புதன், 7 டிசம்பர், 2016

මඩකලපුවේ හාමුදුරුවන්ගේ අවසාන පණිවිඩය ද මේ ?සිංහලයෙක් නම් අහන්න


நான் இறக்கப்போகின்றேன்..! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கைது செய்யுங்கள் - இதில் மஹிந்தவிற்கு என்ன தொடர்பு??






நாட்டுக்காக குரல் கொடுத்த நான் பயங்கரமான உயிர் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றேன், இனி நான் உயிருடன் இருப்பேனா? என்பது தெரியாது என மட்டக்களப்பு சுமனரத்ன தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.
முகப்புத்தகங்களின் ஊடாக நேற்று அவர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த காணொளி மூலமாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தலங்களில் பலவாறான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள குறித்த காணொளியில் மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்துகளாவன, 
இப்போது நாடு அதி பயங்கர நிலையில் சென்று கொண்டிருக்கின்றது. வேரு இனத்தினருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பில் நான் பல அபிவிருத்திகளை செய்து வந்தேன் பௌத்தத்தை காக்க பல வகையிலான செயற்பாடுகளை செய்து வந்தேன் இவற்றை பொறுக்க முடியாதவர்கள் எதிர்ப்புகளை செய்து வருகின்றார்கள்.
இப்போது மட்டக்களப்பில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சிறிய உதாரணம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றேன்.
அண்மையில் இது போன்றே மட்டக்களப்பில் பல வகையிலும் இராணுவத்தினருக்கு நினைவுத் தூபி ஒன்றினை எழுப்பவும், பௌத்த கல்வி நிலையம் ஒன்றினை எழுப்பவும் நான் அடிக்கல் நாட்டு வைபவம் ஒன்றினை ஏற்பாடு செய்தேன்.
அதற்கு யுத்தத்தை வென்ற மஹிந்த ராஜபக்சவையே அழைத்திருந்தேன் இதன் போது எவருமே கல்எறிந்து குழப்ப வில்லை. அவர் மட்டக்களப்பிற்கு வந்த போது யாரும் எதிர்க்க வில்லை.
அதேபோன்று அதற்கு அடுத்து சுமார் 3500 பேருக்கும் அதிகமானவர்களை நான் திரட்டினேன் அப்போதும் எவரும் குழப்ப வில்லை, ஆனால் இப்போது பல எதிர்ப்புகள் வருகின்றது.
பிக்குகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் அதற்கு உத்தரவு இட்டவர்களையும் மக்கள் தட்டிக் கேளுங்கள். இதனைப்பற்றி யாரும் பேசுவது இல்லை அதற்காக நாம் இப்போது தட்டிக் கேட்க வேண்டும்.
இதனைப்பார்க்கும் அனைவரும் மிகுந்த மிகுந்த கவனத்தை எடுங்கள். பிரிவினையாளர்களின் செயற்பாடுகளை தடுக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
மேலும் பௌத்தத்தை அழித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கைது செய்ய வேண்டும். அதனை விடுத்து அரசு வேரு இனத்தை மகிழ்ச்சி படுத்த வேண்டுமாயின் அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.
அனைவரும் கூடுதல் அவதானமான இருங்கள். இப்போது உள்ள நிலவரப்படி இது என்னுடைய கடைசி பதிவாக வேண்டுமானாலும் அமைந்து விடும். எது வேண்டுமானாலும் எனக்கு நடக்கலாம்.
அதனால் முடிந்தளவு நான் பாதுகாப்பாக இருந்து கொண்டு நாட்டுக்காகவும் பௌத்தத்திற்காகவும் போராடுவேன் எனவும் தெரிவித்து கொள்கின்றேன் என சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுமனரத்ன தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு கருத்தினை மக்கள் மத்தியில் பரப்பியுள்ளார் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இலங்கை பௌத்த பிக்குவின் பெண்களை கொடுமைப்படுத்தும் கொடூரம்!



அந்தப் புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீராக்க முடியாத கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள்!
