வெள்ளி, 6 நவம்பர், 2009

ஊரான ஊரிழந்தோம்..

                                                          




"ஊரான ஊரிழந்தோம்...
ஒற்றைப்பனைத் தோப்பிழந்தோம்.
பாராள வந்தவரே!
உம்மையும் தான் நாமிழந்தோம்.
கடலே நீ இரையாதே!
காற்றே நீ வீசாதே!
நிலவே நீ அவியாதே!
நெஞ்சமெல்லாம் தீயாச்சே!
ஆற்றோரம் மணல் மேடு.
மணல் மேட்டில் பட்டிபூ!
பட்டிப் பூ பூத்திருக்கு.
யார் வரவைக் காத்திருக்கு"
ஈழத்துக் கவிஞ்ஞர் சேரன்
இணைய வலையில் தேடியபோது கிடைத்தது. தலையிடியும் காய்ச்சலும் தனக்குவந்தால்தான் தெரியும்.அனுபவம்தான் அருமையான கவிதைகளையும், காவியங்களையும் தந்திருக்கிறது,அதை மீண்டும் நிருபித்திருக்கிறார் ஈழத்துக் கவிஞர் சேரன் அருமையான கவிதைக்கும் அவருக்கும் நன்றிகள் கோடி.                      

1 கருத்து:

உங்களின் கருத்துரைகள