சுயாதீனம் காரணமாக பொருளாதார செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுப்பது இலகுவாக இருக்கின்றது. முதலீடுகளுக்கு சிறந்த சூழல் உள்ளது. எமக்கு ஏற்கனவே இந்தியா பாகிஸ்தனுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உள்ளது. தற்போது சீனா சிங்கப்புர் மலேஷியா போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்யவுள்ளோம். 

கார்த்திகையின் சிறப்பு !

கார்த்திகையின் சிறப்பு !




கார்த்திகை ஒரு ஆரியப் பண்டிகை என்று பக்குவப்படாத அறிவுகள் கொடி பிடிக்கும் முன்பு நமது பாரம்பரியத்தை மக்களிடம் அடையாளம் காட்டுவது நமது கடமையாகும்:
----------------------------------------------------------------------------------------------
இந்து பண்டிகைகள் என்று வந்தாலே போதும் அர்த்தமற்ற நாத்தீக கருஞ்சட்டைக் கூட்டமும், தொப்புள் கொடி உறவி என்று சொல்லிக் கொண்டு உயிர்நாளங்களை அறுக்கும் மதத்தவரும், ஆங்கிலேய மதத்தவரும், இது ஒரு ஆரியப் பண்டிகை, பார்ப்பன சடங்கு என்று நீட்டி முழங்கத் தொடங்கி விடுவார்கள். சங்கத் தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீபத் திருநாள் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
தொல்காப்பியம்:
---------------------------
“வேலி நோக்கிய விளக்கு நிலையும்” (தொல்காப்பியம்: 35)
பொருள்:- “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு”
அகநானூறு:
-------------------
”குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்
அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி” (அகம்.141)
பொருள்:- கார்த்திகை திருவிழாவுக்கு எல்லோரும் சொந்த ஊருக்குப் போய்விடுவர். தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல்.
கார்த்திகை அறிவியல்:-
-------------------------------------
அறிவியல்படியும் Pleiades வானத்தில் நட்சத்திரக் கூட்டம். இது ‘திறந்த கூட்டம்’ (Open cluster) என்ற பகுப்பைச் சேர்ந்தது. திறந்த கூட்டங்கள் பிரபஞ்ச அளவைகளில் ‘சமீப காலத்தியது’. கார்த்திகைக் கூட்டம் உண்டாகி 100 மில்லியன் ஆண்டுகள் தான் இருக்கும். நம்மிடமிருந்து 400 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளன. சாதாரண தொலைநோக்கி வழியாகப் பார்த்தால் கூட கூட்டத்தில் பற்பல நட்சத்திரங்களைக் காணமுடியும். கார்திகை தீபஒளித் திருவிழா மனிதனுக்கு தியானத்தையும் மன நிம்மதியையும் கற்றுத்தருகிறது. இருள் நீங்கி ஒளி பிறக்கும் பரவசத்தை தருகிறது.
--------------------------------------------------------------------------------------------
பண்டிகைகளாக இருந்தாலும் சரி, சடங்குகளாக இருந்தாலும் சரி சனாதனம் எப்போதுமே அர்த்தமுள்ளதும் தனித்துவம் கொண்டதும்தான்.

பேராசிரியர்களின் வரலாற்றுத் துரோகம்

தமிழ்ப் பேசும் மக்களின் வரலாறுகளையும்,கலை கலாச் சாரப் பண்புகளையும் சிதைத்து,பாடப் புத்தகங்களில் எழுதும் 
பேராசிரியர்களின் வரலாற்றுத் துரோகம் 


ஆதரவளித்த மக்களிடமிருந்து அரசு தனிமைப் படும் ஆபத்து

ஆதரவளித்த மக்களிடமிருந்து அரசு தனிமைப் படும் ஆபத்து 


வட மாகாண சபைக்கு எதிரான இனவாத யுத்தம்

வட மாகாண சபைக்கு எதிரான இனவாத யுத்தம் 
புத்த பெருமானை விஸ்ணுவின் மறு வடிவமாக மதிக்கும் இந்துக்கள்,
இந்து சமயத்தின் அன்பே கடவுள், ஆசைதான் அழிவு எல்லாவற்றிக்கும் காரணம்  என்பதை கைக்கொண்டவர்  

இனவாதத்தைப் பரப்புவதில் ஊடகங்கள்

இனவாதத்தைப் பரப்புவதில் ஊடகங்கள் 


தமிழ் பேசும் மக்களுக்கு விடிவைத்தருமா?
புதிய அரசியல் யாப்பு!
சிவ கிருஷ்ணா  





இலங்கை முஸ்லிம்களின் அரசியியல் போக்கு. சத்தார் எம் ஜாவித்

இலங்கை முஸ்லிம்களின் அரசியியல் போக்கு.
சத்தார் எம் ஜாவித்.
இனவாதிகளின் போக்கு இலங்கை முஸ்லிம்களையும் பர்மாவின் ரோகிங்க முஸ்லிம்களின் நிலைக்கு இட்டுச் செல்லுமா? 

மாண்புமிக்க அரசியல் தலைவர் டட்லி சேனநாயக்கா

மாண்புமிக்க அரசியல் தலைவர் டட்லி சேனநாயக்கா 

இலங்கையின் தலை சிறந்த வங்கியாக கொமெர்சல் வாங்கி தெரிவு.



இலங்கையின் தலை சிறந்த வங்கியாக கொமெர்சல் வங்கி தெரிவு.


தலைப்பைச் சேருங்கள்

அருகிவரும் முஸ்லிம்களின் கலாசார பண்பாட்டுக் கோலங்கள்.

அருகிவரும் முஸ்லிம்களின் கலாசார பண்பாட்டுக் கோலங்கள்.


அமெரிக்காவின் பொருளாதாரக் குழுவின் சென்னையைச் சேர்ந்த பெண்,இந்திரா நூயி


அமெரிக்காவின் பொருளாதாரக் குழுவின் சென்னையைச் சேர்ந்த பெண்,இந்திரா நூயி


தலைப்பைச் சேருங்கள்

சிரியாவின் அலெப்போவில் போர் முடிவு.


சிரியாவின் அலெப்போவில் போர் முடிவு.


ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை அம்பலப்படுத்திய மின்னஞ்சல்




எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய மவுசை படத்தில் வைத்து அழுத்தவும்.


தமிழர் பிரச்சனை தீர்வின் ஓர் அங்கமே காணி விடுவிப்பு.

தமிழர் பிரச்சனை தீர்வின் ஓர் அங்கமே காணி விடுவிப்பு.

(தெளிவாக வாசிக்க உங்கள் மவுசை, படத்தின் மேல் வைத்து அழுத்தவும்.)