ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது


இசை:T.K. இராமமூர்த்தி பாடியவர்கள்:T.M. சௌந்தராஜன் இயற்றியவர்;கண்ணதாசன் படம்;தங்கச் சுரங்கம் ஆண்டு 1969

நித்திரை வருகுதில்லை









                                                                                                                   www.tamil10.com/submit
                                                                                                                                                        

நித்திரை வருகுதில்லை ரதியே -என்
நெஞ்சமும் பொறுக்குதில்லை சகியே
சித்திரம்போலே வந்து சிரித்து-நீ
சீக்கிரம் மறைவதாலே எனக்கு


சுற்றிடும் உலகமெல்லாம் தூசியே-யுனைப்
பார்த்திடும் நேரமெல்லாம் ருசியே
கொட்டிடும் மழையுமெனக்கு இராசியே-ஆட்
கொண்டிடும் பார்வை யுனக்கில்லையே  

இட்டிடு எனக்கொரு ஈ-மெயிலே-யெந்
இதயமெல்லாம் நிறையவேனுமதிலே
கட்டிடும் ஆசை யுனக்கில்லையோ- என்
கடைசிதான் உந்தன் முடிவுரையோ

பட்டென உடைத்துவிடு முடிவை -நான்
பட்டணம் போய் எடுக்கவேணும் உடையை
சட்டென விக்கவேணும் ஒரு வளவை-தாலி
கட்டி வளர்க்கவேணும் நம்ம  உறவை

அமுதே தமிழே

புலமைப் பித்தனின் வரி வண்ணம்,இளைய ராஜாவின் இசைவண்ணம் இவர்களின் குரல் வண்ணம்.சுசிலா,உமா ரமணன் மற்றும் வலம்புரி சோமநாதன்.படம் கோயில் புறா

புதன், 23 செப்டம்பர், 2009

இறுதி மூச்சு ஒன்றுதான்......!

www.tamil10.com/supmit                                                                                                                                                        











இதயத்தின் ஓசை உன் பெயராச்சு -அது
இனியவள் உந்தன் இருப்பிடமாச்சு
கனாவே நாளும் தொழிலாகிப் போச்சு-என்  
கன்னுறக்கமெல்லாம் கடனாகிப்போச்சு

உச்சிமுதல் உள்ளங்கால்வரை உன்னினைவாச்சு -நான்
மூச்சுவிடும் நேரமட்டும் காற்று வரலாச்சு
பேசும் மொழியாவும் உந்தனது பேச்சு-இங்கு
வீசும் தென்றலெல்லாம் உன்னுடைய மூச்சு

நிமிஷ்மெல்லாம் நீண்டு முழு நாளகியாச்சு-உந்தன்
நினைவே முழு நாளும் எனக்கு உணவாகியாச்சு
நாளும் பொழுதும் மாறியே போச்சு-எனக்கு
நள்ளிரவு கூட நல்ல பகலாகப்போச்சு

நிம்மதி இன்று பகையாகிப்போச்சு-எனது
நிழல்கூட இங்கு நிலைமாறிப் போச்சு
கண்கள் இரண்டும் சிறு குளமாகிப் போச்சு -உன்னைக்
காணாமல் இமையிரண்டும் சருகாகிப்போச்சு

பாலும் பழமும் நல்ல பழசாகிப்போச்சு -புதுப்
படுக்கையும் பஞ்சணையும் தூசாகிப் போச்சு
பார்த்துப் பார்த்து கண்ணும்  பூத்துப்  போச்சு -நீ
பாராமலே எனக்கு   நல்ல  வயசும் ஆச்சு

உலகமெனக்குச் சிறிதாகிப் போச்சு- இந்த
உருவமும் உள்ளமும் சிறு ஓடாகிப் போச்சு
இதையத்தில் இருந்ததெல்லாம் எழுத்தாக்கியாச்சு-இனி
இறுதி மூச்சு ஒன்றுதான் இருப்பாக்கியாச்சு             

