புதன், 27 செப்டம்பர், 2017

*~நாம் எங்கே செல்கிறோம்~*

*~நாம் எங்கே செல்கிறோம்~*
*_சற்றே யோசிக்கலாமே_*
சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், *'அம்மா’* என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே,
*_ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!_* என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் ~எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை~.
*_'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’_* என்று சொன்ன *பாட்டி* ~வானிலை அறிவியல் படித்தது இல்லை~.
*_ஆடிப் பட்டம் தேடி விதை_* என இன்றைக்கும் சொல்லும் *வரப்புக் குடியானவன்* ~விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை~.
*_மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்_* எனப் பாடிய *தேரன் சித்தர்* ~மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை~.
*_செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்_* எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் *சடையனுக்கு* 60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த ~வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை~.
_அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்?_
_அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?_
_இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?_
*ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு*.
*வள்ளுவன்*
சொல்லும்
*_மெய்ப்பொருள் காணும் அறிவும்_*
*பாரதி*
சொன்ன
*_விட்டு விடுதலையாயிருந்த மனமும்_*
சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.
*_மம்மி_*
எனக்கு
_வொயிட் சட்னிதான்_
வேணும்,
~க்ரீன் சட்னி~
வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,
_'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’_ என்றே மனம் பதறுகிறது.
அந்தக் குழந்தையிடம், *_'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’_*
எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.
_ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை_.
இந்த _மௌனங்களும், அவசரங்களும்_ ~தொலைத்தவை தான்~ அந்த *அனுபவப் பாடம்!*
*தொலைக்காட்சி விளம்பரங்கள்* சொல்லிக் கொடுத்து
*_புரோட்டின், கலோரி, விட்டமின்_* பற்றிய *ஞானம்* பெருகிய அளவுக்கு,
~'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு~;
_எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி_.
*பலாப் பழம் மாந்தம்*.
~பச்சைப் பழம் கபம்~·
*~புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்~*
என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.
~'அதென்ன சூடு, குளிர்ச்சி?~
அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !
இந்த *தெர்மாமீட்டர்ல* உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என _இடைக்கால அறிவியலிடம்_ ~தோற்றுவிட்ட~ அந்தக் கால *அறிவியலின் அடையாளங்களை,* _வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது._
*_~விளைவு?~_*
*'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’* எனும் ~அம்மா~,
*'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’* என்று அக்கறை காட்டும் ~அப்பா.~
*~'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’~* என எரிந்துவிழும் *எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்* படித்த ~அண்ணன்~ போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
*_'வயிறு உப்புசமா இருக்கா?_*
மாந்தமாயிருக்கும் கொஞ்சம் *ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’* என்ற _அனுபவத்துக்குள்_ ~அறிவியல் ஒளிந்திருக்கிறது.~
*ஏழு மாதக் குழந்தைக்கு ~மாந்தக் கழிச்சல்~ வந்தபோது,* *_வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த ~தாய்க்கு இன்று திட்டு~ விழுகிறது_*.
*~'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?~*
_குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’_ என்று ~கரித்துக் கொட்டுகிறார்கள்.~
*வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள ~அசரோன்~ என்ற பொருள் _நச்சுத்தன்மைக் கொண்டது_ என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த ~அசரோன்காணாமல் போய்விடும்~ என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.*
_பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும்_ மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா?
*'பிள்ளை-வளர்ப்பான்’!*
*'சளி பிடிச்சிருக்கா?* _கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க_.
_மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;_
*மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?*
_ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;_
*_சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;_*
*வாய்ப் புண்ணுக்கு* _மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;_
*பித்தக் கிறுகிறுப்புக்கு*
_முருங்கைக்காய் சூப்,_
*மூட்டு வலிக்கு*
_முடக்கத் தான் அடை,_
*மாதவிடாய் வலிக்கு*
_உளுத்தங்களி,_
*குழந்தை கால்வலிக்கு*
_ராகிப் புட்டு,_
*வயசுப் பெண் சோகைக்கு*
_கம்பஞ்சோறு,_
*வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு*
_வாழைத்தண்டுப் பச்சடி’_
என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்
சில நேரம் ~மருந்துகள்;~
பல நேரம் _மருத்துவ உணவுகள்._
*_காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி._*
*சுழியத்தைக்* _(ஜீரோவை)_
கண்டுபிடித்து *_இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது_*.
*'பை’* என்றால் _22/7_ என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.
*'ஆறறிவதுவே அதனொடு மனமே’*
என மனதின் முதல் சூத்திரத்தை _சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு_ 30 தலைமுறைகள் முன்பே சொன்ன
*_தொல் காப்பியம்_*
எழுதிய ஊர் இது.
*~இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?~*
*_வாட்சப்பில் பெயரில்லாது பரப்பப்படும் செய்தியாக இல்லாமல், யாரோ நமக்காக நேரம் செலவுசெய்து அனுப்பிய சிறந்த பாடமாகக்கருதி பகிரவும், கொண்டுசேர்க்கவும்._*