ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

மாரியப்பன் தங்கவேலு!





குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி மங்காது!.-குளச் 
சேற்றில் முளைத்த செந்தாமரை நீ யடா!
உன்னையும் விடவில்லையே தமிழன் பெற்ற சாபம் - உன்
அம்மாவின்  ஆசி! அந்தம் வரைக் காப்பாற்றும் !


குடத்திலிட்ட  விளக்காய் ஒளிந்திருந்தாய் -ஆனால் !
குவலயம் அதிரவெல்லோ தீக் கற்றையாய் ஒளிர்ந்தாய் 
காலின்றியும் பாரதப் பெருமை காப்பேனேயென்று  -ஒரு 
காலூன்றி உயரப்  பாய்ந்து தமிழ் பெருமை சேர்த்தாய் 


சூரியனை ஒருநாள் ஒளித்து விட்டாயுன் புகழால் -யேதும் 
புரியாதவனையும் சேர்த்து அணைத்து விட்டாயெழிதால் 
மாரியப்பன் தங்கவேலு மறக்குமோ தங்கத் தமிழனை -யுனை 
வாரியனைத்திடும் தமிழுலகமே!வந்திடு தமிழகமே.!