புதன், 19 அக்டோபர், 2011

சொந்த வீட்டில் வசிக்கும் அதிர்ஷ்டம் !


சொந்த வீட்டில் வசிக்கும் அதிர்ஷ்டம் !
எவருக்குத்தான் ஆசையில்லை சொந்த வீட்டில் வாழ்வதற்கு,அதற்கும் ஒரு கிரக அமைப்பு இருக்க வேண்டும் நமது ஜாதகத்தில்,முயற்சி செய்து பாருங்கள்  
நன்றி:வீரகேசரி சோதிட ஆசிரியர் திருவோணம்.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

சனிவாரி வழங்கத் தொடங்கினால்,எவரால் தடுக்க முடியும்!.....

சனிவாரி வழங்கத் தொடங்கினால்,எவரால்  தடுக்க முடியும்!.....

சனிக் கிரகத்தின் பெருமையையும், அதன் காரகத்துவத்தையும்,சனியின் பார்வையால்,உண்டாகும் நன்மை தீமைகளையும்,விளக்கியுள்ளார்,ஆசிரியர் 
திருவோணம் வாசித்துப் பயன் பெறுங்கள்.



நன்றி,வீரகேசரி சோதிட ஆசிரியர் திருவோணம். 

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

செல்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்,கிரகநிலை கொண்ட சாதகர் யார்?

செல்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்,கிரகநிலை கொண்ட சாதகர் யார்? 
எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய,உங்கள் மௌசை படத்தின்மேல் வைத்து கிளிக் பண்ணுங்கள்.

நன்றி:வீரகேசரி சோதிட ஆசிரியர் திருவோணம் அவர்கட்கு.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

வெளிநாடு சென்று வாழும் யோகம் உங்கள் சாதகத்திலுண்டா?

வெளிநாடு சென்று வாழும் யோகம் உங்கள் சாதகத்திலுண்டா?
எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய மௌசை எழுத்தின் மேல் வைத்து 
கிளிக் பண்ணவும்.   


நன்றி வீரகேசரி சோதிட ஆசிரியர் திருவோணம் அவர்கட்கு.

வெள்ளி, 17 ஜூன், 2011

திங்கள், 13 ஜூன், 2011

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன்.


(ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையும் தமிழீழ விடுதலையும் என்ற தலைப்பில் சென்னையில் மே 17 இயக்கம் நடத்திய கருத்தரங்கில் பேராசிரியர் பால் நியூமேன் பேசியது. இவர் பெங்களூரு பல்கலைக் கழகத்தின் அரசியல் துறையில் பணியாற்றிவருகிறார். போரினால் இலங்கைத் தமிழர்களின் வாழ்வு எந்த அளவிற்கு சிதைக்கப்பட்டது என்பதை நேரிடையாக கண்டு வந்து ஆய்வு செய்து அறிக்கையளித்து முனைவர் பட்டம் பெற்றவர் பால் நியூமேன்)

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு அறிக்கை குறித்து நான் பேசத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு முக்கிய விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு முன்பு இங்கு பேசிய பலர், இலங்கையில் நடந்த போரில் 40,000 பேர் வரை தமிழர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார்கள். அவர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொளகிறேன். அந்தப் போரில் 1,46,679 பேர் கொல்லப்பட்டோ அல்லது காணாமல் போயோ உள்ளனர் என்பது உறுதியான, சிறிலங்க அரசால் கூட மறுக்க முடியாத உண்மையாகும். இதனை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்த கற்ற பாடங்களும், இணக்கபாபடு ஆணையமும் என்ற விசாரணை ஆணையம் முன்பு, மன்னார் பேராயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள் வாக்குமூலமாக அளித்துள்ளார்கள். அதிகாரப்பூர்வமான இந்த எண்ணிக்கையை அனைவரும் எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறன்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்திய போர் முடிந்த பிறகு அங்கு சென்ற ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், அந்தப்போரில் நடந்த அத்துமீறல்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றார். ஆனால் ராஜபக்ச ஒப்புக்கொண்டதை செய்யவில்லை. 

அதன் பிறகு 2010ஆம் ஆண்டு ஜனவரியில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஒரு விசாரணையை நடத்தி, இலங்கை அரசும், அதன் அதிபர் ராஜபக்சவும் போர்க் குற்றவாளிகளே என்று அறிவித்தது. இலங்கை அரசு மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளது என்று தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு அளவில் எழுந்த அழுத்தத்தை அடுத்து ஒரு நிபுணர் குழுவை பான் கி மூன் அமைத்தார்.

