வியாழன், 6 ஜனவரி, 2011

இலங்கைத் தமிழர் ஒரு தேசிய இனமல்ல,


இலங்கைத் தமிழர் ஒரு தேசிய இனமல்ல, அவர்கள் சுயாட்சியினை கோரமுடியாது.நல்லிணக்க ஆணைகுழு முன் ஜாதிக ஹெல உறுமையவின் சட்ட
ஆலோசகர் உதய கம்மன் பில்ல.

இலங்கையிலுள்ள தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமல்ல,அவர்கள் மக்களின் சிறு பகுதியினரே ஆகும்.அதாவது ஜப்பானிலுள்ள கொரியர்கள் போலவும்,தாய்லாந்தில் உள்ள 
சீனர்கள் போலவும்,ஆகவே தமிழர்கள் சுய நிர்ணைய உரிமை கோரமுடியாது.ஆனால் தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள்,இந்தியாவின் தேசிய இனமாகும்.

எதிர் காலத்தில் மூன்று முக்கிய இடங்களில் தமிழ் பிரிவினை வாதத்தின் தலைமைத்துவம் உருவாகலாம்.கொழும்பில் நண்பர் சுமந்திரன் அவ்வாறு உருவாக்கலாம்.வட கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் உருவாக்கலாம்
புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அலி ஜின்னா போன்ற கதாபாத்திரத்தைக் கொண்ட 
தலைவர் ஒருவரை உருவாக்கலாம். 

இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள மக்களை மட்டுமே,ஒரு இனமாக கருத முடியும்.
அந்த வகையிலேயே எமது கலாசாரம் வரலாறு போன்றவை அமைந்துள்ளது.ஆனால் 
இந்தியாவினுள்ள தமிழகத்தினுள்ள தமிழ் மக்கள்,அங்கு தங்களை ஒரு தேசிய இனமாகப் பார்க்கலாம். அதாவது தாய் மக்களின் தாய் நாடு தாய்லாந்து,போன்று 
ஜப்பானியர்களின் நாடு ஜப்பான்.இலங்கையின் தேசிய இனமாக சிங்கள  மக்களைமட்டுமே பார்க்கலாம்.

தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்கள் அங்கு தேசிய இனமாகின்ற அதேவேளை ஏனைய 
நாடுகளான,இலங்கை,சிங்கப்பூர்,மடகஸ்கார்,கென்யா போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் 
ஒரு சிறிய பிரிவினர் மட்டுமேயாகும்.அதாவது ஜப்பானிலுள்ள கொரியர்கள் போன்றும் 
தாய்வானிலுள்ள,சீனர்கள் போன்றவர்களே இலங்கையிலுள்ள தமிழர்கள்.எனவே அவர்களால் சுயாட்சியையோ,சுய நிர்ணய உரிமையையோ கோர முடியாது.சிறு மக்கள் பிரிவினருக்கு உரிய உரிமைகளை மட்டுமே அனுபவிக்க முடியும்.சிறிய மக்கள் 
பிரிவினர்களுக்கான உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் 
கூறப்பட்டுள்ளதைவிட,அதிகளவில் எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு நாங்கள் செய்துள்ளோம்.தமிழ் மக்களின் தாயகமான,இந்தியாவில் கூட தமிழ் மொழி அரச கரும 
மொழியாக இல்லை.ஆனால் இலங்கையில் உள்ளது.அந்த வகையில் நாம் இந்தியாவை விட முன்சென்றுள்ளோம்.

செல்வநாயகம் உட்பட எந்த தலைவரும் வட கிழக்கு எவ்வாறு தமிழர்களின் தாயகமாக 
இருக்கும் என்பதை நிருபிக்கவில்லை.தமிழ்மக்கள் எவ்வாறு தேசிய இனமாக வருவார்கள் என்பதனை நிருபிக்கவில்லை.செல்வநாயகம் அகிம்சை வாதி எனக் குறிப்பிடுகின்றார்கள்,ஆனால் அவரின் உண்மையான நடத்தையை உற்று நோக்கினால் 
அவர் எத்தகைய அகிம்சைவாதி என்பது புரியும்.ஒரு சந்தர்ப்பத்தில் செல்வநாயகத்தின் 
கொள்கைகளுக்கெதிராக யாழ்பாணத்தில் சிதம்பரம்,கனகசிங்கம்,மற்றும் நேசையா 
உள்ளிட்ட பலர் கூட்டம் ஒன்றை நடத்தினர்.அக் கூட்டத்தை குண்டர்களை அனுப்பி 
செல்வநாயகம் குழப்பியிருந்தார்.செல்வநாயகத்தின் அகிம்சைக் கூட்டங்களில் 
பங்கெடுக்காதவர்களை குண்டர்களைக்கொண்டு தாக்கவைத்தார்.

