திங்கள், 22 பிப்ரவரி, 2010

மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள் -01


வெள்ளிக் கிழமையில-வரும்
 வேளை யொரு வேளையில
பள்ளிக்குப் போற மச்சி-உண்ட
பவர என்ன சொல்லுவங்கா?

நடையழகி,தொடையழகி
நாலு லட்சம் பல்லழகி
கதைய்ழ்கி கதிஜா உம்மா-எண்ட
கைலேன்ச வரக்காட்டுகா


ஆசைக் கிளியே! -என்ர
ஆசைப் பத்தும்மாவே!
ஓசைக் குரலாலே -உங்க
உம்மாவைக் கூப்பிடுகா

தங்கச் சிலையே! மச்சி!-யெந்
தாமரைப் பூ முகநிலவே!
சுட்ட செங்கல் வடிவே -நாம
சுகமாக சேருவது எப்பகிளி.

புல்லைப் புடிங்கி வைச்சன்-எங்க
புற வளவைத் தூத்து வைச்சன்
அன்னப் பசுங்கிளியின் -கால்
அடி அழகைப் பார்ப்பதற்கே