வியாழன், 8 செப்டம்பர், 2016

பஸ் டிக்கட் !!

பஸ் டிக்கட்!! 


ஒரு பஸ் டிக்கட்டின் பின்புறம் எழுதப் பட்டிருந்த வாசகங்கள்.

கல்லூரி மாணவியின் பார்வையில் இளைஞர்கள்

அதிகமாகப் பேசினால் -அறுவை 
சிரித்துச் சிரித்துப் பேசினால்-ஜொள்ளு 
பேசாமல் இருந்தால் -ஜடம் 
அளவாகப் பேசினால் -ரோபோட்
 தமிழில் பேசனால் -ஞானப் பழம்
ஆங்கிலத்தில் பேசினால்-பீட்டர் 
படித்துக் கொண்டு இருந்தால் -கிறுக்கு 
படிக்காமல் இருந்தால்-மக்கு 
சண்டைபோட்டால் -ரௌடி 
சண்டை போடாவிட்டால்  பயந்தாங்க்கொள்ளி 
அக்கா என்று கூப்பிட்டால். -சின்ன பையன் 
தங்கச்சசி என்று கூப்பிட்டால்-பாச மலர் 
 
டிகட்டுக் குரியவர் எழுத்தாளர் ராஜேஷ் குமார். 

நான் சொல்லவில்லை !


நான் சொல்லவில்லை !
வரிக்கவிதைகள் 


எழுத்தாளர் ராஜேஷ் குமார்.


1." எல்லோருக்கும் உதவி செய்து ஏமாந்து விடாதே!
எல்லோரிடமும் உதவியைப் பெற்று ஏமாற்றி விடாதே !!


2."நமது வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் இல்லையென்றால்,இனிப்பான வாழ்க்கையை உணர முடியாது"

3."எதற்கும்,
 துணிவு இல்லாதவன்.
எதையும்,
எதிர்பார்க்கக் கூடாது."

4".காதலும் சிகரெட்டும் ஒண்ணுதான்,இரண்டுமே உதட்டோடு உறவாடி இருதயத்தைப் புண்ணாக்கிவிடும்."

5."உன்னால் முடியாது என்று என்னி நீ கைவிட்ட ஒரு விசயத்தை,இந்த உலகத்தின் ஏதாவது ஒ ரு நாட்டின் ஒரு மூலையில் இருக்கும்  யாராவது  ஒருவன் ஏற்கனவே செய்து  முடித்திருப்பான்."
இந்த உலகில் எதுவுமே சுலபமில்லை -ஆனால் எல்லாமே சாத்தியந்தான்.

6."பூமிக்கு அடியில் இடம் பிடிக்க பூமிக்கு மேல்
 நடக்கும் போராட்டம்தான்
-வாழ்க்கை"

7"காதல் என்பது பபிள்கம் மாதிரி!
ஆரம்பத்தில்  டேஸ்ட் அப்புறம் வேஸ்ட்
 கடைசியில் துப்பவேண்டியதுதான்."

8."நதிபோல
நகர்ந்து கொண்டே இரு!
ஒரு நாள் கடல்போல்
பெறுவாய் பலன்.
நகர்ந்தால் கடற்கரை,
நின்றால் சாக்கடை."

9."நம் நாட்டில் நல்ல அரசியல் வாதிகளும்,தலைவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அவர்கள்,கடற்கரையோரங்களிலும்
முற் சந்திகளிலும் சிலைகளாக நிற்கிறார்கள்."

10"பணத்தால் வாங்கமுடியாத,
தகுதி
உன்னிடம் வரும்போதுதான்
உண்மையிலேயே
நீ,
மதிப்பு மிக்க மனிதன்."


11,"அனுபவம் ஒரு மனிதனுக்கு
எப்படிக் கிடைக்கிறது என்பது
முக்கியமில்லை.
அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான்
என்பதே முக்கியம்."

12."பலர்
செய்வதைச் சொல்வதில்லை,
சிலர்
சொல்வதைச் செய்வதில்லை.
இந்த இரண்டும்,
இல்லாதவர்கள்
இந்த உலகிலேயே
யாருமில்லை."

13."சிறிய தவறுகள் மன்னிக்கப் படாத போது,
அவைகள்,
பெரிய தவறுகளாக  மாறி,
விஸ்வரூபம் எடுப்பதைத்
தவிர்க்க முடியாது.

14."நாம் தேடும் விஷயங்கள்
தேடும்போது கிடைப்பதில்லை.
அது கிடைக்கும்போது
நமது தேடல்
அதுவாக இருப்பது இல்லை"