இற்றைக்கு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் புலிகளைத் தோற்கடிக்க முடியும் என்று எமது கட்சி கூறியது.அதாவது புலிகள் தோற்கடிக்கப் படவேண்டும் என்பதனை   எல்லோரும் ஏற்றுக்கொண்டாலும்,அது முடியாத காரியம் என்றே எல்லோரும் நம்பினர்.
நாங்கள் அந்த கூற்றை உடைத்தோம்.விளைவாக புலிகள் தோற்கடிக்கப் பட்டனர்.

நாங்கள் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்த விடயம் ஒன்றுள்ளது.அதாவது 
செல்வநாயகத்தின் அகிம்சை ரீதியிலான அச்சுறுத்தலுக்கோ,பிரபாகரனின் ஆயுத ரீதியிலான அச்சுறுத்தலுக்கோ அடி பணிந்ததில்லை.மாறாக தர்க்கங்களை ஏற்றுக் 
கொள்வோம்.நாங்கள் பௌத்தர்கள் தர்க்கவியல் ரீதியில் நிருபிக்கப்படும்விடயங்களை 
ஏற்றுக்கொள்வோம்.தமிழீழம் சரியான கோரிக்கை என நிருபித்தால்.அதற்காக முன் நிற்கத் தயார் என்று கூறி வந்தோம்.யாரும் அதனை நிருபிக்க முன் வரவில்லை,மாறாக 
அச்சுறுத்தலே வந்தது.

தற்போது மக்களுக்கு ஒரு விடையத்தைக் கூற வேண்டும்.புலிகளைத் தோற்கடித்த வெற்றிக்களிப்பில் தொடர்ந்து இருக்கவேண்டாம். அதற்கடுத்த பிரிவினைவாத சவாலை 
எதிர் கொள்ள முன் வாருங்கள். நவீன முறையில் பிரிவினை வாதம் உருவாகலாம்.
புலியின் வால்  மட்டுமே இலங்கையில் இருந்தது  நாம் வாலை  வெட்டியுள்ளோம்.
வாலை வெட்டிய நாங்கள் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக கூறுகின்றோம் .ஆனால் 
புலியின் வாய் நோர்டிக் நாடுகளிலுள்ளது.முன் கால்கள் கனாடவிலும் ஐரோப்பிய 
நாடுகளிலும் உள்ளது.பின் கால்கள் தென் ஆபிரிக்காவிலும்,அவுஸ்திரேலியாவிலும் 
உள்ளன.எனவே நமக்கு ஒரு சின்ன இடை வெளி மட்டுமே கிடைத்துள்ளது.

இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேவேல் என்ற ஒரு நாடு இருக்க வில்லை.என்பத்தாறு நாடுகளில் யூதர்கள் பரந்துபட்டுக் காணப்பட்டார்கள்.எனினும் 
 என்பத்தாறு நாடுகளில் பரந்து காணப்பட்ட யூதர்கள் ஒருகட்டத்தில் ஒன்றிணைந்து
இயக்கம் ஒன்றை ஆரம்பித்து பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் என்ற நாட்டை 
உருவாக்கினார்கள்.

இந்தியாவில் முதலில் ஏற்பட்டது,முஸ்லிம் பிரிவினை வாதம் அல்ல.மாறாக 1919   
ஆம் ஆண்டில் சுய நிர்ணய அரசியலமைப்பு வந்ததும்,தமிழ்,கன்னடம்,தெலுங்கு,ஆந்திரா 
ஆகிய பகுதிகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 1935 ஆண்டு 
அரசியலமைப்பின்போது அந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது பின்னர் நாம் தமிழர் 
இயக்கம் உருவானது.ஆனால் 1962ஆம் ஆண்டு,இந்திய அரசாங்கத்தின் இராணுவப் பிரிவால் அந்த இயக்கம் அழிக்கப்பட்டது.இதனையடுத்து 1962ல் லண்டனில் உள்ள,உலக  தமிழ் சங்கத்தினால் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.இலங்கையில் சிறைப் பட்டிருந்த 
செல்வநாயகம் சிகிச்சைக்காக லண்டன் சென்றபோது அந்த மகா நாட்டில்  கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த மகா நாட்டில் கலந்து கொண்டு என்ன கூறினார்?இந்தியா பெரிய நாடு.அதனுடன் மோதி நாட்டைப் பெற முடியாது என்றார்.பின்னர்
இலங்கை தெரிவு செய்யப்பட்டது. செல்வநாயகம் மலேஷியாவில் பிறந்து,இலங்கையில்
குடியேறியவர்.

அன்று சர்வதேச நாடுகள் பிரிவினைக்கு மறைமுகமாக உதவி செய்தன,ஆனால் இன்றோ நேரடியாக பிரிவினை வாதத்திற்கு ஆதரவாகச் செயல் படுகின்றன.எதிர் காலத்தில் நான் சொன்னது போல் பிரிவினைவாதத் தலைவர்கள் உருவாகலாம் அவர்களை எதிர் கொள்ள நம் தயாராக வேண்டும்.இதற்காக சட்டம்அறிவு,தொல்பொருள்
உள்ளிட்ட விடயங்கள் சார்ந்த அறிவுடைய ராஜதந்திர படை ஒன்றை நாங்கள் உருவாக்க வேண்டும்.    

  
.  ,