சனி, 31 டிசம்பர், 2016

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்! கொழும்பு ஊடகம் தகவல்



நாட்டின் அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் பிரதான தரப்பு கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பு போராட்டத்தில் வெற்றி பெறுவதற்து அதிகம் இடம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய சில காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் திரைக்கு பின்னால் உள்ள சில தலைவர்களின் எதிர்பார்ப்பு சாத்தியமாகும் அறிகுறி காணப்படுகின்றது.
சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் சில தரப்பு ஈடுபட்டு வருவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்காக ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர் உட்பட பல்வேறு தரப்பினரும் கூட்டாக இணைந்து செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காகவும், விசேடமாக தற்போது இழக்கப்பட்டு வருகின்ற பௌத்த மக்களையும் கரு ஜயசூரியவினால் இணைத்துக் கொள்ள முடியும் என குறித்த தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்தியா, அமெரிக்க உட்பட பிரதான நாடுகள் சிலவற்றிற்கு முன்னாள் அமைச்சரின் இது தொடர்பில் தற்போதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமித்தவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் அந்த கட்சியின் அரசியலமைப்பிற்கமைய கிடைக்கவுள்ள நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமைத்துவத்தில் சஜித் பிரேமதாஸ மற்றும் நவீன் திஸாநாயக்கவை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதுவரையில் ஐக்கிய தேசிய கட்சியின் 15 பேருக்கு குறித்த ஊடக நிறுவத்தின் முழுமையான ஆதரவு கிடைப்பதாகவும், இந்த திட்டம் நீண்டகாலமாக திட்டமிடப்படுவதாகவும், எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கு கொண்டு வருவது இவர்களின் திட்டமாகும்.
19 அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கமைய நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமருக்கு குறைப்பாடு ஏற்பட்டால் சபாநாயகர் நாட்டின் பிரதமராக நியமிக்கப்படலாம் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கு ஏதுவான சில முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு முன்னர் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இரண்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான இந்த சந்திப்பை அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள மைக் ஹெஜ்ஸ்ரு ஒழுங்கு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இலங்கைக்கு எதிரான யோசனை குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் கலந்துரையாடப்பட உள்ளது.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி பதவியேற்கும் ட்ரம்ப், இலங்கை உட்பட சில தென்கிழக்காசிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவரது .ஊடகப் பேச்சாளர் கெத்தரினா பியர்சன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக யோசனை முன்வைத்த ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் கெய்ன் ஹாபர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் யோசனை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் அமைதியான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
a

2020 ஜனாதிபதிக் கனவில் பிதற்றும் சம்பிக்க!



வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை ஆராய்வதற்கு முன்னர் அங்கு பல மடங்குகளில் விஸ்தரிக்கப்பட்டுள்ள கோவில்கள் மற்றும் இஸ்லாமிய மதத் தலங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை திருகோணேஸ்வரம் சிவன் கோவில் அண்மையில் 5 மடங்குகள் அதிகரிக்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டமை தொடர்பில் எவரும் இதுவரை வாய்திறக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு நேற்றைய தினம் வழங்கிய விசேட நேர்காணலின்போதே அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் சுமார் மூன்று லட்சம் தொல்பொருள் இடங்கள் உள்ளதோடு இதில் பாதுகாக்கப்பட வேண்டிய 12 ஆயிரம் இடங்கள் காணப்படுகின்றன.
தொல்பொருட் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட ஆளணி மிகவும் அந்த கதியில் இயங்குகின்றது. அதன் காரணமாக தொல்பொருள் இடங்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளன.
உதாரணமாக பிரித்தானியரின் ஆட்சியின்போது டேவி என்பவர்; வெளியிட்ட நினைவுகள் என்ற நூலில் ருவன்வெலிசாய தூபி ஒரு பாரிய மலையைப் போன்றே காட்சியளித்ததாக கூறியுள்ளார்.
எமக்கு நினைவுதெரிந்த காலத்திலிருந்து அபேகிரிய தொல்பொருட் சின்னமும் பற்றையினால் சூழப்பட்ட மலையைப் போன்றே காட்சியளிக்கிறது.
அதேபோல வடக்கு, கிழக்கு பகுதிகளில் காடுமண்டிய மலையைப் போன்று பல்வேறு இடங்களில் தூபிகள் காணப்படுகின்றன.இதுகுறித்து தெரியாதவர்கள் அதன் மீது விவசாயத்தையும், வீடு கட்டுதலையும் செய்கின்றனர்.
அந்த நடவடிக்கைகளில் புராதன சின்னங்களின் கற்கள் தென்பட்டால் அதனை யாரிடமும் கூறாமல் இரகசியமாக அகற்றுகின்றனர். எனவே மதத் தலங்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த தலங்கள் அமைக்கப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் பல மதப் பிரிவினர் அப்பகுதிகளில் ஏற்கனவே காணப்பட்ட தமது தலங்களை விஸ்தரித்து நிர்மாணித்துள்ளனர்.
உதாரணமாக திருகோணமலை இருந்ததைப் பார்க்கிலும் 5 மடங்கு அதிகமாக விஸ்தரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளனது.
அதேபோன்று புதிய கோவில்களும், கிறிஸ்தவ, இஸ்;லாமிய மதத் தலங்களும் மட்டக்களப்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
எனவே 1990ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையிலும், யுத்தத்திற்குப் பின்னரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மதத் தலங்கள் மற்றும் அதன் விஸ்தரிப்பு தொடர்பாக கணக்கெடுப்பை மதவிவகார அமைச்சுக்கள் நடத்தி போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.
இதேவேளை மாகாண சபை முறைமையை தோற்கடிப்பதற்கு இணங்காத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே வடமாகாண சபையின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதன்போது குற்றம் சுமத்தினார்.
2013ம் ஆண்டில் வடமாகாண சபையை அமைப்பதற்கு முன்னர் மாகாண சபை முறையை மாற்றியமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் தான்தோன்றித் தனமாக புறக்கணித்தார்.
நாங்கள் மட்டுமல்ல, இன்று மஹிந்த ராஜபக்சவுடன் கைகோத்திருக்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரும் இந்த விடயத்தில் குற்றவாளிகள்தான்.
மாகாண சபையை மாற்றியமைக்கும் சுவர்ணமயமான சந்தர்ப்பத்தை அன்று நாங்கள் நழுவவிட்டதன் விளைவாக வடக்கு மக்களை மீண்டும் இனவாதத்திற்கு இட்டுச் செல்லும் இனவாதியான விக்கேஸ்வரனைப் போன்ற ஒருவர் தெரிவாவதற்கு காரணமாகிவிட்டோம்.
இதற்கு மஹிந்த ராஜபக்சவும், விசேடமாக பெசில் ராஜபக்சவும் பொறுப்பு கூற வேண்டும்” என்று தெரிவித்தார்
- Valampuri