திங்கள், 21 செப்டம்பர், 2009

களுதாவளை கு பாக்கிய ராஜாவின் பக்தி கீதங்கள்

.பாடலை எழுதிப் பாடியிருப்பவர் களுதாவளை குஞ்சித்தம்பி பாக்கியராஜா இசையமைத்து ஒலிப்பதிவு மருதமுனை M.H.M. நாசார்

களுதாவளை கு.பாக்கிய ராஜாவின் பக்தி கீதங்கள்
தனி ஒரு மனிதனாக ஒரு சாதனையைச் சாதிப்பது என்பது எழுத்திலே விவரிக்க முடியாத ஒன்று.அதை சாதித்துக் காட்டியிருக்கிறார் களுதாவளை குஞ்சித்தம்பி பாக்கிய ராஜா.ஓய்வுபெற்ற பெரும் பாக உத்தியோகஸ்தரான இவர் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவராக இருந்தபோதும். களுதாவளை அவர் வாழும் இடம் (திருமணம் மூலம்) ஆகிவிட்டது.தனது அயராத முயற்சியால் "பாக்கியராஜாவின் பக்தி கீதங்கள்" என்ற இறுவட்டை அண்மையில் வெளியிட்டு இருந்தார். அதில் இருந்த பன்னிரு பாடல்களும் இனிமையானவை,அருமையானவை இதில் ஒரு பாடல் "வா வா வாணியே " ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா? கலையில் ஆர்வமுள்ள ஒருவரான மருதமுனை M.H.M. நசார் இசையமைத்து ஒலிப் பதிவும் வழங்கி உள்ளார் நீங்களும் கேட்டுப் பாருங்கள் வெளியிட்டவர்கள் டிஜிட்டல் மியுசிக் சென்ரர் களுதாவளை.

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

புத்திமான் பலவான்

www.tamil10.com
இதுவரையில் புத்தியுள்ளவர்கள் என்று நாம் நினைத்தவர்கள்,நாளை முட்டாளாகலாம்

புதன், 16 செப்டம்பர், 2009

உறவுகளை முழுசாக நம்பி.......

















வருமானம் வற்றி வருந்தி அழுகின்றோம்
வயிற்றின் தேவைகள் கூடிவருந்துகின்றோம்
பெறுமானம் குறைந்து பேயாக அலைகின்றோம்
பெருமானே வந்து யுன் பேரருளைக் காட்டாயோ!



மண்டியிட்டோம் மாரடித்தோம் மலையெனவே நம்பினோம்
பண்டையயுறவு பார்த்திருக்குமா பெரிதாகப்  பம்பினோம்

கண்டவிலைக்கு காசாக்குவாரன்று கணவிலுமா எண்ணினோம்
தென்னாடுடைய சிவனே  பெருமானே கண்திறந்து பாராயோ!www.tamil10.com/submit/



சண்டை முடிந்து  சமாதானம்   நாடினோம்
மண்டை வெடிக்குது  சமரசமாம் ஓடினோம்
கண்டநாள் முதல் இதையே சுதி  பாடினோம்
கண்கண்ட  கடவுளே கருணைதான் புரியாயோ!



ஆண்ட பரம்பரைதான் அடிகள்தான் வாங்கினோம்
ஈன்டதாயுமதை இனிதாக நாடினாள் நசுங்கினோம்
மீண்டுமொருமுறை  மாண்டுபோகவா  மிஞ்சினோம்
கண்கண்ட தெய்வமே  கருணைதான்   புரியாயோ!



உறவுகளை முழுசாக  நம்பி  ஓட்டாண்டியானோம்
உடன்பிறவாச் சகோதரத்தால்  ஓரமடைந்தோம்
பெருமாளின் பிறப்புக்களால்  இந்தநிலை கண்டோம்
திருநீறு  புனைந்த  ஈசனே  கருணை  பொழியாயோ!

