செவ்வாய், 13 டிசம்பர், 2016

பொது அறிவுத் தொடர் 02.................................

.
பொது அறிவு- 02.................................

பொது அறிவு-01 க்குச் செல்ல இங்கு அழுத்தவும்  01.ஆசிரியர் இளைப்பாற்றுச் சம்பளம் அறிமுகப் படுத்திய ஆண்டு?
1927

02.உதவி நன்கொடை பெறும் ஆசிரியர் கல்லூரிகளை அரசாங்கம் பொறுப்பேற்ற ஆண்டு?

1960 

03.காணி, சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்ச?
 ஜோன் அமரதுங்க

04. தற்போதைய காணி ஆணையாளர்
 ஆர்.பீ.ஆர். ராஜபக்ச


05.சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம்?
மார்ச் 15

06.ஆறு துணைப் பிரதமர்கள் கொண்ட நாடு -
நேபால் 


07.ஒலிம்பிக் 2016 போட்டியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றியவர் பெயர் என்ன?
Katerina Lehou


08. செவ்வாய் கிரகம் என்ன என்று அழைக்கப்படுகிறது?
சிவப்பு கிரகம்


09.தாய்லாந்து நாணயம் என்ன வென்று அழைக்கப் படுகிறது ?
தாய் பட்

10.முதல் முதல் சூரிய சக்தியால் முழுமையாக செயல்பட்ட பாராளுமன்றம்?
பாக்கிஸ்தான்


11.வெல்ல முடியாத ஆவி என்ற நூலை எழுதியவர்?
அப்துல் கலாம

12.குளோனிங்க் மூலம் மாட்டுக் கன்றை உருவாக்கிய நாடு?
இந்தியா

13.பாம்புகளுக்கு என்று ஒரு தீவை அமைத்துள்ள நாடு?
பிரேசில

14,ஐக்கிய நாடுகளின் இலங்கையின் வதிவிடப் பிரதி நிதி?
ரவிநாத் ஆரியசிங்க 


15.ஜனாதிபதியின் இணையதளத்தை ஊடறுத்தவருக்கு ஜனாதிபதியால் பரிசும் பாராட்டும் கிடைத்தது அவர் பெயர் என்ன? ஊர் எது?

16.கவி சிலுமின என்ற காவியத்தை இயற்றியவன்?
2ம் பராக்கிரம பாகு

17. கோடடை ராச்சியத்தின் முக்கிய வருமானம் எதன்மூலம் கிடைத்தது?
வியாபாரத் துறை மூலம் 

18. சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர்
 பிரட் அடம்ஸ்

19.மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சர்?
 ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன 


20கொன்கோர்ட்  என்ற என்ற சூப்பர் சோனிக் விமானத்தை தயாரித்த நாடுகள்?
UK-FRANCE

21.ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் 
அமைந்துள்ள  இடம் ?
ஹேக்  

22.அநுராதபுர ராஜதானியை ஆரம்பித்து வைத்த மன்னன்
பந்துகாபயன்  

23.அனுராதபுர ராஜதானியின் ஆடசிக் காலம் 
கிமு 377-கிபி 1017 

24.அனுராதபுர ராஜதானியின் ஆடசிக் காலத்தில்  இடம் பெற்ற முக்கிய நிகழ்வு?
 முதன் முதல் புத்த சமயம் அறிமுகப் படுத்தப் பட்டது 

25.அனுராதபுர ராஜதானியின் ஆடசிக் காலம் எந்த மன்னனுடன் முடிவுக்கு  வந்தது?
ஐந்தாம் மகிந்தன் 

26.லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் ?
சரத் ஜயமன்ன 

27.இலங்கை மத்திய வங்கி அறிக்கை 2015ன் படி தலை வீத வருமானம் எவ்வளவு?
3818 டொலர் 

28.இலங்கையில் வாழும் பெண்களின் ஆயுள் எதிர் பார்ப்பு எவ்வளவாக 2015 மனித  அபிவிருத்தி சுட்டெண் குறிப்பிடுகிறது?
78.2

29.மனித அபிவிருத்திச் சுட்டெண் அறிக்கை 2015ல் ஆசியாவில் முதலிடம் வகிக்கும் நாடு?
Singapore

30.ISO 3166 code இது ஒரு நாட்டுக்குரிய குறியீடு அது எந்த   நாடு?
Srilanka

31.இஸ்ரேல் நாட்டால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலத்தின் பெயர் என்ன?
அமோஸ் 6

32.மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்?
 ரஞ்சித் சியம்பளாபிட்டிய 

33.ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் எந்த நாட்டிலுள்ளது ?