வடக்கு தமிழர்கள் எனக்கு எதிராக வாக்களித்தனர்!- தவறை உணர்ந்த மகிந்த




2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டை ஒன்றுபடுத்த தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்படுவது குறித்து, கேள்வி எழுப்பிய போது, அதில் கொஞ்சம் உண்மை உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டார்.
கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய வினாவுக்கு மகிந்த ராஜபக்ச எம்.பி. மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
போருக்குப் பின்னர் தாம் அரசியல் தீர்வுக்குச் செல்ல விரும்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும், அவர்கள் தம்முடன் கலந்துரையாடக் கூட விரும்பவில்லை.
பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதில் நான் அரசியல் செய்யவில்லை. உயிர் வாழ்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் முதலில் கொடுத்தேன்.
துரதிஷ்டவசமாக மக்களின் தேவைகளை தவறாக மதிப்பிட்டு விட்டேன். வடக்கிலுள்ள தமிழர்கள் 2015ல் எனக்கு எதிராக வாக்களித்தனர். இதில் அரசியல்வாதிகளும் புலம்பெயர்ந்தோரும் செல்வாக்குச் செலுத்தினர்.
அரசியல் தீர்வு நோக்கி செல்வதற்கு நான் சம்பந்தனுக்கும், ஏனைய அரசியல்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தேன்.அந்த நேரத்தில் அவர்கள் என்னுடன் இணைந்து எதையும் செய்ய விரும்பவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

மஹிந்தவின் பகிரங்க எச்சரிக்கை?? இரகசியம் காக்கும் மைத்திரி !

மஹிந்தவின் பகிரங்க எச்சரிக்கை?? இரகசியம் காக்கும் மைத்திரி !


வெட்டிச் சவால்களுக்கும் வீரச் சபதங்களுக்கும் சிறப்பானதொரு கல்வி கூடம் இலங்கை அரசியலே.
ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சபதங்கள் செய்வதில் மட்டும் குறைவில்லை ஆனால் இலங்கையின் நிலை மட்டும் அன்று தொடக்கம் இன்று வரை மாற்றம் இல்லை. இப்போதைய அப்போதைய ஜனாதிபதிகளும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.
ஆனாலும் கூட அரசியல் அனுபவம் அற்றவர்களின் கருத்து பாரதூரமானது அல்ல ஆனால் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஒருவரது கருத்து இப்போது மிகப்பெரிய சந்தேகமாகவும், எச்சரிக்கையாகவும் மாறியுள்ளது.
விட்ட இடத்தில் மீண்டும் கோட்டை கட்டும் கனவோடு மஹிந்த புதல்வர் சகிதம் அண்மையில் பாதயாத்திரையை மேற்கொண்டார். குறித்த கனவு, கனவாகவே போனது வேறு விடயம்.
ஆனாலும் அவரின் கனவைக் கண்டு எச்சரிக்கை அடைந்த மைத்திரி “ஆட்சியை கவிழ்க்க எவராவது முயன்றால் இரகசியங்களை வெளியிட்டு வீதியில் அலைய விடுவேன் என்று பகிரங்கமாக எச்சரித்தார்.
அந்த நேர சூழ்நிலைக்கு அமைய அவர் மகிந்தவையே எச்சரித்தார் என்பதே உண்மை. ஆனாலும் இப்போது?
மஹிந்த தரப்பு புதுக் கட்சி ஆரம்பித்து விட்டது மட்டுமல்லாமல் 2017ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பேன் என்றும் மஹிந்த தெரிவித்து விட்டார் ஆனாலும் இன்று வரை ஜனாதிபதி மட்டும் அமைதியே.
ஏற்கனவே ஆட்சியை கவிழ்க்க மகிந்த சதித்திட்டங்களை தீட்டிவருவதமாக தென்னிலங்கை தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டுள்ளதோடு அரசிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இப்போதைக்கு ஆட்சி மாற்றம் என்பது சாத்தியம் இல்லை காரணம் 5 ஆண்டுகள் இன்னும் நல்லாட்சிக்கு பூர்த்தியாகவில்லை.
ஆனாலும் ஜனாதிபதியாக நாட்டை ஆண்ட ஒருவர் இந்த விடயத்தை அறிந்து கொள்ளாமல் வெளிப்படையாக ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்க மாட்டார் என்பது தெரிந்த விடயமே.
அவ்வகையில் முன்னாள் ஜனாதிபதி எந்த நம்பிக்கையில் இவ்வாறு ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை அரங்கேற்றப் போகின்றார் என்பது தெரியவில்லை.
மஹிந்த தெரிவித்ததற்கு அமைய ஜனாதிபதியாகும் திட்டம் அவருக்கு இல்லை ஆனாலும் பிரதமராகும் எண்ணம் உள்ளது, இங்கு ஜனாதிபதி பதவிக்கான போட்டியாளர் கோத்தபாய ராஜபக்சவே.
அப்படியானால் இவர்கள் இருவரும் சேர்ந்து தமது திட்டத்தை அரங்கேற்றப் போகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்போதைக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் பகிரங்கமாக அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும் அதற்கு இராணுவ பலம் அவசியம்.
அந்த பங்களிப்பு ராஜபக்சர்களுக்கு நிறையவே கிடைக்கும், காரணம் யுத்த வெற்றி செல்வாக்கு இன்றும் அவர்களுக்கு இருக்கின்றது.
அப்படி என்றால் மஹிந்த மற்றும் கோத்தபாய இராணவ புரட்சியை பயன்படுத்தி ஆட்சி கவிழ்ப்பினை நிறைவேற்றப் போகின்றார்களா? என்பது மிகப்பெரிய சந்தேகமே.
ஏற்கனவே வெளிவந்த இராணவப்புரட்சி கதைகள் இன்றும் அடங்கவில்லை, இனவாதம் என்ற புதுக்கதையினால் அது மறைக்கப்பட்டுள்ளது அவ்வளவே.
இங்கு ஜனாதிபதி ஏற்கனவே கூறிய இரகசியக் கதைகளையும் மறந்து விட்டு பொறுமை காத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது ஜனாதிபதியின் குடுமி மஹிந்தவின் கையிலா என்ற சந்தேகம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி அரசியல் அறிவும் அனுபவும் நிறைந்தவர், அவர் முறையாக பின்புலத்தை ஆராயாமல் 2017இல் ஆட்சியை கவிழ்ப்பேன் என பகிரங்கமாக தெரிவித்திருப்பது அவர் அரசிற்கும் நாட்டிற்கும் விடுத்துள்ள வெளிப்படையாக எச்சரிக்கையாகவே நோக்கப்படுகின்றது.
அதன் படி 2017 நாட்டிற்கு பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி. ஆனாலும் அது இராணுவப் புரட்சியா? இனவாதமா என்பது மட்டும் இப்போதைய கேள்வி.