இந்த மஞ்சள் அங்கி அணிந்த புத்த தேரர்கள் பாத்திரம் ஏந்தி பிட்சை எடுத்து, பசித்தால் புசித்து பெண், பொன், மண் ஆசைகளைத் துறந்து, புத்தம், சங்கம், தர்மம் என்ற மும்மணிகளிடம் சரண் அடைந்த துறவிகள் அல்ல.
அரண்மனை போன்ற வீடுகளில்j குடியிருந்து, பால் பழம் அருந்தி, பஞ்சு மெத்தையில் படுத்து பென்ஸ் தேரில் பவனி வரும் அஸ்கிரிய மல்வத்தை புத்தமத பீடங்களின் பீடாதிபதிகள். இவர்கள் காலில்நாடாளும் சனாதிபதி மைத்திரி தொடங்கி சாதாரண அப்புகாமி வரை விழுந்து தொழுது எழும் புத்த(ஆ)சாமிகள்.
கடந்த காலங்களில் இந்த புத்தமத பீடாதிபதிகள், சிங்கள-பௌத்த பேரினவாதிகள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சிங்கள ஆட்சியாளர்கள் அவ்வப்போது எடுத்த அரைகுறை முயற்சிகளை முறியடித்திருக்கிறார்கள்.
மௌரிய பேரரசின் சக்கரவர்த்தியான அசோகன் கலிங்கப் போரில் ஏற்பட்ட மனித உயிரழிவுகளைப் பார்த்து மனம் உடைந்து போய் அமைதியைத் தேடுகிறான். அன்பு, கருணை, அகிம்சை இவற்றைப் போதிக்கும் புத்தபிரானின் போதனைகள் அவனுக்கு மனச் சாந்தி அளிக்கிறது. புத்தசமயத்திற்கு மதம் மாறிய அவன் புத்தரின் போதனையை பாரதநாட்டில் மட்டுமல்ல அதற்கு வெளியே கடல்கடந்தும் பரப்ப தீவிர முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டான்.
அங்கே போரினால் ஏற்பட்ட உயிர் அழிவை வெறுத்து அசோகன் மும்மணிகளிடம் சரண் அடைகிறான். ஆனால் இங்கே மும்மணிகளிடம் சரண் அடைந்த புத்தமத பீடாதிபதிகள் போருக்குத் தூபதீபம் காட்டுகிறார்கள். அமைதி வேண்டாம் போர்ப்பறை கொட்டட்டும் என்று முழங்குகினார்கள்.
துறவுக்கு அடையாளமாக மஞ்சள் அங்கி அணிந்து, சுகங்களைத் துறந்து, மும்மணிகளை வணங்கி, புத்தரின் பத்துவகைச் சீலங்களை மேற்கொண்டு, நான்குவகை வாய்மைகளைக் கடைப்பிடித்து, அட்டாங்க மார்க்கத்தில் ஒழுகுவதே பௌத்த தேரர் ஒருவருக்கு புத்தபகவானால் விதிக்கப்பட்ட உயரிய ஒழுக்க நெறியாகும்.
புத்தமதம் மனித உயிர்களுக்கு மட்டும் அல்லாமல் எந்த உயிர்களுக்கும் மனத்தினாலோ, வாக்கினாலோ தீங்கு விளைவிக்கக் கூடாதென்ற உயரிய கோட்பாட்டை கொண்டதாகும்.
பௌத்த தேரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்துவகை ஒழுக்கங்கள் (தசசீலங்கள்) ஆவன.
(1) கொல்லாமை.
(2) கள்ளாமை.
(3) பிறனில் விளையாமை.
(4)பொய் சொல்லாமை.
(5)கள்ளுண்ணாமை.
இவை பஞ்ச சீலம் எனப்படும். இவை துறவறத்தோருக்கும், இல்லறத்தோருக்கும் பொதுவானவை. பௌத்த தேரர்கள் இவற்றுடன் சேர்த்து மேலும் ஐந்து ஒழுக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அவை
(6) உண்ணத் தகாத வேளையில் உணவு கொள்ளாமை.
(7) இசை, ஆடல், பாடல், நாடகம் முதலியவற்றைக் கேட்டலும் பார்த்தலும் செய்யாமை.
(8) சந்தனம், மலர் முதலிய நறுமணப் பொருள்களை நீக்குதல்
(9) உயரமானதும் விசாலமானதுமான இருக்கைகளை நீக்குதல்.