போர் நடந்து முடிந்து 13 மாதங்கள் இந்தக் குழுவை நியமிப்பதற்கு காலதாமதப்படுத்தினார். 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. ஜூலை 2ஆம் தேதி ஜேவிபி எம்.பி.யாக இருந்த சிங்களத் தலைவர் ஒருவர், தற்போது அமைச்சராக இருக்கிறார். அவர் ஐ.நா. சபை அலுவலகத்திற்குப் போகிறார். இரண்டு நாட்கள் உள்ளே யாரும் போக முடியாது. வெளியே யாரும் வர முடியாத வகையில் கொழும்பு ஐ.நா.அலுவலகத்தை முற்றுகையிட்டார். அதை பார்த்து கூட பான் கீ மூனோ, வேறு எந்த நாடோ கண்டிக்கவில்லை.

இந்தியாவில் இதுபோன்ற நடந்திருந்தால், ஐ.நா.வில் இருந்து ஒரு ராணுவத்தையே அனுப்பியிருப்பார்கள். ஆனால் இரண்டு நாள் உள்ளே இருக்கும் அலுவலர்களை வெளியில் அனுமதிக்கவில்லை. அடைத்து வைத்திருந்தார்கள். அரசு உதவியோடு ஒரு அமைச்சர் செய்த குற்றத்திற்கு ராஜபக்சவினுடைய ஆசிர்வாதம் இருந்தது. ஆனாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது நடந்தது ஜூலை மாதத்தில். செப்டம்பர் மாதத்தில்தான் இந்தக் குழு செயல்பட ஆரம்பிக்கிறது. 

இந்தக் குழுவைப் பற்றி யாரும் பேசுவதற்கு தகுதி கிடையாது. ஏனென்றால், அப்படிப்பட்ட நேர்மையாளர்களைக் கொண்ட குழு இது. மார்சுகி தாருஸ்மான் என்பவர் இந்தோனேஷியாவினுடைய அரசு தலைமை வழக்குரைஞராக இருந்தவர். ஜென்ரல் சுகார்டோ என்ற இந்தோனேஷியா ஜென்ரலை கூட அவர் விட்டுவைக்கவில்லை. 7 ஆண்டுகள் வழக்கை நடத்தி, விசாரணை நடத்தி அங்கிருப்பவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் மார்சுகி தாருஸ்மான். குழுவின் மற்றொரு உறுப்பினராக யாஷ்மின் சூக்கா, நெல்சன் மண்டேலாவிற்கு நெருங்கிய நண்பர். ஸ்டீவன் ராட்னர் இண்டர்நேஷனல் கமிட்டி ஆஃப் ரெட் கிராஸினுடைய ஆலோசகர். அதுமட்டுமல்லாமல், அவர் உலக அளவில் புகழப்படும் மனித உரிமைகள் வழக்குரைஞர். இவர்களை நியமிக்கும் போது இலங்கை அரசை கேட்டுதான் பான் கீ மூன் நியமித்தார். அதுவரைக்கு அவருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் குழு அறிக்கை வந்த பிறகு, அதுகுறித்து அவர்கள் சொன்ன முதல் வாக்கியம் என்னவென்றால், இதுவொரு பயன்றற அறிக்கை என்று. இலங்கை சர்வதேச அளவில் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை. 
FILE

இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் கொல்லப்பட்டது மட்டுமின்றி, அவர்கள் வாழ்ந்த பகுதியில் 67 விழுக்காடு விவசாயம் குறைந்துள்ளது. மீன் பிடிப்பு 45 விழுக்காடு குறைந்துள்ளது. தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களில். 50 லட்சம் பனை மரங்களை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். இதைப்பற்றி இந்தக் குழு ஒன்றுமே பேசவில்லை. அதனால் இது ஃபால்ஸ் ரிப்போர்ட். ஆனாலும் இந்த அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் இந்த மூன்று பேருடைய நேர்மைக்கு எதிராக கேள்வி எழுப்ப முடியாது. இவர்கள் யாருடைய அழுத்தத்திலும் வேலை செய்யவில்லை. அந்தப் பெருந்தன்மையை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் தயாரித்த 122 பக்க அறிக்கை மார்ச் 31ஆம் தேதியே தயாராகிவிட்டது. ஆனால் வெளியிட்டது ஏப்ரல் 26. தமிழகம் உட்பட இந்தியாவின் 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்த நாள் ஏப்ரல் 25. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த நாள் ஏப்ரல் 13. இந்த அறிக்கை ஏப்ரல் 1ஆம் தேதி வெளி வந்திருந்தால் இங்கே உள்ள அரசு வெற்றி பெறாது என்ற நம்பிக்கையில் உள்ளே வைக்கப்பட்டது. ஆனால், இங்கிருக்கும் சில சகோதரர்கள் ஐ.நா. அறிக்கையை அறிக்கையை விட வேகமாக வேலை செய்வார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

நன்றி;தினமலர்

வெள்ளி, 3 ஜூன், 2011

கைத்தொலைபேசி பாவிப்பவரா நீங்கள்?