சமூக வலைத்தள மோசடி !





தாய் மொழியில் உரையாடுவதில் தமிழர் மத்தியில் வளரும் வெறுப்பு !




தெற்கு கள்ளுக்கு வடக்கில் தடை !




பொதுபலசேனாவுக்கும் எமக்கும் டீல்;

பொதுபலசேனாவுக்கும் எமக்கும் டீல்;



வியாழன், 29 டிசம்பர், 2016

தமிழச்சி (Tamizachi)யின் சந்தேகம் ஜெயா பற்றியது.

தமிழச்சி (Tamizachi)யின் சந்தேகம் ஜெயா பற்றியது. 

ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க வினரின் அதிகார மையத்திற்குள் சசிகலாவின் ஒத்துழைப்புடன் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட "தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் இறுதிச் சடங்கில் ஏன் எரியூட்டப்படவில்லை" என்பதை குறித்து நான் அனுமானித்த விஷயம்:
ஜெயலலிதாவின் உடல் எரியூட்டப்பட்டால் தடயங்கள் அழியக்கூடும். குறிப்பாக ஜெயலலிதாவின் உடைந்த பற்கள், வெட்டப்பட்ட கால்கள் அடையாளம் காணப்பட முடியாத அளவில் எரிந்து சாம்பலாகி இருக்கும். அதை ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க விரும்பவில்லை.
"சசிகலா / மன்னார்குடி கூட்டணியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், ஜெயலலிதாவின் உடல் எரியூட்டக்கூடாது. பிணத்தை வைத்து அச்சுறுத்தி அதிமுகவை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் ஜெயலலிதா உடலை எரியூட்டாதது காரணமாக இருக்கக்கூடும்" என்று யூகித்திருந்தேன்.
இன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வமான பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்பட்ட தினத்தில் மற்றொரு அறிவிப்பும் எனது யூகத்தை உறுதிப்படுத்துகிறது.
"நான் வழக்கை தொடர்ந்து விசாரித்தால் அது வேறு மாதிரி இருக்கும். ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து உடற்கூறு செய்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பேன்" என்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்.
இது சசிகலாவிற்கு விடப்படும் மிரட்டல்.
காந்தியை சாகடித்த ஆர்.எஸ்.எஸ் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்துக் கொண்டிருந்த போது, "காந்தி படுகொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட போது காணாமல் போய்விட்டது" என்று கூற வைத்து அத்தோடு வழக்கையும் மூடிவிட்டது.
தோழர் அம்பேத்கர் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்தமதம் மாறிய 6வது மாதத்தில் இதே ஆர்.எஸ்.எஸ் ஆல் மர்மமான முறையில் மரணமடைய காரணமானது.
அம்பேத்கரின் மூத்த மகன் "என் தந்தையின் மர்மச் சாவிற்கு நீதி வேண்டும்" என்று பாராளுமன்றம் முன்பாக தன்னந்தனியாக கத்திக்கதறி நியாயம் கோரிய போது, காவிகளால் விரட்டியடிக்கப்பட்டார்.
இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்த காந்திக்கும், இந்தியாவிற்கு அரசியல் சாசனத்தை எழுதிய அம்பேத்கருக்குமே இந்த கதி (?) என்றால்...
இந்த இருவருக்கும் முன் ஜெயலலிதா ஒன்றுமில்லைதான்.
ஆனால் ஜெயலலிதா ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நிலையில் கொல்லப்பட்டு அவருடைய உடலை திட்டமிட்ட காரணங்களுக்காக எரிக்காமல் வைத்துக் கொண்டு அவப்போது "ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து உடற்கூறு செய்து விசாரிக்க உத்தரவிடுவோம்" என்று நீதிபதிகளை விட்டு சசிகலாவிற்கு மிரட்டல் விடும் வேலைகளை ஆர்.எஸ்.எஸ் தொடரும்.
ஒருவேளை சர்வதேச நீதிமன்றம், "ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடுமானால் காந்தின் ஆவணங்கள் தொலைந்தது போல் ஜெயலலிதாவின் உடலும் சமாதியில் இருந்தே காணாமல் போய்விடும்."
அதுதான் ஆர்.எஸ்.எஸ் அரசியல்.
இந்த அரசியலை புரிந்து கொள்ளாதவரை இந்தியாவிற்குள் மாநில / மத்திய அரசை மீறி எந்த நீதிபதியாலும் ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியாது!
இது இந்திய சட்டத்திற்கு கிடைத்த சாபக்கேடு!!
இரத்த தானம் செய்யும் இரத்தத்தால்  டி.என்.ஏ. பிரச்சினை ஏற்படுமா?


