செவ்வாய், 3 ஜனவரி, 2017

ஓ.பி.எஸ் இன்று சில நிமிடங்களுக்கு முன் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தமிழச்சி (Tamizachi)
ஓ.பி.எஸ் இன்று சில நிமிடங்களுக்கு முன் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
---------------------------
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அப்போலோவில் 75 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டு இறந்த தகவலை அறிவித்த அடுத்த சில மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டு முதல்வராக பெறுப்பேற்றுக் கொண்ட ஓ.பி.எஸ் இன்று சில நிமிடங்களுக்கு முன் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சசிகலாவுடனான சந்திப்பிற்கு பின் இந்நிகழ்வு நடந்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சாகடித்து 'இந்நாள் முதல்வர்' என்ற பெருமையைக்கூட தர மனம் வராத சசிகலாவின் மாபீயா கூட்டம் முன்னாள் 'தமிழக முதல்வர்' என்ற அடையாளத்துடன் இறுதி சடங்குகளை நடத்தியதோடு ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் அனுபவிக்கும் உரிமையை எடுத்துக் கொண்டது.
இந்த #சசிகலாவின்_மாபீயா_கூட்டம் இனியும் தமிழ்நாட்டுக்குள் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவள் போடும் எலும்புத் துண்டுகளுக்கு அலையும் ஈனப்பிழைப்புவாதிகளாக மட்டுமே இருக்க முடியும்.
ஓ.பி.எஸ் இராஜினாமா செய்ய வைத்ததன் மூலம் தமிழ்நாட்டு முதல்வர் நாற்காலியை பிடித்து விடலாம் என கனவு காணும் சூத்திரதாரி சசிகலாவை அரசியலில் இருந்து விரட்ட வேண்டுமானால் இனி தமிழ்நாட்டு மக்களால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அரசியலில் பதவிக்கு வந்த பிறகு ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைத்தான் பார்த்திருப்பீர்கள். இந்த சசிகலாவோ அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஏராளமான சொத்துக்களுக்கு 'பினாமி ராணி'யாக திரிபவர் என்பதை தமிழர்கள் மறந்து விடக்கூடாது.
உண்மை பொய் நானறியேன் 

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)!!!



காயத்ரி மந்திரம் உடலை
இயக்கும் ஒரு ஜிம் (GYM)!!!
காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் "நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் "பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் "காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்" எனக் குறிப் பிட்டுள்ளார்.
ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823—1900) அவர்கள் "ஒளியினை தவம் செய்து நம் மூளை., மனதினை உயர்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் "யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் "உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்" என்பதாகும்.
இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.
தத் — வெற்றி
ச — வீரம்
வி — பராமரிப்பு
து — நன்மை
வ — ஒற்றுமை
ரி — அன்பு
நி — பணம்
யம் — அறிவு
ஃபர் — பாதுகாப்பு
க்கோ — ஞானம்
த்தி — அழுத்தம்
வா — பக்தி
ஸ்யா — நினைவாற்றல்
ஃத்தி — மூச்சு
மா — சுய ஒழுக்கம்
யோ — விழிப்புணர்வு
யோ — உருவாக்குதல்
நஹ — இனிமை
பரா — நல்லது
சோ — தைரியம்
த்தா — ஞானம்
யட் — சேவை
காயத்ரி மந்திரம் என்றால் என்ன..?
"ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்"
நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.
இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி., சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.
காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக., உண்மையான சிந்தனை., சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை., மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள்., கவலைகள் நீங்கும். குறிப்பாக., பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.
காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்
★ கம்பீரத் தோற்றம்.
★ தரமான பேச்சு.
★ வறுமை., குறை நீங்குதல்.,
★ பாதுகாப்பு வட்டம்.
★ கண்ணில் அறிவு தெரிதல்.
★ அபாயம்., தேவையற்ற சூழ்நிலை நீங்கும்.
★ நரம்புகளும்., சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்.
மேலும்.,
★ அமைதியாய் இருப்பர்.
★ நற்செயல்களில் ஈடுபடுவர்.
★ காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்.,
★ வாழ்க்கையில் தடைகளை நீக்கும்.
★ மூளையை பிரகாசிக்கச் செய்யும்.
★ உள்ளுணர்வினை தெளிவாக்கும்.
★ உயர் உண்மைகள் தெரிய வரும்.
— என்றும் கூறப்படுகின்றது.
டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால்., இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது....
கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.
நீங்கள் என்னியது என்னியவாறு
இன்புற்று வாழ்க வளமுடன்.