திங்கள், 3 ஆகஸ்ட், 2009

மனிதப் பிறவி எனக்கு வேண்டாம்

மனிதப் பிறவி எனக்கு வேண்டாம்










மனிதனுக்கு மனிதன்
குண்டு வைப்பானென்று
மனிதனை மனிதன்
சோதித்து
இங்கே
மனிதத்தை
தேடுகின்றான்


சிட்டுக் குருவிகளுக்கு
"செக்கிங் பொயின்ட்"
இல்லவே இல்லை
அவை எப்போதும்
சுதந்திரமாகவே
சிறகு விரிக்கின்றன


ஆடுகளுக்கு
""ஐடேன்டிகார்ட்" கிடையாது
அவை
அறுபடு மட்டும்
இரையும் இலவசம்


கழுதைகளுக்கு
"ரவுண்டப்" கிடையாது
அவைகளில்
முக மூடிகளுமில்லை


எந்த நாயும்
எந்த நாயையும்
சோதிப்பதில்லை
இவைகளினால்
ஆண்டவா
அடுத்தபிறவியிருந்தால்
எனக்கிந்த
மனிதப் பிறவி

வேண்டவே வேண்டாம்.
நீதி வாக்கியர் இரா. தவராஜா மட்டக்களப்பில் பிரபல எழுத்தாளர்கள் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைதுள்ளவர். இவர் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து மட்டகளப்பின் பெருமைகளை பல வேதைனைகளின் மத்தியில் சாதனைகளாக "அரங்கம்" கலை இலக்கிய இதழின் மூலம் நிகழ்த்திக் காட்டியவர். எழுபதுகளின் பின்னர் இற்றை வரை தன்னால் முடிந்தவரை தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அளப்பெரிய தொண்டாற்றுகிறவர்.இவரின் இந்தக் கவிதையை இன்று பதிவிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். தொடர்ந்து இரா. தவராஜா அவர்களின் ஆக்கங்கள் எமது பதிவில் வெளியாகும். இவர் அரங்கன், எழுச்சிக் கவிஞர், அரங்கநாயகி, நீதி வாக்கியர் என்ற பெயர்களில் பல படைப்புகளை வெளியிட்டுருக்கிறார். அன்னாரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம்.