ஒரு துளி ரத்தத்திலும் நம் மரபுப் பண்புகளை நிர்ணயிக்கும் டி.என்.ஏ. இருக்கிறது என்கிறோம்.அப்படியென்றால் உடல்நலப் பிரச்சினைகளின்போது, மற்றவரிட மிருந்து ரத்தம் பெற்று நோயாளியின் உடலில் செலுத்துகிறார்கள்.


இப்படிச் செய்யும்போது இரு வேறு டி.என்.ஏ.க்கள் ஒரே உடலில் எப்படி உயிர்ப்புடன் இருக்கும்? அப்போது உடலுக்கு என்ன ஆகும்? இதற்கு எளி மையான விடை, நோயாளியின் உடலில் செலுத்தப்படும் ரத்தத்தில் டி.என்.ஏ.வே இருக்காது என்பதுதான். புரியவில்லையா?

ரத்த வெள்ளை அணுக்களில் மட்டுமே நியூக்ளியஸ் எனும் உட்கரு இருக்கிறது. ஒருவர் ரத்த தானம் செய்யும்போது, அந்த ரத்தத்தில் உள்ள ரத்தத் வெள்ளை அணுக்களில் மட்டுமே ரத்த தானம் செய்பவரின் டி.என்.ஏ. இருக்கும். ரத்தச் சிவப்பணுக்களும் தட்டணுக்களும் (பிளேட்லெட்) எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும்போதே உட்கருவை இழந்துவிடுகின்றன.
மீறிச் செலுத்தினால்…
அது மட்டுமில்லாமல் ஒருவரிடம் இருந்து பெறப்படும் ரத்தம், அப்படியே மற்றவருக்குச் செலுத்தப்படுவதில்லை. மையவிலக்கு விசை கருவி (centrifuge) மூலம் ரத்தம் சுழற்சிக்கு உட்படுத்தப் படுகிறது. இதில் பிளாஸ்மா, தட்டணுக்கள், சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் போன்றவை தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, வெள்ளையணுக்களைத் தவிர்த்த மற்ற மூன்று அம்சங்கள் மட்டுமே தானம் பெறுபவரின் உடலில் செலுத்தப்படுகின்றன.
ஒரு வேளை பெறப்படும் ரத்தம் பிரிக்கப்படாமல், நோயாளிக்கு உடனடி யாகச் செலுத்த வேண்டிய அவசர நிலை இருந்தால், febrile என்ற வகை காய்ச்சல் நோயாளிக்கு ஏற்படும். ரத்தத் தானம் பெறுபவரின் ரத்த வெள்ளையணுக்கள் அயல் டி.என்.ஏ.வை அழிக்கும் செயல்பாட்டால் உருவாகும் காய்ச்சல்தான் இது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்-



முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக பிரமுகர் ஜோசப் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் வரும் ஜனவரி 9-ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகம் உள்ளதால் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக தொண்டர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 27-ம் தேதியன்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் விடுமுறைகால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, ஜனவரி 9- க்குள் இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
நீதிபதியின் கேள்வி:
இன்றைய வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமார சுவாமி, "ஜெயலலிதா மாரடைப்பு காரணமாகவே இறந்தார். அவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும், அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரது மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதற்கு முன்னர் இதே கோரிக்கையை முன்வைத்து டிராபிக் ராமசாமி, பிரவீனா ஆகியோர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது. எனவே இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், "தேவைப்பட்டால் இந்த வழக்கில் நோட்டீஸ் பெற்று அதற்கு விளக்கமளிக்க அரசு தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், "நீதிபதி என்பதை தாண்டியும் ஒரு சாதாரண குடிமகனாக தனிப்பட்ட முறையில் இந்த வழக்கில் எனக்கு அக்கறை இருக்கிறது.
ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவே அவர் உடல்நலன் விசாரித்துவந்த அனைவரும் கூறினார்கள். மத்திய அமைச்சர்கள்கூட இதையே சொன்னார்கள். ஆனால் அவர் திடீரென இறந்தார். அவரது மரணம் குறித்து மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவர்கள் மவுனம் காப்பது ஏன்? ஆளுநர்கூட ஜெயலலிதா உடல்நலனை விசாரித்து வந்தாரே.
மக்களின் அபிமானம் பெற்றவர்களின் மரணம் நிகழும்போது அதைச்சுற்றி சில சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. ஆனால், அத்தகைய சந்தேகத்தைப் போக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.
எனவே, ஜனவரி 9- க்குள் இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
"ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகும்கூட அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்க மாநில அரசு எதுவும் செய்யவில்லை. மர்மங்களை விலக்க அவரது உடலைத் தோண்டி எடுக்க வேண்டுமா?" என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நடைமுறைகளை மேற்கோள் காட்டிய நீதிபதி, ஜெயலலிதாவின் மரணத்தில் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா என்று மத்திய, மாநில அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் வினவினார்.
மனுவின் விவரம்:
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நான் அதிமுக தொண்டன். அடிப்படை உறுப்பினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதா உடல்நலம் முன்னேற்றமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை மூலம் கூறி வந்தது. இதற்கிடையே ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்தியை பரப்பியதாக 43 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எல்லா தகவல்களும் ஜெயலலிதா நன்றாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்றே கூறின. இதை உறுதி செய்யும் விதமாக பிரதாப் சி.ரெட்டியும் ஜெயலலிதாவின் உறுப்புகள் சரியாக செயல்படுகின்றன.
இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாக கூறினார். இந்நிலையில் திடீரென டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள், அவர் நன்றாக இருப்பதாக பேட்டி அளித்தனர். டிசம்பர் 5-ம் தேதி மாலை ஜெயலலிதா இறந்து விட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டது.
ஆனால் அன்றிரவு 11.30 மணிக்கு அவர் இறந்து விட்டார் என மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஜெயலலிதா இறந்து விட்டார் என்று அறிவிப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்கிறார். ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது அவருடைய கால்கள் அகற்றப்பட்டுள்ளது, அவரது உடல் பதப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. பொதுவாக இறந்து அதிக நாட்களான உடலுக்குத் தான் இதுபோன்ற பதப்படுத்தும் பணிகள் செய்வது வழக்கம்.
டிசம்பர் 5-ம் தேதி இரவு இறந்த அவரது உடல் மறுநாளே அடக்கம் செய்யப்பட்டபோது எதற்காக பதப்படுத்த வேண்டும்?. அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தலுக்கு கைரேகை பெறும்போது அவர் சுயநினைவோடு தான் இருந்தாரா? எதற்காக இறப்பதை அறிவிக்கும் முன்பாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும்? என அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ஏற்கனவே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த வழக்கில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல மிகப்பெரிய மக்கள் தலைவரான ஜெயலலிதாவின் மரணத்திலும் பல சந்தேகங்கள் உள்ளதால், இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். அதுவரை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் விடுமுறைகால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. ஜனவரி 9- க்குள் இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
Tamil Hindu

