செவ்வாய், 25 ஏப்ரல், 2017

பாதுகாப்பாக இருக்கிறார் தலைவர்….! பொட்டு அம்மான்..! ஆனந்த கண்ணீர்..!

1111லண்டனில் இருந்து இந்த செய்தி நேற்று வலைத்தளங்களில் பரவியபோது மொத்த தமிழ் இனமும் ஆனந்த கூத்தாடியது. இறுதி போரில், வரமாட்டேன் என்றுதான் தலைவர் கூறியிருக்கிறார். நான் என்மக்களோடு தான் இருப்பேன். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது இந்த ஈழ மண்ணில் தான். என் பாதுகாப்பு மட்டும் எனக்கு முக்கியம் அல்ல. என் மக்கள் எல்லோரும் ,எந்தம்பிகள் எல்லோரும் கொத்துக்குண்டுகளுக்கு பலியாகின்றனர்.
என் தளபதிகள் ஈழம் காணாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள்.நான் மட்டும் தப்பிச்செல்வது பெரும் சுயநலம் இப்படித்தான் பொட்டுஅம்மானிடம் கூறியிருக்கிறார் தலைவர். அவரை ஒரு குழுவாக நின்று பேசி சமாதானம் கூறி ஒருவழியாக அரைமனதோடு தலையாட்டினார் தலைவர்.அந்த ஒரு நொடி எங்களுக்கு போதுமானதாக இருந்தது.மே பதினாறு சிங்களரின் 57வது பட்டாலியன் கோரத்தாண்டவம் ஆடியது.
பாஸ்பரஸ் குண்டுகள் விடாது பொழிந்தது. கொத்துக்குண்டுகள் வெடித்துச் சிதறியது. நாங்கள் களத்தில் இருந்தோம் கரும் புலிகள் பெரும் ஊடறுப்புத் தாக்குதலுக்கு தயாராகினர். புயல் போல் நாலாபுறம் இருந்தும் ஊடறுத்து சிங்களரின் படைக்குள் நுழைந்தனர்.அந்த நொடியில் எம் பொடியன்கள் நடத்திய சாகசம் உலக வரலாற்றில் எங்கும் நடந்ததில்லை .அப்படி ஒரு வீர சாகசம். சிங்கள பட்டாளியனுக்கு ஒன்றுமே புரியவில்லை.எங்கிருந்து இவன்கள் வருகிறார்கள்,எந்த திசையில் இருந்து வருகிறார்கள் என்ன நிகழ்கிறது ஏன் எல்லோரும் தூக்கி வீசப்படுகிறோம் என்று திகைத்தனர்.
கொத்து கொத்தாக உடல் சிதறி பறந்தனர். தப்பித்து ஓட ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் தான் தலைவரை தூக்கினோம்., ஒரு தேவ தூதனை தூக்குவது போல தூக்கினோம்..இதோ உடல் நலம் தேறி வியூகம் வகுத்துக்க் கொண்டிருக்கிறார் தலைவர். கலங்காதீர்கள். சந்தர்ப்பம் எதிர் பார்த்து காத்திருக்கிறார்…இப்படி ஒரு செய்தி நேற்று உலக தமிழர்களிடையே பெரும் ஆனந்த கண்ணீரை வரவைத்தது. ஒரே மகிழ்ச்சி வெள்ளம்..! எம் தேசியத்தலைவரே உம்மை வரவேற்க உலகத்தமிழ் இனமே தயாராக இருக்கிறது.என்று வாழ்த்துச் செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

(www.eelamalar.com)

பிரபாகரன் – பொட்டு அம்மான்; இன்டர்போல் தரும் இனிப்பான செய்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் இருவரையும் தமிழ் அமைப்புகள் தேட ஆரம்பித்துவிட்டன அன்றய இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லாம சமீபத்தில் புலம்பியிருந்தது நினைவிருக்கலாம். அடுத்த சில தினங்களில் இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது இலங்கை அரசுக்கு. அது, ‘பொட்டு அம்மானை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
இதையெல்லாம் விட முக்கியம், இந்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதுவும் இலங்கையின் வார்த்தையை நம்பவில்லை. பிரபாகரன்- பொட்டு அம்மான் இருவருமே தலைமறைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களின் மரணச் சான்று, அதற்கு இலங்கை தலைமை நீதிபதி அளித்த ஒப்புதல் என அனைத்தையும் நிராகரித்துள்ளது சிபிஐ.
