புதன், 31 மார்ச், 2010

.நீங்களும் ஒரு சாமியாராக?





.நீங்களும் ஒரு சாமியாராக? என்ன தலைப்பே,ஒரு வித்தியாசமாக இருக்கா,வேறு ஒன்றுமில்லை.நம்ம நாட்டில் செய்தா அருள், வெளி நாட்டில் செய்தா தந்திரம்.நமது நாட்டில் இப்படிச் செய்தா ஒரு கூட்டமே, அவர் பின்னால்,மதிப்பு பல கோடிகள் தேறும்.
நீங்களும் முயற்சி செய்யுங்க,சாமியா? ஆசாமியா? உங்களைப் பின்தொடர்பவர்கள்
தீர்மானிக்கட்டும். எக்க சக்கமான தந்திரங்கள், முயற்சி பண்ணிப் பாருங்கள், நீங்களும்
ஒரு ........இணைப்புக்கு  


பிடிச்சி இருந்த பின்னூட்டத்தில் தெருவியுங்க.


அன்புடன்,!......

செவ்வாய், 30 மார்ச், 2010

அமெரிக்காவின் பார்வையில்,கூகுளும் சீனாவும்.



அமெரிக்காவின் பார்வையில்,கூகுளும் சீனாவும். 


மூடிற்றுப், போய்யா! 






எல்லாம் சரியாத்தான் இருக்கு,இருந்தும், ஏதோ ஒரு!.......






நல்ல சுருட்டு,ஆனா,புகைதான் ஜாஸ்தி .......






 எல்லாம் செய்து முடிச்சி,நம்ம கிட்ட வந்துதான் ஆகணும்


எப்படி படம் புடிச்சிருக்கா?போடுங்க பின்னூட்டத்தை




அன்புடன்,!.
       

திங்கள், 29 மார்ச், 2010

இலங்கைக் சரித்திரம்.-29A


தவறுக்கு வருந்துகிறேன், புதிய பக்கத்திற்குப் பதிலாக பழைய பக்கமே,இடுகையிடப்
பட்டுவிட்டது.


அன்புடன்,!.....

Posted by Picasa

இலங்கைக் சரித்திரம்.-29


இலங்கைக் சரித்திரம்.1883   ஆம்  ஆண்டு  யாழ்ப்பாணம்.மானிப்பாய் திரு.ஆ. முத்து தம்பிப்
பிள்ளை அவர்களால் எழுதி வெளியிடப் பட்டது.இதை முதல் பக்கத்தில் இருந்து
வாசிக்க  இங்கே அழுத்தவும்.எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய பக்கத்தில் மேல் மௌசை
வைத்து அழுத்தவும்.எப்படி இலங்கையின் சரித்திரம் இருந்தது என்பதை இலங்கை வாழ்
தமிழர்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.யாழ்ப்பாண நூலகம் எரியாமல் இருந்திருந்தால் இவைகளை நமது இளம் சந்ததியினர் அங்கு போய் வாசித்து அறிந்திருக்கலாம்.இப்படியான பதிவுகள் இருக்கக் கூடாது என்பதற்காகவே யாழ்.
நூலகம் திட்டமிட்டு அழிக்கப் பட்டதோ?

தொடர்ந்து வாசியுங்கள்.உங்கள் எண்ணத்தை பின்னூட்டமாக இடுங்கள்.

அன்புடன்,!.....

Posted by Picasa

ஞாயிறு, 28 மார்ச், 2010

ஆங்கிலம் பயில அரியதோர் இணையதளம்!








ஆங்கிலம் பயில அரியதோர் இணையதளம் 
ஆங்கிலத்தை பயில்வோருக்கும்,தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற 
வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும்,தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தைப் பட்டை தீட்டிக்கொள்ள நினைப்பவர்களுக்கும், சிறந்ததோர் இணைய தளம்.இலகு ஆங்கிலத்தில்,
சகலருக்கும் எளிதில்  விளங்கக்கூடிய முறையில்,எளிய விளக்கங்களுடன்.B ,B .C .உலக சேவையில் இருந்து,உங்கள் காலடியில் விரும்பினால்  தரவிறக்கமும்  செய்து கொள்ளலாம்.
இணைய தளத்திற்குச் செல்ல இங்கு அழுத்தவும்.
எல்லோருக்கும் இந்தச் செய்தி பிடித்திருக்கும் என நினைக்கிறேன். 




