செவ்வாய், 12 நவம்பர், 2019

கோட்டபாய "அமெரிக்க விசா சர்சைக்கு "  அமெரிக்காவின் பதில்


இரட்டைப் பிரஜா உரிமை பற்றி அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்க இங்கே செல்லுங்கள்



திங்கள், 11 நவம்பர், 2019

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் சிங்கள பௌத்த வாதிகள்.

  ஜனாதிபதி  வேட்பாளர்கள் இருவரும்  சிங்கள பௌத்த வாதிகள்.


 பிரான்ஸ்  நாட்டின்  மனித  உரிமைகள்  மையத்தின் பொறுப்பாளரும்,மனித
உரிமை ஆர்வலருமான ச.வி கிருபாகரன் கூறுவதை  நீங்களும் கேளுங்கள் 

வீரகேசரியின் இன்றைய கேலிச்சித்திரம்


வீரகேசரியின்  இன்றைய கேலிச்சித்திரம் .



வெள்ளி, 8 நவம்பர், 2019

சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் | Virakesari.lk

சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் | Virakesari.lk: சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் கருத்துக் கணிப்பு !

ஜனாதிபதி  தேர்தல்  கருத்துக் கணிப்பு !


தினகரன்  பத்திரிக்கை கருத்துக் கணிப்பு, முடிந்தால் நீங்களும்  வாக்குப் பண்ணிப் பாருங்கள்  வாக்களிக்க இங்கே செல்லுங்கள்  பக்கத்தின்  அடிப்
பக்கத்தில்  இதைக் காணுங்கள்

புதன், 6 நவம்பர், 2019

ஜனாதிபதித் தேர்தல் 2019 சோதிடர்களின் கணிப்பு !

ஜனாதிபதித் தேர்தல் 2019 சோதிடர்களின் கணிப்பு !

sajith premadasa க்கான பட முடிவு



gotabaya க்கான பட முடிவு


நடைபெறவுள்ள  ஜனாதிபதி  தேர்தல் 2019  முடிவுகள்  என்னமுடிவுகளை  ஏற்படுத்தும்  என்பதை  இலங்கையின் சோதிடர்களின் கணிப்புகள் வெளிவரத்  தொடங்கியுள்ள  நிலையில், சோதிடர்களின் கணிப்பையும்  மீறி
அரசியல் ரவுடிகளின் அட்டகாசம்  தொடர்கிறது. முழுவதையும்  அறிய இங்கே  செல்லவும்,

செவ்வாய், 5 நவம்பர், 2019

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ஒட்டு மொத்த தமிழர்களின் தீர்மானமாகாது - மஹிந்த சம­ர­சிங்க | Virakesari.lk

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ஒட்டு மொத்த தமிழர்களின் தீர்மானமாகாது - மஹிந்த சம­ர­சிங்க | Virakesari.lk: தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ஒட்டு மொத்த தமிழர்களின் தீர்மானமாகாது - மஹிந்த சம­ர­சிங்க

ஜனாதிபதி தேர்தல் (2015)

கடந்த ஜனாதிபதி தேர்தலில் (2015) தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சவும்,
வெற்றி பெற்ற  மைத்திரி பால  சிறிசேனவும்  மாவட்ட  ரீதியாகப்  பெற்ற
வாக்குகள்  உங்கள் பார்வைக்கு. சென்ற  தேர்தலுக்கும் , எதிர்வரும்
ஜனாதிபதித்  தேர்தலுக்கும்  வேட்பாளர்கள்தான் வித்தியாசம் வேறு பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை. ஜனநாயகத்தை மதிப்பவர்களும்
ஜனநாயகத்தை மிதிப்பவர்களும்  மோதுகிறார்கள். மக்களின் சிந்தனைகள்
பெரிதாக  மாற்றம்  எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.ஒரு புறம் இனவாதப்  பீரங்கிகளின் சங்க நாதம். மறுபுறம் சிறுபாண்மை இனங்கள்  எதுவும்  இருப்பதாகவே  கண்டுகொள்ளாதவர்கள் மறுபுறம்.
முடிவு  நவம்பர்  17ம்  திகதி  இரவு.