டோக்கியோ ஜப்பான் 

34.சார்க் அமைப்பின் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
நியூ டெல்லி இந்தியா 


35.பாடசாலை அபிவிரித்திக் குழுவின் செயலாளராக பதவி வகிப்பவர் யார்?

பெற்றோர் 

36.கிழக்கு மாகாணத்தை மொத்தமாக எத்தனை தேசிய பாடசாலைகள் உண்டு 
30

37.கடந்த மாதம் C .W .W .கன்னங்கார அவர்களின் எத்தனையாவது நினைவு தினம் கொண்டாடப்பட்டது ?
132.

38.1000 பாடசாலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை?
104

39.கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு எவ்வளவு?
3000.00

40.தெற்கு ஆசியாவின் ஆசிரியர் பயிற்சிப் பாடசாலை இலங்கையில் எங்கு அமைத்துள்ளது?
மீ பே 

41.இலங்கையில் தேசிய பாடசாலைகள் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
1987

42.முதல் மத்திய கல்லூரியாகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை?
காலி ரிச்மண் கல்லூரி 

43.இலங்கையில் அதிக பாடசாலைகளைக் கொண்ட மாவட்டம்?
      கொழும்பு 

44.இலங்கையில் அதிக தேசிய  பாடசாலைகளைக் கொண்ட மாவட்டம்?
         குருணாகல் மாவட்டம் 

45.. NSBS எனப்படுவது யாது?
       Nearest school is the Best school Programme


46. NSBS திட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு?



47. CFS என்பதால் கருதப்படுவது?
        child-friendly school 

48. PSI என்பது யாது?
        Programme for School Improvement 

49. SBM என்பது எது?
        School Based Management

50. SBTD என்பதன் விரிவு?
School Based Teacher Development

51. SDC என்பது எது?
School Development Committee

52. ABOE ஆல் குறிப்பிடப்படுவது?
     Activity-based oral English

53. www.moe.gov.lk இவ் இணையத்தள முகவரி எதனுடையது?
Ministry of Education

54. NEC என்பது எதனைக் குறிக்கும்?
National Education Commission 

55. NSBS திட்டத்தின் அடிப்படையில் ஒரு கல்வி வலயத்தில் எத்தனை Sports school 
உள்ளடக்கப் படும்?

56. மாணவர் பாராளுமன்றம் எவ்வாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
2015

57. இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்தை பிரபல்யப் படுத்துவதற்கு அரசினால் தாபிக்கப் பட்ட முகவர் நிறுவனம் எது?
ICTA

58. கிழக்கு மாகாணக் கல்விச் செயலகம் அமைந்துள்ள இடம்?
Trincomalee

59. NIE அமைந்துள்ள இடம் எது?
Maharagama

60கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் மொத்தம் 
45

61.கிழக்கு மாகாணத்திலுள்ள கிராம சேவகர் பிரிவு  மொத்தம்.
1085

62.கிழக்கு மாகாணத்தின் பரப்பளவு 
9996 கிமீ ²

63.கிழக்கு மாகாணசபையின் மொத்த உறுப்பினர்கள் 
37

64சர்வதேச மாணவர்கள் தினம்?
நவம்பர் 17

65.சர்வதேச ஆசிரியர்கள் தினம்?
அக்டோபர் மாதம் 6ம் தேதி- 

66.தொலைக்காட்ச்சியைக் கண்டுபிடித்தவர்?