அன்புடன்,!......... 
                                    

வெள்ளி, 26 மார்ச், 2010

டீலா? நோ! டீலா!!

நகைச்சுவை, கற்பனைக் கதை.




"இலங்கையிலுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது,வேலையில்லாப் பிரச்சனை,இதை முதல் இல்லாமல் செய்துவிட்டால்,ஏனைய பிரச்சனைகளையெல்லாம்,கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்,வேலையற்றிரு ப்போரின்,கணிசமான அளவினரின்,தொகையைக் குறைத்தால்,இலங்கையின் இருப்போர்களின் வாழ்க்கை வளம்பெறும்,இலங்கையில் மிதமாக உள்ள ஊழியத்தை இருக்கின்ற வளத்தோடு இணைத்து,வேலையில்லாப்
பிரச்சினைக்கு முடிவுகாணலாம்" என்று தனதுரையை முடித்தார் இலங்கையின் சனாதிபதி.

வியாழன், 25 மார்ச், 2010

உங்கள் ஜாதகம் தமிழில்.

உங்கள் ஜாதகம் தமிழில்








செவ்வாய், 23 மார்ச், 2010

தேர்தல் பேச்சு.



தேர்தல் கூட்டங்கள் தூள் எழும்புது -தேறுதல் 
வார்த்தைகள் கூட்டத்தை தூள் கிளப்புது 
யாரும் இருந்ததில்லை சொந்தத் தொகுதியில்-இவர்கள்   
இருந்ததெல்லாம் இலங்கைக்கு  வெளியில். 

திங்கள், 22 மார்ச், 2010

இலங்கைசரித்திரம் -28

இலங்கைக் சரித்திரம்.1883   ஆம்  ஆண்டு  யாழ்ப்பாணம்.மானிப்பாய் திரு.ஆ. முத்து தம்பிப்
பிள்ளை அவர்களால் எழுதி வெளியிடப் பட்டது.இதை முதல் பக்கத்தில் இருந்து
வாசிக்க  இங்கே அழுத்தவும்.எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய பக்கத்தில் மேல் மௌசை
வைத்து அழுத்தவும்.எப்படி இலங்கையின் சரித்திரம் இருந்தது என்பதை இலங்கை வாழ்
தமிழர்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.யாழ்ப்பாண நூலகம் எரியாமல் இருந்திருந்தால் இவைகளை நமது இளம் சந்ததியினர் அங்கு போய் வாசித்து அறிந்திருக்கலாம்.இப்படியான பதிவுகள் இருக்கக் கூடாது என்பதற்காகவே யாழ்.
நூலகம் திட்டமிட்டு அழிக்கப் பட்டதோ?

ஞாயிறு, 21 மார்ச், 2010

இலங்கை தந்த இலக்கியம்.



இலங்கையின்,தமிழ் இலக்கிய வரலாற்றை, மு.வரதராசனார் ஐயா ஆராய்ந்து  
இருக்கிறார்.அவர் பார்வையில் "இலங்கை தந்த இலக்கியம்".இந்த இலங்கை இன்று இருந்தால் எப்படி இருக்கும்? வாசிப்பவர்களின் எண்ணங்களின் இந்தக் கேள்வி கட்டாயம் 
எழும்.இலங்கையில் இருப்பவர்களின் மனதில், நமது, இலங்கையில் இப்படி இருந்த
தமிழனுக்கா இந்தக் கெதி? என்ற ஆச்சரியம் தொக்கி நிக்கும்    


இலங்கை
பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் வளர்த்த நிலமாக இருந்து வருகிறது இலங்கையின் வட பகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் கிழக்குப்
பகுதியாகிய மட்டக்களப்பிலும் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார்.அவர் இயற்றிய ஏழு பாட்டுக்கள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன (ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் பழைய தமிழச்சொல்.)இலங்கையின் ஆட்சி மொழியாகப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழே இருந்து வந்தது.
சிங்களவரும் தமிழ் கற்று வந்த்தனர்.சிங்களவரில் சிலர் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளனர்.சிங்கள அரசர்கள் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலத்திலும் தமிழிலேயே கையெழுத்து இட்டனர்.ஆகையால்
நெடுங்காலமாகத் தமிழ் இலக்கியம் இலங்கையிலும் வளர்ச்சி பெற்று வந்ததில் வியப்பு இல்லை.

