வியாழன், 2 பிப்ரவரி, 2017

மூடிமறைக்கப்பட்ட தமிழனின் அடையாளம் - இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டு

200 முதல் 300 ஓவியங்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கற்பாறை 75 மீற்றர் நீளமும் 20 மீற்றர் உயரமும் கொண்டது.
கற்பாறைக்கு கீழே கிறிஸ்துவுக்கு முன் 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டுக்குரிய பண்டைய சிங்கள மொழியிலான பிரம்மி எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டும் கிடைத்துள்ளது.
சூமன கற்பாறை என்று அழைக்கப்படும் இது தேவநம்பிய தீசன் அரசாண்ட காலத்தில் உருகுணைக்கு தப்பிச் சென்ற மகாநாகன் என்ற அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என இரண்டு கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
இந்த பகுதி அந்த காலத்தில் பௌத்த பிக்குகளுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கல் ஓவியங்களில் மனித உருவம், விலங்குகளின் உருவம் உள்ளிட்டவை காணப்படுகின்றன.
இதற்கு முன்னர் ஆரம்ப காலத்திற்குரிய குகை ஓவியங்கள் தந்திரிமலை, பில்லேவ, ரஜகல, கோனாகொல்ல ஆகிய பிரதேசங்களில் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் பண்டைய காலத்தில் எழுதப்பட்ட இந்த பிராமி எழுத்துக்கள் வாசிக்கப்பட்டால் அது கட்டாயம் தமிழாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மூத்தசிவன், தேவநம்பிய தீசன், மகாநாகன் ஆகியோர் தமிழ் மன்னர்களே. பின்னாளில் தேவநம்பிய தீசன் பௌத்தனாக மதம் மாறியதால்,சிங்கள வரலாற்று ஏடுகளும் இந்த மன்னர்களை சிங்களவர்களாக சித்தரித்து வரலாற்றை தலைகீழாக மாற்றி விட்டன.
இவ்வாறான நிலையில், தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்படுவதால், தமிழர்களுக்குரிய வரலாற்று சான்றுகள் தமிழர் அல்லாதவர்களிடம் சிக்கி மறைக்கப்படுகின்றன.
இலங்கை மாத்திரம் இது விதிவிலக்கல்ல, தமிழகம் உட்பட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் 90 வீதமானவை தமிழ் கல்வெட்டுகள் எனக் கூறப்படுகிறது.
அவற்றில் 60 வீதமானவை இன்னும் வாசிக்கப்படாமல் இருப்பது தமிழர்களின் வரலாற்று சோகம்.
தமிழகத்தில் மதுரைக்கு அருகில் கீழடி என்ற இடத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய தமிழரின் வரலாற்று பொக்கிஷமான பெரும் நகரம் ஆராய்ச்சியின் இடைநடுவே கைவிடப்பட்டு மூடப்பட்டு விட்டது.
இதுவும் பழந்தமிழர்களின் இவ்வாறான அடையாளங்கள் தொடர்ந்தும் சிதைக்கப்பட்டு கொண்டிருப்பது ஒரு இனத்தின் சாபம் என்பதை தவிர வேறில்லை.


இலங்கை அரசியலில் மற்றுமொரு இடதுசாரி சக்தி உருவாகும் - திடுக்கிடும் அரசியல் பின்னணி