சமீபத்திய இந்த நிகழ்வுகள் மற்றும் சர்வதேச தமிழர்கள் மத்தியில் உலாவரும் சில சந்தோஷ தகவல் பரிமாற்றங்களை ஒட்டி ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையை இங்கே தருகிறோம்.
சமீபத்தில் நாம் வைகோவைச் சந்தித்த போது அவர் கூறிய சில தகவல்களும், இந்த கட்டுரையில் உள்ள சில செய்திகளும் ஒத்துப்போவதை உணர முடிந்தது. வைகோவிடம் நாம் பேசியது பற்றி தனியாகத் தருகிறோம். இனி ஜூவி கட்டுரை…
பொட்டு அம்மான் உயிருடன் இருக் கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!” – இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல… இண்டர்போல் போலீஸ்!
விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பிரபாகரன் விஷயத்தில் சந்தேகப்பட்ட ஈழ ஆதரவாளர்கள்கூட பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்பினார்கள். இதற் கிடையில்,
”பெயர்: பொட்டு அம்மான் என்கிற சிவசங்கரன், பிறந்த வருடம்: 1962, பிறந்த இடம்: ஆரியவாலை, சாவகச்சேரி, இலங்கை… தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், சிங்களம்… கைது வாரன்ட்: சென்னை, இந்தியா…” என தேடப்படும் குற்றவாளியாக அவரை இண்டர்போல் இணையதளம் சில தினங்களுக்கு முன்னால் திடீர் செய்தி வெளியிட… ஈழ ஆர்வலர்கள் பரபரத்து எழுந்திருக்கிறார்கள்.
இண்டர்போல் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பைப் பார்த்து உஷாராக வேண்டிய இலங்கை அரசோ, ”கடந்த மே மாதம் நடந்த ஈழப் போரின் கடைசி நாளில் பொட்டு அம்மானும் அவர் மனைவியும் உடலில் வெடிகுண்டு களைக் கட்டி வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதனால், அவரது இறப்பு குறித்த ஆதாரங்களை எங்களால் சமர்ப்பிக்க முடி யாமல் போய்விட்டது. பொட்டு உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை!” என அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பொட்டு விவகாரம் திடீரென கிளம்பிய பின்னணி குறித்து விசாரித்தோம்.
”ஈழப்போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை இலங்கையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது பொட்டு அம்மான்தான். கடைசிக்கட்டப் போரின் போது அவருக்கு ‘குருவி’ என ரகசியப் பெயர் சூட்டப்பட்டது. இப்போதும்கூட, ரகசிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகளிடம் சிங்கள ராணுவமும் புலனாய்வுத் துறையும் அவரைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் ராணுவத்திடம் பிரபா என்ற போராளி சிக்கினார்.
அவரைத் துருவி எடுத்தபோது, பொட்டு அம்மான் வெளிநாட்டுக்கு தப்ப முயன்று கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதிக்குச் சென்று அங்கு இருந்த ஆறு மாடிக் கட்டடம் ஒன்றை ராணுவத் தரப்பு சல்லடையாகத் துழாவியது.
அதிகாரிகள் அந்த இடத்துக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கிடமான சிலர் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவரது பெயர் ‘குருவி’! இந்த விஷயத்தை மீடியாக்களுக்குத் தெரியாமல் இலங்கையின் உளவுப் பிரிவு மறைத்தாலும், சர்வதேச உளவு அமைப்புகளுக்கு ‘குருவி’ என்ற பெயரில் தப்பியது பொட்டு அம்மான் என்பது புரிந்துவிட்டது.
