வெள்ளி, 9 டிசம்பர், 2016

: எம்மை மீறி பொதுபல சேனாவை யாரும் தொட முடியாது - அம...

ILANGAIMUSLIM.COM - WORLD'S NO 1 MUSLIM TAMIL NEWS WEBSITE: எம்மை மீறி பொதுபல சேனாவை யாரும் தொட முடியாது - அம...: மட்­டக்­க­ளப்­பிற்கு செல்­ல­வி­ருந்த பொது­பல சேனா அமைப்பின் உறுப்­பி­னர்கள் மீது ஒரு குழு தாக்­குதல் நடத்தும் முயற்­சிகள் இருப்­ப­தாக ...

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 உண்மைகள்

ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் 10 உண்மைகள்
முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல; அறிவியலும் கலந்திருக்கிறது.
அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும். ஒரு சோற்றுப் பதமாக கீழே சில உதாரணங்கள்...
1. விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும்.
மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும்.
இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு.
மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும்.
அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள்.
2. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்!
பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இருப்பதால், சிலருக்கு வயிற்றில் இருக்கும் அமிலங்களால் பாதிப்பு ஏற்பட்டு, புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
அதனைத் தடுக்க அகத்திக்கீரை அருமருந்து.
எனவேதான், ஏகாதசி விரதம் முடிக்கையில் அகத்திக்கீரையைச் சாப்பிடச் சொன்னார்கள்.
தவிர, அகத்திக்கீரையில் இரும்புச் சத்து அதிகம்.
விரதம் இருந்து களைத்துப் போன உடலுக்கு அது எனர்ஜி கொடுக்கும்.
3. வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போடவேண்டும்.
பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்க நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது.
சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.
4. வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ வேண்டும்.
மஞ்சள் மிக நல்ல கிருமிநாசினி.
வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள் முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான்.
அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.
5. இடி இடிக்கும்போது, அர்ஜுனா…அர்ஜுனா என்று சத்தமாகச் சொல்லுங்கள்.
இடிச் சத்தம் பலமாக ஒலிக்கும்போது அது செவிப்பறையைத் தாக்கிக் கிழிக்கும் அபாயம் உண்டு.
அர்ஜுனா என்று கத்தும்போது வாய் அகலமாகத் திறப்பதால், ஒலியானது இரண்டு பக்கமாகவும் சென்று, செவிப்பறை கிழிவது, காது அடைத்துக்கொள்வது போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மைக் காக்கிறது.
6. நகத்தைக் கடித்தால் தரித்திரம்!
நகத்தைக் கடிக்கும்போது, நகத்தின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குச் சென்று நோய்த்தொற்றை உருவாக்கும்.
நகத் துணுக்குகளை விழுங்கி, அதனால் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
அதனால்தான், நகம் கடிப்பதைத் தரித்திரம் என்றார்கள் பெரியோர்.
7. உச்சி வெயில்ல கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.
உச்சிவெயில் படும் நேரங்களில், சூரியஒளி நேரடியாக கிணற்றில் விழுகிறது.
இதனால், திடீரென வேதிவினை நடைபெற்று, கிணற்றுக்குள் விஷவாயு உண்டாகலாம்.
அத்தருணம்,கிணற்றில் எட்டிப் பார்ப்பதால், மயக்கம் உண்டாகவோ, அதன் காரணமாக கிணற்றுக்குள் தவறி விழவோ வாய்ப்புண்டு.
8. வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.
நம் புவியின் மையப்பகுதியில் இருக்கும் காந்தவிசையானது வடக்கு – தெற்காகத்தான் இயங்குகிறது.
எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது , காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய வாய்ப்புள்ளது.
9. கோயிலை விட, உயரமாக வீடு கட்டக் கூடாது.
பலத்த இடி இடிக்கும் கோயில் கோபுரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், அந்தக் கோபுரத்துக்கோ சுற்றிலும் உள்ள வீடுகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.
எனவேதான், இன்றைய இடிதாங்கி அறிவியல் வசதி இல்லாத அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டடம் கட்டவேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.
10. வீட்டு வாசலில் முருங்கை மரம் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.
மரங்களில் மிகவும் அடர்த்தியில்லாத மென்மையான கிளைகளைக் கொண்ட மரம் முருங்கை.
அதனால், வீட்டில் இருக்கும் குழந்தைகள் விளையாட்டாக அதில் ஏறி விளையாடினால், கிளை முறிந்து குழந்தைகள் கீழே விழுந்து காயம் பட்டுக்கொள்ள வாய்ப்புண்டு.
மேலும், கம்பளிப்பூச்சிகளின் புகலிடம் முருங்கை என்பதால், வீட்டுக்குள்ளும் கம்பளிப்பூச்சிகள் அதிகம் பரவும்.

பஞ்ச பாண்டவர்களில் சகாதேவன் முக்காலமும் அறிந்தது எப்படி? சூதாட ஏன் ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கு இதுவே விடை!