ஜே.வி.பி என்று சுருக்கமான அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணிக்கு மறைவாக இருந்து உயிரூட்டிய அதன் இரகசியமான தலைவராக இயங்கிய பிரேமகுமார் குணரட்னத்திற்கு இலங்கையின் குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இடதுசாரி அரசியல் களத்தில் குமார் குணரட்னம் அண்மை காலத்தில் பரவலாக பேசப்பட்ட தலைவர்.குமார் குணரட்னம் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் அவருக்கு குடியுரிமை வழங்குவது குறித்து ஆராயப்படும் என அமைச்சர் எஸ்.பி. நாவின்ன இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அவரை மீண்டும் நாடு கடத்தப் போவதில்லை எனவும் கூயிருந்தார். இதனடிப்படையில் குமார் குணரட்னத்திற்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நேயேல் முதலிகே என்ற பெயரில் அறியப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் திரைக்கு பின்னால் இருந்து செயற்பட்டவர் என்ற வகையில் குமார் ஒரு காலத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தார்.
அரசியல் சூழ்நிலைகள் காரணமாக 2006 ஆம் ஆண்டு நேயேல் முதலிகே என்ற பெயரில் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற அவர் 2011ம் ஆண்டு இலங்கை திரும்பிய பின்னர் செய்திகளை உருவாக்கும் நபராக மாறினார்.
குமார் குணரட்னம் வேறு யாருமல்ல 1988ம் 89ம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது சமவுடமைவாத கிளர்ச்சியில் முக்கிய செயற்பட்டாளராக இருந்தவர் என்பது நாட்டில் பலருக்கு தெரியாத உண்மை.
2011ம் ஆண்டு மீண்டும் இலங்கை திரும்பிய குணரட்னம் அன்றைய அரசாங்கத்தினால் கடத்திச் செல்லப்பட்ட அவுஸ்திரேலியாவின் கடும் அழுத்தங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
இதனையடுத்து 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் நாடு திரும்பிய குமார் குணரட்னம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டில் அவர் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு, அண்மையில் விடுதலையானார்.
வடக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெற்றோருக்கு பிரேமகுமார் குணரட்னம் கேகாலையில் 1965ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி பிறந்தார்.
இவரது தாய் ஒரு ஆசிரியர்.1971ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி முதல் 1980 ஆண்டு வரை டிசம்பர் வரை கேகாலை புனித மேரி கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்றார்.
இதனையடுத்து 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1985ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பின்னவல மகாவித்தியாலயத்தில் கணிதப் பிரிவில் உயர் தரம் பயின்றார்.
இதனையடுத்து 1985ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் நுழைந்தார்.
குமார் குணரட்னம் பேராதனை பல்கலைக்கழத்தின் பொறியியல் பீடத்திற்கு செல்லும் போது அவரது மூத்த சகோதரர் ரஞ்சிதம் குணரட்னம் பீடத்தில் சிரேஷ்ட மாணவராக இருந்தார்.
ரஞ்சிதம் குணரட்னம் பின்னவல மகாவித்தியாலத்தில் உயர்தர வகுப்பு மாணவராக இருந்த போது அதாவது 1981ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.
ரஞ்சிதம் குணரட்னம் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளராக இருந்த போதிலும் அவரது சகோதரர் குமார் குணரட்னம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை.
தனது சகோதரர் நன்றாக கல்வி கற்று ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என ரஞ்சிதம் குணரட்னம் எதிர்பார்த்தார்.
1988-89ம் கிளர்ச்சியின் போது அரச படையினரால் ரஞ்சிதம் குணரட்னம் படுகொலை செய்யப்பட்டா்.
இந்த நிலையில், பிரேம குமார் குணரட்னம், சிசிர குமார தேவப்பிரிய என்ற அன்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரபல மாணவ செயற்பாட்டாளர் ஊடாக நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் சங்கங்களில் இணைந்து செயற்பட்ட குமார் குணரட்னம் மாணவர்கள் மத்தியில் பிரலமிக்க பாத்திரமாக மாறினார்.
மாணவ சங்க அரசியலில் ஈடுபட்டிருந்த போதே குமார் குணரட்னத்தின் மனைவியான அன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட மாணவியாக இருந்த சம்பா சோமரத்னவுடன் தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், 1987ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி தமிழ், சிங்கள புது வருட நாளின் நடு இரவில் கண்டி பல்லேகலையில் உள்ள இராணுவ முகாம் மீதான தாக்குதல் காரணமாக குமார் குணரட்னத்தின் பெயர் களத்திற்கு வந்தது.
1987ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கலகெதர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1988ம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைகளில் பல்லேகலை இராணுவ முகாமில் ஆயுதங்களை கொள்ளையிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறான பின்னணியில் குமார் குணரட்னம் சிறையில் இருந்து தப்பிச் சென்றார்.1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருகோணமலை மங்கி பிரிஜ் இராணுவ முகாமில் இருந்த இராணுவ வீரரிடம் இருந்து செய்தி ஒன்று கிடைத்தது.
குமார் குணரட்னத்திற்கு சில ஆயுதங்களை வழங்குவதாக அந்த இராணுவ வீரர் உறுதியளித்திருந்தார். ஆயுதங்களை பெற இராணுவ முகாமுக்கு சென்ற அவரை படையினர் கைது செய்தனர்.
அப்போது அங்கு ஒரு முக்கிய நபரை அவர் சந்தித்தார். அவர் வேறு யாருமல்ல முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா.
இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் குமார் குணரட்னத்திற்கு எந்த தொந்தரவும் கொடுக்கப்படவில்லை. இராணுவத்தினர் அவரை நன்றாக கவனித்துக் கொண்டனர். இதற்கு வேறு அரசியல் பின்னணிகள் காரணமாக இருந்திருக்கலாம்.
இலங்கையில் இருந்த இந்திய அமைதி காக்கும் படையினர் 1990ம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் குமார் குணரட்னம் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டார்.
சில காலம் தடுப்பில் இருந்த பின்னர் குமார் குணரட்னம் உட்பட புனர்வாழ்வு பயிற்சி பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 15 உறுப்பினர்களுக்கு அரசாங்கம் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.
ஜப்பான் செல்லாத குமார் குணரட்னம் மீண்டும் தலைமறைவாகி அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1990ம் ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் மீள் ஒருங்கமைப்பு பணிகளில் குமார் குணரட்னம் முக்கிய பங்காற்றினார்.
அங்காங்கே சிதறி கிடந்த முன்னணியின் உறுப்பினர்களை ஒன்றிணைத்து மக்கள் விடுதலை முன்னணி மீள் உருவாக காரணமாக அமைந்தார்.
மக்கள் விடுதலை முன்னணியுடன் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகள் காரணமாக அதில் இருந்து வெளியேறி முன்னிலை சோசலிசக் கட்சி உருவாகவும் அவர் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil win

நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!- (பாகம் -1)

நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!- (பாகம் -1)
January 27
15:402017
சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
MGR_Cover_16111  நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!- (பாகம் -1) MGR Cover 16111
எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன…
இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர்.
“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்… ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ - முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை.
பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்… 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது.
ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்!
அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன்.
ரத்தின சுருக்கமாக எம்.ஜி ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.
mgr_solo_3_13375  நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!- (பாகம் -1) mgr solo 3 13375
இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.)
பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.
அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர்.
தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.
எம்.ஜி.ஆர்கோபாலன் நேர்மையான மனிதர். மனிதநேயம் கொண்டவர். எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர்.
இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல.
புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர்.
தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார்.
அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை.
அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம்.
கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம்.
அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில்… அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது.
தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார்.
பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது.
இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள்.
இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம்.
அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை;
தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை.
ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் ‘சம்பவம்’ நிகழ்ந்தது. ஆம்…அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
5-வது குழந்தையை சத்யபாமா பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.
ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன்.
இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம்.
குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது.
பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார்.
காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம்.
ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.
மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர்.
“பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க…அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.
குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது.
ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்… அப்பா இனி பிழைக்கவழியில்லை.
நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி ‘நாராயணா, நாராயணா’ என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.
mgr_parent_13508  நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!- (பாகம் -1) mgr parent 13508
வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம்.
உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி.
அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை.
குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா.
பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின.
வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார்.
அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.
பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத பாரும்மா… நானும் உன்னைப்போல ஒருகாலத்துல வசதியாக மாட மாளிகையில வசித்தவதான்.
என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல என்னை நடத்தலை.
எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட உங்கிட்ட வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா.
உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு.
குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார்.
கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.
அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள்.
குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார்.
கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள், அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர்.
கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு… அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார்.
குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்… அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு… தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.
மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது.
அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது.