‘ஜோன் லூகிஃபெர்டு”

67.ஐக்கியநாடுகள் சபையின் கல்வி,  கலை கலாசாரத்திற்கான பிரிவு ?
யுனெஸ்கோ 

68.இலங்கையில் இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியவர்?
 ஜே ஆர் ஜயவர்த்தன 

69.பரீட்சை முறையை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர்கள்?
சீனா 

70.அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும்?
 செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது 

71.இலங்கையில் கடைசியாக உருவாக்கப் பட்ட மாகாணம் ?
சப்புரகமுவ மாகாணம் 1889

72.மத்திய அரசின் பொதுச் சேவை அணைக்குழுவைப்போல மாகாணசபைக்கு?
மாகாணசபை பொதுப் பணிகள் ஆணைக்குழு

73."மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் அரச கட்டளை 1801" இற்கிணங்க நிறுவப்பட்ட அரச சட்ட உயர் பீடம் எது?
உயர் நீதி மன்றம் 

74.இலங்கை பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக எத்தனையாம் ஆண்டிலிருந்து எத்தனையாம் ஆண்டுவரை இருந்தது?
1815–1948

75.உலகின் இரண்டாவது மிக பெரும் விவசாய ஏற்றுமதியை மேற்கொள்ளும் நாடு? நெதர்லாந்து.

76.கம்போடியாவின் பிரதமர்?
 ஹூன் சென் 

77.அவுஸ்திரேலியாவில் 113 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்ணொருவர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

 சூசன் கியிஃபெல் (Susan Kiefel) அடுத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


78.இருண்ட கிரகம் என அழைக்கப்படும் கிரகம்?
planet x nibiru 

79.உலகிலேயே மிகப்பெரிய புதைகுழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது அதன் பெயர்?

சீனாவின் கின்லிங் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 

 80.தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்?

 கருணாசேன ஹெட்டியாராச்சி 

81.2016 டிசம்பர் முதலாந்திகதி யாழ்பாணத்தில்  வீசிய புயலின் பெயர்?

நாணா  
.
  82.  எய்ட்ஸ் என்பது என்ன?
எச்.ஐ.வி (Human Immuno Deficiency Virus) என்று அழைக்கப்படும் எய்ட்ஸ் நோயானது, ஒரு மனிதனின் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை அழித்து, மிக வேகமாக பரவும் ஒருவகை கொடிய வைரஸ் தொற்று நோயாகும்.
   83.எய்ட்ஸ் நோய் எப்படி பரவுகிறது?
  • எச்.ஐ.வி பரிசோதனை செய்யாத ஒருவருடைய ரத்தத்தை மற்றவர்களுக்கு செலுத்துவதன் மூலம் பரவுகிறது.
  • எச்.ஐ.வி கிருமி தொற்றுகள் பாதிக்கப்பட்ட ஒருவருடன் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதின் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுகிறது.
  • எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள், பயன்படுத்திய சுத்தகரிக்கப்படாத ஊசி, கத்தி, பிளேடு மற்றும் பிற ரத்தத்தோடு தொடர்பு உள்ள உபகரணகளை பயன்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுகிறது.
  • கர்ப்பிணிப் பெண்கள் எச்.ஐ.வி தொற்றுகள் மூலம் பாதிக்கப்பட்டிருந்தால், அதன் மூலம் அவளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பரவுகிறது.
  84.எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள்
  • தொடர்ச்சியான சளி, இரும்பல், காய்ச்சல் போன்றவை ஏற்படும்.
  • தொடர்ந்து வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் இருக்கும்.
  • சருமத்தின் தோலின் மீது தடிப்புகள் ஏற்படும்.
  • அனைத்து நேரத்திலும் மிகவும் அசதியாகவும், களைப்பாகவும் இருக்கும்.
  • திடீரென உடல் எடை குறைந்து கொண்டே போகும்.
85.எய்ட்ஸ் நோயை உறுதி செய்யும் சோதனை என்ன?
எய்ட்ஸ் நோயிக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரிடன் சென்று ரத்த பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
எனவே ஒருவரின் ரத்த பரிசோதனையின் மூலம் அவருக்கு எய்ட்ஸ் உள்ளதா? இல்லையா என்பதை உறுதி செய்துக் கொள்ள முடியும்.
 86.எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மருந்துகள்
HIV தொற்று ஏற்பட்ட பின் அதனை முற்றாக அழிக்க இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.இதனால் எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாத நோயாக கூறப்படுகின்றது.
இருப்பினும் HIV கிருமிகள் உடலினுள் பரவும் வேகத்தை குறைக்கும் ஆண்டி ரெட்ரோ வைரஸ் (Antireteoviral Drugs) என்ற மருந்துகள் பல நிறுவனங்களி தற்போது கிடைக்கின்றது.
எனவே எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்களுக்கான சிகிச்சையுடன் இந்த மருந்துகளையும் முறையாகப் பயன்படுத்தினால் HIV பாதிப்பு உள்ளவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழலாம்.
87.அல்பேர்ட்டா நகரம் எந்த நாட்டிலுள்ளது?
கனடா 

88.தைவான் அதிபர் பெயர் என்ன?
 சாய் இங்-வென்னு

89. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்? 
இந்திரஜித் குமாரசுவாமி 

90.1818ம் ஆண்டு மேல் நாட்டு கிளர்ச்சியை வழிநடத்தியவர் யார்?

v கெப்பட்டிபொல அதிகாரம்
.
91.இலங்கை முழுவதும் பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக மாறிய ஆண்டு?
1815ம் ஆண்டு மேல்நாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் 

92.மேல் நாட்டு தலைவர்களை அரச துரோகிகள் எனக் கருதி எந்த  ஆளுநர்  வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் 
பிரவுண்ரிக் நோர்த்


93.தேசிய கல்விக் கொள்கைகளை உருவாக்க நிறுவப்பட்ட குழு?
தேசிய கல்வி ஆணைக்குழு 

94.உலகில் வறுமை ஒழிப்புக்கு உதவும் U N நிறுவனம் எது?

uniceef

95.அர்ஜென்டினா தலைநகர்?
 பொயனஸ் அரைஸ்க்கு 

96.2017ல் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரதமர் பதவியை  ராஜினாமா செய்த பிரான்சின் பிரதமர் பெயர்?.

மானுவேல் வால்ஸ்,

97.பார்கின்சன் (Parkinson) நோய்  எனப்படுவது?

 மனிதனின் பிரதான நரம்புத் தொகுதியில் ஏற்படக்கூடிய நோய் ஆகும்.


98.வைத்தியர் சந்தன ஜயசுமன அவர்களால் எழுதப்பட்ட நூலின் பெயர்? 
”வக்குகடு சடன” (சிறுநீரக போராட்டம்) எனும் நூல்

99.முதன் முதல்வின்வெளிக்குச் சென்று வந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர் பெயர் என்ன? 
ஜான் கிலன் 

100.அங்கோர் வாட் கோயில் எந்த நாட்டிலுள்ளது?
கம்போடியா 

101.அங்கோர் வாட் தெய்வம் கோயிலை கட்டிய மன்னன் பெயர் என்ன?
சூரியவர்மன் 

102.பொலன்னறுவையை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி செய்த மூன்று மன்னர்களின் பெயர்களைத்  தருக? 
A .1ம்  விஜய பாகு  B. 1ம் பராக்கிரம பாகு C.நிசங்க மா மல்லன் 

103.இலங்கையில் முதன் முதலாக பாரிய குளங்களை நிருமானித்த மன்னன்?
வசபன் 

104.மின்னேரியாத் தெய்வம் என அழைக்கப் பட்ட மன்னன்?
மகாசேனன் 

105.இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்ச்சி ஏற்பட்ட மூன்று துறைகள்?
A.இரும்பு  B.நிலக்கரி C.புடவை 

.
106.1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கு தலைம தாங்கியதன் காரணமாக அன்றைய பிரித்தானிய ஆள்பதி ரொபர்ட் பிரவுண்ரிக் 1818 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவர்கள் அனைவரையும் தேசத்துரோகிகள் என அறிவித்தது இவர்களின் பெயர் என்ன?



01கெப்பட்டிபொல திஸாவ, 
02கொடகெதர ரட்டே அதிகாரம், 
03.கெட்டகால மொஹொட்டாலே,
 04.கதரகத மஹா பெத்தமே ரட்டே ரால,
 05.கதரகம குடா பெத்தமே ரட்டே ரால, 
06.பலங்கொல்ல மொஹொட்டாலே,
07. வத்தேகாலே மொஹொட்டாலே
,08. களுகமுவே மொஹாட்டோலே, உடுமாதுர மொஹொட்டாலே, 
09.கொஹூகும்புர வளவ் ரட்டே ரால,
10. கொஹூகும்புர வளவ்வே மொஹொட்டாலே,
 11.புட்டேவே ரட்டே ரால,
107.புத்தர் பிறந்த இடம் இன்று என்ன பெயரால் அழைக்கப் படுகிறது?
லும்பினி

108.மகாபோதி சங்கத்தை நிறுவியவர் யார்?
அநகாரிக தர்மபால  

109.வாக்குச் சீட்டில் சின்னங்கள் இல்லாமல் வேட்பாளர்களின் பெயருக்கு வாக்களிக்கும் வாக்களிக்கும் முறை எந்த நாட்டில் உள்ளது?
அமெரிக்க 

110.பெளத்த இளைஞர் சங்கத்தை நிறுவியவர் யார்?
D .B ஜயதிலக்க 
 

111.எதற்கும் தயாராக இருங்கள்  எந்த இயக்கத்தின் தாரக மந்திரம்?

சாரணர். 

112.பாணந்துறை விவாதம் நடந்த ஆண்டு?
1873

113.இந்துக் கல்விச் சபை ஆரம்பிக்கப் பட்ட ஆண்டு?
1853.

114.உலகில் முதன் முதல் கண் வங்கியை ஆரம்பித்த நாடு?
இலங்கை

115.முதலாம் உலகப் போரிலும் ,இரண்டாம் உலகப் போரிலும் படு தோல்வியை தழுவிக் கொண்ட நாடு?
ஜெர்மன்  

116.483தீவுகளைக் கொண்டதும் கடல்   மட்டத்துக்குக் கீழுள்ள ஒரு நாடு எது?
டென்மார்க் 

117.உலகில் ஆயிரத்திற்கு மேற்பட்ட உப நதிகள் இணையும் ஒரு நதி?
அமேசன் நதி 

118.எந்த நாட்டில் விவாகரைத்துப் பெற சட்ட அனுமதி தேவையில்லை?
அயர்லாந்து 

119.ஒலிம்பிக் போட்டியில் பரிசாக வழங்கும் தங்கப் பதக்கத்தில் எத்தனை கிராம் தங்கமுள்ளது ?
210கிராம் 
120.போலியோ சொட்டு மருந்தைக் கண்டு பிடித்தவர்?

அல்பேட் சேப்பின் 

121.இராணுவம் இல்லாத நாடு எது?
சுவிற்சலாந்து 

122.குடி நீரில்  கிருமிகளைக் கொல்ல பாவிக்கப் படும் வேதியல் பொருள் என்ன?
குளோரின்  


123.சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம்?
த கிரேட் டிக்டேட்டர் 

124.ஒவ்வொரு ஆண்டிற்கும் விலங்கின் பெயரைச் சூட்டும் நாடு?
சீனா 

125.மேலிருந்து கீழாகத் தனது தாய்மொழியை எழுதும் இரு நாடுகள்?
சீன,ஜப்பான் 

126.அதிக எரி மலைகளைக் கொண்ட நாடு?
இந்தோனேசியா 

127.ஒரு லீற்றர் தண்ணியின் சரியான நிறை எவ்வளவு?
1கிலோ 

128.இரு கண்டங்களில் உள்ள நாடு எது?
ரஷியா 

129.அணுகுண்டு வீசியும் அழியாத உயிரினம்?
கரப்பான் 

130.சிலுவைப் போர் என்றால் என்ன?
கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்தாந்து சமயத்திற்கும் நடந்த போர்,

131.ஐந்துநாட்கள் நடை பெற்ற கிரிக்கட் விளையாட்டை ஒருநாள் போட்டியாக மாற்றியவர்?
கேரி பெக்கர் 

132.பெற்றோல் உற்பத்தியில் இராண்டாவது இடத்தில் உள்ள நாடு?
ஈராக் 

133.நேபாள நாட்டுப் பாராளுமன்றத்தின் பெயர்?
நெஷனல் பஞ்சாயத்து.

134.எக்ஸ் கதிர்களால் சுகப்படுத்தும் நோய் ?
புற்று நோய் 

135.பௌத்த மறு மலர்ச்சிற்கு  தொண்டாற்றிய தலைவர்கள்?
ஸ்டீல் ஒல்கொட்.அநகாரிக தர்மபால  வலான சித்தார்த்த தேரர் 

136.இந்துமத மறு மலர்ச்சிற்கு  தொண்டாற்றிய தலைவர்கள்?
ஆறுமுக நாவலர்.சர் .பொன். இராமநாதன் 

137.கீழத்தேசத்தில் போர்த்துக் கேயற் படை படுதோல்வியடைந்த யுத்தம் நடை பெற்ற இடம்?
முல்லேரியா 

