சனி, 31 டிசம்பர், 2016

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்! கொழும்பு ஊடகம் தகவல்



நாட்டின் அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் பிரதான தரப்பு கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பு போராட்டத்தில் வெற்றி பெறுவதற்து அதிகம் இடம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய சில காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் திரைக்கு பின்னால் உள்ள சில தலைவர்களின் எதிர்பார்ப்பு சாத்தியமாகும் அறிகுறி காணப்படுகின்றது.
சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் சில தரப்பு ஈடுபட்டு வருவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்காக ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர் உட்பட பல்வேறு தரப்பினரும் கூட்டாக இணைந்து செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காகவும், விசேடமாக தற்போது இழக்கப்பட்டு வருகின்ற பௌத்த மக்களையும் கரு ஜயசூரியவினால் இணைத்துக் கொள்ள முடியும் என குறித்த தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்தியா, அமெரிக்க உட்பட பிரதான நாடுகள் சிலவற்றிற்கு முன்னாள் அமைச்சரின் இது தொடர்பில் தற்போதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமித்தவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் அந்த கட்சியின் அரசியலமைப்பிற்கமைய கிடைக்கவுள்ள நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமைத்துவத்தில் சஜித் பிரேமதாஸ மற்றும் நவீன் திஸாநாயக்கவை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதுவரையில் ஐக்கிய தேசிய கட்சியின் 15 பேருக்கு குறித்த ஊடக நிறுவத்தின் முழுமையான ஆதரவு கிடைப்பதாகவும், இந்த திட்டம் நீண்டகாலமாக திட்டமிடப்படுவதாகவும், எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கு கொண்டு வருவது இவர்களின் திட்டமாகும்.
19 அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கமைய நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமருக்கு குறைப்பாடு ஏற்பட்டால் சபாநாயகர் நாட்டின் பிரதமராக நியமிக்கப்படலாம் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கு ஏதுவான சில முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு முன்னர் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இரண்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான இந்த சந்திப்பை அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள மைக் ஹெஜ்ஸ்ரு ஒழுங்கு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இலங்கைக்கு எதிரான யோசனை குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் கலந்துரையாடப்பட உள்ளது.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி பதவியேற்கும் ட்ரம்ப், இலங்கை உட்பட சில தென்கிழக்காசிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவரது .ஊடகப் பேச்சாளர் கெத்தரினா பியர்சன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக யோசனை முன்வைத்த ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் கெய்ன் ஹாபர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் யோசனை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் அமைதியான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
a

2020 ஜனாதிபதிக் கனவில் பிதற்றும் சம்பிக்க!



வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை ஆராய்வதற்கு முன்னர் அங்கு பல மடங்குகளில் விஸ்தரிக்கப்பட்டுள்ள கோவில்கள் மற்றும் இஸ்லாமிய மதத் தலங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை திருகோணேஸ்வரம் சிவன் கோவில் அண்மையில் 5 மடங்குகள் அதிகரிக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டமை தொடர்பில் எவரும் இதுவரை வாய்திறக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு நேற்றைய தினம் வழங்கிய விசேட நேர்காணலின்போதே அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் சுமார் மூன்று லட்சம் தொல்பொருள் இடங்கள் உள்ளதோடு இதில் பாதுகாக்கப்பட வேண்டிய 12 ஆயிரம் இடங்கள் காணப்படுகின்றன.
தொல்பொருட் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட ஆளணி மிகவும் அந்த கதியில் இயங்குகின்றது. அதன் காரணமாக தொல்பொருள் இடங்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளன.
உதாரணமாக பிரித்தானியரின் ஆட்சியின்போது டேவி என்பவர்; வெளியிட்ட நினைவுகள் என்ற நூலில் ருவன்வெலிசாய தூபி ஒரு பாரிய மலையைப் போன்றே காட்சியளித்ததாக கூறியுள்ளார்.
எமக்கு நினைவுதெரிந்த காலத்திலிருந்து அபேகிரிய தொல்பொருட் சின்னமும் பற்றையினால் சூழப்பட்ட மலையைப் போன்றே காட்சியளிக்கிறது.
அதேபோல வடக்கு, கிழக்கு பகுதிகளில் காடுமண்டிய மலையைப் போன்று பல்வேறு இடங்களில் தூபிகள் காணப்படுகின்றன.இதுகுறித்து தெரியாதவர்கள் அதன் மீது விவசாயத்தையும், வீடு கட்டுதலையும் செய்கின்றனர்.
அந்த நடவடிக்கைகளில் புராதன சின்னங்களின் கற்கள் தென்பட்டால் அதனை யாரிடமும் கூறாமல் இரகசியமாக அகற்றுகின்றனர். எனவே மதத் தலங்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த தலங்கள் அமைக்கப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் பல மதப் பிரிவினர் அப்பகுதிகளில் ஏற்கனவே காணப்பட்ட தமது தலங்களை விஸ்தரித்து நிர்மாணித்துள்ளனர்.
உதாரணமாக திருகோணமலை இருந்ததைப் பார்க்கிலும் 5 மடங்கு அதிகமாக விஸ்தரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளனது.
அதேபோன்று புதிய கோவில்களும், கிறிஸ்தவ, இஸ்;லாமிய மதத் தலங்களும் மட்டக்களப்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
எனவே 1990ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையிலும், யுத்தத்திற்குப் பின்னரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மதத் தலங்கள் மற்றும் அதன் விஸ்தரிப்பு தொடர்பாக கணக்கெடுப்பை மதவிவகார அமைச்சுக்கள் நடத்தி போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
இதேவேளை மாகாண சபை முறைமையை தோற்கடிப்பதற்கு இணங்காத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே வடமாகாண சபையின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதன்போது குற்றம் சுமத்தினார்.
2013ம் ஆண்டில் வடமாகாண சபையை அமைப்பதற்கு முன்னர் மாகாண சபை முறையை மாற்றியமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் தான்தோன்றித் தனமாக புறக்கணித்தார்.
நாங்கள் மட்டுமல்ல, இன்று மஹிந்த ராஜபக்சவுடன் கைகோத்திருக்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரும் இந்த விடயத்தில் குற்றவாளிகள்தான்.
மாகாண சபையை மாற்றியமைக்கும் சுவர்ணமயமான சந்தர்ப்பத்தை அன்று நாங்கள் நழுவவிட்டதன் விளைவாக வடக்கு மக்களை மீண்டும் இனவாதத்திற்கு இட்டுச் செல்லும் இனவாதியான விக்கேஸ்வரனைப் போன்ற ஒருவர் தெரிவாவதற்கு காரணமாகிவிட்டோம்.
இதற்கு மஹிந்த ராஜபக்சவும், விசேடமாக பெசில் ராஜபக்சவும் பொறுப்பு கூற வேண்டும்” என்று தெரிவித்தார்
- Valampuri

வடக்கு தமிழர்கள் எனக்கு எதிராக வாக்களித்தனர்!- தவறை உணர்ந்த மகிந்த




2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டை ஒன்றுபடுத்த தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்படுவது குறித்து, கேள்வி எழுப்பிய போது, அதில் கொஞ்சம் உண்மை உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டார்.
கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய வினாவுக்கு மகிந்த ராஜபக்ச எம்.பி. மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
போருக்குப் பின்னர் தாம் அரசியல் தீர்வுக்குச் செல்ல விரும்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும், அவர்கள் தம்முடன் கலந்துரையாடக் கூட விரும்பவில்லை.
பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதில் நான் அரசியல் செய்யவில்லை. உயிர் வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் முதலில் கொடுத்தேன்.
துரதிஷ்டவசமாக மக்களின் தேவைகளை தவறாக மதிப்பிட்டு விட்டேன். வடக்கிலுள்ள தமிழர்கள் 2015ல் எனக்கு எதிராக வாக்களித்தனர். இதில் அரசியல்வாதிகளும் புலம்பெயர்ந்தோரும் செல்வாக்குச் செலுத்தினர்.
அரசியல் தீர்வு நோக்கி செல்வதற்கு நான் சம்பந்தனுக்கும், ஏனைய அரசியல்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தேன்.அந்த நேரத்தில் அவர்கள் என்னுடன் இணைந்து எதையும் செய்ய விரும்பவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

மஹிந்தவின் பகிரங்க எச்சரிக்கை?? இரகசியம் காக்கும் மைத்திரி !

மஹிந்தவின் பகிரங்க எச்சரிக்கை?? இரகசியம் காக்கும் மைத்திரி !