http://ilakkiyainfo.com/
(தொடரும்)

 கிழக்கு முதலமைச்சரின் பதில் இல்லை

கிழக்கு முதலமைச்சரின் பதில் இல்லை


வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியபோதிலும் அவரிடமிருந்து இன்னமும் பதில் கிடைக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபை அமர்வில் நேற்குக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில்,
'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் இரு மாகாணசபையும் இணக்கம் தெரிவித்தால் பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டது. அதற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடமிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை' என்றார்.


இலங்கையின் 70 வருட பிரச்சினையை தீர்க்க மஹிந்த உதவ வேண்டும் : மஹிந்தவுக்கு சம்பந்தன் பகிரங்க அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பாமல், தீர்வுத்திட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அபிவிருத்தி என்பது தக்கவைத்துக்கொள்ளும் அபிவிருத்தியாக இருக்கவேண்டும், இந்த நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், வறுமை ஒழிக்கப்பட வேண்டும், அரசாங்கம் இதில் வெற்றிபெறவேண்டும். இதற்காக தனது ஆட்சிக்காலத்தில் சில விடயங்களை செய்யவேண்டும் என ஜனாதிபதி செயற்பட்டுவருகின்றார்.
பட்டிருப்பு தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்திய எஸ்.எம்.இராசமாணிக்கம் ஒரு பெரும் தலைவர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக திகழ்ந்தார், கடமை புரிந்தார். எல்லோரது மதிப்பினையும் பெற்ற ஒரு தலைவர்.
1961ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு நாங்கள் போராட்டம் நடாத்தியபோது எங்களை கைது செய்து பனாகொடை இராணுவமுகாமில் அடைத்தார்கள். அன்று எனக்கு வயது 28. இளம் சட்டத்தரணியாக கடமையாற்றி வந்தேன்.
நாங்கள் உரிமைக்காக தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி வருகின்றோம். இன்று பேச்சுவார்த்தை மூலம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அந்த அரசியல் சாசனம் ஊடாக நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான நியாயமான தீர்வினைக்கண்டு இந்த நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம்.
புதிய அரசியலமைப்பு ஊடாக நாங்கள் பிரிவினையை ஏற்படுத்த முனைகின்றோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது தவறான கருத்தாகும். உண்மையற்ற கருத்து.
பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்கள், தமிழ் மக்கள், இஸ்லாமிய மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அது பிரிக்கப்படாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இந்த பணியில் மஹிந்த ராஜபக்ஸவும் இணைந்துகொள்ளவேண்டும் என இங்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
மக்கள் மத்தியில் தவறான கருத்துகளை பரப்பாமல் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தாமல் மக்களை ஒற்றுமைப்படுத்தி 70 வருடமாக இந்த நாட்டில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை காண்பதற்கு உதவ வேண்டும். அது அவரின் புனிதமான கடமை. அந்த கடமையினை தவறக்கூடாது என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நீரழிவு நோய் இரத்த மட்டம்

நீரழிவு நோய்  இரத்த மட்டம்


மனிதர்களில் சராசரி சாதாரண இரத்த குளூக்கோஸ் மட்டத்தை பற்றி 5.5 mmol / L (100 மி.கி. / dL); எனினும், இந்த நிலை நாள் முழுவதும் ஏற்ற இறக்கம் காண்கிறது. நீரிழிவு நோய் இல்லாமல் யார் எந்த வித உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல் சர்க்கரை அளவை 6.9 mmol / L (125 மி.கி. / dL) கீழே இருக்க வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு நீரழிவு நோயில்லை என்று அர்த்தம் .


5.5-(100}---6.9-{125} நீரழிவு இல்லாத நிலைமை இந்த அளவுக்கு அதிகமாகக்
காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும்