
வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியபோதிலும் அவரிடமிருந்து இன்னமும் பதில் கிடைக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபை அமர்வில் நேற்குக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில்,
'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் இரு மாகாணசபையும் இணக்கம் தெரிவித்தால் பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டது. அதற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடமிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள