திங்கள், 21 பிப்ரவரி, 2011

நீங்களும் குடிக்கலாம் பாம்பு வைன்.

நம்ம நாட்டில இல்லங்க.

ஆரம்பித்து வைத்தவர்கள் சவ் சீனா வம்சத்தினர்.இவர்களைப்பற்றி 

சவு வம்சம் சீனாவை அதிக காலம் ஆண்ட வம்சம் (ஆட்சி மரபு) ஆகும். இந்த வம்சம் 1045 கிமு 256 காலப் பகுதியில் சீனாவை ஆண்டது. இவர்களின் காலப் பகுதியில் இரும்பு சீனாவுக்கு அறிமுகமானது. செப்பு சிற்பவேலை உச்சங்களைக் கண்டது. சீன மொழியின் எழுத்துமுறை விரிவு பெற்றது.
சவு வம்சக் காலத்தில்தான் பிற்காலத்தில் சீனாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய பல மெய்யியலாளர்கள் வாழ்ந்தார்கள். கன்பூசியசுலா ஒசிமோகி, Han Fei, மென்சியசு போன்றோர் இன்றுவரை சீன சிந்தனையின் அடிப்படைகளாக விளங்குகிறார்கள்.

இவர்கள் காலத்தில் இருந்தே,இந்த பாரம்பரியமான மருத்துவமுறை,ஆரம்பிக்கப்பட்டதாக 
சீனாச் சரித்திரம் கூறுகிறது.இன்று,கொரியா, வியட்னாம் என்று ஆசிய நாடுகளையும் 
வலம்வரத் தொடங்கிவிட்டது,நீங்களும் இதைத் தயாரிக்க விரும்பினால்,இங்கு சென்று 
தேவையான பொருட்களைக் குறித்துக் கொள்ளுங்கள்.தயாரித்து முடித்து எனக்கும் ஒரு
"பெக்" முடிந்தால் அனுப்புங்கள்.