ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய தேரர் -வீடியோ

ஊடகவியலாளர் நூர்தீனுக்கு ஏசிப் பேசிய மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய தேரர் (வீடியோ)







மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு முன்னாள் இன்று (3.12.2016) சனிக்கிழமை மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய தேரர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்திக் கொண்டிருந்த போது அந்த இடத்தில் செய்திகளை சேகரித்துக் கொண்டும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு நின்ற ஊடகவியலாளர் நூர்தீனை அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அழைத்து மிகவும் கடுமையாக ஏசிப் பேசியுள்ளார்.மட்டக்களப்பு மங்களராமய தேரரின் செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படுவதாகவும் ஒரு பக்க சார்பாகவே தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாகவும் அவ்விடத்தில் தெரிவித்த தேரர் மட்டக்களப்பிலுள்ள தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்களை மிகவும் மோசமாக ஏசினார்.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் தான் உங்களை அழைத்தும் நீங்கள் வரவில்லை என்றும் எனது தரப்பு செய்திகள் வெளி வருவதில்லை எனவும் கூறிய தேரர் தூசன வார்த்தைகளை கொண்டும் அவ்விடத்தில் ஏசினார்.
பொறுமையாக தேரரின் ஏச்சுக்களை கேட்டுக் கொண்டு நின்ற ஊடகவியலாளர் நூர்தீன் உங்கள் விகாரைக்கு பல தடவைகள் வந்து நீங்கள் கூறிய உங்கள் கருத்துக்களை தமிழ் ஊடகங்களில் வெளியிட்டுள்ளோம். இறுதியாக உங்கள் விகாரைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வந்த நேரத்திலும் இங்கு வந்து தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியிட்டோம்.
நீங்கள் என்னை அழைத்த அன்று வரமுடியாமல் போய் விட்டது நான் ஊரிலில்லை என்று ஊடகவியலாளர் நூர்தீன் அவ்விடத்தில் தெரிவித்த போதிலும் அதை உள் வாங்கிக் கொள்ளாமல் தேரர் ஏசிப் பேசியதுடன் தேரரும் அவ்விடத்தில் நின்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரும் தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு கூய் போட்டனர்.
இதன் போது அங்கு பொலிசார் மற்றும் தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிங்கள பொது மக்கள் என பலரும் நின்றனர்
எனினும் அங்கு செய்தி சேகரித்துக் கொண்டு நின்ற ஊடகவியலாளர் நூர்தீன் உட்பட தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர் அவ்விடத்தை விட்டு நகர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Extremist Tamils And Muslims: Their Characteristic Indifference To Sri Lanka’s Sinhala National Identity!

 Extremist Tamils And Muslims: Their Characteristic Indifference To Sri Lanka’s Sinhala National Identity!

Dr.Daya Hewapathirane:

இலங்கையின் சரித்திரம் எப்படி என்பதை இந்த லீங்க்கில் சென்று பாருங்கள்.
நீங்கள் படித்த சரித்திரம் வேறு இந்த சரித்திரம் வேறு இலங்கைக்கு எத்தனை சரித்திரம் இறைவா தலை சுற்றுகிறது,கடைசியில்இருக்கும் கருத்துக்களையும் கட்டாயம் படியுங்கள். ஆசிரியர்

 திரு. Dr.Daya Hewapathirane:


ஐயா முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகராம்.நமது தமிழில் ஒரு பழ மொழி ஒன்றுதான் ஞாபகம் வருகிறது,அதற்குப் பிறகு இன்னும் ஒன்று ஞாபகம் 
வருகிறது இடம், பொருள், ஏவல்.எப்படித்தான் தற்போதைய ஜனாதிபதி புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றப்போகிறார் எல்லாம் வல்லான் வகுத்த வழி  

போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது பொலிஸார் மற்றும் படையினர் தாக்குதல்



போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது பொலிஸார் மற்றும் படையினர் தாக்குதல்