நல்லிணக்கத்தின் வி(ரோ)திகள்.

ஜனாதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் முடிவடையவுள்ள நிலையில் நல்லிணக்க வாரம் ஒன்றினை பிரகடனப்படுத்தவுள்ளதாக அறிய முடிகிறது.
ஜனவரி 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை அந்த வாரம் நாடு பூராகவும் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
ஆனால் நாட்டில் பௌத்த கடும் போக்கு மேலாதிக்க வாதிகள் கூறி வருகின்ற சில கருத்துக்கள் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் தேசிய இனத்திற்கும், சிங்கள தேசிய இனத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு தடையாகவே அமைந்திருக்கின்றது.
அதை வலுச் சேர்க்கும் வகையில் இலங்கையின் நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் அமைந்திருப்பது இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விடயம்.
மூவின மக்களும் வாழ்கின்ற மட்டக்களப்பு பிரதேசத்தில் அண்மையில் பௌத்த மதருவால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடானது அப்பகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
அங்கு கடமையாற்றும் அரசாங்க அதிபர் அச்சத்தில் உறைந்திருந்ததையும் காணக் கூடியதாகவிருந்தது.
இது குறித்து எந்தவொரு பொது நிர்வாக சேவை உத்தியோகத்தாகளும் தேரரின் இந்த செயலை கண்டிக்காமல் விட்டதும் சுட்டிக்காட்டத்தக்கது.
பொதுபலசேனா அமைப்பு மட்டக்களப்பு வருவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றையும் பிறப்பித்திருந்தது.

நல்லிணக்கத்தின் வி(ரோ)திகள்.

மட்டக்களப்பு பிரதேசமானது மூவின மக்களும் வாழுகின்ற பிரதேசமாக இருக்கின்ற போதும் வடக்கு, கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற ஒரு பூர்வீக பிரதேசமாகும்.
இது கடந்த காலத்தில் இடம்பெற்ற இந்திய - இலங்கை ஒப்பந்த்தின் மூலமும், ஆட்சியாளர்களாளும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நாட்டில் சிறுபான்மையாக தமிழ் மக்கள் வாழுகின்ற போதும் அவர்கள் ஒரு தேசிய இனம் என்பதை கடந்த கால ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளாதான் விளைவே இந்த நாட்டில் இரு இனங்களுக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமைந்திருந்தது.
வடக்கு - கிழக்கு இணைந்து காணப்பட்ட போது இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தர்லில் பெரும்பான்மை பலத்துடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிலைப்பெற்றிருந்த போதும் ஏனைய இனங்களை அடக்கி, அவர்களை புறந்தள்ளும் வகையில் ஆட்சி, நிர்வாகம் இடம்பெற்றிருக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடமாகாண சபை எந்தவொரு இனத்திற்கும் எதிராக செயற்படவில்லை.
ஆக தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு இனத்திற்கு எதிராகவோ அல்லது மதத்திற்கு எதிராகவோ செயற்பட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை.
அவர்கள் தாமும் இந்த நாட்டில் ஒரு தேசிய இனம் என்பதையும், வடக்கு- கிழக்கு பிரதேசம் தமிழ் மக்களின் மரபு வழித் தாயகம் என்பதையுமே வலியுறுத்துகிறார்கள்.
அவர்கள் தமது இறைமை அங்கீகரிக்கப்பட்ட வகையில் ஒரு தேசிய இனத்திற்கான அடையாளங்களுடன் வாழக் கூடிய வகையில் சமநீதி, சமவுரிமை என்பவற்றை கோரி வருகிறார்கள்.
ஆனால், தென்னிலங்கையில் உள்ள பௌத்த மேலாதிக்க கடும்போக்கு சக்திகளிடம் இதனை ஏற்கின்ற பக்குவம் இன்னும் ஏற்படவில்லை.
அவர்கள் தமிழ் தேசிய இனத்தை அடக்கி, ஓடுக்கி பௌத்த மேலாதிக்க சிந்தனையை பரப்ப முயல்கிறார்கள்.
தற்போது இந்த நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதாக கூறப்படுகின்ற போதும் பௌத்த கடும்போக்கு சிந்தனைகள் தற்போதும் தொடர்வதையே அவதானிக்க முடிகிறது.
ஒரு நாட்டின் மத்திய கபினற் அமைச்சர் என்பவர் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன, மத மக்களையும், அனைத்து சமூகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் செயற்பட வேண்டும்.
அதிலும் குறிப்பாக நீதித்துறை அமைச்சர் என்பவர் முழுநாட்டிலும் சட்டம், நீதி சீர்குலையாத வகையில் தனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் அவதானமாகவும் செயற்பட வேண்டும்.
ஆனால் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த நீதித்துறை அமைச்சர் அங்கு நடைபெற்ற மாவட்ட மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு நல்லாட்சியை சீர்குலைக்கும் வகையில் எவரும் செயற்படக் கூடாது என்ற அடிப்படையில் ஒரு நீதி அமைச்சராக உரையாற்றியிருந்தார்.
அதே தினம் சிங்கள பௌத்த கடும்போக்கு கொள்கை கொண்ட பொதுபலசேனா பிக்குகளை அழைத்து மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருக்கின்றார்.
அச் சந்திப்பின் போது தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சந்திப்பு இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மீண்டும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அங்கு கருத்து தெரிவித்த நீதித் துறை மற்றும் பௌத்த விவகார அமைச்சர் 'மட்டக்களபபு மாவட்டத்தில் 1982ம் ஆண்டுக்கு முன்பு 28 ஆயிரம் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள். தற்போது எண்ணிக்கை குறைந்து விட்டது.
அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு மக்கள் பிரதிநிதகள் இல்லை. அதனாலேயே அம்பிட்டிய சுமணதேரர் அவர்களுக்காக குரல் எழுப்புகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்தச் செயற்பாடும் இனவாத நோக்கோடு செயற்படும் மதவாதிகளை மக்களின் பிரதிநிதியாக கருதி கருத்து வெளியிட்டு இருப்பது என்பதும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதே.
ஆக இந்த இடத்தில் நீதி அமைச்சர் தான் ஒரு புத்ததாசன அமைச்சர் என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
இந்த நாட்டில் பௌத்த மேலாதிக்க சிந்தனை வலுப்பெற்றமையே இனமுரண்பாடு தீவிரம் அடைய காரணமாக இருந்திருக்கிறது.
அப்படியான நிலையில் ஒரு நீதித்துறை அமைச்சர் புத்ததாசன அமைச்சராகவும் செயற்படுவது என்பது நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் கேள்வி எழுப்புவதாகவே அமைந்திருக்கின்றது.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் இருந்தும் இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் வெளிவாராமல் இருப்பது பல்வேறு மட்டங்களிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் அமைச்சரின் கருத்துக்களும் புத்தசாசனம் தொடர்பில் கரிசனை கொள்வதாகவும், கடும்போக்கு கொள்கை கொண்ட அந்த பிக்குகளின் செயற்பட்டை வலுப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மட்டத்தில் அல்லது ஆட்சியாளர்கள் மட்டத்தில் நல்லிணக்கம் பற்றி எதுவும் பேசாமல் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படும் என எதிர்பார்ப்பது என்பதும், அதற்காக நல்லிணக்க வாரம் ஒன்றை அனுஸ்டிப்பது என்பதும் எவ்வளவு தூரம் இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது சிந்திக்க வேண்டிய விடயமே.
- நரேன் -Tamilwin

