வியாழன், 6 அக்டோபர், 2016

விதியும்! மதியும் !!

விதியும் மதியும் 


நாம் மனிதனாகப் பிறந்தது,
விதி.
நாம் பிறந்தவுடன்  
மாத, பிதா, குரு ,தெய்வம் ,
எல்லோரும்  
தலையெழுத்தை 
அறிந்து,
நம்மை 
இப்படி நட,
அதைப் படி 
அவனோடு கூடாதே!
சொல்வதுதான் 
மதி 

கேட்பவன்
விதியை வெல்கின்றான்.
கேளாதவன்,
விதியோடு 
மடிகின்றான்.

ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் 




நான் சிறுவயதில் 3ம் வகுப்பில் படிக்கும் போது 3ம் வகுப்பா  4ம் வகுப்பா என்பது எனக்கு சரியாக நினைவில்லை தமிழ் பாடப் புத்தகத்தில் ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு பற்றி  ஒரு அதிகாரம் இருந்தது.அது கஷ்டத்துடன் படிக்கும் பிள்ளைகளுக்கு ஒரு உந்துசத்தியாக இருக்கும்.இவரே இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்துள்ளார் நாம் எம்மாத்திரம் என்ற சிந்தனையை ஊட்டியது இதை வாசித்து தமது கஷ்டங்களை மறந்து படித்து 
பட்டம் பெற்று நன்றாக வாழ்ந்தவர்களை நாமறிவோம் 

இவரின் சரித்திரம் முழுவதும் தமிழில் நீங்களும் வாசித்துப் பாருங்கள்  ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். 1865 இவர் வாஷிங்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.