இலங்கையின் தமிழ் நூல்களும்,புலவர்களும்.
வட மொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத்தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பவரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும்.ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.
தமிழ் நாட்டில் தல புராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும்
அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன.தமிழ் நாட்டில் கோவை,உலா,
கலம்பகம்,சதகம்,தூது அந்தாதி,முதலான நூல்வகைகள் பெருகிய காலத்தில்
இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன.தக்கினா கைலாச
புராணம்,கோனாசல புராணம்,புலியூர்ப் புராணம்,சிதம்பர சபாநாத புராணம்,
முதலியன இயற்றப்பட்டன சிவராத்திரிப் புராணம்,எகாதாசிப் புராணம் என்பனவும் அங்கு பிறந்தவைகளே. சூது புராணம்,வலைவீசு புராணம் என்பன புதுமையானவை.கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது.
கிறிஸ்தவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன.முருகேசு பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை
இயற்றினார்.சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார்.ஊஞ்சல் ஆடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன.நவாலீயூர் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப்
பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார்.ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்
முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார்.
அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார்.
கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளை பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகின்றார்கள்.


சனி, 20 மார்ச், 2010

கணனியை இயக்கும் நேரம்.



நாம் கணனியை இயக்குவதற்கு எடுக்கும் நேரத்தை,எப்படி? கணனியை விரைவாக இயக்கி, வீணாகச்  செலவாகும்
பொன்னான நேரத்தை மீதம் செய்யலாம் என்பதை,விளக்கமாக மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறார்கள்,கணனி படிப்பவர்களுக்கும்,கணனி பற்றி கூடுதலாக
அறிய விரும்புபவர்களுக்கும்,எவ்வளவு படிச்சாலும் தலைக்குள் எதுவும் இறங்க்காதவர்களுக்கும், இந்தப் பதிவு மிகவும் பிரயோசனமாக இருக்கும்.




வலைப்பூவில் தமிழ்.


நமது வலைப்பூவில்(blogger) தமிழில் எப்படி பதிவிடுவது.பலவகைகள் இருந்தாலும் மிகவும் இலகுவான வழி முறை ஓன்று உண்டு.Google Transliteration IME  என்பது இதில்
இருக்கும் மொழிகள் நேரடியாக மொழி மாற்றமும் செய்யலாம் , தமிழ் மாத்திரமன்று,கிட்டத்தட்ட பதின்மூன்று   இந்திய  மொழிகள் தரவிறக்கம் செய்யலாம்.ஓட்டுவது,வெட்டுவது எதுவும் கிடையாது.நேராகவே பதிவிடலாம்,விளக்கம கூடுதலாக தேவைப் படாதவர்கள் இந்தப் பக்கத்துடன் தரவிறக்கி பதிவாக்கம் செய்து கொள்ளலாம் Google Transliteration IME  தரவிறக்க,.இங்கே அழுத்தவும் .இதில் விண்டோ எக்ஸ். பி, விண்டோ செவென்,
விண்டோ விஸ்டா,இவைகளுக்கு இவற்றைப் பதிவிறக்கலாம் எனச் சொல்லப் பட்டிருந்தாலும்,நான் விண்டோ எக்ஸ்.பி,விண்டோ விஸ்டா  இரண்டிலும் 
பயிற்சி செய்து,  நல்ல பலன் பெற்ற பின்னரே உங்களுக்குப் பதிவிடுகின்றேன்.   




வியாழன், 18 மார்ச், 2010

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?



கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?

வாசித்து அறிந்து கொள்ளுங்கள்,எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய.மௌசை பக்கத்தின் மேல் வைத்து அழுத்துங்கள்.






புதன், 17 மார்ச், 2010

மட்டக்களப்பின் பெயர் சொல்ல ஒரு பாடல்




 "'பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" என்பதைப்  போல 
நாம் பிறந்த மட்டக்களப்பைப் பற்றிய பாடல்.பாடலை  இயற்றிப் பாடியவர் திரு.ஞானப்பிரகாசம்,இசை ஆதவன் இசைக்குழுவினர்.