(10) நாணயங்களையும் வெள்ளி பொன் முதலிய விலையுயர்ந்த பொருள்களையும் நீக்குதல் என்பன.
திரிசரணம், தச சீலம் இவற்றை மேற்கொண்டால் மட்டும் போதாது. நிர்வாணம் அடைவதற்கு இவற்றுடன் நான்கு வாய்மைகளையும் எண்வகையான நெறிகளையும் கைக்கொண்டு ஒழுக வேண்டும்.
பாலி மொழியில் சிகல (Sihala) என்ற சொல் சிங்கத்தைக் குறிப்பதாகும். இந்தச் சொல் முதல் முறையாக தீபவம்சத்தில் குறிப்பிடப்படுகிறது.
நமக்கு நம்முடைய அறிவுதான் வழிகாட்டி - புத்தர்
ஞானம் பெறுவதற்கு முதல் நாள் காலை ஒரு ஆல மரத்தின் கீழ் தியானத்தில் புத்தர் அமர்ந்து இருந்தார். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண் ஒரு முட்டியில் பால்சோறு கொண்டு வந்து சித்தார்த்தருக்குக் கொடுத்தார். அதை அவர் வாங்கி உண்டார். இதுதான் அவர் ஞானம் பெறுவதற்கு முன்னர் உட்கொண்ட கடைசி உணவாகும். உண்ட பின்னர் தனது இறுதி முயற்சியில் இறங்குவது எனத் தீர்மானித்தார்.
மனதில் தேக்கி வைத்திருந்த குறிக்கோளுடன் பகல் பொழுதைக் கழித்த பின் அன்று மாலை அருகாமையில் இருந்த வெள்ளரசு மரத்தின் கீழ் சென்று அமர்ந்து கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற இந்த வெள்ளரசு மரமே புகழ்பெற்ற மகா போதி மரமாக இன்றும் வழிபட்டு வரப்படுகிறது.
ஸ்ரீமகாபோதி என்பது இலங்கையின் முதல் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரசு மரம் ஆகும். புத்தர் இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளை கிமு கிமு 288 ஆம் ஆண்டில் அசோகப் பேரரசரின் மகளும் பௌத்த பிக்குணியும் ஆன சங்கமித்தை என்பவரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த மகாபோதி மரம் அனுராதபுரத்திலிருந்த மகாமேகவண்ண பூங்காவில் இலங்கை அரசன் தேவநம்பியதீசன் என்பவனால் நடப்பட்டது.
அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான மரங்களில் உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது.
நில மட்டத்திலிருந்து 6.5 மீட்டர் உயரமான சமதரையில் நடப்பட்டுள்ள இந்த வெள்ளரசு மரத்தைச் சுற்றிப் பாதுகாப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் பௌத்தர்களினால் மிகப் புனிதமாக மதிக்கப்படும் பவுத்த சின்னம் இதுவே. உலகம் முழுவதிலும் உள்ள பவுத்தர்களால் இது பெரிதும் போற்றி வழிபடப்படுகின்றது. இதைச் சுற்றியுள்ள சுவர், கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் என்னும் அரசன் காலத்தில் இம் மரத்தைக் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
வெள்ளரசு மரத்தின் கீழ் அமர்ந்த சித்தார்த்தர் 'எனது தோல், நார்கள், எலும்புகள் மட்டும் மிஞ்சட்டும். எனது குருதி, எனது தசை வரண்டு போகட்டும். ஆனால் உண்மையைக் கண்டறியும் மட்டும் இந்த இடத்தைவிட்டு நகரப் போவதில்லை” என்ற மன உறுதியுடன் தியானத்தில் அமர்ந்தார்.
அன்றைய இரவின் முதலாவது சாமத்தில் மார யுத்தம் முடிந்ததும், இரண்டாம் சாமத்தில் போதிசத்துவர் சமாபத்தி நிலையிலே தமது பழம் பிறப்புக்களை எல்லாம் தெரிந்து கொண்டார். மூன்றாம் சாமத்தில் 'எனது மனம் விடுதலை அடைந்தது. அஞ்ஞானம் அகன்றது. ஞானம் பிறந்தது. இருள் நீக்கப்பட்டு ஒளி எழுந்தது” எனப் புத்தர் தனது மனதுக்குள் சொல்லிக் கொண்டார். நான்காம் சாமத்தில் ஞானம் முதிர்ந்தது. உயிர்களின் பிறப்பு இறப்புக்களை அறியக் கூடிய ஞானதிருஷ்டி பெற்றார்.