138.புராதான இலங்கையில் இரும்ப்புத்தொழில் செய்தவர்களை குறிக்கப் பயன்படுத்திய சொல் ?
கபற 

139.யாழ்ப்பாண இராசதானியின் தலை நகராக விளங்கியது?
நல்லூர் 

140.மாகாண ரீதியான தேர்தல் தொகுதி முறையை அறிமுகப்படுத்திய அரசியல் யாப்பு?
மணிங்


























ஆவன்னாவில் தொடங்கும் பழமொழிகள்


ஆவன்னாவில் தொடங்கும் பழமொழிகள் 



  • ஆசை வெட்கமறியாது.
  • ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கு.
  • ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
  • ஆபத்துக்குப் பாவமில்லை.
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன். (மருவி ஆயிரம் பேரைக் கொண்டவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றது)
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆழம் அறியாமல் காலை விடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே, கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே.

விஸ்வரூப தரிசனம்...



-- விஸ்வரூப தரிசனம்...
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. ஒரு நாள் அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன். என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
தரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது என்னை வியக்கவைத்தது. நாங்கள் இங்கே நின்றிருக்க, எங்களுக்கு எதிர் வரிசையில் அவர்கள் நின்றிருந்தனர்.
விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அதாவது இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. (‘திருமஞ்சனம்’ என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.)
அப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அர்ச்சகரிடம், “ஸ்வாமி… நாங்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் அது யதார்த்தமானது. திரை விலக்கப்பட்டதும் எங்களால் பகவானையும் பிராட்டியாரையும் பார்க்க முடியும். ஆனால் பார்வையற்ற இவர்களும் வந்திருக்கிறார்களே…? அதுவும் இந்த காலை வேளையில்? இவர்களால் எதுவும் பார்க்க முடியாதே… அப்படியிருந்தும் வந்திருக்கிறார்களே… இதன் தாத்பரியம் என்னவோ?” என்று ஏதோ தனக்கு தோன்றியதை கேட்டுக்கொண்டிருந்தார்.
அர்ச்சகர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட, அவர்களுக்கு சற்று பக்கத்தில் சென்று நின்றுகொண்டேன்.
“நீங்கள் நினைப்பது தவறு. நம்மை விட பகவானை அவர்கள் அதிகம் உணரமுடியும். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்பதை ‘தரிசனம்’ என்கிறோம். அதாவது நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம். ஆனால் இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலை முதன்முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. இப்போது இந்த விஸ்வரூபத்தில் பகவானை இவர்கள் பார்க்கமுடியாவிட்டாலும் பகவான் இவர்களை பார்ப்பார் அல்லவா? இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இறைவன் நம்மை பார்க்கட்டும் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள்!” என்றார்.
எப்பேர்ப்பட்ட தத்துவம்… எப்பேர்ப்பட்ட உண்மை….! காலஙகாலமாக கோவிலுக்கு செல்பவர்களுக்கு கூட விஸ்வரூப தரிசனத்தின் பொருள் தெரியுமா என்று தெரியாது. ஆனால் பார்வையற்றவர்கள் ஒரு பேருண்மையை உணர்ந்து அவனை சேவிக்க வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி உருகினேன்.
எனவே இறைவனின் அருட்பார்வை தங்கள் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள், உங்கள் பகுதியில் உள்ள தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வாருங்கள். விரைவில் அவனது அருட்பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது மட்டும் உறுதி.


சருமத்தைக் காக்கும் குப்பைமேனி







கற்ப மூலிகை சருமத்தைக் காக்கும் குப்பைமேனி..
மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.
மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று.
குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.
குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை.
மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு.
Tamil - Kuppaimeni
English - Indian acalypha
Telugu - Kuppi-Chettu
Malayalam - Kuppa-meni
Sanskrit - Arittamajarie
Botanical name - Acalypha indica
இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.
தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்
தேரையர் குணபாடம்
பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.
வயிற்றுப் புழுக்கள் நீங்க
குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
சொறி, சிரங்கு நீங்க
குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.
இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்
யிலயட்டியிலை மேனியை யா
அகத்தியர் குணவாகடம்
பொருள் - குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.
குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.
குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.
மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.
குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.
குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.