1975 ஆம் ஆண்டு காலப் பகுதியில்,இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய
அரங்கேற்றம் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்,அதில் சக்கை போடு
போட்ட பாடல்.மட்டக்களப்பின் தேசிய கீதம் என்ற மட்டத்தில்.பட்டி தொட்டியெல்லாம்
ஒலித்த பாடல்.1975 ஆம்,ஆண்டு  காலப் பகுதியில் மட்டுநகர் முற்றவெளியில் நடந்த
பௌர்ணமிக் கலை நிகழ்ச்சிகளை நினைவூட்டும் பாடல்.முன்பு நான் இப்பாடலை யூ
டீயுப்பில் வெளியிடும் போது தரமானதாக கொடுக்க முடியவில்லை,ஆனால் தற்பொழுது,சகல தரத்துடன்  இப்பாடலை மீண்டும் வெளியிடுவதில் பெருமையடைகிறேன்,நீங்களும் கேட்டுச் சொல்லுங்கள் 


அன்புடன்,!.....

  

செவ்வாய், 16 மார்ச், 2010

மாணவர்களுக்கான இணையதளங்கள் -14

மாணவர்களுக்கான இணையதளங்கள்.-14

பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கான பதின் நான்கு இணைய தளங்களை,மைக்ரோசொப்ட் நிறுவனம் சிபார்சு செய்துள்ளது,இதில், கணிதம்,விஞ்ஞானம் உட்பட மாணவர்களுக்குத் தேவையான சகலதையும் உள்வாங்கப் பட்டுள்ளது.ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரைப் படிப்பவர்களுக்கு,நல்லதரமுள்ள,பிரயோசனமான இணைய தளங்கள்.உங்கள் எதிர்காலத்தின் விடிவெள்ளிகளுக்கு,ஏற்ற இணைய தளம்.பார்த்துப் பரிசளியுங்கள்,படித்துப் பயன் அடையட்டும்.கீழ் உள்ள உள்ள தலையங்கங்களை  அழுத்தியும் உள் நுழையலாம்.



ஒரு சிறிய மனவருத்தம்,நாங்கள் மாணவர்களாக இருந்த போது,இப்படி வசதிகள் இல்லையே,என்று படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்த வரப்பிரசாதததைப் பயன் படுத்துங்கள்,இந்தப் பதினான்கு இணைய தளத்திற்கும் அழைத்துச் செல்ல,இங்கே அழுத்துங்கள் பார்க்கின்சன் (நடுக்குவாதம்) பற்றியறிய எனது சைட் பாரில் உள்ள மனுவை அழுத்திப் படியுங்கள். 
படித்து விட்டு இரண்ண்டுவரி எழுதுங்கள்.உங்களின் விமர்சனங்கள் இந்தத் தளத்தை மேலும் மெருகூட்ட வழியமைக்கும்.


அன்புடன்..!............

ஞாயிறு, 14 மார்ச், 2010

இலவச எண் கணித ஜோதிடம்.








இலவச எண் கணித ஜோதிடம்,உங்கள் பெயர் அதிர்ஷ்டமானதா?,நமது வீட்டின் இலக்கம்
அதிர்ஷ்டமானதா?,வியாபாரப் பெயர்அதிர்ஷ்டமானதா,?பிறந்த திகதி அதிர்ஷ்டமானதா,?பிள்ளைகளுக்குப் பெயர் வைக்க,திருமணம் முடிக்க இருப்பவரின் திகதி,முடிக்கப் போறவரின் திகதியுடன்,ஒத்து வருகிறதா? இப்படி பல அதிர்ஷ்ட விஞ்ஞான கணிப்புகள்,நீங்களே கணிக்கலாம். இந்த இணைய தளத்திலுள்ள, இந்த மென் பொருளில் கொட்டிக்கிடக்கிறது. யாருக்குத்தான் ஆசையில்லை எதுவும் அதிர்ஷ்டமானதா? என்பதை அறிந்து கொள்ள,இங்கே போய்
இலவசமாகத் தரவிறக்கி உங்கள் கணனியில் சேமித்து வைத்துப் பயனடையுங்கள்.

இணையத் தளத்திற்குப் போக முதல் உங்கள்,எண்ணக் கருத்தை எழுதிவிட்டுப் போங்க,
அடுத்த ஜோதிடப் பதிவு,ஆயத்தப் படுத்தத்தான்.  






அன்புடன்,!.......

படம் கண்ணுக்கு,பாடல் மனதுக்கு,!




பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றேன் அறிவில்லேன்!
பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ 
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றது நீயே!   