மட்டக்களப்பில், விகாராதிபதியின் அடாவடித்தனங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனக் கூறி இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று(03) இரவு 8.45 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து போராட்டங்களை நடாத்தி வந்தவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,
நீதிமன்ற கட்டளையினை மீறி மங்களராமய விகாராதிபதி பொது மக்களை ஒன்று கூட்டி பொலிஸார் நிற்கும் போதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டிய நிலையில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சட்டத்தை அமுல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மங்களராமய விகாரைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் நின்று, மங்களராமய விகாராதிபதியை கைது செய்ய வேண்டும்.
பொதுபலசேனாவை மட்டக்களப்புக்குள் அனுமதிக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது பொலிஸார் மற்றும் படையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைத் தாக்கியதில் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,
நீதிமன்ற உத்தரவினையும் மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தை நடத்திய மங்களராமய விகாராதிபதியையும் அவரது ஆதரவாளர்களையும் பொலிஸார் கைது செய்யவில்லை.
அதற்கு மாறாக, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி விட்டு அவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொலிஸார் அமைதியான முறையிலே போராட்டத்தில் ஈடுபட்ட எம் மீது விசேட அதிரடிப்படையினர் ரி56 ரக துப்பாக்கியின் பின் பக்கத்தினால் தாக்குதலை நடத்தினர்.
இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம் என இருக்கின்றது என்பதை பொலிஸார் நிரூபித்துள்ளனர். இது தான் நல்லாட்சியின் வெளிப்பாடு எனத் தெரிவித்துள்ளனர்.

உலக விஞ்ஞானிகள் வியக்கும் தமிழனின் பஞ்சாங்கம்!



உலக விஞ்ஞானிகள் வியக்கும் தமிழனின் பஞ்சாங்கம்!
----------------------------------------------------------------------------
ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்
பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!
தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!
1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை
காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!
அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:
“இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.
நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கிரகணத்தைப் பற்றி மட்டும் அவர்கள் கூறுவது சரியாய் இருக்குமானால் சாஸ்திரம் செய்யக் கூடாது என்று கூறுவது பொய்யாகவா இருக்கும்?சாஸ்திரம் என்பது ஒரு கடினமான கணக்கு.அதுவும் ஒரு வகை விஞ்ஞானம்.வயிற்றுப் பிழைப்புக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தும் கூட்டத்தால் அதன் மதிப்பு குறைந்து விட்டது.ஆனால் நமது முன்னோர்கள் கிரகணம் பற்றி முன்பே கூறும் அளவில் வானவியல் கணித மேதைகளாக இருந்துள்ளார்கள்.இதை உலகம் இந்த கிரகணம் பற்றிய அவர்களது மதிப்பீட்டில் இருந்து தெரிந்துகொண்டு வாழ்த்துகிறது.
இப்படிப்பட்ட கணித இயல் நமக்கு இருந்தும் இதை மேலும் மேலும் ஆராய்ந்து வளர்த்துக் கொள்ள முன்வரவில்லை.அதனால் உலகில் நாம் இன்று பின் தங்கி உள்ளோம். இனியாவது நமது வான இயல் கணிதங்களை ஆராய்ந்து தெளிவாக்கி முன்னேறுவோமா என்பது தான் கேள்வி.”

பகிரங்க இனவாதிக்கு சிறையில் பிறந்த ஞானம்..! - தேரர்களும் சிங்கள அமைப்புகளும் ஆபத்தில்..!


பகிரங்க இனவாதிக்கு சிறையில் பிறந்த ஞானம்..! - தேரர்களும் சிங்கள அமைப்புகளும் ஆபத்தில்..!