நன்றி: விக்கிபீடியா
ராசபக்ச வெற்றி பெற்ற மாவட்டங்கள்
சிறிசேன வெற்றி பெற்ற மாவட்டங்கள்

மாவட்டம்மாகாணம்ராசபக்சசிறிசேனஏனையோர்மொத்தம்வாக்களிப்பு %
வாக்குகள்%வாக்குகள்%வாக்குகள்%வாக்குகள்%
யாழ்ப்பாணம்வடக்கு74, 45421.85%253, 57474.42%12, 7233.73%546, 265100%64.22 %
வன்னிவடக்கு34,37719.07%141,41778.47%4,4312.46%126,725100%98.05 %
திருகோணமலைகிழக்கு52, 11126.67%140, 33871.84%2, 9071.49%195, 356100%72.50 %
மட்டக்களப்புகிழக்கு41,63116.22%209,42281.62%5,5332.16%256,586100%69.30 %
அம்பாறைகிழக்கு121,02733.82%233,36065.22%3,4300.96%357,817100%73.85 %
அனுராதபுரம்வட மத்திய281,16153.59%238,40745.44%5,0650.97%524,633100%77.98 %
பதுளைஊவா249,24349.15%249,52449.21%8,3031.64%458,104100%79.56 %
கொழும்புமேற்கு562,61443.40%725,07355.93%8,6730.67%1,266,085100%81.49 %
காலிதெற்கு377,12655.64%293,99443.37%6,6910.99%677,811100%80.46 %
கம்பஹாமேற்கு664,34749.49%669,00749.83%9,1420.68%1,342,496100%80.77 %
அம்பாந்தோட்டைதெற்கு243,29563.02%138,70835.93%4,0731.05%389,427100%81.23 %
களுத்துறைமேற்கு395,89052.65%349,40446.46%6,6900.89%751,984100%82.08 %
கண்டிமத்திய378,58544.23%466,99454.56%10,3291.21%855,908100%79.71 %
கேகாலைசப்ரகமுவா278,13051.82%252,53347.05%6,1081.14%536,771100%98.80 %
குருநாகல்வட மேற்கு556,86853.46%476,60245.76%8,1540.78%1,041,624100%78.82 %
மாத்தறைதெற்கு297,82357.81%212,43541.24%4,8920.95%515,150100%99.07 %
மாத்தளைமத்திய158,88051.41%145,92847.22%4,2141.36%309,022100%78.76 %
மொனராகலைஊவா172,74561.45%105,27637.45%3,0951.10%281,116100%79.90 %
நுவரெலியாமத்திய145,33934.06%272,60563.88%8,8222.07%426,766100%79.25 %
பொலனறுவைவட மத்திய105,64041.27%147,97457.80%2,3820.93%242,140100%79.38 %
புத்தளம்வட மேற்கு197,75148.97%202,07350.04%4,0271.00%403,850100%72.50 %
இரத்தினபுரிசப்ரகமுவா379,05355.74%292,51443.01%8,5171.25%680,08410098.89 %
மொத்தம்5,768,09047.58%6,217,16251.28%138,2011.14%%%

திங்கள், 4 நவம்பர், 2019

ஆட்சி அதிகாரத்துக்காக நிபந்தனைக்கு அடி பணிந்த சஜித் - மஹிந்த யாப்பா  | Virakesari.lk

ஆட்சி அதிகாரத்துக்காக நிபந்தனைக்கு அடி பணிந்த சஜித் - மஹிந்த யாப்பா  | Virakesari.lk: ஆட்சி அதிகாரத்துக்காக நிபந்தனைக்கு அடி பணிந்த சஜித் - மஹிந்த யாப்பா

வடக்கிலுள்ள எந்த கட்சியுடனும் ​இரகசிய ஒப்பந்தம் செய்யவில்லை

வடக்கிலுள்ள எந்த கட்சியுடனும் ​இரகசிய ஒப்பந்தம் செய்யவில்லை

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வடக்கில் எந்தவொரு அரசியல் தரப்பினருடனும் பகிரங்கமாகவோ இரகசியமாகவோ எத்தகைய உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லையென தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர் வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று (03) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கூட்டங்களிலும் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுதொடர்பாக கருத்துக்களை வெளியிட்டார். அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வடக்கில் எந்தவொரு அரசியல் கட்சியுடனோ வேறு அமைப்புகளுடனோ இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ எந்த ஒரு உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லை.
நாட்டு மக்களுக்கான ஒரே உடன்படிக்கையாக தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கிறார்.
அந்த விஞ்ஞாபனத்திற்கு இணங்கி நவீன மற்றும் அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்காக இணைந்துகொள்ளுமாறு வடக்கிலும் கிழக்கிலுமுள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழைக்கின்றோம்.
வடக்கிற்கும் தெற்கிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான பொது உடன்படிக்கையாகவோ இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. அந்த ஆரோக்கியமான வேலைத் திட்டத்துடன் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல நாம் அழைப்பு விடுக்கின்றோம். எந்தவொரு கட்சியையும் விட எமது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு காத்திரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான கொள்கைப் பிரகடனமாகும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதே வேளை, கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், 2015 ஆம் ஆண்டு அன்னத்திற்கு வாக்களித்த எம்மிடம் ஆட்சியை வழங்கியமையால்தான் நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டது.
கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது நாட்டில் வெள்ளை வான் வருவது கிடையாது. ஆனால் மக்களை தேடி அவசர அம்பியூலன்ஸ் வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? இல்லையா என்பதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மொட்டுக் கட்சிக்கு வாக்களித்தால் வெள்ளை வான் மட்டுமே வரும் எனத் தெரிவித்த பிரதமர்,
2015 க்கு பின்னர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யலாம், ஊர்வலம் போகலாம், பேசலாம், எழுதலாம் இந்த நிலைமை தொடர வேண்டுமா? வேண்டாமா? நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றை உருவாக்கி சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

