செவ்வாய், 5 ஏப்ரல், 2011

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே,!



"சுருட்டுக் குடிக்கக் கூடாது" இது இலங்கையில்,ஆங்கில ஆட்சியாளர்களின் 
காலத்தில், அரச திணைக்களங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள்,புகையிரத 
நிலையங்கள், இப்படி முக்கியமான இடங்களில் இந்த விளம்பரப் பலகைகைகளைக் காணக் கூடியதாக இருந்தது.இதன் விளக்கம் என்னவென்று 
அந்நாளில் புரியவில்லை,விளக்கம் புரிய ஆரம்பித்த போது,சிரிப்புத்தான் வந்தது."புகை பிடிக்கக் கூடாது"என்பதை எப்படி ஆங்கிலேயர் விளங்கியுள்ளார்கள் என்பதை நினைத்து.

இது போலத்தான்,இந்தப் பாடலும்,இலங்கையில் மது என்ற பதம் அநேகமாகப் 
பாவிக்கப் படுவதில்லை,தற்போதைய சமுதாயம்,சாராயம்,கள்,போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மாத்திரமே உபயோகிக்கிறார்கள். இலங்கையில் 
மதுக் கடைகளைக் கொண்டு  வருவதற்கு முதல், கள்ளுக் கடைகள் தான் 
பிரபல்யம்,1970  துகளில் பிரபல்யமான இப் பாடலில் கள்ளின் மகத்துவம் 
சொல்லப் பட்டுள்ளது, இதனால் வரும் சங்கடங்களையும்,மிகவும் எளிமையாகப் பாடி விளக்கியுள்ளார் திரு நித்தி கனக ரெத்தினம் கேட்டுப் 
பாருங்கள்.  

சனி, 2 ஏப்ரல், 2011

இப்படியெல்லாம்,நினைக்கக் கூடாது. ?


மடிக்கனணி,மாவாட்டுங்கல்,திங்கரிசி,திருமணத்திற்கு
உடுபிடவை,இவையெல்லாம் இலவசமாய் யான் இடுவேன் 
தங்கத் தமிழகத்துத் தமிழ் மக்களே,நீங்கள்  
எங்கள் குடும்பம் கோலோட்ச வாக்கிடுங்கள்.

வீதிக்கொரு டாஸ்மார்க்,விடிய விடிய டிவி.
வீக்கிக்கு ஒரு தமிழ்ப்படம்,இடை இடையே இசைவிழா 
எடுத்ததற்கெல்லாம் தந்தி கடிதம்,
இதைவிட என்னவேண்டும் உனக்கு 

படிக்கக் கவிதை,பாராட்ட  என் படைப்புக்கள்,
திட்டித் தீர்க்க திகட்டாத தேன் தமிழ்
மட்டிட முடியாத மக்கள் சொத்து 
காட்டிட முடியாது கணக்கு.

இலவச மின்சாரம் இடயிடையே கரண்ட் கட்.
இளைப்பாறவும்,இன்னல் வரும்போது பேசவும் 
இலங்கைப் பிரச்சினையும் ஈழத் தமிழனும்,
இவை போதும் எனக்கு.