                                   
                                         
                                         


இருக்கும் இடம் தேடி என்பசிக்கே அன்னம் 
உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன் -பெருக்க 
அழைத்தாலும் போகேன் அரனே,என் தேகம் 
இளைத்தாலும் போகேன் இனி.






உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன்  உயர் பொன்னெனவே 
ஒளியிட்டதாள் இரண்டுள்ளே இருத்துவதுண்மை யென்று
வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலேனே! 


                            
      



அழுதால் பயனென்ன,நொந்தால் பயனென்ன ஆய்வதில்லை 
தொழுதால் பயனென்ன,நின்னை ஒருவர் சுடவுரைத்த 
பழுதால்பயனென்ன,நன்மையையும் தீமையும் பங்கயத்தோன் 
எழுதாப் படி வருமோ?சலியாதிரு என் ஏழை நெஞ்சே!






வெட்ட வெளியான்  வெளிக்குந் தெரியாது
கட்டளையும் கைப் பணமும் காணாதே -இட்டமுடன் 
பற்றென்றால் பற்றாது: பாவியே நெஞ்சில் அவன் 
இற்றனவே வைத்த இனிப்பு.  



பாடல்கள்,பட்டம் எதுவும் பெறாத,பட்டினத்தார், எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கும் பாடல்கள் என நினைக்கிறேன்.படங்கள் மேலை நாடுதான்
உங்கள் எண்ணங்களை எழுத்தில் எழுதிடுங்கள் பின்னூட்டமாக!



அன்புடன்.!....

சனி, 13 மார்ச், 2010

இணையத்தில் இலவச ஜோதிடம்.

இணையத்தில் இலவச ஜோதிடம் 




ஜோதிடம் என்றாலே நம்பிக்கைதான்,இவைகளையெல்லாம் நம்புவது யார்? என்று கேட்டவர்கள் கூட,தனக்கோ அல்லது தனது குடும்பத்தவர்க்கோ கஷ்டம் என்று வந்தால்,கையில் பிறந்த குறிப்புடன் அலைபவர்களை,நாம் அன்றாடம் காண்கிறோம்,கணனிகள் உருவாகியும்,மனிதன் அன்றாட அலுவல்களை கணனி மூலம்,நிருவகித்தாலும்,அந்தக் கணனியைமுதன் முதல் இயக்குவதற்கு நல்ல நேரம் பார்ப்பவர்கள்  இன்றும் இல்லாமல் இல்லை. இன்னும் சொல்லப் போனால்,சில பதிவர்கள்  நல்ல நேரம் பார்த்துத்தான்,பதிவுகளை எழுதுகிறார்கள்,வெளியிடுகிறார்கள்,

உங்கள் பலன்களை சரியாக அறிந்து கொள்வதற்கு,சில விடயங்கள் அடிப்படையாகத் தெரிந்து இருக்க வேண்டும், அவை,உங்கள் பிறந்த நேரம்,பிறந்த ஊர்,பிறந்த திகதி,இவ்வளவும் சரியாகத் தெரிந்து இருந்தால்,இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்  அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை இட்டு calculate என்பதை அழுத்தினால்,உங்கள் இராசி,லக்கினம்,நட்சத்திரம்,நட்சத்திர பாதம்,நடப்பு திசை இவை எல்லாம் அட்சர சுத்தமாக வழங்குகிறார்கள்.இவைகள் எல்லாவற்றையும் குறித்துக் கொள்ளுங்கள்,இவைதான் சோதிடத்தின் ஆரம்பம்,இதை வைத்துத்தான் இன்னும் பல 
இனைய தளங்களில்,உங்கள் எதிர் காலத்தை நீங்களே அறிந்து கொள்ளலாம்.நீங்கள் பிறந்த இடத்தின் நேர அமைப்பும்,அதுதாங்க GMT இது தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் 
ஒன்றுதான்.போய்ப்பார்த்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இதனை  அடிப்படையாக  
வைத்து அடுத்ததாக ஒரு தமிழ் இணைய தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்,
இது சம்பந்தமான கேள்விகளை,பின்னூட்டத்தில் கேட்கலாம்,பிறந்த திகதி தெரியாதவர்களுக்கும்,இணைய தளம் தயாராக இருக்கிறது.                                                                                                            அன்புடன்.!

வெள்ளி, 12 மார்ச், 2010

கணனியின் வேகத்தை அதிகரிக்க.!