காலக்கெடு முடிந்தது: கனவு தான் பலிக்கவில்லை....!

காலக்கெடு முடிந்தது: கனவு தான் பலிக்கவில்லை....!

இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ் தேசிய இனம், சிங்கள தேசிய இனத்தின் பௌத்த மேலாதிக்கவாதிகளால் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.
ஜனநாயக ரீதியாக சமவுரிமை, சம நீதி கேட்டு போராடிய தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அவர்களது கோரிக்கைகளும், மகஜர்களும் வெற்றுக்  காகிதங்கள் போல் தூக்கி வீசப்பட்டன.
ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்த மக்கள் பிரதிநிதிகள் கூட சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளால் இலக்கு வைக்கப்பட்டனர். தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் இனக்கலவரம் என்ற பெயரில் அடித்து விரட்டப்பட்டனர்.
தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் கூட நிம்மதியாக வாழ முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன்விளைவு இந்த நாடு 30 வருடம் ஒரு ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
சிங்கள தேசிய இனமும், தமிழ் தேசிய இனமும் கைகோர்த்து சுதந்திரத்திற்கு பின் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இரு தேசிய இனங்களும் தமக்குள் மோதிக் கொண்டதன் விளைவு இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடியது. 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் இந்த போர் மௌனிக்கப்பட்டிருக்கிறது.
சமநீதி, சமவுரிமை என்பவற்றை பெற்று இந்த நாட்டில் இறையாண்மையுள்ள ஒரு தேசிய இனமாக தமிழ் மக்களும் வாழ வேண்டும், அதற்கு போரின் மூலம் தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்களின் பெரும்பாலனவர்கள் நம்பியிருந்தனர்.
ஆனால் பூகோள அரசியல் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மேற்குலகம் மற்றும் அயல் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. அதனால் அதனைக் கட்டுப்படுத்த கடந்த அரசாங்கத்திற்கு அவை உதவியிருந்தன.
மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எனவும் உரிமைக்காக போராடிய தமிழ் மக்களது போராட்டம் நசுக்கப்பட்டது.
ஆயுத வழிப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களது தெரிவாகியது.
மீண்டும் ஜனநாயக ரீதியாக தமது அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அமைப்பாக மக்கள் வேறு வழியின்றி அதனையே ஆதரிக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டனர்.
தமிழ் மக்களும் இந்த நாட்டில் ஒரு தேசிய இனம். அவர்களும் இந்த நாட்டில் தனித்துவ இறையாண்மை உண்டு என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் இந்த நாட்டின் இன்னொரு தேசிய இனமாகிய சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இதனை பிரிக்கப்படாத நாட்டிற்குள் வடக்கு- கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி மூலம் வழங்க வேண்டும் என்ற கோசத்துடன் 2009 முதல் இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறது.
உலகின் பல நாடுகளிலும் நடைமுறையில் இருக்கின்ற அத்தகைய சமஸ்டி முறை தீர்வுக்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமது இறைமையை வழங்கி வருகிறார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தின் போது 2016ம் ஆண்டு டிசம்பர் மாத்திற்குள் நிரந்தர அரசியல் தீர்வு என்ற கோசத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
காலம் கனித்து வருகிறது. இதை குழப்பி விடாதீர்கள். 2016 இற்குள் தீர்வு காண்பதற்கு ஒட்டுமொத்த மக்களின் ஆணையையும் அவர் கோரினார். வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் சாரை சாரையாக திரண்டு வந்து தமது வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கினர்.
இதன் எதிரொலியாக தீவிர தமிழ் தேசியத்துடன் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனி கூட்டமைப்பில் இருந்து பிரிந்த பின்னர் இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது.
எதிர்பார்த்ததை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இரா.சம்மந்தனின் இந்தக் கூற்று தற்போதைய சூழலில் பார்க்கும் போது வெறும் தேர்தல் இராஜதந்திரமா என்று எண்ணத் தோன்றுகின்றது.
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து 15 மாதங்களும் கடந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறிய 2016 டிசம்பர் மாதமும் முடிவடைகிறது. ஆனால் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
65 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப் போயிருக்கும் ஒரு அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை ஒரு இரவில் வழங்கி விடவோ அல்லது பெற்று விடவோ முடியாது என்பது உண்மை.
ஆனால் அந்த தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை கூட 15 மாதமாக உருவாக்க முடியாத நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இருக்கிறது.