Forensic Experts Say Tamil Killings Video is Authentic

யார் சொல்வது உண்மை

Forensic Experts Say Tamil Killings Video is Authentic

Forensic experts say video footage that documents the extrajudicial executions of Tamil civilians, allegedly by members of the Sri Lankan Army, is authentic.

What the video shows 

This five-minute soul-searing video graphically shows Sri Lankan soldiers shooting people at close range.  Fourteen corpses of naked men and women are lying on the ground with their hands tied behind their backs.  In one scene, a group of laughing soldiers is standing around a dead, naked woman.

The video, which was broadcast by a British Television Channel last year, was filmed on cell phones during the last phase of Sri Lanka’s decades-long civil war that ended in 2009.   Thousands of people allegedly were killed during this final battle between the government and Tamil Tiger rebels.

Authorities claim it's fake 

Sri Lankan authorities reject the video as a fake and accuse the United Nations of bias and meddling in its state affairs.

To lay these charges to rest, U.N. Special Investigator on Extrajudicial Killings Christof Heynes hired four independent forensic experts to examine the authenticity of the video.

He says the experts looked to see if there was any tampering of the video and whether the people who were filmed were actors.

“The claim that I make is that the video is authentic," said Heynes.  "The claim that I make is that these are real people being killed.  I do not make, as I have said, the claim that particular individuals are guilty of a crime.  I am not in a position to do that and where things are at the moment is then to make the claim there is a prime facie case, a case that should be taken seriously and it should go to the next level of investigation-both on the domestic and on the international level then.”

Analysis process 

Forensic video analyst Jeff Spivack says there are limitations to any analysis.  But he says there is a long list of things analysts look at to determine when a film is real or fake.

These include evidence of image manipulation, image creation, staging, discontinuity, and indoor evidence of undisclosed image processing.

“While absolute confirmation of authenticity is not possible, all available evidence suggests to a high probability of authenticity from a technical perspective,” Spivack said.

U.N. Special Investigator Heynes presented his findings to the U.N. Human Rights Council and says he has provided the Sri Lankan government with the video.

He urges the government to undertake its own independent investigation.  Heynes also is calling for an international investigation into serious crimes that may have been committed.
 Thanks for VOA news .com

ஞாயிறு, 22 மே, 2011

மகா சமாதி.


வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.


 சுவாமிகளின்,ஆத்மா இறைவனின் பாதங்களில் சாந்தியடைய, பத்தும் பலதும் வாசகர்களாகிய 
நாமும், எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்.

"பத்தும் பலதும்"

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே,!



"சுருட்டுக் குடிக்கக் கூடாது" இது இலங்கையில்,ஆங்கில ஆட்சியாளர்களின் 
காலத்தில், அரச திணைக்களங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள்,புகையிரத 
நிலையங்கள், இப்படி முக்கியமான இடங்களில் இந்த விளம்பரப் பலகைகைகளைக் காணக் கூடியதாக இருந்தது.இதன் விளக்கம் என்னவென்று 
அந்நாளில் புரியவில்லை,விளக்கம் புரிய ஆரம்பித்த போது,சிரிப்புத்தான் வந்தது."புகை பிடிக்கக் கூடாது"என்பதை எப்படி ஆங்கிலேயர் விளங்கியுள்ளார்கள் என்பதை நினைத்து.

இது போலத்தான்,இந்தப் பாடலும்,இலங்கையில் மது என்ற பதம் அநேகமாகப் 
பாவிக்கப் படுவதில்லை,தற்போதைய சமுதாயம்,சாராயம்,கள்,போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மாத்திரமே உபயோகிக்கிறார்கள். இலங்கையில் 
மதுக் கடைகளைக் கொண்டு  வருவதற்கு முதல், கள்ளுக் கடைகள் தான் 
பிரபல்யம்,1970  துகளில் பிரபல்யமான இப் பாடலில் கள்ளின் மகத்துவம் 
சொல்லப் பட்டுள்ளது, இதனால் வரும் சங்கடங்களையும்,மிகவும் எளிமையாகப் பாடி விளக்கியுள்ளார் திரு நித்தி கனக ரெத்தினம் கேட்டுப் 
பாருங்கள்.  