அனைவரின் தலையிலும் இடி விழும், என்னை விற்று பிழைக்க யாரும் முயலவேண்டாம் என இன வாதம் பரப்பிய குற்றச்சாட்டில் சிறை சென்று வந்த டான் பிரசாத் என்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலமாகவே அவர் இதனைக் கூறியுள்ளார். காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும்
இது வரையில் பகிரங்கமாக வெட்டுவேன், கொல்லுவேன் என கருத்து வெளியிட்டு வந்த டான் பிரசாத் விடுதலையான பின்னர் வெளியிட்டுள்ள கருத்துகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அவர் குறித்த காணொளியின் தேரர்களுக்கு எதிரான ஆதாரமும் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்துகளாவன,
ஜினாநந்த தேரர் இராவணபலய உட்பட பல அமைப்புகளுடன் என்னை விடுதலை செய்ய பாரிய உதவிகளைச் செய்ததாக தெரித்துள்ளார். தேரரே தயது செய்து பொய்களை பரப்பாதீர்கள், எப்போது எனக்கு உதவி செய்தீர்கள்.
ஒன்றை கூறுகின்றேன் என்னை விற்று மட்டும் பிழைக்க முயல வேண்டாம், அனைத்து பக்கமும் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். மேலுள்ளவன் பார்த்து கொண்டு தான் இருக்கின்றான் ஏமாற்றியவர்கள் தலையில் இடி விழும் என்பது நிச்சயம்.
அதே போன்று அனைத்து சிங்கள அமைப்புகளுக்காக பல சேவைகளைச் செய்தவன் நான். சிங்க லே அமைப்பிற்காக சிவனொளி பாத மலையில் சிலை வைக்கவும் சென்றேன்.
ஆனால் நான் சிறை சென்றபோது எந்த அமைப்பும் என்னை பார்க்கக் கூட வரவில்லை. என்னை வைத்து பணம் பார்க்கவே அனைவரும் முயன்றார்கள்.
என்னை சாதகமாக பயன்படுத்தி என்ன சாதித்து கொள்ள நினைக்கின்றீர்கள், உங்கள் திட்டம் என்ன என்பது மட்டும் எனக்கு தெரியவில்லை. என்னை வைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டீர்கள் என்றால் அப்படியே நிறுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் என்னை வைத்து வீரர்களாக எவரும் முயற்சி செய்ய வேண்டாம். இனிமேல் என்னை வைத்து விளையாடாதீர்கள். இனி யாரும் எனது புகைப்படங்களையோ பெயரையோ உபயோகிக்க வேண்டாம்.
உங்கள் அமைப்புகளால் தான் நான் சிறை சென்றேன் அதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன எனவும் டான் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இவர் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் தேரர்களுக்கு எதிராகவும், இனவாதத்தினை தூண்டியவர்கள் யார் எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக நல்லாட்சி இனவாதிகளை முற்றாக அழித்து அகற்ற திட்டமிட்டு விட்டதாகவே குறிப்பிடப்படுகின்றது.
இப்போது புதிதாக பௌத்தம் காக்க புறப்பட்டுள்ள சிங்கள அமைப்புகளுக்கு எதிராக அரசு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் இவ்வளவு நடந்தும்,அரசாங்க அதிபர் எங்கே?


மட்டக்களப்பில் இவ்வளவு நடந்தும்,அரசாங்க அதிபர் எங்கே?

அரச உத்தியோகத்தர்கள் தங்களின் கடமையை சரிவர செய்யாத காரணத்தினால் அவர்களை இடைநிறுத்த கூடிய ஒரு அதிகாரம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு உண்டு என இளைஞர் அணியின் உபதலைவர் எஸ்.பூபால் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(03) இடம்பெற்ற மட்டக்களப்பு விகாராதிபதியின் செயற்பாடுகளை கண்டித்து விகாராதிபதிக்கு அவருக்கு எதிராக இடம்பெற்ற கண்டன கவனயீர்ப்பில் ஈடுபட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
பொதுபல சேனா உட்பட அவரது குழுக்கள் மட்டக்களப்பு நகருக்கு வருகைதந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனை நாங்கள் எதிர்க்கின்றோம்.
அரச உத்தியோகத்தர்கள் தங்களின் கடமையை சரிவர செய்யாத காரணத்தினால் அவர்களை இடைநிறுத்த கூடிய ஒரு அதிகாரம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு உண்டு.
ஆனால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச பொலிஸ் அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை சரியாக செய்யவில்லை.
அதாவது 162வது சட்டத்தின்படி அரச உத்தியோகத்தர்கள் சரியாக செய்ய தவறும் பட்சத்தில் குறித்த அரச அதிகாரியை இடை நிறுத்துவதற்கு சட்டத்தில் இடமுள்ளதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த காலங்களில் இருந்து மட்டக்களப்பு விகாராதிபதி அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளார்.
குறித்த விகாராதிபதியின் செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு இங்குள்ள பொலிசாருக்கு உள்ளது என்றார்.





நன்றி தமிழ் வின்