இது மக்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால பலமான இருப்பைக் கூட கேள்விக்குட்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
ஏனெனில், கடந்த 2015 ஜனவரி மாதம் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.
தமிழ் பேசும் மக்கள் பெருவாரியாக வழங்கிய வாக்கின் மூலமே நல்லாட்சி உதயமாகியது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் புதிய நல்லாட்சி அரசாங்கம் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
பாராளுமன்ற தேர்தலின் பின் நன்றிக்கடனாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி, கூட்டமைப்பு பங்காளிக் கடசி ஒன்றின் தலைவர் ஒருவருக்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவி என்பன அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தது.
இது அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவை தான். ஆனால் தமிழ் மக்கள் 65 வருடத்திற்கு மேலாக இந்த பதவிக்காக போராடவில்லை.
ஆயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்களும், தியாகங்களும் பதவிக்கானவை அல்ல. அவை ஒரு இலட்சியத்திற்கானவை. ஒரு இனத்தின் விடிவுக்கானவை. அவை உரிமைக்காக, சமநீதிக்காக, இறைமைக்காக போராடும் மக்களுக்கானவை. இதை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வப்போது தமிழ் மக்கள் தொடர்பாக ஆசுவாசுப்படுத்தக் கூடிய கதைகளை பேசுவதால் மட்டும் இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கத்தையோ அல்லது நல்லாட்சியையோ ஏற்படுத்திவிட முடியாது.
அது அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை மக்கள் பிரதிநிதிகளின் மனதில் இருந்து வரவேண்டும். அதற்கான வேலைகள் இன்று வரை நடந்திருக்கின்றதா என்ற கேள்விக்கு தான் விடை காணமுடியாமல் இருக்கின்றது.
இந்த டிசம்பருக்குள் தீர்வைத் பெற்றுத் தருவதாக கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறைந்த பட்சம் சில அடிப்படை பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியாத நிலையில் உள்ளது.
மக்களின் விருப்பப்படி ஒரு அபிவிருத்தியைக் கூட முன்னகர்த்த முடியாத நிலையில் இருக்கின்றது.
குறிப்பாக காணாமல் போகச் செய்யப்படடோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு என்பவற்றில் தமிழ் மக்கள் திருப்திப்படும் படியாக எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மறுபுறம் பௌத்தமயாமக்கல், திட்டமிட்ட குடியேற்றங்கள், இனப்பரம்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் என்பன மிகவும் சூட்சுமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் கொண்டு வருவதாக கூறுகின்ற போதும் அதனை தமிழ் மக்களினதோ அல்லது தமிழ் மக்களின் ஆணைப்படி இயங்கும் மாகாணசபையினதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளில் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளினதோ விருப்பப்படி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
வவுனியாவிற்கு கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒரு வருடம் கடந்த நிலையில் கூட அதனை எங்கு அமைப்பது என்ற முடிவு எட்டப்படவில்லை.
அரசாங்கம் அதனை கூட்டமைப்பின் அல்லது வடமாகாண சபையின் விருப்பதற்கு அமைய அமைக்க விரும்பவல்லை. அதனால் பல சாட்டுப் போக்குகளைக் கூறி இழுத்தடிப்பு செய்து வருகிறது.
மறுபுறம் மீள்குடியேறிய மக்களுக்காக அரசாங்கம் 65,000 பொருத்து வீடுகளை வழங்கவுள்ளதாக கூறியிருந்தது. ஆனால் தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் பொருத்து வீடுகள் தமது பகுதிக்கு பொருத்தமற்றவை என வலியுறுத்தி வருவதுடன், இது தொடர்பில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
ஆனாலும் அரசாங்கம் மக்களதும், மக்கள் பிரதிநிதிகளினதும் ஜனநாய கருத்துக்களை மதிக்காது அதனை அதனை மக்கள் மீது திணிக்கவே முயல்கிறது.
ஆக, ஒரு சாதாரண அபிவிருத்தி திட்டத்தில் கூட இந்த நல்லாட்சி அரசாங்கமும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லாத தன்மையே உள்ளது. மறுபுறம் தமிழ் மக்கள் தமக்கான அபிவிருத்தியைக் கூட தீர்மானிக்க திராணியற்றவர்களாகவுள்ளனர்.
இவ்வாறான நிலையில் எவ்வாறு தீர்வு குறித்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதமுடியும்.ஆக, இந்த நாட்டில் தீர்வைப் பெற்று தருவோம் எனக் கூறியவர்களால் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் உள்ளது.
அபிவிருத்தியை மக்கள் விருப்பப்படி திட்டமிட முயடியாமல் உள்ளது. இந்த நிலையில் தீர்வு திட்டம் குறித்து எப்படி நம்பிக்கையாக செயற்பட முடியும் என தமிழ் மக்கள் மனங்களில் எழும் கேள்வி நியாயமானதே.
இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி ஐ.நா அழுத்தங்களில் இருந்து காப்பாற்றி இந்த ஆண்டுக்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இனி என்ன சொல்லப் போகிறது...?
ஏமாற்றமே மிஞ்சியதாய் உள்ள தமிழ் மக்களின் மனங்களில் எழும் கேள்விகளால் தடுமாறும் நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதே உண்மை.
சிவ.கிருஸ்ணா..-Tamilwin

இளையராஜாவின் அனுபவம் ...!

இளையராஜாவின் அனுபவம் ...!