கணனியின் வேகத்தை அதிகரிக்க,எந்த வொரு மென் பொருட்களும் இல்லாமல்,உங்கள்
கணனியின் வேகத்தை அதிகரிக்கலாம்,அதற்கு முதல் தேவை பொறுமை,மைக்ரோ
சொவ்ட் நிறுவனம் அதற்குரிய பதிவுகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டே  இருக்கிறது.அதைப் பொறுமையுடன் வாசித்து அதன்படி செயற் பட்டால்,நமது கணனி தரமுடன் இயங்கிக் கொண்டிருக்கும்.கணனியுடன் தொடர்புடைய எல்லோராலும்
இந்த முயற்சியில் வெற்றியடையலாம்.

எல்லோரும் கணனி வாங்கும் போது விடுகின்ற பெரிய பிழை ஹார்ட் டிஷ்க்கைத் தெரிவு
செய்வதிலேயே,கழஞ்சிய வசதிகள் குறைவாகக் கொண்ட ஹார்ட் டிஸ்க்கை  வாங்குவதே நாம் விடும் முதலாவது பிழையாகக் காட்டப்படுகிறது.இதன் மூலமே கணனிக்கு தலைவலி ஆரம்பித்து,வருட முடிவதற்குள் கணனியின் செயல்ப்பாடு
கொச்சிக்காய் அரைக்கும் கிரைண்டரின்,சத்தத்துடன் முடிவுக்கு வரும்.பணத்தைக்
கொடுத்து வாங்கும் நாம், சரியான வழிகாட்டி,சரியான தெரிவுடன் இவைகழை வாங்க
முயற்சி செய்யவேண்டும்



மைக்ரோசொப்ட் வழங்கும் இந்த இலவச ஆலோசனையை சரியாகப் பின்பற்றுங்கள்
கணனியின் வேகம் அதிகரிக்கும்,இவைகளை நான் செய்து பார்த்து சரியாக இருந்தால்தான் வெளியிடுகிறேன்.முதலாவது பக்கம் பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கிறது,இலகுவாக எல்லாம் அறிந்து கொள்ளலாம்.இரண்டாவது பக்கத்திற்குச் சென்ன்றால்,திறந்தவுடன் இது சம்பந்த்தமான பதிவுகளை காணமுடியாது, கொஞ்சம்
சிரமம் பாராமல் கிழே சென்றால் சகலதையும் அறிந்து கொள்ளலாம் இது சம்பந்த மாக ஏதாவது என்னிடம் கேட்க வேண்டும் என்றால் தயங்காமல் பின்னூட்டத்தில் கேட்கலாம். சகல கேள்விகளுக்கும் பதில் அளிக்கக் காத்து இருக்கிறேன். தயங்காமல் கேள்விகளைப் பின்னூட்டத்தில் கேளுங்கள்..மைக்ரோ சொவ்டின் கணனியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?என்ற இலவச ஆலோசனை மையம் செல்ல, உங்கள் மௌசை,
                                                                இங்கு அழுத்தவும்.


அன்புடன்,!.......

வியாழன், 11 மார்ச், 2010

யாகூவும் நானும்.



எனது "ஊர்பெயரைக் காணோமுங்க"என்ற பதிவில்,அதைப் படியாதவர்கள் முதலில் அதைப் படியுங்கள்.வரைபடத்தில் வட கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தலை நகரங்களின் பெயர்களை ஆங்கிலத்தை அகற்றிவிட்டு,சிங்களப் பெயர்களை இட்டிருந்த்தது.இது சம்பந்த்தமாக யாகூவுக்குச் செய்த முறைப்பாட்டுக்கு,பதில் கடிதம் கிடைத்தது.அதை பத்தும் பலதும் வாசகர்களுக்குச் சமர்ப்பித்துள்ளேன்.வாசித்துப் பார்த்து உங்கள் கருத்தைக் கூறுங்கள் 

RE: Live Traffic Questions (KMM163957252V63635L0KM)‏
அனுப்புநர்:கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா (kvrudra@hotmail.com)
அனுப்பப்பட்டது:11 மார்ச் 2010 04:54:44
பெறுநர்:maps-feedback@cc.yahoo-inc.com
Cc:email@manyandten-rudra.blogspot.com
தங்களின் மின் அஞ்சல் மடலுக்கு,நன்றிகள்!
பல கோடித் தமிழ் மக்கள உங்கள் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை நீங்கள்,மீண்டும் கட்டி எழுப்பியுள்ளீர்கள்.உங்களின் பொறுப்பு வாய்ந்த பதிலுக்கு, நன்றிகள்,