பிரபாகரன், பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுத்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதை இண்டர்போல் போலீஸ் ஏற்கெனவே புரிந்துகொண்டு விட்டது. இதனால்தான், ராஜீவ் கொலை வழக்கை முடிக்க முடியாமல் சி.பி.ஐ. திணறி வருகிறது. இதற்கிடையில், பொட்டு அம்மானின் சர்வதேச தொடர்புகளை யூகித்த இண்டர்போல், அவரை மீண்டும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது!” எனச் சொன்ன கொழும்பு விவரப்புள்ளிகள், இன்னொரு பகீர் தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
”புலிகளின் ஆயுதக் கொள்முதல் செய்த கே.பி. சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவத்திடம் சிக்கினார். ஆனால்… அதுவே பெரிய நாடகமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது! புலிகளின் நாடு கடந்த நெட்வொர்க்குக்கு கே.பி-யின் பெயர் வெளியளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்தப் பெயரில் ஒளிந்திருந்த வேறு சிலர் புலிகளின் இக்கட்டுகளைக் களைய கடைசி நேரத்தில் போராடிப் பார்த்திருக்கிறார்கள். போரில் புலிகள் அடியோடு தோற்றபோது, புலிகளின் சர்வதேச ஆட்களுக்கும் கே.பி-க்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்திருக்கின்றன. சர்வதேச நிதியகங்களில் இருக்கும் புலிகளின் சேமிப்புக்கு உரிமை கோருவதிலும் சிக்கல் வெடித்து இருக்கிறது. மெக்ஸிகோவில் உள்ள மூன்று வங்கிகளுக்கு புலிகளின் சேமிப்பை மாற்றவும் முயற்சி நடந்துள்ளது. அப்போதுதான், பொட்டு அம்மான் வெளியே இருக்கும் சிலருடன் தொடர்புகொண்டு பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
இதெல்லாமே மெதுவாக இண்டர்போல் காதுக்கு வந்து சேர்ந்தது. பொட்டு உயிரோடு இருப்பதுபோல் இண்டர்போல் இப்போது அறிவித்துவிட்டதால், இலங்கை அரசுக்கு கடும் கலக்கம். புலிகளின் அத்தனை தளபதிகளும் அடியோடு வீழ்த்தப்பட்டார்கள் என சிங்கள அரசு தொடர்ந்து அறிவித்ததற்கு காரணமே, சர்வதேசத் தமிழர்கள் மீண்டும் புலிகளுக்கு நிதி கொடுக்க முன்வரக் கூடாது என்பதற்காகத்தான்.
மேலும், ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ-யும் ஏற்க மறுப்பதால், சிங்கள அரசுக்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. சமீபத்தில், இலங்கைக்குச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம், ‘சர்வதேச அளவில் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் இப்போதும் பிரபாகரனையும் அவருடைய தளபதிகளையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்!’ என இலங்கையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே பகிரங்கமாக அறிவித்ததையும் கவனிக்கவேண்டும்” என்றார்கள்.
இதற்கிடையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு மிக முக்கிய இடத்தில் இருந்து ரகசியக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும்… அதில், ”நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம். விரைவிலேயே வெளியுலகுக்கு வரத் தயாராகிவிட்டோம். பழையபடி மிகுந்த வலிமையோடு போரிட நாங்கள் தயாராகி வருகிறோம்” என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஐந்து பேருக்கு இதே கடிதம் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
”போரின் கடைசி நாள் பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக இத்தனை மாதங்கள் கழித்து இலங்கை அரசு வலிந்து அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? இண்டர்போல் அறிக்கை வெளியான பிறகுதான் தற்கொலை தகவல் அவர்களுக்குக் கிடைத்ததா? பிரான்ஸில் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்யப் போகும் ரகசியக் கூட்டத்துக்கு பொட்டு அம்மான் நேரிலேயே வருவதாகச் சொல்லி இருக்கிறாராம். இண்டர்போல் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால்தான் அந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு நிமிடமாவது அவர் வெளிச்சத்துக்குவந்து போவார்” என்று ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
”புலிகளின் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவராக பொறுப்பேற்பாரா?” என்று இவர்களிடம் கேட்டால்… ”எங்களுக்கு வந்த மற்றொரு மிக இனிப்பான தகவல்படி சொல்வதானால்… இயக்கத்துக்கு புதிய தலைமை வரவேண்டிய அவசியமில்லை!” என்று மட்டும் சிரித்தபடியே சொல்கிறார்கள்!

