திங்கள், 1 மார்ச், 2010

பனித்துளி.!









இரவின் உறவில் பிறந்து!
இதழ்கள் மடியில் விழுந்து! 
கதிரோன் வரவில் நலிந்து! 
காலை வெயிலில் கரைந்து! 
உருவம் எல்லாம் கலைந்து!
உரிமை முழுதும் இழந்து! 
பிறந்த இடத்தை அடைந்தாய்! 
பெரிதோர் உண்மை தெளிந்தேன்.!  



அன்புடன்.........
பனித்துளி.கதிரவன்,கவிதை 

பாராளுமன்றத் தேர்தலால் எனக்கென்ன ஆச்சு!






களத்  தேர்தல் முடியுமட்டும் அறிக்கை-பின்பு 

கனிவு கொடுக்கும் கொழும்பில் ஓய்வு 
வெற்றியடைந்தால் வெளிநாட்டில் விளையாட்டு -இது 
முத்தமிழர் அறிந்தது தானே தப்பா!,

பிறந்தது நாங்கள் அடிவாங்க -முழுதும் 
பேசுவதும்,கூட்டங்கள் போடுவதும் நீங்க,
சுற்றம் சூழ ஈரோப்புக்கு போங்க -அடுத்த 
தேர்தலுக்கு கட்டாயம் வாங்க   

ஏருபிடித்து நானுழைத்து நாளாகிப் போச்சு -இருந்த 
எருமையும் கண்டும் யுத்தத்தில் போச்சு 
பாராளும் இறைவனுக்கும், பார்வை போச்சு -இந்தப் 
பாராளுமன்றத் தேர்தலால் எனக்கென்ன ஆச்சு! 

ரோட்டிலே நான்போக,நீபோக முடியுமா? -நடு
வீட்டிலேயே நான் இருக்க முடிந்ததா?
காட்டிலும் கூட கால்வைக்கலாகுமா?-நான் 
பட்ட கஷ்டம்  நீ அறியக்கூடுமா? 

எல்லா  இறப்பும் அறிந்துவிட்டேன்  -இருந்த 
எல்லாம் முழுசாக  இழந்தும் விட்டேன்   
பொல்லாத நேரம் கல்லாக இருந்து விட்டு  -எதுவும் 
இல்லாத போது எதுவும் சொல்லாதே!
தமிழர் பூமியை மீண்டும் இணைக்கவும்-இன்பத் 
தமிழ் மொழியை அழியாமல்  காக்கவும்
தமிழன் ஒருவன் இருந்தாலே போதும்-அவன்  
தமிழுக்காய் இந்தத்  தரணியையே மீட்பான்!  







அன்புடன்! .....
பாராளுமன்றம், தேர்தல், தமிழ் மக்கள்,