நான் தங்களின் மின் அஞ்சல் தளத்தில் ஒரு நீண்டகால உறுப்பினர்,தமிழ் மக்கள் எல்லோரும் முதல் கண்ட மின்னஞ்சல்  தளம்,இன்றுவரையிலும் 
நாங்கள் அதைக் கைக்கொள்கிறோம்,மீண்டும் இப்படியான தவறுகள் இடம் பெற்று தங்கள்,தளத்தின் நன்மதிப்பைக் கெடுப்பதற்கு இடம் கொடுக்கவேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்,

இலங்கை வரைபடம் சம்பந்தமாக தரவுகள்,உங்களது தளத்திலேயே அதிகம் உள்ளது,சரி பார்த்துக் கொள்ளவும்.

அன்புடன்!...

கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா  

> Date: Tue, 9 Mar 2010 12:54:43 -0800
> To: kvrudra@hotmail.com
> Subject: Re: Live Traffic Questions (KMM163957252V63635L0KM)
> From: maps-feedback@cc.yahoo-inc.com
>
> Hello,
>
> Thank you for writing to Yahoo! Maps.
>
> I understand that you are unable to find the locations within Yahoo!
> Maps. I apologize for the inconvenience this has caused you.
>
> At this time, it would help us greatly if you could provide a more
> detailed description of the issue. Please include the following
> information.
>
> - The Complete address along with the city, state and the zip code
> - The Exact issue for which you need assistance
> - Any other feedback/ observation that you think can help resolve the
> issue
>
> Once we have the information, we will be able to help, troubleshoot your
> issue.
>
> We look forward to your reply.
>
> Thank you again for contacting Yahoo! Maps.
>
> Regards,
>
> Dean
>
> Yahoo! Maps Customer Care
> Maps Feedback
>
> For assistance with all Yahoo! services, please visit:
>
> http://help.yahoo.com/
>
> New and Improved Yahoo! Mail - better than ever!
>
>
>
> Original Message Follows:
> -------------------------
>
> Mail-Id:
> w1.help.ch1.yahoo.com-/l/us/yahoo/maps/general.html-1268145624-2664
>
> 1. What is your name and Yahoo! ID?
> ------------------------------------
> Name: K.V.Rudra
>
> Yahoo! ID: kvrudra
>
> 2. What is your email address?
> -------------------------------
> Email Address: kvrudra@hotmail.com
>
> 3. What are you writing about?
> -------------------------------
> Subject: Live Traffic Questions
>
> 4. What is the address you are trying to map?
> ----------------------------------------------
> where is the Batticaloa? This city is very ancient city,in
> Srilanka. what happened to this name?
> Not only Batticaloa,There is
> another,Vavuniya,Trincomalee,Kalmunai,Jaffna,and Mannar also. check
> your old map and correct it Please,
>
> 5. Destination Address for Driving Directions issues
> -----------------------------------------------------
> Batticaloa,Trincomalee,Mannar,Jaffna,Vavuniya,Kalmunai.
>
> 6. Enter additional information here:
> --------------------------------------
> PLease,correct the error and inform to this e-mail.
>
> While Viewing:
>
> Last URL: ://
>
> Form Name: http://help.yahoo.com/l/us/yahoo/maps/general.html
>
> Yahoo ID: kvrudra : Yahoo id from cookie
> "https://amt.yahoo.com/amt/dosearch?.token=zHdLFs5Mzehbk9etQlRzExlF.WLMf
> QgefHtghgo-"
>
>
> Other ID:
>
> Machine: Unknown
>
> OS: unknown
>
> Browser: Default Browser 0
>
> REMOTE_ADDR: 112.135.13.52
>
> REMOTE_HOST: 112.135.13.52
>
> Date Originated: Tuesday March 9, 2010 - 06:40:24
>
> Cookies: disabled
>
> AOL: no
>
> -------
>
>


அன்புடன்.!.......

உயிரினங்களின் உறவு!




"யாரப்பா? தூக்கத்தைக் கெடுக்கிறது?"





"சரியான, குளிரா,இருக்குது"  






"சரி! இப்ப, பார்க்கலாம் ?





"அச்சாக், குட்டி!  





எப்படி? இருக்கு?