வெட்டிச் சவால்களுக்கும் வீரச் சபதங்களுக்கும் சிறப்பானதொரு கல்வி கூடம் இலங்கை அரசியலே.
ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சபதங்கள் செய்வதில் மட்டும் குறைவில்லை ஆனால் இலங்கையின் நிலை மட்டும் அன்று தொடக்கம் இன்று வரை மாற்றம் இல்லை. இப்போதைய அப்போதைய ஜனாதிபதிகளும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.
ஆனாலும் கூட அரசியல் அனுபவம் அற்றவர்களின் கருத்து பாரதூரமானது அல்ல ஆனால் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஒருவரது கருத்து இப்போது மிகப்பெரிய சந்தேகமாகவும், எச்சரிக்கையாகவும் மாறியுள்ளது.
விட்ட இடத்தில் மீண்டும் கோட்டை கட்டும் கனவோடு மஹிந்த புதல்வர் சகிதம் அண்மையில் பாதயாத்திரையை மேற்கொண்டார். குறித்த கனவு, கனவாகவே போனது வேறு விடயம்.
ஆனாலும் அவரின் கனவைக் கண்டு எச்சரிக்கை அடைந்த மைத்திரி “ஆட்சியை கவிழ்க்க எவராவது முயன்றால் இரகசியங்களை வெளியிட்டு வீதியில் அலைய விடுவேன் என்று பகிரங்கமாக எச்சரித்தார்.
அந்த நேர சூழ்நிலைக்கு அமைய அவர் மகிந்தவையே எச்சரித்தார் என்பதே உண்மை. ஆனாலும் இப்போது?
மஹிந்த தரப்பு புதுக் கட்சி ஆரம்பித்து விட்டது மட்டுமல்லாமல் 2017ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பேன் என்றும் மஹிந்த தெரிவித்து விட்டார் ஆனாலும் இன்று வரை ஜனாதிபதி மட்டும் அமைதியே.
ஏற்கனவே ஆட்சியை கவிழ்க்க மகிந்த சதித்திட்டங்களை தீட்டிவருவதமாக தென்னிலங்கை தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டுள்ளதோடு அரசிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இப்போதைக்கு ஆட்சி மாற்றம் என்பது சாத்தியம் இல்லை காரணம் 5 ஆண்டுகள் இன்னும் நல்லாட்சிக்கு பூர்த்தியாகவில்லை.
ஆனாலும் ஜனாதிபதியாக நாட்டை ஆண்ட ஒருவர் இந்த விடயத்தை அறிந்து கொள்ளாமல் வெளிப்படையாக ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்க மாட்டார் என்பது தெரிந்த விடயமே.
அவ்வகையில் முன்னாள் ஜனாதிபதி எந்த நம்பிக்கையில் இவ்வாறு ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை அரங்கேற்றப் போகின்றார் என்பது தெரியவில்லை.
மஹிந்த தெரிவித்ததற்கு அமைய ஜனாதிபதியாகும் திட்டம் அவருக்கு இல்லை ஆனாலும் பிரதமராகும் எண்ணம் உள்ளது, இங்கு ஜனாதிபதி பதவிக்கான போட்டியாளர் கோத்தபாய ராஜபக்சவே.
அப்படியானால் இவர்கள் இருவரும் சேர்ந்து தமது திட்டத்தை அரங்கேற்றப் போகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்போதைக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் பகிரங்கமாக அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும் அதற்கு இராணுவ பலம் அவசியம்.
அந்த பங்களிப்பு ராஜபக்சர்களுக்கு நிறையவே கிடைக்கும், காரணம் யுத்த வெற்றி செல்வாக்கு இன்றும் அவர்களுக்கு இருக்கின்றது.
அப்படி என்றால் மஹிந்த மற்றும் கோத்தபாய இராணவ புரட்சியை பயன்படுத்தி ஆட்சி கவிழ்ப்பினை நிறைவேற்றப் போகின்றார்களா? என்பது மிகப்பெரிய சந்தேகமே.
ஏற்கனவே வெளிவந்த இராணவப்புரட்சி கதைகள் இன்றும் அடங்கவில்லை, இனவாதம் என்ற புதுக்கதையினால் அது மறைக்கப்பட்டுள்ளது அவ்வளவே.
இங்கு ஜனாதிபதி ஏற்கனவே கூறிய இரகசியக் கதைகளையும் மறந்து விட்டு பொறுமை காத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது ஜனாதிபதியின் குடுமி மஹிந்தவின் கையிலா என்ற சந்தேகம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி அரசியல் அறிவும் அனுபவும் நிறைந்தவர், அவர் முறையாக பின்புலத்தை ஆராயாமல் 2017இல் ஆட்சியை கவிழ்ப்பேன் என பகிரங்கமாக தெரிவித்திருப்பது அவர் அரசிற்கும் நாட்டிற்கும் விடுத்துள்ள வெளிப்படையாக எச்சரிக்கையாகவே நோக்கப்படுகின்றது.
அதன் படி 2017 நாட்டிற்கு பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி. ஆனாலும் அது இராணுவப் புரட்சியா? இனவாதமா என்பது மட்டும் இப்போதைய கேள்வி.

சமூக வலைத்தள மோசடி !





தாய் மொழியில் உரையாடுவதில் தமிழர் மத்தியில் வளரும் வெறுப்பு !




தெற்கு கள்ளுக்கு வடக்கில் தடை !




பொதுபலசேனாவுக்கும் எமக்கும் டீல்;

பொதுபலசேனாவுக்கும் எமக்கும் டீல்;