சனி, 2 ஏப்ரல், 2011

இப்படியெல்லாம்,நினைக்கக் கூடாது. ?


மடிக்கனணி,மாவாட்டுங்கல்,திங்கரிசி,திருமணத்திற்கு
உடுபிடவை,இவையெல்லாம் இலவசமாய் யான் இடுவேன் 
தங்கத் தமிழகத்துத் தமிழ் மக்களே,நீங்கள்  
எங்கள் குடும்பம் கோலோட்ச வாக்கிடுங்கள்.

வீதிக்கொரு டாஸ்மார்க்,விடிய விடிய டிவி.
வீக்கிக்கு ஒரு தமிழ்ப்படம்,இடை இடையே இசைவிழா 
எடுத்ததற்கெல்லாம் தந்தி கடிதம்,
இதைவிட என்னவேண்டும் உனக்கு 

படிக்கக் கவிதை,பாராட்ட  என் படைப்புக்கள்,
திட்டித் தீர்க்க திகட்டாத தேன் தமிழ்
மட்டிட முடியாத மக்கள் சொத்து 
காட்டிட முடியாது கணக்கு.

இலவச மின்சாரம் இடயிடையே கரண்ட் கட்.
இளைப்பாறவும்,இன்னல் வரும்போது பேசவும் 
இலங்கைப் பிரச்சினையும் ஈழத் தமிழனும்,
இவை போதும் எனக்கு.

    

புதன், 30 மார்ச், 2011

இலண்டன் மாப்பிள்ளை!




 நகைச் சுவையுடன் நல்ல அறிவையும் சொல்லும் பாடல் கேட்டுப் பாருங்க,பாடியவர் நித்தி கனக ரத்தினம், 

வெள்ளி, 25 மார்ச், 2011

மின் அஞ்சலில் அதிர்ஷ்டம்


முதலில் இந்த மின் அஞ்சலைப் படியுங்க, எனக்கு மட்டும் ஏன் இப்படி பரிசு மலையாகக் கொட்டுது என்றே தெரியவில்லை, குபேரன் என்னைத்தான் அவன் வாரிசாக நியமித்து விட்டன்போல் தெரிகிறது, உங்களுக்கும் இப்படி வந்திருக்கா, பாருங்க.கூகுளின் ஜி மெயிலுக்கு இவங்க,பணம் தரப் போறாங்க.
உங்க மின் அஞ்சலையும் பாருங்க, நீங்களும் ஒரு கோடீஸ்வரனாக மாற வாய்ப்புண்டு. 

வியாழன், 24 மார்ச், 2011

இன்றைய கூகுளின் தலையங்கம் !

இயற் பெயர் எரிக் வெய்சு,பிறந்தது, 24 மார்ச்சு 1874; புடாபெஸ்ட்,ஆஸ்திரியா.அங்கேரியில் பிறந்த ஒரு மாயக்கலை வல்லுனர் ஆவார். இவர் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட கண்கட்டிவித்தைகளைச் செய்வதில் வல்லவர் ஆவார்.இவரை கௌரவிப்பதற்காக இன்றைய கூகுளின்  தலையங்கத்தில் இடம் பெற்றுள்ளார்.இவர் பார்த்த தொழில்கள்,மாயக்கலை வல்லுநர்,நடிகர்,வரலாற்றாளர்,படத் தயாரிப்பாளர்,வாநூர்த்தியோட்டி.
இவரின் பிரபல்யமான பெயர்,

Harry Houdini

ஆரி ஔதினி


 இவரின் வாழ்க்கை வரலாறை அறிய.









இறப்பு: 31 அக்டோபர் 1874 டெட்ராய்ட்மிச்சிகன்

புதன், 23 மார்ச், 2011

குறைந்து வரும் தமிழ் இணைய வாசகர்கள்.


போகிற போக்கைப் பார்த்தால்,மெல்லத் தமிழ்,இனிச் சாகும் என்பதை மீண்டும் ஒரு முறை,நினைவுபடுத்த வேண்டியுள்ளதே என்பதையே இந்த முடிவுகள் வெளிக் காட்டுகிறது.
தமிழ் பதிப்புகளை, இணையத்தில் வெளியிடும்,நிறுவனங்களின் தரவுகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில்,தமிழ் வாசகர்களின் வாசிப்புத் தன்மை குறைவடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்ற வருடத்தில் மட்டும்,தினசரிப் பதிப்புகளின் வாசகர்கள்  7.62 லட்சம்  
பேர் சென்ற ஆண்டைவிட தினசரிப் பதிப்புக்களின் பக்கம் காலடி எடுத்து வைக்காமல்,இப் பதிப்புகளின் வாசகர்களின் வரவு குறைவடைந்து உள்ளதாக,புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளது.  


இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் முதல் இடத்திலிருக்கும்  பத்திரிகையில்,தினத்தந்தி முதலிடத்தில் இருந்தாலும் முந்திய காலங்களில்,முதல் மூன்று தவணைகளில் இருந்த இணைய வாசகர்களை,இழந்துள்ளது 

இணைய வாசகர்களின் வாரப் பத்திரிகைகளான, குமுதம்,ஆனந்த விகடன்,
குங்குமம்,போன்றவைகளின் இணைய வாசகர்களின் வாசிப்புப் போக்கும்,
குறைவடைந்து செல்வதாக,இந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எல்லாவற்றையும் இலவசமாக்க நினைக்கும் தமிழக அரசு, இதற்கு ஒரு இலவச திட்டம் கொண்டு வந்து,ஆமா லப்டப் மூலம் தமிழ் வாசிப்புப் பழக்கத்தை கொண்டுவந்து இன்னும் ஓர் நான்கு வருடம் ஆட்சியைத் தக்க வைக்கலாம்  
முழுமையாக வாசிக்க இங்கே செல்லுங்கள்.

செவ்வாய், 22 மார்ச், 2011

பயங்கரமான பதிவு!

பயங்கரமான பதிவு!

எவரையும் வாசிக்கச் சொல்லவில்லை,நீங்கள் தைரியமானவராக இருந்தால்,
உங்கள் உடல் நிலை இதற்கு இடம் கொடுக்கு மென்றால்,இந்த லிங்கில் சென்று 
இந்த வலைப் பதிவைப் பாருங்கள்,வாசிக்காதீர்கள்.படத்தை மாத்திரம் பாருங்கள்.இன்னும் நான் தெளியவில்லை இந்த அகோரத்தைப் பார்த்து.தொடர 
விரும்புபவர்கள் இங்கே செல்லுங்கள்  வலைப் பதிவைத் திறந்ததும் கேட்கும் சத்தமே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. 

ஞாயிறு, 20 மார்ச், 2011

சிந்திய தமிழ்.



இதுதான்  நீதி.

போராடியவன்,
சிறையில்,
கைதியாக.

போராடச் 
சொன்னவர்கள்,
அரச சபையில்,
அதிதிகளாக.

பார்த்திருந்தவர்களோ,
பாவம்,
அகதிகளாக,
தாய் நாட்டில்.


கருணாநிதி
பெயரிலும் நிதி  
படைப்பதும் நிதி 
இலங்கைத் தமிழருக்கு 
மட்டும் செய்வது,
இவர் அநீதி.
கஷ்டம் வரும் போதெல்லாம்,
கைகொடுப்பது,
இலங்கைத் தமிழன்.
ஜெயலலிதா 
ஜெயம் இவர் சொந்தம்,
மூன்று மூளைக்குச் 
சொந்தக்காரர்.
மூன்றும் சேர்ந்து 
வேலை செய்வதால்,
வெற்றியில் கிடைப்பது,
தோல்வியில் மறைந்து விடும்.
அன்பை பகையாக்கும்,
அளவிடமுடியச் சக்திக்குச்
 சொந்தக்காரர்.


மகிந்த ராஜ பக்ச 
சிங்கள  மக்களின்
ரட்சகன்.
சிக்கிய மக்களுக்கு 
ராட்சசன்.
மேல் நாட்டின் 
வேண்டா விருந்தாளி.
ஆசியாவின் 
அமைதிப் 
பூங்கா. 
சொன்னதையும் செய்வார்,
சொல்லாததையும் செய்வார்.
தமிழ் மக்களின்,
கண்ணீர் இவர்
சொத்து.

காதல் பரிசு.
உன் பிறந்த நாளுக்கு,
அன்று, நான் தந்த பரிசு,
வாங்கும்போது,
சொன்னாய்,
"என் உயிரிலும் மேலாய்,
இதை நான் மதிப்பேன்."

திருமண நாள் உனக்கு,
இன்று,
தெருவிலே கிடந்தது,
நான் தந்த,
பரிசு மட்டுமா,
நானுந்தான். 




தமிழன் 

இந்தியாதான் இவனுக்கு,
எல்லாம்.
இந்த இனத்துக்கு,
எமனே,
இந்தியாதான்.





வெட்கம் 
உலகை வென்று,
ஒரு குடையில்,
ஆண்டு.
இன்று,
ஆள்பவருக்கு,
ஒரு குடை,
பிடிப்பது.