பிறப்பு இறப்பு இரண்டுக்கும் உரிய காரணமும் அதன் நிவாரணமும் மார்க்கமும்; தெளிவாயிற்று. கடைசி இரவில் அஞ்ஞானம் நீங்கப்பெற்று நான்கு உயர்ந்த உண்மைகளை உணர்ந்து கொண்டார். கீழ்த்திசை வானத்தில் ஞாயிறும் எழுந்தான்.
அப்போது சித்தார்த்தருக்கு அகவை 35 மட்டுமே. ஞானம் பெற்றதால் புத்தர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவர் ஞானம் பெற்ற நாள் வைகாசித் திங்கள் பூரணையாகும்.
புத்தர் ஞானம் பெற்ற புத்தகாயா இன்று உலகளாவிய பவுத்தர்கள் யாத்திரை செல்லும் புனித நகராக விளங்குகிறது. இங்கே அசோகன் வந்து வழிபட்டான் என்றும் சொல்லப்படுகிறது.
புத்தரின் உபதேசங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதில் புத்தரின் அடிப்படைப் போதனைகள் அல்லது பௌத்தத்தின் பிழிவு இருக்கிறது. புத்தரின் உபதேசம் 'தர்ம சக்கரப் பிரவர்த்தனம்' என அழைக்கப்படுகிறது.
'சன்மார்க்கம் தேடித் தவத்தை மேற்கொள்ளும் துறவிகள் தவிர்க்கவேண்டிய இருவித யோக மார்க்கங்கள் உள்ளன - ஒன்று அமிதமான இன்பத்தைப் பற்றி நிற்கும் யோகம். ஐம்பொறிகளின் இயக்கங்களுக்கு முற்றுமே அடிமைப்பட்டு அந்தப் போகத்தில் இன்பம் காணும் மார்க்கம் வெறுக்கத்தக்கது, இழிவானது, சிறுமையுடையது, பயன் விளைக்காதது. இது ஒரு புறம்.
மறு புறம் தவிர்க்கப்பட வேண்டியது உடலை வருத்திக் கடுமையான நோன்புகளைக் கடைப்பிடிக்கும் ஹடயோக மார்க்கம்.
இதுவும் இழிவானது, துன்பத்தை விளைவிப்பது, பயனற்றது.
இந்தப் பயனற்ற, அமிதமான இரு வழிகளின் நடுவிலேதான் மிதமான சன்மார்க்க வழி அமையப் பெற்றிருக்கிறது. இந்த மத்யம மார்க்கம் அல்லது நடுவழி (Middle Path) தான் ததாகதர் கண்ட மார்க்கம். இது அகக் கண்களைத் திறந்து உள்ளொளி பிறப்பிக்கும் அறிவைக் கொடுக்கும் சாந்தியைத் தரும் பூரண மெய்ஞானத்தையும் தத்துவ போதத்ததையும் இறுதியில் நிர்வாண மோட்சமாகிய விமுக்தி நிலையையும் அடையக் கொண்டு செல்லும்.
இங்ஙனம் அகக் கண்களைத் திறந்து உள்ளொளி பிறப்பிப்பதும் அறிவும் சாந்தியும் தருவதும் பூரண மெய்ஞானத்தையும் தத்துவ போதத்ததையும் இறுதியில் நிர்வாண மோட்சமாகிய விமுக்தி நிலையையும் அடையக் கொண்டு செல்வதுமாகிய மத்யம மார்க்கம் எண் வகையான அட்டாங்க மார்க்கம் எனப்படும்.
புத்தரின் உபதேசத்தை செவி மடுத்த அய்ந்து தேரர்களும் பவுத்த சங்கத்தில் சேர்ந்து கொண்டார்கள். இவர்களே வரலாற்றில் பவுத்த சமயத்தில் முதன் முதல் சேர்ந்து கொண்ட தேரர்கள் ஆவர்.
தனது 35 வது அகவையில் ஞானம் பெற்ற புத்தர் அடுத்த 45 ஆண்டு காலம் ஊர் ஊராக, நாடு நாடாகச் சென்று தான் கண்டறிந்த நான்கு வாய்மைகளையும், துக்க பரிகாரத்துக்கு உரிய அட்டாங்க மார்க்கத்தையும் துறவிகளான புத்த தேரர்களும் இல்லறத்தாரும் பின்பற்ற வேண்டிய பஞ்ச சீலத்தையும், புத்த தேரர்களுக்கே உரிய மேலும் ஐந்து சீலங்களையும் மொத்த தசசீலங்களையும் போதித்தார்.
அரசர் ஆண்டியர், ஏழை பணக்காரன், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமின்றி எல்லோருக்கும் அவர் போதனை செய்தார். தனது போதனைக்கு அன்றைய இலக்கிய வழக்கில்; இருந்த சமஸ்கிருத மொழியைக் கைவிட்டு எல்லோருக்கும் தெரிந்திருந்த பேச்சு மொழியான மகதத்தைப் பயன்படுத்தினார். தனது போதனைகளைப் பரப்ப தேரர்கள் என அழைக்கப்பட்ட சீடர்களை புத்த சங்கத்தில் சேர்த்துக் கொண்டார்.
புத்தர் தன்னை கடவுள் என்றோ, மகான் என்றோ அல்லது கடவுளை வணங்குவதால் துன்பங்கள் தொலையும் என்றோ சொன்னதில்லை. ஒவ்வொருவரின் துன்பங்களையும் அவரவராலேயே போக்கிக்கொள்ளமுடியும். எப்படி? அவராகவே தன்னைத்தானே அறிந்து கொள்வதன் மூலம்.
புத்தர் மீட்சிக்கான வழியை, நாம் எப்படி வாழ வேண்டும் என்ற கேள்விக்கான விடையிலிருந்து தொடங்கினார். எப்படியும் சாகப் போகிறோம். எனவே, சமூக முரண்பாடுகளோடு மோதிவிட்டுச் சாவோம் என்ற கடமையை நோக்கி வாழ்க்கையைத் தொடங்கக் கற்றுக் கொடுத்தவர் புத்தர். அவர் கற்றுக் கொடுத்த வாழ்க்கையை நோக்கி வாழப் புறப்பட்டவர்கள் தான் அச்சத்தின் நோயிலிருந்தும் வழிபாட்டின் மனநோயிலிருந்தும் மீள முடியும்;. மற்றவர்கள் மீளுவதற்கும் துணைபுரிய முடியும்.
தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்க வழக்கம் என்பதற்காகவோ - நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டதனால் அது புனிதமானது என்பதற்காகவோ - தாய் - தந்தையர், ஆசிரியர் சொல்லியது பற்றி நடந்தது என்பதற்காகவோ - எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பது புத்தரின் அறிவுரையாகும்.
புத்தர், நம்டைய அறிவார்ந்த சிந்தனை எப்படி வழி நடத்துகிறதோ, அதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்;. நமக்கு நம்முடைய அறிவுதான் வழிகாட்டி என்றார்.
மனிதர்கள் உண்மையையும் மெய்யான உண்மையையும் அறிய வேண்டும். அவர்களுக்குச் சுதந்திரம் மிக மிக அவசியமானதாகும். உண்மையைக் கண்டறிய ஒரே வழி கருத்துச் சுதந்திரமே என்றார் புத்தர். மனிதர்களின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானிலிருந்து விழுகின்றனவா? இல்லை. மூளையில் இயல்பாக உள்ளனவா? அவை சமுதாய நடைமுறையிலிருந்து மட்டும்தான் தோன்றுகின்றன என்றார். மனிதர்களை அவர்களின் மனம் எத்தன்மை உடையதாய் ஆக்குகிறதோ அப்படியே அவர்களாவார்கள்.
மனதின் நன்மையை நாடும் பயிற்சியே அறவழியின் முதற்படிக்கட்டு என்றார் புத்தர். மனிதன் சிந்தனை, அவனியிலிருந்து புறப்பட்டு, கடவுள்களின் உலகத்தை நோக்கி திருப்பப்படுவதை புத்தர் தடை செய்தார். மனிதர்களின் தேடலை உள்நோக்கி வழிநடத்தி, அவர்களுக்குள்ளேயே ஆற்றலை உணரச் செய்தார்.
எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்ட வேண்டும் என்பதே புத்தரின் போதனையாகும்
மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பவுத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். புத்தர் உயிர்கள் மூவகைப்பட்டது என்று சொல்லியிருக்கிறார். அதாவது மனிதர், விலங்குகள், தாவரங்கள். இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது. தீங்கு விளைவித்தால் அது எல்லா உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு தீங்கு விளைவித்ததாக முடியும். போரில் இந்த மூவகை உயிர்களும் கொல்லப்படுகின்றன.
இப்படி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் பௌத்த மத தேரர்கள் ஆயுதப் போரை எப்படி ஆதரிக்கலாம் எனறு கேட்கலாம். அதற்கு விடை இலங்கையில் பௌத்தம் சிங்கள – பௌத்தர்களால் திரிபுபடுத்தப்பட்டுவிட்டது.

முஸ்லிம்கள் அரேபியாவுக்கு செல்ல தயாராகுங்கள்! ஞானசார தேரர் -Battinaatham- Tamil News Portal

முஸ்லிம்கள் அரேபியாவுக்கு செல்ல தயாராகுங்கள்! ஞானசார தேரர் -Battinaatham- Tamil News Portal

அம்மா என்றால் அன்பு - Amma endraal anbu







மறைந்த தமிழக முதல்வர் அடிமைப் பெண் திரைப் படத்தில் பாடிய பாடல்
"அம்மா என்றால் அன்பு" இசை மேதை M S விஸ்வநாதன்இசையில் கேட்டுப்
பாருங்கள்



துக்ளக்!

மறைந்த ஹாஸ்ய நடிகர்,நகைச்சுவை எழுத்தாளர்,அரசியல் விமசகர்,அரசியல் சாணக்கியன் இன்னும் எவ்வளவோ இவரைப் பற்றிச் சொல்லலாம்,ஆனால் எனக்குப் பிடித்தது,எதைப்பற்றியும் பயமில்லாமல் இவர் எழுதும் விமர்சனம்,துக்ளக் பத்திரிக்கை தொடங்குவதற்கு முதல்,ஆனந்த விகடன் பத்திரிக்கை இவரைப் பேட்டி கண்டது அதன் தொகுப்பு வாசித்துப் பாருங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நமது இதய அஞ்சலிகள். 



1970 ஜனவரியில் துக்ளக் இன்னும் ஆரம்பிக்காதபோது சோவை விகடனில் எடுத்த பேட்டி. நன்றி, விகடன்!
பத்திரிகை ஆசிரியர் ஆகிறார் ‘சோ’!
நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர் சொல்கிறார்களே, உண்மையா?
சோ: யாரெல்லாம் சொன்னார்கள்?
நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காண வந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் பேட்டி காணப் போகிறீர்களா?
சோ: நான் உங்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து நானும் ஒரு பத்திரிகைக்காரனாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லையா?
நிருபர்: உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது?
சோ: அது தமிழ்நாட்டின் தலை விதி!
நிருபர்: உங்கள் பத்திரிகையின் ஆசிரியர் யார்?
சோ: ஒரு சகலகலா வல்லவர்!
நிருபர்: யார் அது?
சோ: நான்தான்.
நிருபர்: பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம், லட்சியம் என்ன?
சோ: மக்களுக்கு நல்வழி காட்டி ஒரு புதிய பாரதத்தை உண்டாக்க வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எல்லா மக்களும் தோள் கொடுத்துச் செயலாற்றவேண்டும்; ஒவ்வொரு தமிழனும் தன் கடமையை உணர்ந்து தன்னைப் பெற்ற தாய்க்கும், தான் பிறந்த மண்ணிற்கும் பெருமை தேடித் தர வேண்டும்; இலக்கியம், பண்பாடு, இந்தியக் கலாசாரம் இவை ஓங்கி வளரவேண்டும். இந்த லட்சியங்களுக்காகத்தான் நான் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அது என் தவறல்ல! பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது; ஆரம்பிக்கப் போகிறேன். அவ்வளவுதான்!
நிருபர்: உங்கள் பத்திரிகை எப்போது வெளிவரும்?
சோ: பொங்கல் ரிலீஸ்!
நிருபர்: முதல் இதழில் உங்கள் பத்திரிகையில் என்னென்ன வரும் என்று சற்று விளக்கமாகக் கூற முடியுமா?
சோ: ஏன்? துக்ளக்கை யாரும் வாங்கக் கூடாது, உங்கள் ஆனந்த விகடனையே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பார்க்கிறீர்களா?
நிருபர்: சரி! உங்கள் பத்திரிகையின் அமைப்பைப் பற்றி ஏதாவது கூற முடியுமா?
சோ: எவற்றையெல்லாம் பார்த்து எனக்குச் சிரிப்பு வருகிறதோ அவற்றையெல்லம் பார்த்து மக்களையும் சிரிக்க வைக்க முயலப் போகிறேன். I am going to look around me and also make my readers look around themselves.
Yes you did it
RIP Cho sir...
நேர்மை உறங்கிய நேரமிது-
Vijayakumar Arunagiri

சோ சார்என்றும் நல்லதையே நினைப்பார் நல்லதையே செய்வார் என்பதற்கு பிரதமர் மோடி அவர்களை அவர் தொடர்ந்து ஆதரித்து எழுதியதும் மோடி குஜராத் மாநில முதல்வராக இருக்கும் பொழுதே தமிழ்நாட்டுக்கு மோடியை அழைத்துவந்து அறிமுகப்படுத்தி துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வைத்ததும் அவரு க்கு இந்த தேசம் யார் தலைமையில் பின்னால் செல்லும் என்கிற தீர்க்க தரிசனம் இருந்ததை அறிந்து கொள்ள லாம்.
எமர்ஜென்சி காலத்தில் எந்த வித சமரசமும் இல்லாமல் துணிந்து எதிர்த்து நின்ற ஒரே தமிழ் பத்திரிக்கை துக்ளக்
மட்டுமே..வாசகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதையே
பத்திரிக்கைகள் கொடுத்து வரும் நிலையில் பத்திரிக்கை ஆசிரியருக்கு என்ன பிடிக்குமோ அதையே வாசகர்கள்
படிக்க வேண்டும் என்று ஒரு இதழ் இந்தியாவிலேயே வருகிறது என்றால் அது துக்ளக் மட்டுமே..
நிறைய விஷயங்களில் ஆசிரியருடன் வாசகர்கள் முர ண்பட்டாலும் இன்றும் துக்ளக் பத்திரிக்கையின் வாச
கராக இருப்பதையே என்னைப் போன்றநிறைய பேர் பெருமையாக கருதுகிறார்கள்..ஆசிரியர் என்பவர் அவர் விருப்பபடியே பாடம் நடத்துவார்.நடத்த வேண்டு ம்.மாணவர்கள் விரும்பிய பாடங்களை தான் ஆசிரியர் எடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் அவர் ஆசிரியராக இருக்க முடியாது..
துக்ளக்க்கை படிக்கும் பொழுது பழைய குருகுல கல்வி யே நினைவுக்கு வரும்.ஏனென்றால்ஆசிரியர் என்பவர்
சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்விஷயங்களையே
மாணவர்களுக்கு போதித்து வந்தார்கள் என்று பழைய குரு குல கல்வியை பற்றி கேள்விப்பட்டிருப்போம்
ஆனால் அதை இப்பொழுதும் துக்ளக் வாயிலாக பார்த்து க்கொண்டு இருக்கிறோம்
சோ அவர்கள் என்னைப் போன்ற வாசகர்களுக்கு குரு மட்டுமல்ல. ஜெயலலிதாபோன்றவர்களுக்கு அரசியலில் ராஜகுருவாகவும் இருந்தவர்.ஒரு பத்திரிக்கையாளர்
இந்தியாவில் இருந்த அனைத்து உயர்மட்ட அரசியல் வாதிகளிடையே நெருக்கமான நட்பு இருந்தும் அவர்
நேர்மையாக இருந்தார் என்றால் அவர் சோ மட்டுமே.
