"'பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" என்பதைப் போல
நாம் பிறந்த மட்டக்களப்பைப் பற்றிய பாடல்.பாடலை இயற்றிப் பாடியவர் திரு.ஞானப்பிரகாசம்,இசை ஆதவன் இசைக்குழுவினர்.
1975 ஆம் ஆண்டு காலப் பகுதியில்,இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய
அரங்கேற்றம் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்,அதில் சக்கை போடு
போட்ட பாடல்.மட்டக்களப்பின் தேசிய கீதம் என்ற மட்டத்தில்.பட்டி தொட்டியெல்லாம்
ஒலித்த பாடல்.1975 ஆம்,ஆண்டு காலப் பகுதியில் மட்டுநகர் முற்றவெளியில் நடந்த
பௌர்ணமிக் கலை நிகழ்ச்சிகளை நினைவூட்டும் பாடல்.முன்பு நான் இப்பாடலை யூ
டீயுப்பில் வெளியிடும் போது தரமானதாக கொடுக்க முடியவில்லை,ஆனால் தற்பொழுது,சகல தரத்துடன் இப்பாடலை மீண்டும் வெளியிடுவதில் பெருமையடைகிறேன்,நீங்களும் கேட்டுச் சொல்லுங்கள்
அன்புடன்,!.....