முஸ்லிம் தேசம் உருவாக்க அணிதிரளுமாறு பகிரங்க அழைப்பு!

முஸ்லிம் தேசம் உருவாக்க அணிதிரளுமாறு பகிரங்க அழைப்பு!


வடக்கு கிழக்கில் முஸ்லிம் மாவட்டமும் மாகாணமும் உருவாக்க ஒன்றிணைவோம்  என்ற தலைப்பில் விடுதலை பாடிகள் அமைப்பு  அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.அதில் யாரும் முஸ்லிம் மாவட்டத்திலும் முஸ்லிம் மாநிலத்திலும் வாழலாம். ஆனால் ஆளும் உரிமை முஸ்லிம்களுக்கே என தெரிவிக்கப்பட்டுள்ளது..
அறிக்கையின் முழுவிபரம்
அம்பாறை மாவட்டம் முஸ்லிம்கள் பெரும்பான்மையினரைக் கொண்ட பூர்வீக பிரதேசம். சம்மாந்துறைத் தொகுதி, கல்முனைத் தொகுதி, பொத்துவில் தொகுதிகளை உள்ளடக்கி முஸ்லிம் மாவட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இது முஸ்லிம் தேசமாக அடையாளம் கொள்ளப்படும்.

இதனை தளமாகக் கொண்டு முஸ்லிம் மாகாணம் அமைக்கப்பட வேண்டும்
அதன் எல்லைகள் கிழக்கில் பொத்துவிலிருந்து – புல்மோட்டை வரையும் வடக்கில் எருக்கலம்பிட்டியிலிருந்து மறிச்சிக்கட்டிவரை வரையுமாகும். இத்தேசம் நிலத்தொடர்பற்றதாக காணப்படும்.
இப்பபிரதேசங்கள் முஸ்லிம்களின் தாயகமாகவும் முஸ்லிம் மாநிலமாகவும் இருப்பதுடன் அம்பாறை முஸ்லிம் மாவட்டம் அதன் தலைமையமாக இருக்க வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் அமைக்க உறுதிபூண்டுள்ள முஸ்லிம்களுக்கான தனியான மாவட்டத்தின் (முஸ்லிம் தேசத்தின்) தலைமையிடமாக ஒலுவில் இருக்கும். அதன் நிர்வாக கட்டிடங்கள் மேற்கு நோக்கிய குடியேற்றங்களாக அமைக்கப்பட வேண்டும்.
அம்பாறை மாவட்டம் என்பது 1961இல் இரவோடு இரவாக உருவாக்கப்பட்ட எல்லைகளும் அல்ல. சனத்தொகையும் அல்ல.
பிந்தன பற்று, மகா ஓயா, உஹன, அம்பாறை பிரதேசங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளை சேர்த்து முஸ்லிம்களின் முஸ்லிம் மாவட்டம் (தேசம் ) வரவேண்டும்.
இவைகள் சிங்கள மக்களின் பிரதேசம் அல்ல. முஸ்லிம்களின் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் மற்றும் பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு சிங்கள அரசியல்வாதிகள் பகிர்ந்து கொடுத்துள்ளார்கள்.
இதனால் காணிகள் அனைத்தும் சிங்களவர்களினதும் தமிழர்களினதும் ஆதிக்கங்களில் உள்ளன. முஸ்லிம்களிடமிருந்து தமிழர்களாலும் சிங்களவர்களாலும் பறித்தெடுக்கப்பட்ட மற்றும் பறித்தெடுப்பதற்கு எல்லைகள் இடப்பட்டுள்ள காணிகள் மீட்கப்பட வேண்டும்.