என்னுடைய 12 வயதிலேயே துக்ளக் படிக்க ஆரம்பித்த
நான் அப்போழுது அதை கோபத்துடனே படித்து முடிப் பேன். ஏனென்றால் கூவம் நதிக்கரையிலேயே வரும் பொழுது நான் கூவத்திலேயே இருந்துள்ளேன்..அதாவது திமுக வில் என்று சொல்கிறேன். ஏன் கருணாநிதியை
மட்டும் திட்டி எழுதுகிறீர்கள் என்று அந்த காலத்திலேயே
துக்ளக்கிற்கு லட்டர் எழுதியவன் நான்..
இன்னொன்று தெரியுமா?
1976 ல் திமுக அரசு எமர்ஜென்சியின் பொழுது டிஸ் மிஸ் செய்யப்பட்டப் போது சோ அவர்கள் நேரடியாகக் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தன் தார் மிக ஆதரவைத் தெரிவித்ததை அன்றைய திமுக எடுபிடி
பத்திரிக்கை ஆசிரியர்கள் செய்ய வில்லை.இதற்கு மேல்
ஒரு பத்திரிக்கையாருக்கு என்ன நடுநிலைமை வேண் டும் சொல்லுங்கள்...
ஜெயலலிதா தவறு செய்த பொழுது 1996ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கி திமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்தி அத ற்கு தொகுதி பங்கீடு பேச அறிவாலயம் சென்று கருணா நிதியுடன் நேரிடையாக பேசி இறுதி செய்து வந்து ரஜினியை ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக குரல் கொடு க்க வைத்து ஒரு மாநில ஆட்சியையே மாற்றி தமிழக
அரசியல் கொஞ்சமாவது நல்லதாக இருக்க உதவியர்
சோ சார் தான்..
ஏனென்றால் அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி ரஜினிக்கு
தூண்டில் போட்டு தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்து அதன்
மூலம் தமிழகத்தில் தலையெடுக்க நினைத்து இருந்தது.
அதனால் ரஜினியை நேரடியாக அழைத்துஅப்போதைய பிரதமர் நரசிம்மராவ் பேசிக்கொண்டு இருந்த பொழுது
ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்டால் அது
வாக்கு பிரிவு ஏற்பட்டு மீண்டும் அதிமுகவே ஜெயிக்கும்
என்று சரியாக திட்டமிட்டு அந்த நேரத்தில் அதிமுக
ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற ஒரே குறிக்கோ ளில் திமுகவை பலமாக்கி வெற்றி பெற வைத்து அன்றைய சூழ்நிலையில் மாற்றம் கொண்டு வந்தார்.
கம்யூனிசம் ஒரு காலாவதியான சித்தாந்தம் என்று அடிக்கடி சொல்லும் சோ அவர்கள் ஒரு முறை அரசிய லில் இன்றும் நேர்மையானவர்கள் இருக்கிறார்களா என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு...இருக்கிறார்களே கம்யூனிஸ்ட் கட்சியில் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லியிருந்தார்.
பாருங்கள்.அரசியலில் நேர்மை இருக்கிறது ஆனால்அது அவர் ஓட்டுப் போட சொல்லும் பிஜேபி அதிமுகவை விட
கம்யூனிஸ்டுகளிடம் தான் இருக்கிறது என்று சொல்வத ற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும் தெரியுமா? இது தான் மனசாட்சி..
என்னுடைய தந்தை படித்த புத்தகங்களில் நான் ஒன்றை
எடுத்து படித்துள்ளேன் என்றால் அது துக்ளக் மட்டுமே.. நான் வாங்கும் துக்ளக் ஜூனியர் விகடன் குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற புத்தகங்களில் என் மகன் துக்ள க்கை தடவி எடுக்கும் பொழுது மனசுக்குள் தலைமுறை உணர்வுகள் இடம் பெயரும் ஒலி கேட்கிறது..
இதை மாதிரியே சோ சார் இல்லையென்றாலும் துக்ளக்
அவர் காட்டிய பாதையில் சென்று தலைமுறைகள் கடந்து நிலைத்து நின்று அவரின் புகழ் பாடிக்கொண்டே
இருக்கும்..

வாழை இலையின் பயன்கள்...!

வாழை இலையின் பயன்கள்...!
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.