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

சிரிப்பவர்களுக்கு மட்டும்

என்னமா சிந்திக்கிறாங்கையா,எண்களைச் சிரிக்க வைக்க

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

வயது வந்தவருக்கு மட்டு�

மனிதன் பிறந்தது இதில் இருந்துதான்

தெய்வ மதன் கலை தெளிவோம்












என் அகத்தே எக்கணமும் இணைந்திருந்து
எழிற் சங்கத் தமிழ் மூன்றின் இதம் அழைந்து
மின்னு விழி நோக்கினிலே உயிர் மருந்து
மெல்லிடையே ஈந்தாயென் தனையுணர்ந்து

பாடுகிறேன் சொற் தமிழில் தேன் கலந்து
பாவாய்; என் பரிசில் இதை நீ உவந்து
தேடரிய செல்வம்மென்றே சொல் மகிழ்ந்து
தித்திக்கும் முத்தமிழ் வாய் இதழ் திறந்து

என்றென்றும் உயிர் வாழ்வேன் உனை நினைந்து
என்னை வந்து நீ அணைப்பாய் இதயம் கனிந்து
அன்றே நான் சொர்கத்தின் பனி நனைந்து
ஆயிரம் பாட்டாக்குவேன் யுன்எழில் வனைந்து

உருவாக்கும் புதுச் சரிதம் உறவு உணர்ந்து
உள்ளம் இரண்டு ஒன்றாகும் இடம் பெயர்ந்து
திருவாக்கும் மணவறையில் நாம் நுழைந்து
தெய்வ மதன் கலை தெளிவோம் தினம் இணைந்து





செவ்வாய், 8 செப்டம்பர், 2009

இனிமையை என் சொல்வேன் புதுமை!

Posted by Picasaபுது ரோஜா மலர் கொண்ட மென்மை-கடை
மது ரோஜா தனை வென்ற தன்மை!
இதழ் மீது தந்தாளே பதுமை –அந்த
இனிமையை என் சொல்வேன் புதுமை!

காமனோடு போராடும் நெஞ்சம் –என்
கவிதைகள் சீராடும் மஞ்சம்!
எல்லோர்க்கும் அதன் மீது வஞ்சம் –நான்
என்றுதான் காண்பேனோ தஞ்சம்!

கண்களால் அவளிட்ட மறை -இனிக்
காலமெல்லாம் அதுதானே சிறை!
காதலில் இதுதானோ கரை –வாழப்
போதுமே அவளீந்த இன்ப உரை!

தங்கத்தில் இல்லையொரு பிழை –தமிழ்ச்
சங்கத்தில் பாயுமொரு மழை!
மௌனத்தில் காண்பதும் கலை -அவள்
மொத்தத்தில் தங்கச் சிலை!

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

தினசரி ஹோரை
















நல்லவரோ கெட்டவரோ தாங்கள் செய்யும் காரியம்,அல்லது ஆரம்பிக்கும் செயல் நல்ல முடிவைத் தரவேண்டும்,நன்றாக முடிய வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.இது மனிதர்களின் சுபாவம்.இது தொன்று தொட்டு நடை முறையில் உள்ள ஒரு நடவடிக்கை.இதையே ஜோதிடத்தில் சுப வேளையில் காரியங்களை ஆரம்பித்தல் .இதை பல முறைகளில் வகுத்துக் காட்டியுள்ளார்கள்.நல்ல கிழமைகளில் (திங்கள், புதன், வெள்ளி,) காரியங்களைத் தொடங்குதல். அட்டமி, நவமி, அமாவாசைகளை தவிர்த்தல். ஆராய்ந்து அதன்படி செய்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் கூடுதலானவர்கள் எதையுமே கவனியாமல் ஆரம்பித்து அல்லல் படுகிறார்கள். காரணம் இவையெல்லாம் மூட நம்பிக்கை என்ற மேம்போக்கான எண்ணம், அல்லது எப்படி இவைகளை அறிந்து கொள்வது என்ற தெரியாத்தனம். சோம்பல் இவைகள் தான் இதற்கு அடிப்படை. மற்றவைகள் யாவும் இரண்டாம் பட்சம்.பல வகையான சுப நேரங்களை அறிவதற்கு ஜோதிடத்தில் இருந்தாலும் இலகுவான ஒருமுறை இந்த தினசரி சுபகோரை இதில் எந்த விதமான மந்திரமும், மாயமும் இல்லை .நேரத்தையும் கிழமையும் அடிப்படையாகவைத்து கணிப்பிடுவது. சுப கிரகங்களான சுக்கிரன், புதன், குரு,சந்திரன் ஹோரைகளில் எது செய்தாலும் நன்மை அளிக்கும் என்று சோதிட நூல்களில் விளக்கப்பட்டுள்ளது