இதில் ஒரு துளியளவும் அரசுடனும் அருகில் உள்ள மாநில அரசுகளுடனும் சமரசம் கிடையாது. இதில் ஒரு துளியளவும் விட்டுக்கொடுப்பும் கிடையாது.
இதற்கு ஒரே வழி முஸ்லிம் சமுகத்தை வைத்து வியாபாரம் செய்யும் தலைமைகளை அகற்றி இளைஞர்கள் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் அரசியலை கையில் எடுப்பதுதான்.
தற்போது அம்பாறை மாவட்டத்தில் கரையோரமாக 63 வீதமான முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். தமிழர்கள் 22 வீதம் இருக்கின்றார்கள். 85 வீதமான தமிழ் பேசும் மக்கள் இங்கு வாழுகின்றார்கள். யாரும் முஸ்லிம் மாவட்டத்திலும் முஸ்லிம் மாநிலத்திலும் வாழலாம். ஆனால் ஆளும் உரிமை முஸ்லிம்களுக்கே.
முஸ்லிம்களின் உரிமை அரசியலை வடக்கு கிழக்கில் விசேடமாக அம்பாறை மாவட்டத்தில், இன்னும் சில நாட்களில் முஸ்லிம் இளைஞர்கள் தங்களது கையில் தூக்கிப் பிடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். பாதையை தேடாமல் நமக்கான பாதையை உருவாக்குவோம்.
அன்று தான் முஸ்லிம்களின் கௌரவம் மீட்கப்படும்
ஊடகப் பிரிவு
விடுதலை பாடிகள் அமைப்பு

கிழக்கில் தமிழர்கள் மீது அறிவிக்கப்படாத இஸ்லாமிய யுத்தம்!

கிழக்கில் தமிழர்கள் மீது அறிவிக்கப்படாத இஸ்லாமிய யுத்தம்!

Batti நாதம் 
இலங்கையின் கிழக்கே சர்வதேச இஸ்லாமிய நாடுகளில் துணையுடன் அறிவிக்கப்படாத இஸ்லாமிய போரை பாகிஸ்தானிய தீவிரவாத முஸ்லீம் அமைப்புகள் தொடக்கியுள்ளதாக தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 
கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் எழுச்சி பெறா விட்டால் கிழக்கின்   வரலாறு மாற்றி எழுதப்படும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 
சிறந்த தமிழ் பாரம்பரியத்தை கொண்ட மட்டக்களப்பு மாநிலம் தமிழ் மொழி வழி மாநிலமாகவும் தனியே தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட இரண்டு இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணமாக  உள்ள நிலையில் இன்று முஸ்லிம் மத அடையாளத்தின் அடிப்படையில் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட முதலமைச்சர் அனைவரும் அரசியல் செய்வதுடன் முஸ்லிம் மத அடையாளங்களை அடிப்படையாக கொண்ட நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி செயற்படுகின்றமை மரத்தால் விழுந்த தமிழ் சமூகத்தின் மீது முஸ்லிம் சமூகமும் ஏறி மிதிக்கின்ற செயலாக உள்ளது. 
ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடிய இரண்டு இனங்களில் ஒன்று வீழ்ந்து கிடக்கும்போது அதன்மீது மற்றைய இனம்  தங்கள இன மத அடையாளங்களை கட்டியெழுப்பி வரலாற்றை மாற்றி எழுத நினைப்பது தமிழ்  இனத்தின் மீது முஸ்லிம் தலைமைகள்  மறைமுகமாக தொடுத்துள்ள யுத்தமாகவே பார்க்கவேண்டியுள்ளது.
மிகவும் திட்டமிட்டு மதிநுட்பமாக முஸ்லீம் நாடுகளின் துணையுடன் மிக பெரிய பொருளாதார ஆக்கிரமிப்பை தமிழர் பகுதிகளில் முஸ்லீம் தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். 
தமிழ் மக்களின் பெரும் பான்மையான வாக்குகளையும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளின் ஆதரவையும் பெற்று அமைச்சர்களாகவும் முதலமைச்சராகவும் ஆகிக்கொண்டவர்கள் இன்று அதே தமிழ் இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க செயற்படுகின்றமை ஆபத்தானது.