கோட்டா ஆட்சியமைத்ததும் தமிழ் தலைமைகள் பேசும்

கோட்டா ஆட்சியமைத்ததும் தமிழ் தலைமைகள் பேசும்

சஜித் பிரேமதாஸவின் தோல்வி தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது. ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு அவரிடம் சென்று அவர்கள் பேசுவார்கள் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.  
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோடாபய ரஜபக்ஷவுக்கு ஆதரவான ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முதலாவது பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை (01) ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்தின் வழிகாட்டலில் இடம்பெற்றது.  
இதில் உரையாற்றும்போதே பஷீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,  
இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷதான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வரவே முடியாது. ஏனென்றால் இந்த நாட்டில் அதிகமாக வாழ்பவர்கள்  சிங்களவர்கள் ஆவர். அவர்களின் அதிகப்படியான வாக்குகள் கோதாபய ராஜபக்ஷவுக்குத்தான் கிடைக்கும். அதே போல சிறுபான்மை மக்களின் ஒரு தொகை வாக்குகளும் அவருக்கு கிடைக்கும். பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளையும், சிறுபான்மை மக்களின் சிறுபான்மை வாக்குகளையும் பெறுபவரே ஜனாதிபதியாக வர முடியும் என்பதே இந்நாட்டு அரசியல் நிலவரம் ஆகும்.  
பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கவே மாட்டாது. மேலும் பிரேமதாசவுக்கு ரணில் கழுத்தறுப்பு செய்கின்றார். ஜே.வி. பியினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்று கொடுத்த 05 இலட்சம் வாக்குகள் இம்முறை சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க போவதும் இல்லை.  
70 வருடங்களாக சமயோசிதமாக தமிழ் சமூகம் தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது. விடுதலை வேண்டி யுத்தம் செய்த சமூகமாகவும் அது இருக்கின்றது. தமிழ் தேசிய கட்சிகள் 13 அம்ச கோரிக்கைகளை கூட்டாக பிரதான வேட்பாளர்களுக்கு முன்வைத்தன. ஆயினும் பிரதான வேட்பாளர்கள் எவரும் அவை தொடர்பாக பேசுவதற்கு அழைப்பு விடுக்கவிலை. அதுவே தமிழ் கட்சிகளின் தேவையாகவும் இருந்தது. ஒருவருடனும் பேச்சு வார்த்தை நடத்த கூடாது என்பதற்காகத்தான் இக்கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தும் இருந்தார்கள். ஆகவேதான் எவரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவைப்பாடு அவர்களுக்கு அற்று போய் விட்டது.  
அப்போதுதான் வெற்றி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடன் தேர்தலுக்கு பிற்பாடு அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மாத்திரம் அல்லாமல் சி. வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோருக்கும் சஜித்தின் தோல்வி விளங்கி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் மக்களை கேட்டு இருக்கின்றார்.அதுவும் கோதாவுக்கு வாய்ப்பான விடயமே ஆகும். 2005 ஆம் ஆண்டு தமிழர்கள் தேர்தலை புறக்கணித்த நிலையிலே மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதை நான் நினைவூட்டுகின்றேன் என்றார். 
(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)  

ஞாயிறு, 3 நவம்பர், 2019

உலகப் புகழ்பெற்ற புலிட்சர் விருது பெற்ற புகைப்படம்





உலகப் புகழ்பெற்ற  புலிட்சர் விருது  இந்தப் படத்தை எடுத்தகெவின் கார்ட்டருக்கு  கிடைத்தது  ஆனால். அவர்  தற்கொலை செய்துகொண்டார் ஏன்?
கெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற
புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும்
நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டு
மென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன.
இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,
காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது
சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.
குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள்
உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி,
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின்
நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய
கெவின் தொலைதூர கிராமங்கள் வரை
சென்றார்.
இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு
நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய
படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது;
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில்
உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத
நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின்
சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு
வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி
தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை
நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர்
பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச்
சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு
பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.
இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.
இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்;
பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று
விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம்
நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம்
தொடர்புக் கொண்டனர்.
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்?
அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி
ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான
அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த
விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின்
பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.
‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர்
அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.
இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு
அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது.
அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.
கெவின் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு
ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry...
நாம் எவராக இருந்தாலும்
சரி நண்பர்களே,
நம்மிடம் மனிதம் இல்லையெனில்
நாமும் மிருகத்திற்க்கே ஒப்பாவோம். . 
...

சனி, 2 நவம்பர், 2019

30 அரசியல் கட்சிகள், 32 சிவில் அமைப்புகள் புரிந்துணர்வு

30 அரசியல் கட்சிகள், 32 சிவில் அமைப்புகள் புரிந்துணர்வு

சஜித் பிரேமதாசவுக்கு சந்திரிகா ஆதரவு
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது.
பதிவுசெய்யப்பட்ட 30 அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 36 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் 32 சிவில் அமைப்புகளும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. ஜனநாயக தேசிய முன்னணியை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோர் தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்களும் ஐ.தே.க. அரசின் பங்காளிக் கட்சித் தலைவர்களுமான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்தன, அர்ஜுன ரணதுங்க, வே.இராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
‘நாட்டையும மக்களையும் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனநாயக தேசிய முன்னணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உருமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நவசமசமாஜ கட்சி, இலங்கை மக்கள் கட்சி உட்பட 30 கட்சிகள் கைச்சாத்திட்டதுடன், புரவெசி பலய, தேசாபிமான உட்பட 32 சிவில் அமைப்புகளும் இக்கூட்டணியில் கைக்கோர்த்துள்ளன. அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ‘ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும்’ அமைப்பும் ஜனநாயக தேசிய முன்னணியுடன் கைக்கோர்த்துள்ளது.
இப்புதிய கூட்டணியின் தலைவர் பதவி தொடர்பில் எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. பொதுச் செயலாளராக ராஜித சேனாரட்ன செயற்படுகிறார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான் தலைவர் பதவி உட்பட ஏனைய பதவிகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளன. இதேவேளை, எதிர்வரும் 5ஆம் திகதி ‘லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும்’ அமைப்புச் சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டமொன்று கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் அறிவிப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்

திங்கள், 28 அக்டோபர், 2019

கந்த சஷ்டி விரதம் பற்றிய முழு தகவல்கள்!!

கந்த சஷ்டி விரதம் பற்றிய முழு தகவல்கள்!!


palani_murugan

இன்று முதல் கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டி உருவான கதை
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சகன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சகன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவவலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் இணைந்து சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.
காசிபர் தன் பிள்ளைகளிடம், சிவபெருமானை நோக்கித் தவம் செய்து வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாகப் பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்க, பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தம்மைப் போல் பலரை உருவாக்கி இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.
இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக்கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.
அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க, அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். திருக்கரத்தில் வேலேந்திக்கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை என்றார். 
அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர்.
சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். உலகை ஆள வந்த முருகன் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். முருகன் அசறவில்லை. முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு, அது பாவமென்றும் அவன் கருதினான். 
அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார்.அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. உன்னைப் பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும் என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தைச் சுருக்கி சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலைதூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.
முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். வேல்பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்து, ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்,சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் அனுஷ்டிக்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.
கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் விடியற்காலை துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, “ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை உச்சரித்தபடி முருகனை மனதில் இருத்தி நீரில் மூழ்கி எழ வேண்டும்.
கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதைத் தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.
இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி” விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும். கடும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் முதல் ஐந்து நாட்களும் இரவு ஒரு பொழுது பால்பழம் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் உபவாசம் இருக்கலாம். அதுவும் முடியாவதவர்கள் முதல் ஐந்து நாட்களும் பகல் ஒரு பொழுது அன்னமும் ஆறாம் நாள் இரவு பால், பழம் அல்லது பலகாரமும் உண்டு விரதமிருக்கலாம்.
ஆறாம் நாள் சஷ்டித்திதியில், சூரசம்ஹாரம் முடிந்த அன்றிரவு முழுவதும் விழித்திருந்து முருகன் பெருமைகளையே பேசியும், வழிபட்டிருக்குமாறு பழம் நூல்கள் விதிக்கின்றன. சிவபிரானுக்குரிய சிவராத்திரியும், மஹாவிஷ்ணுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் போல முருகப்பெருமானுக்குரிய ஸ்கந்தசஷ்டியும் மிக விசேஷமான தினமாதலால் துயில் நீத்தல் (விழித்திருத்தல்) பொருத்தமானதே. 
கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது.
ஜோதிடத்தில் சஷ்டி விரதம்
இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவு மதங்களில், மிகப் பழைமையானது கௌமாரம். கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே முருக பக்தர்கள்! ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் இந்தக் குமரனுக்கு உரிய நாள். எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்.
ஜோதிடத்தில் அழகைக் குறிக்கும் கிரஹம் சுக்கிரன். குழந்தைப் பிறப்பிற்கு தேவையான காமத்திற்கும் சுக்கிலத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனைக் குறிக்கும் என் ஆறு. தெய்வங்களில் அழகன் எனப் போற்றப்படுபவர் முருகன். முருகனுக்கு ஆறு முகங்கள். முருகனை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்டீர். முருகனுக்குகந்த திதி ஆறாவது திதியான சஷ்டி. ஆண்மையைக் குறிக்கும் கடவுள் 
முருகப்பெருமான் ஆகும். "சுக்கிற்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" எனும் சொலவடை உண்டு. மேலும் எண்ணியல் ஜோதிடத்தில் ஆறாம் எண்ணிற்கு அதிபதியாக சுக்கிரனை கூறுவர்.
ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையைக் குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையைக் குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும். அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குரிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்.
விசாகம் குழந்தை வேலப்பராகிய முருகனுக்கும் உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டியின் ஆறாம் நாள் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையுடன் கூடிய சஷ்டி திதியில் அமைந்திருப்பதும் ஆத்மகாரகனாகிய சூரியனின் நக்ஷத்திரமான உத்திராடத்தில் அமைந்திருப்பதும் கோசாரக குருபகவான் செவ்வாயின் வீட்டில் நின்று காலபுருஷ குடும்ப ஸ்தானம் மற்றும் சுக்கிரனின் வீடாகிய ரிஷபத்தை பார்ப்பதும் இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பதை உணரமுடிகிறது.
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ருண ரோஹ சத்ரு ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகரின் எதிரி எப்படிப்பட்டவர், எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார், ஜாதகர் என்ன காரணங்களுக்காக கடன் வாங்குவார் என்பதை அறியலாம். நோய் தீர்ப்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, சஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்ஷ‌த்திர நாளில் விரதமிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பாம்பன் குமர குருதாஸ ஸ்வாமிகள் அருளிய “ஓம் ஷண்முக பதயே நமோ நம” எனத் தொடங்கும் குமாரஸ்தவ பாடலைப் படித்தால் நாள் பட்ட தீராத வியாதியும் தீரும். நோய் என்பது தீர்க்கக்கூடியது. ஆனால் பிணி என்பது. தீர்க்க முடியாதது. நோயை மருத்துவர்கள் குணப்படுத்திவிடுவார்கள். பிணியைக் குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால் தான் குணப்படும். வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும் இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் நாம் செய்த செயல் ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தைப் பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த கால கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.
ஜெனன ஜாதகத்திற்கு ஆறாம்வீட்டிற்கு பன்னிரண்டாம் பாவத்தையும் அதன் கிரஹங்களையும் கொண்டு நோய் தீர்க்கும் அமைப்பை அறியலாம். அதேபோல காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பன்னிரண்டாம் பாவமான சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம், தனுசு ஆகிய ராசிகளும் அதன் அதிபதிளும் நோய் தீர்க்கும் அமைப்பைக் கூறுவார்கள்.
இந்த கந்த ஷஷ்டி விரத முதல் நாளில் வேலைப் பெற விரும்புவோர்கள் மற்றும் சத்ரு, கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கந்த ஷஷ்டி கவசமும், குழந்தை பாக்கியம் பெறவிரும்புபவர்கள் திருப்புகழும், கடும் நோயினால் அவதியுறுபவர்கள் ஷண்முக கவசம் மற்றும் திருமுருகாற்றுப்படையும், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் திருப்புகழில் குறிப்பிட்ட பாடல்களும் சுப்ரமணிய புஜங்கமும் பாடி முருகனை வணங்கி வர அவரவர் பிரார்த்தனைகளை அந்த முருகப்பெருமான் தட்டாமல் நிறைவேற்றுவார்.
மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வியாதிகள் நீண்ட நாட்களாக இழுவையில் இருக்கும் வழக்குகள், தொடர்ந்து தொல்லை தரும் சத்ருகள் ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் இந்த ஆறு நாட்களில் சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்து வணங்கி வரத் தொல்லைகள் முற்றும் நீங்கி நிம்மதியைத் தரும் என்பது நிதர்சனம்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510