வெள்ளி, 4 டிசம்பர், 2009

பப்பாளிப் பழமும் பயனும்



பப்பாளி (Carica papaya) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள்ஆப்பிரிக்காஆஸ்திரேலியாதென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரிமார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்
அடங்கியுள்ள சத்துக்கள்

  • பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை.
  • விற்றமின் ஏ அதிகமாக உள்ளது.
  • கனியக் கனிய விற்றமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விற்றமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விற்றமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விற்றமின் பி1, விற்றமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன.
  • பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்புஉணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

மருத்துவப் பண்புகள்

  • நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
  • பித்தத்தைப் போக்கும்.
  • உடலுக்குத் தெண்பூட்டும்.
  • இதயத்திற்கு நல்லது.
  • மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
  • கல்லீரலுக்கும் ஏற்றது.
  • கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  • சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
  • கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
  • முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
  • இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
  • மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
  • பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
  • பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
  • பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
  • இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். * உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
  • இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
  • ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
  • நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
  • பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.



பப்பாளியில் (BETA CARO TIN) பீட்டா கரோட்டின் என்ற பொருள் நிறைய இருக்குது. இது புற்று நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடம்புக்குத் தருகின்றது. இந்த கரோட்டின் நமது உடலில் ஏ வைட்டமினாக மாறுது. பார்வைக் கோளாறு ஏற்படாமல் இருக்க ஏ வைட்டமின் அவசியம் தேவை.


. வாழை போல இதனுடைய மரத்தின் எல்லாப் பாகங்களுமே மனிதனுக்குப் பயன்படுகின்றது. பப்பாளிக் காயில் இருந்து பால் போல ஒரு திரவம் காயை அறுத்தால் வெளியே கசியும். அந்த திரவத்தில் பப்பாயின் சிமோ, பப்பூயின் என்று இரண்டு வகை என்ஜைம்கள் உள்ளது. அதாவது நொதிமங்கள் .இந்த இரண்டு நொதிமங்களும் உணவில் இருந்து நமக்கு கிடைக்கும் புரதங்களைச் செரிக்க உதவுகின்றன. இவ்வாறு புரதம் செரிக்கும் போது பல்வேறு அமினோ அமிலங்கள் நம் உடம்பில் சுரக்கின்றன. அவற்றிலே முக்கியமானது ஆர்ஜினைன் என்னும் அமினோ அமிலம். இது உடலின் தசைகளை வலுப்படுத்தி கொழுப்பைக் குறைக்கக் கூடியது.
35 கிராம் இறைச்சியைச் செரிப்பதற்கு ஒரு கிராம் பப்பாயின் போதும் என்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள். அதனாலதான் மாமிச உணவுத் தயாரிப்புக்களை மென்மைப்படுத்த பப்பாயின் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த நொதிமங்கள் பழுக்காத பப்பாளிக் காயில் நிறைய இருக்குது. பப்பாளி இலை, தண்டு போன்றவற்றில் கொஞ்சம் இருக்குது. குடல் புண், அஜீரணம் போன்ற வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் பப்பாளிக்காய் சாப்பிடலாம். மேலும் உணவுச் சத்துக்களை உறிஞ்சக் கூடிய ஒரு வகையான ஒட்டுயிரிகள் நமது குடலில் சிலசமயம் வளர்கின்றன. அவற்றை இந்தப் பப்பாயின் நொதிமம் கட்டுப்படுத்துகின்றது.

? கறுப்பு முத்து போன்ற பப்பாளி விதைகளில் "கார்பெய்ன்"என்று ஒரு ரசாயனப் பொருள் உள்ளது. அது இதயத்தின் வேகமான துடிப்பை நிதானப்படுத்தக் கூடியது. குடலில் அமீபா மூலம் ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தக் கூடியது.
பப்பாளிப் பூ பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சீர்படுத்தக் கூடியது. மேலும் சுவாசக் குழாய் நோய்களையும் குணப்படுத்துகின்றது. 
 100 கிராம் எடையுள்ள பப்பாளி பழத்தில் 32 கலோரிதான் உள்ளது. இவ்வாறு இனிப்புக் குறைவாக இருப்பதால்தான் உடல் பருமனைக் கட்டுப்படுத்துகின்றது.