ஒரு நகைச் சுவைக் கதை ஓன்று இதற்கு ஏற்றால் போல.மிகவும் பிரசித்தி வாய்ந்த ஒரு சிவன் கோயில் அதில் பக்தர்கள் சென்று வழிபட்டு தங்கள் தேவைகளை இறைவனிடம் வேண்டி, அப்படி அது நடந்தால் இறைவனுக்கு நான் என்னசெய்ய நினைத்திருப்பதாகவும் வேண்டி வணங்கி செல்வார்கள்.இது இந்து மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ள ஓன்று . அன்றும் வழைமைபோல் மக்கள் தங்கள் வேண்டுதல்களை இறைவனிடம் வைத்தார்கள், வேண்டுதல் நிறைவேரியவர்கள் அதற்குரிய நேர்த்திக் கடன்களை செலுத்திக் கொண்டு சென்றார்கள். இப்போது நமது கதையின் நாயகன் கோயிலுக்கு வந்தார் "இறைவா, நான் பெரிய கஷ்டத்தில் இருக்கின்றேன் இதிலிருந்து மீளவேண்டும் என்றால் எனக்கு நாளை குலுக்கப் போகும் பெரிய தொகை அதிர்ஷ்ட இலாபச் சீட்டு எனக்கே கிடைப்பதற்கு அருள்புரிய வேண்டும் .எனக்கு கிடைத்தால் இந்தக் கோயிலுக்கு நான் பெரிய கட்டிடம் ஓன்று கட்டித்தருவேன், கிடைக்க அருள் செய்யாவிட்டல் எனது ஒரு கரத்தை உன் முன்னால் வெட்டி எறிவேன் என்று சபதம் செய்துவிட்டுச் சென்று விட்டான்.அதிர்ச்டலாபச் சீட்டு குலுக்கும் நாளும் வந்தது குலுக்கப் பட்டது பரிசும் வெல்லப்பட்டது. நமது கதநாயகன் பெரிய கத்தியுடன் கோயிலில் இறைவன் முன் ஆஜரானான். இறைவா! என்னை ஏமாற்றி விட்டாய் நான் கேட்டதை நீ தரவில்லை அனால் நான் சொன்னதை செய்கிறேன் என்று ஒரு கரத்தை வெட்டி எறிந்துவிட்டு, இறைவனிடம் மீண்டும் சொன்னான் "அடுத்த சீட்டுளிப்பில் எனக்கு பரிசு கிடைக்கவில்லை என்றால் எனது அடுத்த கரத்தையும் வெட்டி விடுவேன்" என்று பயங்கர சபதம் செய்துவிட்டு சென்றான்.

சீட்டு குலுக்கும் நாளும் வந்தது, அதிர்ஷ்டம் பார்க்கப் பட்டது. நமது கதையின் நாயகன் கையில் கத்தியுடன் கோயிலை நோக்கி புறப்பட்டார். இதை இறைவனும் அன்னை பராசக்தியும் பார்த்துக்கொண்டிருந்தார்கள் வழைமைபோல இறைவனிடம்" என்னை ஏமாற்றி விட்டாயே இறைவா! இன்று நான் எனது மறு கரத்தையும் உனக்காக தறிக்கப் போகிறேன்" என்று அழுதான். இவனது நிலையைப் பார்த்த அன்னை "சுவாமி தங்கள் மீது இவ்வளவு பக்தி வைத்துள்ள இவனை நீங்கள் இரட்சிக்கக்கூடாத தயவு கூர்ந்து கருணை செய்யுங்கள்" என்றார் இறைவன் இரன்குவதாக தெரியவில்லை.மீண்டும் அன்னை பராசக்தி, தாய் அல்லவா இறைவனை நோக்கி "நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை எனக்கு விடை கொடுங்கள் நான் உதவி செய்கிறேன்" என்றார். இறைவன் பராசக்தியைப் பார்த்துச் சொன்னார் " அருள் செய்யலாம்தான், ஆனால் அதற்கு உரிய முயற்சிகள் அவனிடம் இல்லையே " இதை விட இன்னும் என்ன முயற்சி அவன் செய்ய வேண்டும்" என்றுபராசக்தி பரமசிவனைப் பார்த்துக் கேட்டார்கள். முதலில் அவன் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வாங்கட்டும், பின்பு அவனுக்கு அதிர்ஷ்டம் வழங்குவதைப்பற்றி சிந்திப்போம் என்றாராம்.
எப்படி இருக்கிறது நம்மவர்களின் வேண்டுதல்கள். எதையும் சரிவரச் செய்யாமல் இக்கட்டில் மாட்டிவிடுவதில் வல்லவர்கள்.இதைப்போல்தான் எதையும் சரியாகச் செய்யாமல் ஜோதிடத்தையும், இறை வணக்கத்தையும் குறை கூறிக் கொண்டேயிருப்பார்கள்.