முதலிடம் பெற்ற பெற்ற மட்டக்களப்பு மாவட்டம்

 முதலிடம் பெற்ற பெற்ற மட்டக்களப்பு மாவட்டம் 




உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள்.துவிச் சக்கர வண்டிகள்

உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள்.துவிச் சக்கர வண்டிகள். 




முஸ்லீம் பெண் பிரதமரை, நிராகரித்த ஜனாதிபதி!.


முஸ்லீம் பெண் பிரதமரை, நிராகரித்த ஜனாதிபதி!.



க பொ த உயர்தர பெறுபேறுகள் ஜனவரி 12க்கு முன் பரீட்சை ஆணையாளர் !

க பொ த உயர்தர பெறுபேறுகள் ஜனவரி 12க்கு முன் பரீட்சை ஆணையாளர்  


க பொ த உயர் தர பெறுபேறுகள் தாமதம் ஏன்?

க பொ த  உயர் தர பெறுபேறுகள் தாமதம் ஏன்?

புதன், 28 டிசம்பர், 2016

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை - சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை - சுரேஸ் பிரேமச்சந்திரன்


ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை. பௌத்தத்திற்கு முதலிடம் என தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டல் குழுவில் இருந்து இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உடனடியாக வெளியேற வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் மறுதலிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இன்று(28) யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளதுடன் இதன்போது இவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
21 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களாக அங்கம் வகிப்பதாகவம், இருவரும் சமஷ்டி அமைப்பு முறை வேண்டுமென்றோ, அல்லது வடகிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்றோ எந்தவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.
பௌத்த மதத்திற்கு தான் முதலிடம் என்பதனை எதிர்க்கவில்லை என மகிந்த அமரவீர தெளிவாக தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், வடகிழக்கு இணைக்கப்பட மாட்டாது என்று சொல்லி, இரா.சம்பந்தன் போன்ற தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது, கொடுத்து வைத்த விடயம் எனவே, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் காலத்தில் ஒன்றுமில்லாமல் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அரசியல் தீர்வுக்கு தயாராக இருப்பதாக சொல்கின்றார்கள்.
வழிகாட்டல் குழுவில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான தமிழ் மக்களின் தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தனும், சுமந்திரனும் இந்த வழிகாட்டல் குழுவில் இருந்தால், வழிகாட்டல் குழுவில் ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
இருவரும் சட்டம் தெரிந்தவர்கள், ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என சொல்லக்கூடியவர்கள். ஏன் வழிகாட்டல் குழுவில் எந்த விடயங்களையும் கேட்காவிடின், வழிகாட்டல் குழுவில் இருவரும் என்ன செய்கின்றீர்கள் என மீண்டும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றும், அந்த பேச்சுவார்த்தையில் பேசப்படும் விடயங்கள் அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் சொல்லப்பட்டது.
ஆனால், அரசாங்கத்துடன் பேசி என்னென்ன விடயங்கள் அரசியல் சாசனத்தில் வர வேண்டுமென்ற விடயங்கள் வெளிவந்திருக்க வேண்டும்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏமாற்ற கொழும்பு முயன்றால், அரசை முடக்கும் போராட்டம் என்றால், இதுவரையில் அரசாங்கம் ஏமாற்றவில்லை என தெரிவிக்கின்றார். சுமந்திரன் வடகிழக்கு இணைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கின்றார்.
ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைக்கப்படமாட்டாது என கூறுவது அனைத்தும் பொய்யானதா? இதுவரையில் நீங்கள் ஏமாற்றப்படவில்லையா? ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதம் கிடைக்கவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் சந்திக்க வேண்டுமாயின் ஏற்புடைய ஒரு நாளில் சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
உண்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்ன விடயங்களைச் சொல்ல வருகின்றார்.
ஆளும் கட்சியில் உள்ள பெரும்பான்மையான அமைச்சர்கள் ஒற்றையாட்சியினை மாற்ற முடியாது.
வடகிழக்கு இணைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது. என கூறுவதன் பின்னர், வழிகாட்டல் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக இருவர் இருக்க வேண்டியதன் தேவை என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறி, எமது குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் உடனடியாக அரசாங்கத்துடன் பேசிய பின்னர் வழிகாட்டல் குழுவில் இணைவதைப் பற்றி யோசிக்கலாம்.
வுழிகாட்டல் குழுவில் இருந்து அனைத்தும் மறுதலிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டல் குழுவில் இணைவதன் நோக்கம் என்ன? வழிகாட்டல் குழுவின் ஊடாக வடகிழக்கு இணைப்பினைச் சாதிக்க முடியுமாயின் ஏன் இதுவரை அந்த விடயம் பேசப்படவில்லை.
அத்துடன் 40 கூட்டங்கள் நடைபெற்றதாக கூறப்பட்ட போதிலும் ஏன் இந்த விடயங்கள் பேசப்படவில்லை. கடந்த மாதம் இடைக்கால அறிக்கை வெளியிடுவதாக கூறியிருந்த போதிலும், அந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
இடைக்கால அறிக்கையின்றியே, விவாதம் நடைபெறப் போகின்றதா? பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதனூடாக விவாதம் நடைபெறப் போகின்றதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
விவாதம் 6 உப குழுக்களின் அறிக்கை மீதானதா? அல்லது இடைக்கால அறிக்கை வெளியிடப்படப் போகின்றதா? வடகிழக்கு இணைப்பு, பௌத்தத்திற்கு முதலிடம், ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயங்களை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விவாதத்திற்கு போவதா? ஈ.பி.ஆர்.எல்.எப். பொறுத்தவரையில் அவ்வாறு போவதாக இருந்தால், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் வழிகாட்டல் குழுவில் இருந்து விலகி அரசுடன் திடமான பேச்சுவார்த்தையினை நடாத்த வேண்டும்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை கோரவிடின், மறுதலித்த அரசாங்கத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டதாகவே இருக்கும்.
இவ்வாறு மறுதலிக்கப்பட்ட நிலையில் வழிகாட்டல் குழுவில் இருப்பது அரசாங்கத்தினைப் பாதுகாப்பதற்கா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
மேலும் அரசைப் பாதுகாக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை. எனவே, வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறி அரசாங்கத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டு என அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.