வெள்ளி, 15 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்து-2010


Posted by Picasaதங்கத் தமிழினம் தலை நிமிர்ந்து வாழவும்
தரணியெல்லாம் தமிழ் தமிழ் என்றும் பேசவும்
பொங்கு கடல்போல் தரணியெங்கும் ஆளவும் 
எங்கும் நிறை இறைவன்அருள் பொழியட்டும்

வந்தவினை என்றும் தங்காமல் ஓடி  ஒழியட்டும்
வாழும் எம்மை வாழவைக்க கதிரவன் புறப்படட்டும்
சூழ நிற்கும் அசுரர்கள் தொல்லை  மறையட்டும்
சூழ்ந்து நின்று குழி பறிக்கும் கூட்டம் குறையட்டும்   

தமிழனைக் கொன்று தமிழ் வளப்போர்
தரணியைத் தனியே ஆளட்டும்
தமிழ் மக்களை ஒத்தி  வைத்த 
தமிழினத்தின் தமிழ்க் காவலர்கள் வாழட்டும்

தரணியில்  தமிழினமும் தமிழும் அனைவரும்  வாழ
ஓரணியில் உலகமும் ஒற்றுமையுடன் சேர
இரண்டாயிரத்துப் பத்தாவது இந்தப் பொங்கல்
இன்பமாகப் பொங்கி இவ்வுலகத்தை வாழ்த்தட்டும்