அமைதி 
இலங்கையில் அமைதி 
இருப்பவர்கள் எல்லோரும் 
சமாதியானால்தான்
வரும்,
 அமைதி.


குறை?
ஆண்ட  பரம்பரை,
மீண்டும் ஒரு முறை,
ஆளநினைப்பதில்,
என்ன குறை?

ஆண்டபரம்பரையில்,
வந்தவர்கள்,
குறுக்கே நிற்பதுதான்,
பிரச்சினை.  



சனி, 19 மார்ச், 2011

பூமிக்கு அருகில் சந்திரன்.


சோதிட சாஸ்திரத்தில் சந்திரனின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.சந்திரன்
வழமையான தூரத்தில் இருக்கும் போது,கடலில் ஏற்படும் மாற்றங்களை,நாம் 
கண் கூடாகக் காண்கிறோம்.பௌர்ணமி தினத்தில் கடற்கரையை போய்த் 
தரிசித்தவர்களுக்குத் தெரியும்,கடலின் சீற்றம் எப்படி இருந்தது என்பது பொதுவாக பூரணை தினங்களில் கடலை,நம்பி வாழும் மீனவர்கள் கூட 
கடலுக்குச் செல்வதில்லை,காரணம் கடலின் சீற்றம்.இது வழமையான பூரணை 
நாட்களில் இலங்கை, இந்தியாவில் இருக்கும் மக்களின் நம்பிக்கை.இந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைய நாள்,பூமியில் இருப்பவர்களுக்கு ஒரு 
விசேடமான நாளாகத்தான் இருக்கும். இது சோதிட சாஸ்த்திர ரீதியாக 
வெளியிடப்பட்ட கருத்தும் கூட,நமது சோதிட நிபுணர்கள் சொல்வதை யாரும் 
நம்ப வேண்டாம், அமெரிக்காவிலுள்ள பிரபல சோதிடர் ஒருவர் கூறியதையும் 
பாருங்கள்.இது இன்றைய பிரித்தானியா  டெய்லி மெயில் பத்திரிகையில் 
வந்த ஒரு விளக்கம்.இதை இவர் 1980 களில் இப்படியான சுப்பர் மூன் வந்த நேரத்தில் எழுதியது.இதைப் படிக்க நமது வகுப்பறை வாத்தியாரின் வகுப்பில் 
சொல்லியிருப்பதைப் படிக்க,இங்கே போகவும். 

விஞ்ஞானிகளின் கருத்து என்ன என்பதை கீழ் வரும் காணொளி விளக்குகிறது 
எது சரி என்பதை நாம்தான் தீர்மானிக்கப்  போகிறோம் எப்போது நாளைக் 
காலையில்.அலைகளுக்கும் சந்திரனுக்கும் தொடர்பிருப்பதை ஒத்துக் கொண்டுள்ளவர்கள்,நில நடுக்கம்,எரிமலை வெடிப்பு என்பவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை .இதைப் படிக்க  காணொளியைப்    பார்க்க இதற்கு முந்திய 
இடுகைக்குச் செல்லவும்.  

Do People Act Odd When the Moon Is Full?


வெள்ளி, 18 மார்ச், 2011

தண்ணீர் அடிக்கும் ஜப்பான்....

அணு உலையைக் குளிரவைக்க தண்ணீர் தெளிக்கும் ஜப்பான்.அவசியம் ஏற்பட்டால்,அமெரிக்க உதவியை நாடவும் திட்டம்.காணொளியைப் 
பார்க்கவும்.
The Efforts to Cool Down the Nuclear Reactor

கிழக்குமாகான (மட்டக்களப்பு மாவட்டம்) உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் -2011


ஏறாவூர் U .C ..தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக .    

ஐக்கிய மக்கள் கூட்டணி -------06 அங்கத்தவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் ------02  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -03 ----------------01   
அங்கத்தவர்
 

ஓட்டமாவடி P .S..தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக 

ஐக்கிய மக்கள் கூட்டணி --------------07 அங்கத்தவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் ------------01  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -03 ----------------------01   
அங்கத்தவர்
தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் -௦௦00
இலங்கைத் தமிழரசுக் கட்சி----------௦௦00

காத்தான்குடி U .C .
.தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக .

ஐக்கிய மக்கள் கூட்டணி --------------06 அங்கத்தவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் ------------01  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -01 ----------------------02   
அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி ------------------௦௦00

ஏனைய இடங்களில் தேர்தல் நடை பெற வில்லை.