தமிழர்களைப்  பொறுத்தமட்டில் இது அவர்கள் மீது முஸ்லீம் தலைமைகளால் மறைமுகமாக தொடுக்கப்பட்டுள்ள போர்  இதனை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். 
கிழக்கை பொறுத்தமட்டில் தமிழ் மக்களின் இருப்பை அழித்துவிட்டு முஸ்லீம் சமூகம் ஒருபோதும் வாழ முடியாது. 
முஸ்லீம்களின் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து பொருளாதாரமும் தமிழர்களிலேயே தங்கியுள்ளது. அதே போன்று தமிழர்களின் வியாபார தேவைகள் பல முஸ்லீம் சமூகத்தில் தங்கியுள்ளன. 
இன்நிலையில் அரசியல் அதிகாரப் பகிர்வில் முஸ்லீம் தலைமைகளின் ஆதரவு தேவை என்பதை காரணம் காட்டிக்கொண்டு தமிழ் மக்கள் மீது மறைமுகமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மறைமுகமான காணி கலாசார பண்பாட்டு ஆக்கிரமிப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு குடை பிடித்து திரிகிறது.
இறுதியில் கிழக்கில் தமிழர்களுக்கான அதிகாரத்தை முஸ்லீம் தலைமைகளிடமோ அல்லது பாகிஸ்தான் அரசிடமோ கெஞ்சி பெறவேண்டிய நிலையை தமிழ் அரசியல் தலைவர்கள் உருவாக்கி கொடுத்துவிட்டு கிழக்கு முஸ்லீம்களுக்கு வடக்கு தமிழர்களுக்கு என்ற சித்தாந்தத்தை உருவாக்கி விடப்போகின்றார்கள் என்பது மட்டும் உண்மை. 
கிழக்கில் தங்களது இருப்பை பாதுகாக்க பல ஆயிரக்கணக்கான உயிர்களை தமிழர்கள் தியாகம் செய்துள்ள நிலையில் இன்று முஸ்லீம்  தமிழ் உறவு பற்றி பேசிக்கொண்டு தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தில் முதலமைச்சராக இருந்து கொண்டு தமிழர் களின் இருப்பை இல்லாதொழித்து முஸ்லீம் மத அடையாளங்களை கொண்ட மாகாணம் ஒன்றை உருவாக்க முற்படுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 
இதற்கான சரியான பதிலையும் தெளிவுபடுத்தலையும் முஸ்லீம் சமூக தலைவர் வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் மிகப்பெரிய இன வன்முறையை ஏற்படுத்த கூடிய சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 
ஊடகங்களிலும் பொது நிகழ்வுகளிலும் அரசியல் மேடைகளிலும் தமிழ் முஸ்லீம் உறவு குறித்து எந்த வித பிரச்சினைகளும் இல்லாதது போன்று  படம் காட்டுபவர்கள் பின்னர் இரகசியமாக அதற்கு மாறாக செயற்படுகின்றனர்.
உண்மையில் இந்த விடயம் பொது வெளியில் அலசி ஆராயப்பட்டு தீர்வு காணப்படவேண்டியது கட்டாயமாகும். 
30 வருட போராட்டத்தின் பின் வீழ்ந்து கிடக்கும் தமிழினத்தின் இயலாமை மீது ஏறிநின்று முஸ்லீம் மாகாண நிர்வாகம் ஒன்றை நிறுவ முற்படுவதும் அதற்கு  மைத்திரி அரசாங்கம்  குடைபிடித்து ஆதரவு வழங்குவதானது கிழக்கில் மீண்டும் திட்டமிட்ட தமிழின அழிப்பு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இந்த சந்தேகம் தமிழர்களுக்கு எழுவதற்கு பல நியாயமான ஆதாரவூர்வமான சம்பவங்கள் கிழக்கில் நடைபெற்று வருகிறது.  அது குறித்து தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் முஸ்லீம் தலைமைகளுக்கு உண்டு.
