ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

ஹிரோஷிமா, நாகசாகி, இன்று


ஹிரோஷிமா நாகசாகி-1945 - 08 - 06/09 

1945ஆம், ஆண்டு,இரண்டாம் உலகப்போரில்,கடைசிக் காலகட்டத்தில் அமெரிக்காவின் 
அணு ஆயுத வீச்சுக்கு,இலக்கான   ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் படங்கள்தான் 
இவை.௦06ந்த் திகதி ஆகஸ்ட், 1945ல்  ஹிரோஷிமாவில் அமெரிக்காவால் வீசப்பட்ட அனு குண்டின் பெயர், நமது பாசையில் கூறுவதானால், சின்னப் பொடியன்,( Litle Boy ),09 ,ஆகஸ்ட்,1945ல்   நாகசாகியில் வீசப்பட்ட 
அனுகுண்டின் பெயர் தடியன் (Fat Man ) இந்த இரண்டு அனுகுண்டுகள்தான்,உலகில் 
முதலும் கடைசியுமாக இடம்பெற்ற அனுகுண்டுத்தாக்குதல்.இதைக் காட்டிக் காட்டி 
இன்றுவரையும் உலக நாடுகள்,இதைத் தயாரித்துக் கொண்டிருப்பதும், தயாரிக்கும் நாடுகளைக் கண்டிப்பதும், இதன் பெயரைச் சொல்லியே ஒரு நாட்டையும், அந்த 
நாட்டின் தலைவரையும் கொன்றது, நாம் எல்லோரும் அறிந்த கதை.இந்த அணுகுண்டுத் 
தாக்குதல் நடந்து, நாலு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,ஹிரோஷிமா 90 ,000 -166 ௦000௦. நாகசாகி 60 ,000௦,௦௦௦.-80 ,000 இவ்வளவு மனித 
அழிவுகளையும், எண்ணிலடங்காத பொருளாதார இழப்புகளையும்  சந்தித்த இந்த இரண்டு நகரங்களும், இன்று எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கின்றன.



அமெரிக்கா விசா நம்பாதிங்க.!

முதலில் வந்த கடிதம்,இதில்தான் நான்,தெரிவு செய்யப் பட்டுள்ளதாகவும், அதை உறுதிப் படுத்த, அடுத்த கடிதம் தொடரும் என்றும் எழுதப்பட்டுள்ளது 
இன்று எனக்கு வந்த இ-மெயிலில் கிடைத்த ஒரு கடிதம் நீங்ககளும்,வாசித்துப் பாருங்க.
இ-மெயிலில் வந்த கடிதம்,  இதற்கு முதல் கூகுளால் ஒரு எச்சரிக்கை வந்தது,உங்கள் மெயிலை,
அமெரிக்காவிலிருந்து,இனம் தெரியாதவர்கள்,கண்காணிக்கிறார்கள் என்று.நான் யோசித்தேன்,அமெரிக்காவிலிருந்து கண்கானிக்குமளவுக்கு நாம என்ன அப்படி பெரிய 
விஷயங்களை எழுதிக் கிளிச்சிட்டம் என்று யோசிச்சுப் பார்த்தேன்,ஒன்றுமே புரியவில்லை,சில வேளை"விக்கி லீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் நம்மளையும்,எதுக்கும் உதவிக்குப் பக்க பலமாக இருக்கட்டும் என்று மாட்டி விட்டாரோ என்றும் ஒரு யோசனை,