ஞாயிறு, 6 டிசம்பர், 2009

இனிய தமிழ் மக்கள்தான்.









இராமன் ஆண்டாஎன்ன?
இராவணன் ஆண்டாஎன்ன?
கூடவந்த குரங்கு ஆண்டா நமக்கு என்ன?
இறுதியில் அடி வாங்கப் போவது,
இனிய தமிழ் மக்கள் தான்.


விடுதலைப் புலிகளை ஆதரித்தால் என்ன?
தமிழ் மக்கள் ஆதரிக்காவிட்டால் என்ன?
மொத்தமாக அடிவாங்கப் போவதும்,
இனிய தமிழ் மக்கள்தான்.

தமிழர் கூட்டமைப்பு கதைத்தால் என்ன?
தமிழர் விரோத அமைப்புகள் சேர்ந்தால் என்ன?
பத்தோடு பதினொன்று அத்தோடு இவர்களுமேன்று
போட்டுத்தள்ளி புதுக்கதை சொல்லி,
அடிவாங்கப்போவதும்,என்
இனிய தமிழ் மக்கள்தான்.

சர்வதேசம் பேசியது விளங்கவில்லை?
சர்வதேசத் தலைமை கூறியதும் புரியவில்லை?
இந்தியா சொல்லியது இலங்கை சொன்னதை,
எவர் சொல்லியும் கேட்காத இவர்களுக்கு,
இந்தத் தேர்தலும், இன்னமும் சொல்லும்
அடிவாங்கப் போவது இனிமேலும்,
என் இனிய தமிழ் மக்கள்தான்