வெள்ளி, 26 ஜூன், 2009

இந்தியா எனக்குத் துணையிருந்தால் !....















யார் யாரோ ஆயுதம் வைத்திருக்கிறார்கள் -நானும் ஓர் ஆயுதம் வைத்திருந்தால் என்ன குறை ? இலங்கையில்தான் இதை பாவித்துப் பார்க்கலாம் --போடுங்க இப்பவே ஒப்பந்தம் ஐ .நாவில் பார்க்கலாம் மீதிய

எழுத்தாளர் சுஜாதாவின் 18 கேள்விகள்







முப்பத்து இரண்டு கேள்விகளால் நொந்து நூலாகி,குற்றுயிரும் குறையுயிரும்மாக இருக்கும் உங்களுக்கு,எழுத்தாளர் சுஜாதாவின் பயனுள்ள பதினாறு கேள்விகள்,நீங்களே கேள்விகளை எழுதி அதற்கு பதிலை எழுத சொல்லி உள்ளார், நீங்க எழுதும் பதில் மூலமா நம்மை யார் என்று அடையாளம் காணலாம். எழுத்தாளர் சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்" என்ற புத்தகத்தில் இருந்து
இன்றைய தினங்களில் எல்லாமே விழுக்காடு அல்லது எண்ணிக்கையில்தான். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து ஐ .ஐ. டி அனுமதித் தேர்வுவரை. வாழ்வில் உள்ள இலக்கங்களும் விழுக்காடுகளும் என்ன என்பதைத் கொள்ள கீழ்க்காணும் கேழ்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள். (பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது )
1. 01.சம்பளத்தில் தர்ம காரியங்களுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?
2. 02.எத்தனை கடிதங்களுக்கு பதில் எழுதுகிறீர்கள்?
3. 03.எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து சுத்தப் படுத்துகிறீர்கள்?
4. 04.எத்தனை மணி நேரம் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள் ?
5. 05.எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்?
6. 06எத்தனை முறை வாக்களித்துள்ளீர்கள்?
7. 07.அரட்டை அடிக்காமல் எத்தனை மணி நேரம் உண்மையாக வேலை செய்கிறீர்கள்?
8. 08.உங்களுக்கு எத்தனை ஆப்த நண்பர்கள்?
9. 09தினம் எத்தனை மணி நேரம் வேண்டாத வேலைகளைச் செயகேறீர்கள்?
10. 10.எத்தனை மணி நேரம் புத்தகம் படிக்கிறீர்கள்?
11. 11.எத்தனை மணி நேரம் தொலைக் காட்சி பார்க்கிறீர்கள்? என்ன பார்க்கிறீர்கள்?
12. 12.போனவருடம் எத்தனை பேருக்கு புத்தாண்டு,பொங்கல் வாழ்த்து அனுப்புநீர்கள்?
13. 13.பாடல்கள் மட்டும் எத்தனை மணி நேரம் கேட்கிறீர்கள்?
14. 14.தினம் எத்தனை மணி நேரம் செய்திப் பத்திரிக்கை படிக்கிறீர்கள்?
15. 15.எத்தனை மணி நேரம் சும்மா இருக்கிறீர்கள்?
16. 16.தினம் எத்தனை மணி நேரம் பேருந்து,ஈருருளிகளில் பயணிக்கிறீர்கள்?
17. 17. பாடசாலையில் உங்களுக்கு பிடித்த பாடம் எது?
18. 18. இப்போது, தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகை யார்?
இந்த பதினெட்டுக் கேள்விகளுக்கும் பதிலை எழுதிவிட்டு ஒருவாரம் கழித்து அவற்றைப்பாருங்கள், உங்களை நீங்களே அறிந்து கொள்வீர்கள்.கீழ்க்கண்டவற்றில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.
1. 01.சோம்பேறி
2. 02.சாதாரண மனிதன்
3. 03.நல்ல குடிமகன்
4. 04.அறிவு ஜீவி

( நன்றி : ஆனந்த விகடன் )

இலவசம் வேண்டாம்














ஒரு கோடி ரூபாயில் ஆலயம் வேண்டாம் --பெரிய
ஊரைத் திரட்டி ஒளிவிளக்கு இடவேண்டாம்
இருளைப் பிளந்து ஒளியைக்கொடுக்கும் சூரியனாய் –கல்வி அறிவைக் கொடுங்கள் அதுவொன்றே போதும்