நல்லா இருக்கிறதா,படங்கள், வெளி நாட்டு,இறக்குமதி. ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக,
இருப்பதுபோல்,இருந்தது.உங்க மனதில் தோன்றுவதை, பின்னூட்டமாக இடுங்க,.



அன்புடன்!......


புதன், 10 மார்ச், 2010

Clean your computer





என்னை பல நாட்கள் கணனியுடன் அலையவைத்த,கணனி திருத்துநர்கள் அனைவருக்கும், இந்தப் பதிவு சமர்ப்பணம்.

நமது கணனி வாங்கியதற்கு பிறகு எவ்வளவு நாளாகியும் கழட்டித் துப்பரவு செய்யாமல்
வைத்திருப்போம் அல்லவா,அதைக் கட்டாயம் கழட்டி எப்படி துப்பரவு செய்ய வேண்டும்
என்பதை மைக்ரோ சொவ்ட் நிறுவனம் ஒரு பதிவு போட்டிருக்காங்க,நீங்கள் கழட்டித் துப்பரவு செய்யாவிட்டால்,உபகரணங்கள் தூசுகளால் மூடப்பட்டு,அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டு,பராமரிப்புச் செலவு கைக்கு அடங்காமல் போவதைத் தடுக்க இந்த முறை உங்களுக்கு உதவி செய்யும்.  கழட்டுவதற்கு முதல் என்ன செய்ய வேண்டும்,கழட்டுவதற்கு என்ன கருவிகளைப் பாவிக்க வேண்டும்.எதைக் கொண்டு சுத்தம் செய்யவேண்டும் என்பதை விளக்கமாக பதிவு இட்டிருக்கிறார்கள்.நீங்களும் படித்து பயனடையுங்கள் பதிவுக்குப் போக இங்கே அமத்துங்கள்.

இனி யாரும் கணனி,  சூடாகுது,செயற்பாட்டை நிறுத்த முடியவில்லை,என்பதற்காக திருத்துனர்களைத் தேட வேண்டியதில்லை.கணனியைத் துப்பரவாக வைத்திருந்தால்,
இவைகளைத் தடுக்கலாம்.



அன்புடன்.!...


செவ்வாய், 9 மார்ச், 2010

ஊர் பெயரைக் காணோமுங்க.







இலங்கை வரைபடத்தில் எங்க ஊர் பெயரைக் காணோமுங்க,நான் எனதுவெளி நாட்டு  நண்பர் ஒருவருக்கு மின் அஞ்சல் அனுப்பியிருந்தேன்.அவர் அதில் இருந்த எனது இலங்கை விலாசத்தை யாஹு வரைபடத்தில் தேடியிருக்கிறார்,அதில் காணப்படவில்லை,எனக்கு எடுத்துச் சொன்னார்,என்னப்பா சரித்திரத்தில் எல்லாம் இடம்
பெற்ற பெயர் என்று சொல்கிறீர்கள்,இந்த வரை படத்தில் Batticaloa என்ற பெயர் எங்கேயும்
காணோம்,நீங்களும் வேணும் என்றால் தேடிப்பாருங்கள் என்று இந்தப் படத்தை அனுப்பியிருந்தார்,நானும் பார்த்தேன் Batticaloa வைக் காணோமுங்க.

அண்ணன் வடிவேல் ஒரு திரைப்படத்தில்,கிணத்தைக்கானோமுங்க என்ற ரேன்ஞ்சில்
யஹுவிடம் முறையிட்டேன்,முறைப்பாட்டைப் பெற்றவர் இருபத்து நான்கு மணித்தியாலத்தில்,கண்டுபிடித்துத் தருவதாகவும்,இல்லையேல், உடுப்பைக் கழட்டிஓரமாய் வைத்துவிட்டு ஓடிவிடுவேன் என்றார்,பதிவு எழுதும் வரை,எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.எங்க ஊரின் பெயருடன்,சேர்ந்து போன ஊர்கள் Jaffna ,Trnicomalee ,kalmunai ,mannar ,இவைகளைக் கண்டால்,உடனடியாக அருகிலுள்ள,யாஹு
பொலிசாருக்கு அறிவிக்கவும்.தகுந்த சன்மானம் வழங்ககப்படும்..

காணாமல் போன ஊர்.பற்றிச் செய்த முறைப்பாட்டுக்கு,யாஹுவால், எனக்கு
வந்த பதிலை அறிய இங்கே அழுத்தவும்

அன்புடன்.!......