கிழக்கு மாகாண (திருகோண மலை மாவட்டம்) உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் -2011


திருகோணமலை U .C .தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக
 

இலங்கைத்  தமிழரசுக் கட்சி---06  அங்கத்தவர்
ஐக்கிய மக்கள் கூட்டணி -------02 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------01  அங்கத்தவர்
மக்கள் விடுதலை முன்னணி -01 அங்கத்தவர்.

மூதூர் P .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

இலங்கைத்  தமிழரசுக் கட்சி---03  அங்கத்தவர்
ஐக்கிய மக்கள் கூட்டணி -------07 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------01  அங்கத்தவர்
 
வெருகல் P .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

இலங்கைத்  தமிழரசுக் கட்சி---05  அங்கத்தவர்
ஐக்கிய மக்கள் கூட்டணி -------01 அங்கத்தவர்
தமிழ் மக்கள் விடுததலைப் -- -01 அங்கத்தவர்.

கிண்ணியா U
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

இலங்கைத்  தமிழரசுக் கட்சி---00  அங்கத்தவர்
ஐக்கிய மக்கள் கூட்டணி -------05 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------01  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -01 --------------01   
அங்கத்தவர்

கிண்ணியா P
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

ஐக்கிய மக்கள் கூட்டணி -------05 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------02  அங்கத்தவர்

மொறாவேவ 
 P
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

ஐக்கிய மக்கள் கூட்டணி -------06 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------03  அங்கத்தவர்

கோமரங்கடவெல 
P
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

ஐக்கிய மக்கள் கூட்டணி -------08 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------01  அங்கத்தவர்


பதவி ஸ்ரீ புர 
P
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.
 
ஐக்கிய மக்கள் கூட்டணி -------06 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------01  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -01 --------------01   
அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -02 --------------01   
அங்கத்தவர்

தம்பலகமுவ 
 
P
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.
 
ஐக்கிய மக்கள் கூட்டணி -------06 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------03  அங்கத்தவர் 


வியாழன், 17 மார்ச், 2011

எதையும் தாங்கும் இதயம்,இதையும் தாங்கும் தலை

எதையும் தாங்கும் இதயம்,இதையும் தாங்கும் தலை. ஐயோ,நான் அந்த 
அர்த்தத்தில சொல்லவில்லை.எல்லாம் தப்புத் தப்பாத்தான் வருகிறது.
நீங்களே பாருங்க இந்தப் படங்களை.தாங்குமா உங்க தலை? முயற்சி 
பண்ணுங்க.29 .படங்கள்.





நானும் சிறுவனாக இருந்தபோது,இப்படித் தலையில வைத்துச் சுமந்த 
அனுபவம் நிறையவுண்டு.இப்பொழுது உள்ள சந்தததிக்கு இது எல்லாம் 
புதிய அனுபவம், அந்தக் காலத்தில் எனது மகன் இவ்வளவு பாரம் தனியாத்
தூக்குவான் என்று சொல்வது தாய் தந்தையர்க்குப் பெருமை. ஐயோ எனது 
மகன் பாரம் எதுவும் தூக்கமாட்டான் என்று சொல்வது,இந்தக்காலத்துப் 
பெற்றோருக்குப் பெருமை,கடைசியில் நோய் வந்து கஷ்டப் படுவது,
மக்களின் கடமை.வைத்தியருக்கும் வசதி. 

புதன், 16 மார்ச், 2011

மூச்சை நிறுத்தி விடு...

வெண்பாவுக்கும்  படத்திற்கும் சத்தியமா சம்பந்தமில்லை, ரஜனியின் ஸ்டைல்போல் இருந்தது எடுத்துப் போட்டேன்.


கர்ப்பச் சிறை நீங்கிக் காலப் புழுதி படர்
இப்புவிமேல் ஓட்டில் இறங்கிய நாள்-ஒப்பிவந்து 
வாழ்த்திவரித்த சுற்றம் வருந்தும்படி குடியை 
வீழ்த்தி விடப் பெற்றேன் விசர்!

அல்லும் பகலும் அநியாய வன்செயல்கள் 
கொள்ளும் அயல்வீட்டுத் தோழர் குழாம்-சொல்லும் 
படி ஆடிப் பெற்ற பழிபாவம் தாங்க 
முடியாது வேண்டாம் இம் மூச்சு.

நாட்டைக் கெடுக்கும் நடத்தைகளால் ஆட்கொண்ட 
கூட்டைச் சுமக்குங் கொடியோனின் -சீட்டைக் 
கிழித்துக் நரகக் கிடங்கிற்குள் தள்ளா(து)
ஒழித்துள்ள கூற்றே....உணர்!..

பொய்யும் களவும் புரட்டும் அழுக்காறும் 
செய்யும் எனது சிரந்தனைக் -கொய்யும் 
திருநாட் பதிவேட்டைத் தேடித் திருத்தும்
கருமத்தைச் செய்வாய் கடிது.

கள்ளனைய கன்னியரின் கற்பார் மனஉணர்வை
மண்ணாக்கி விட்டே மறுதலித்த -என்னுயிரைக் 
கொள்ளாத கூற்றம் கொடுங்குற்ற மென்றுலகம்
சொல்லாதோ?  வீசாய் சுருக்கு....

சூது சுரண்டல் சுகமற்ற வாதுரைத்தல் 
பாதகரின் பக்கம் பரிந்து நிற்றல் -வேதனையைக் 
கூட்டிப் பெருக்குங் குடிப் பழக்கம் இத்தனையும் 
கேட்டுக் கொள் என்றன் மெய்க் கீர்த்தி!

ஊரைக்க முடியா உலகத்தின் தீமைச் 
சரக்கெல்லாம் சேர்ந்த சரிதம் -ஒறுக்குதின்(று)
ஒட்டிவா கூற்றே உமக்கென் குறைக் கதையைக் 
பாடுகின்றேன் இல்லைப் பயம் .... 
      
(வேறு)

நடை புதிது ...கதை புதிது ...நயந்துரைக்கும் யாப்பின் தொடை புதிது ....
இப்பா, இது வரையும் பிரசுரமோ ஒலிபரப்போ பெற்றதில்லை ..உண்மை !
தடை எதுவும் விதியாமல் தங்கள் கவிதைப் போட்டிப் படையலுக்குள்
சேர்த்தருள்க; பணிந்துரைத்தேன்.
வணக்கம்.

இவ்வண்ணம்,

இடையீடு இல்லாமற் கவிபுனையுந் அடியேன் ...

இராஜ பாரதி.

(எனது குருவின் கவிதை அவர் எழுதிய ஒரு   கையெழுத்துப் பிரதியின் பிரதி வடிவம்.) 

செவ்வாய், 15 மார்ச், 2011

சுனாமியின் கொடுமை -ஜப்பான் 2011.

இலங்கையின் வட கிழக்கில் உள்ளவர்களுக்குக்ச் சுனாமி அனுபவம் நிறையவே உண்டு, ஜப்பானில் இந்த மாதம் ஏற்பட்ட சுனாமியில் பதினோராயிரம் மக்களுக்கு மேல் கொல்லப்பட்டும்,விலை மதிக்க முடியாத 
சொத்துக்களை அழித்தும்,அடித்தும்  சென்ற சுனாமி பற்றிய காணொளிகள், பிரித்தானியாவின் கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது,பாருங்கள்.


இதிலுள்ள லிங்கைக் கிளிக் பண்ணி இன்னும் அதிகமான ஜப்பானில்
இடம்பெற்ற அனைத்து சுனாமி அழிவுகளையும் காணலாம்.

சனி, 12 மார்ச், 2011

நீண்டதொரு இரவு வேண்டும்!..



நீண்டதொரு இரவு வேண்டும் -முழு
நிம்மதி நீயென் அருகில் வேண்டும் 
வான்மதி ஒளி வீச வேண்டும் -அங்கே
வந்து நீயுறவாட வேண்டும்.

பக்கம் வந்து நீ பள்ளி கொள்ளவேண்டும் -என்
பார்வையால் உன்னையான் அள்ளவேண்டும் 
சொர்க்கமெல்லாம் இருவரும் சுற்ற வேண்டும் -உறவைச் 
சொல்ல முடியாமல் மூச்சுத் தினறவேண்டும்

கம்பனின் கவிதை கனிவாக வேண்டும்-கவிஞர் 
கண்ணதாசனின் வரிகள் பணியாக வேண்டும் 
வைரனின்  சொல் நீயாக வேண்டும் -இளைய 
இராஜாவின் இனிய பன்னாகச் சேர வேண்டும் 

மெல்லப் பேசும் தென்றல் வேண்டும் -உன்னை
அள்ளப் பார்த்து அது அலைய வேண்டும் 
கள்ளப் பார்வை மெல்லக் கலைய வேண்டும்-நான் 
சொல்லாமல் சுகங்கள் கோடி வேண்டும் 

கன்னம் கனியாகக் காணவேண்டும் -முக 
வண்ணம் கலையாமல் கடிக்க வேண்டும் 
இன்னும் இந்த இன்ப உறவு வேண்டும் -உன் 
இதயமெல்லாம் என் பெயர் எதிரொலிக்க வேண்டும்.