விசயத்திற்கு வருவோம் எந்த நாளில் என்ன காரியங்கள் செய்யலாம் என்பதை கவனித்து விட்டு, அட்டவணைக்கு செல்வோம்

சூரிய ஹோரை :
உத்தியோகம்,வியாபாரம் சம்பந்தமாக ஒருவரின் உதவிகளை பெறவும், பெரிய தொழில் அதிபர்களை, பெரிய உத்தியோகஸ்தர்களை சந்திப்பதற்கும், சொத்து சம்பந்தமான பதிவுகள் செய்வதற்கும் இது உகந்த நேரம்.

சந்திர ஹோரை:
வியாபாரம், பெண்கள்,பிரயாணம் இவைகளைப் பற்றி பேசவும் காண்பதற்கும் இந்த ஹோரை ஏற்றது.தேய்பிறை சந்திரனனால் தவிர்ப்பது நலம்

செவ்வாய் ஹோரை:
மனதில் உள்ளவற்றை மறைமுகமாக வைத்திருத்தல் நன்மையளிக்கும்.இவ்வோரையில் எதையும் செய்யாமல் விடுவது நலம் .

புத ஹோரை:
எல்லாவித எழுத்து சம்பந்தமான வேலைகளுக்கு,ஆரம்பிக்க தொடர்புகளை ஏற்ப்படுத்த, அறிவிக்க (புளொக்கரை பதிவேற்ற ) சட்டத்தரணிகளை சந்திக்க நல்ல ஹோரை இது .

குரு ஹோரை :
எல்லா வகையான செய்கைகளுக்கும் ஏற்றது. கடன் கொடுப்பவர்களை சந்திக்க,கடன்களை பெறுவதற்கு புதிதாக எதையாவது தொடங்க,ஆடை ஆபரணங்கள் வாங்க, தெரிவு செய்ய ,காரியங்கள் தடையின்றி நடக்க

சுக்கிர ஹோரை :
சகல விதமான நல்ல வேலைகளுக்கும் ,பெண்களுடன் பேச, பார்க்க பரிதவிக்க,அவர்கள் உறவை ஆரம்பிக்க, விருந்தோம்பல், மருந்துண்ண,கடன் கொடுத்தவர்களிடம் வசூல் செய்ய,வாகனம் வாங்க

சனி ஹோரை :
தோட்டங்களைப் பற்றி பேசவும் , நடவடிக்கை எடுக்கவும் மட்டும் சிறந்தது . மற்ற எதற்கும் இது ஏற்றதல்ல


இவைகளை எப்படி கண்டு பிடிக்கலாம் என்று ஜோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம் மேலே உள்ள அட்டவனையை பாருங்கள் எல்லாம் சரியாக தயாரிக்கப் பட்டுள்ளது .கிழமையை தெரிவு செய்யுங்கள் நேரத்தை பாருங்கள். உங்கள் மணிக்கூட்டை பார்க்காதீர்கள் அட்டவணையில் உள்ள நேரத்தை பாருங்கள் இப்போது விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். விளங்கா விட்டால் பின்னூட்டம் இடுங்கள் தனியாக விளக்கம் வைக்கலாம்