செவ்வாய், 31 ஜனவரி, 2017

*"நான் குழந்தையாக* இருந்தபோது ......!

*"நான் குழந்தையாக* இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் *அப்பா."*
அவரை என் *அம்மாவுக்கும்* பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர்.
அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.
நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.
என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.
அவர் ஒரு அற்புதமான
கதை சொல்லி,
அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.
காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார்.
அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.
விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.
அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..
சிந்திக்கவும் வைப்பார்.
அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார்.
ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார்.
நாட்கள் விரைந்தது .
நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. *அம்மாவுக்கு* இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.
அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை.
*அப்பா* அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.
தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார்.
நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.
எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.
அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார்.
சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார்.
செக்ஸ் பற்றி கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது.
எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .
நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது.
எனது *தாய் தந்தையர்* பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார்.
நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .
நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை.
இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம்.
இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.
அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்?
அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள்.
கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது.
இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.
சொல்கிறேன் கேளுங்கள்.
அவரை நாங்கள் *"டிவி"* என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது.
அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.
அவருடைய மனைவியின் பெயர் *கம்ப்யூட்டர்.*
இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் *கைபேசி*
இவர்களை குடும்பத்துடன் வெளியே அனுப்பும் காலத்தை இறைவன் விரைவிலேயே தந்தருவானாக!
படித்ததில் பிடித்தது...

புலிகளிடமிருந்து முஸ்லிம்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மஹிந்தவின் கூட்டத்தில் கலந்து கொண்டதில் தவறில்லை.


தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரப் பிடியிலிருந்து முஸ்லிம்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நுகேகொடை கூட்டத்தில் உலமா கட்சி கலந்து கொண்டதில் எவ்வித தவறும் இல்லை என அக்கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சியின் கல்முனை அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்திற்கு உலமா கட்சித்தலைவர் என்ற ரீதியில் கட்சி சார்பாகவே சென்றேனே தவிர அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பிரதிநிதியாக செல்லவில்லை.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தன்னை மன்னித்துக் கொள்ளும்படி உலமா கட்சித்தலைவர் மூலம் மஹிந்தவுக்கு தூது அனுப்பியதாக சிலர் தெரிவித்திருப்பது மிகப்பெரிய அபாண்டமாகும்.
இவ்வாறு மஹிந்த பற்றி எத்தகைய கருத்தையும் இன்று வரை என்னிடம் அமைச்சர் ரிசாத் பேசவேயில்லை என்பதை இறைவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன்.
உண்மையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பண்பட்ட, நல்ல அரசியல் சிந்தனைத் தெளிவுள்ள அரசியல்வாதியாவார். எமது உலமா கட்சியானது அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் ஒரு பங்காளிக் கட்சியாக இணைந்து, அதன் உயர் பீடத்தில் இருந்தாலும் தனியான கட்சி என்ற வகையில் எமக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.
இன்றுவரை அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் போகும்படியோ போக வேண்டாம் என்றோ ஒரு வார்த்தையும் எம்மிடம் கூறாத அளவுக்கு எமது கட்சிக்குரிய இறைமையை அவர் மதிக்கின்றார்.
இப்படிப்பட்ட பண்பட்ட அரசியல்வாதிகள் எவரும் முஸ்லிம் சமூகத்தில் இல்லை என்பதை உறுதியாக கூறுவேன்.
ஒரு உயர் பீட உறுப்பினர் எதிர் கட்சியின் கூட்டத்திற்கு போக முடியுமா என சம்பந்தப்பட்டவர் கேள்வி எழுப்பியுள்ளமை அரசியல் தெரியாத முட்டாள் தனமாகும்.

முதலில் மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சியை சேர்ந்தவர் அல்ல. அவரை பாராளுமன்றம் ஆளும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினராகவே இன்னமும் பார்க்கிறது.
அதனால் தான் தமிழ்க் கூட்டமைப்பு எதிர்க் கட்சியாக உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்துள்ள ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான கட்சியின் ஆலோசகர் பதவியில் இருப்பவரே மஹிந்த ராஜபக்ஷ.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரியின் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்றால் மஹிந்தவின் கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ள முடியாது? முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா என சில கேட்கின்றனர். புலிகள் செய்த அளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யவில்லை.
இன்று அதே புலிகளின் வாரிசுகளான தமிழ்க் கூட்டமைப்புடன் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்வது முஸ்லிம் சமூகத்திற்கான துரோகம் இல்லையா? அத்தகைய கட்சியொன்றின் கூட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்கள் கலந்து கொள்ளும்போது புலிகளை ஒழித்து முஸ்லிம்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மாவீரர் மஹிந்தவின் கூட்டத்தில் கலந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.
கடந்த மஹிந்த ஆட்சியில் சில தவறுகள் ஏற்பட்டன என்பது உண்மை. அதன் காரணமாகவே அமைச்சர் ரிசாத் பதியுதீன் துணிச்சலுடன் நல்லாட்சிக்கு ஆதரவளித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியலை பொறுத்தவரை மிகச்சிறந்த தேசியத்தலைவராக நாம் அமைச்சர் ரிசாத் பதியுதீனை பார்ப்பதால் அவரை பலப்புடுத்தும் நோக்கில் அவரது கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றோம் என தெரிவித்தார்.
மேலும் அவருக்கு இனவாதிகளால் ஆபத்து ஏற்படும்போது அக்கட்சியின் பதவிகளில் வசதிகளை அனுபவித்து கொண்டிருப்பவர்களை விட நாமே குரல் கொடுக்கிறோம் என்பதால் எம்மை எப்படியாவது அக்கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரசின் போராளிகள், எம்மீது அபாண்டங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர் என அஷ்ஷெய்க் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
Tamilwin.

ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.

*Who Will Cry When You Die?" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...*
*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*
*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.
*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.*
*3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.*
*4. அதிகாலையில் எழ பழகுங்கள்*.
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*
*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.*
*6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.*
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*
*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*
*8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*
*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.
*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*
*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*
*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*
*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்*.
*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*
*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.
*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*
*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*
*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*
*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!*
*"ஆணவம் ஆயுளை குறைக்கும்...*"
*மேற்கண்ட* *கருத்துக்களை பின் பற்றி,*
*ஆனந்தமாக வாழுங்கள்*
Whatsup msg