பாண்டவ சகோதரர்களில் அனைவருக்கும் இளையவனான சகாதேவன், முக்காலமும் அறிந்த மிகப்பெரிய சோதிட நிபுணனாக சிறப்புப் பெற்றவன் ஆவான். அவனுக்கு எப்படி இந்த அறிவு கிடைத்தது என்று பார்க்கலாம்.
பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாகப் பிய்த்து தின்று விடும்படியும் , அப்படிச் செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்றும் சொல்லி விட்டு உயிர் துறந்தான்.
பாண்டவர்களும் அதையே செய்ய திட்டமிடும் போது, அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார்.
‘’சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா?,’’ எனக் கண்டித்த கிருஷ்ணன், விறகு எடுத்து வந்து, தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.
எனினும், பாண்டுவின் சடலத்தை மிருகங்கள் இழுத்துச் சென்றுவிடாமல் இருப்பதற்காக, சகாதேவனை மட்டும் காவலுக்கு விட்டுச் சென்றனர்.
அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல், அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிட்டான்.
உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைக்கிறது. விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள்.
கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார். ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது.
அது மற்றவர்கள் கண்களுக்குதெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும்தெரிகிறது. கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ‘ஸ்ஸ்ஸப்பா’, என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.
அவரருகில் சென்ற சகாதேவன், ‘’கண்ணா. எல்லோரும்விறகை சுமந்துவந்தார்கள். அவர்கள் களைப்படைவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது. நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய்,’’ என்று கேட்கிறான்.
உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது. சகாதேவனை தனியே அழைத்துச் செல்லும் அவர் கேட்க ,சகாதேவன் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.
எதிர்காலம் தேவ ரகசியம் என்றும், இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்றும் கிருஷ்ணர் கூறுகிறார்.
தனக்குத்தெரிந்த விஷயங்களை எப்போதும் , எவரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொள்கிறார்.
சகாதேவன் தன் வாக்கை இறுதி வரை காப்பாற்றுகிறான்.
ஒரே ஒருமுறை மட்டும் யுதிஷ்டிரர் மிகவும் வற்புறுத்திக்கேட்டதால் உங்களால் நம் குலம் அழியும் என்ற ஒரு உண்மையை மட்டும் சொல்கிறான்.
மனம் வருந்தும் அவர் , தன்னால் தன் குலம் அழிய நான் விடமாட்டேன் என்றும் இன்று முதல் யாரிடமும் மோதுவதில்லை என்றும் யார் கோரிக்கையையும் மறுப்பதில்லை என்றும் முடிவு செய்கிறார்.
அதன்காரணமாகவே சூதாட துரியோதனன் விடுத்த அழைப்பை நிராகரிக்காமல் பங்கேற்கிறார்.
சகல தர்மமும் அறிந்த தர்மர் என்று அழைக்கப்பட்ட யுதிஷ்டிரர் சூதாட ஏன் ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கும் இதுவே விடை.
மேலும், முக்காலமும் தெரிந்திருந்தால், போரில் என்ன நடக்கும் என்று உடன் பிறந்தவர்களிடம் ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு, கண்ணன் வாங்கிய சத்தியம்தான் காரணமாகும்.

அமெரிக்காவில் சிக்கலில் மாட்டியுள்ள கோத்தபாய! நீதிமன்றில் பீ அறிக்கை சமர்ப்பிப்பு


அமெரிக்காவில் சிக்கலில் மாட்டியுள்ள கோத்தபாய! நீதிமன்றில் பீ அறிக்கை சமர்ப்பிப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மகனுக்கு எதிராக பீ அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது பொது மக்களின் பெருமளவு பணத்தில் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஆடம்பர வீடொன்று வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது கோத்தபாயவின் மகனுக்கு வழங்கப்பட்டுள்ளதன் ஊடாக பொது மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு நீதிமன்றில் பீ அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்வின் முன்னிலையில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆடம்பர வீடொன்றை வாடகைக்கு பெற்றக் கொண்டு வசிப்பதற்கு வழங்கியது யார் என ஆராயுமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிடம் கடந்த 3ஆம் திகதி முறைப்பாடு ஒன்று செய்திருந்தார்.
இதற்காக ஆவணங்கள் மற்றும் பல தகவல்கள் நிதி மோசடி விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர், லொஸ்ஏஞ்சல் தூதரக அலுவலகத்திற்காக என கூறி வாடகைக்கு பெற்றுக் கொண்டுள்ள இந்த வீட்டிற்காக வெளிவிவகார அமைச்சினால் மாதாந்தம் 8000 அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒரு நாளும் அலுவலகம் ஒன்று நடத்தி செல்லப்படவில்லை என கூறப்படுகின்றது.
2015 மார்ச் மாதம் வரை ராஜபக்ச ஆட்சியில் இருற்த பிரபல அதிகாரியின் மகனின் உயர் கல்வி நடவடிக்கைக்காக இந்த வீட்டில் தங்கியிருந்ததாக தூதரக அலுவலக ஆவணங்களின் தெரியவந்துள்ளதென தனது முறைப்பாட்டில் மங்கள குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாயவின் மகனின் பாதுகாப்பிற்காக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட இராணுவ சிப்பாய் இருவர் சாரதியாக செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிப்பாய்கள் இருவரும் இராணுவத்தில் மாத்திரம் இன்றி வெளிவிவகார அமைச்சிலும் சம்பளம் பெற்றுக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு ஆவணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வீட்டிற்காக மாதாந்த வாடகைக்கு மேலதிகமாக நீர், மின்சாரம் மற்றும் தொலைக்காட்சி கட்டணம் வெளிவிவகார அமைச்சினாலே செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் இந்த வீட்டை மீளவும் ஒப்படைக்கும் போது சேத கட்டணமாக 10000 அமெரிக்க டொலர் தனது அமைச்சிற்கு செலுத்த நேரிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து வெளியிடும் போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜப்கசவின் மகனுக்கு அரசாங்கத்தின் செலவில் வீடொன்று வழங்கியதாக அமைச்சர் மங்கள சமரவீர கொண்டு சென்ற பிரச்சாரம் முற்றிலும் போலியானதென குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.