தமிழர்கள் சிங்கள தலைவர்களுடன் தங்களுக்கான உரிமையை கேட்டு போராடி வரும் பொது நீங்களோ அதே உரிமையை எந்தவித போராட்டமும் இன்றி தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களின் இருப்பை அழித்துவிட்டு பெற நினைப்பது எந்தவகையில் நியாயமானது.
  ஏன் முஸ்லிம்கள் மட்டும்  மதவாதபோக்குடன்    பிரித்து தனியான  அரசியல் அதிகாரம்  தனியான கல்வி அதிகாரம்  அரசியல் நிருவாகம் என உருவாக்கி வருகின்றீர்கள்  ?
உங்கள் செயற்பாடு  ? உங்கள் நோக்கம் தனியான இஸ்லாமிய மாகாணமாக கிழக்கை மாற்றி   பாக்கிஸ்தானுக்கு கிழக்கை கையகப்படுத்தி  இந்தியாவுக்கு எதிராகவும் இலங்கைக்கு எதிராக  கிழக்கில் பாக்கிஸ்தானுக்கு ஆதரவான மாகாணத்தை உருவாக்குவதா?  
பாக்கிஸ்தான் போன்று கிழக்கில் மத தீவிரவாதத்தை தோற்றுவித்து? இலங்கையில்  கிழக்கிஸ்தானை உருவாக்கவா நீங்கள் செயற்படுகிறீர்கள்.
தமிழின அழிப்பு நிறைவேற்றப்பட்ட மண்ணில்  மீண்டும் மற்றுமொரு மத கலாசார  அழிப்பை நடாத்தி வருகின்றனர்.
ஏன் தமிழர்களோடு இணைந்து வாழ முடியாது ?உங்களிடமிருந்து மதம் மட்டுமே வேறுபடுகிறது ? முஸ்லீம்கள் மத தீவிரப்போக்கே கடைப்பிடிக்கின்றனர் மதத்தின் பேரால் ஒரு இனமாக நீங்கள் சர்வதேசத்துக்கு அடையாளப்படுத்தியுள்ளீர்கள் 
தமிழ் தாய்மொழி பேசும் நீங்கள் வடகிழக்கை மொழிரீதியில் இணைந்து அரசியல்  அதிகாரம் பெற தடை விதிக்கின்றீர்கள் .
இந்திய தேசத்திற்குள் வாழும் முஸ்லீம்கள் இவ்வாறு வாழவில்லை அவர்கள் தமிழ் கலாசாரத்ததுடனும் இணைந்து வாழ்கின்றார்கள். 
கிழக்கில்  மட்டக்களப்பில் 85 வீத தமிழர் வாழும் இடத்தில் இஸ்லாமிய முறைப்படி சர்வதேச பல்கலைக்கழகம்   அனைத்து தொழில் நுட்பங்கள் அடங்களாக நிறுவப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு எதிராக இன உறவை முறித்து தனித்து இஸ்லாமிய மத வாத நீக்கம் கொண்ட  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை நீங்கள் எவ்வாறு ஆரம்பிக்கலாம். 

மற்றும் தென்கிழக்கில்   பல்கலைக்கழகத்தில் அரேபிய இஸ்லாமிய மதக்கல்வி  முஸ்லிம் வரலாற்று நூதனசாலை  ஆய்வு துறை அடங்களாக இஸ்லாமிய மதச்சாயத்துடனே  இஸ்லாமிய நிருவாகத்தின் கீழ்  முன்னெடுக்கப்பட்டுச்செல்கிறது .இவை இன மத நல்லுறவை  எதிர்காலத்தில் ஏற்படுத்துமா? 
ஏறாவூர் முஸ்லிங்களுக்கான தனியான புற்று நோய்வைத்திய சாலை,
முஸ்லிம் பெண்களுக்கான தனியான பேருந்து சேவை , அல்கிமா இஸ்லாமிய  முஸ்லிம்களுக்கான மருத்துவக்கல்லூரி சார்ந்த மருத்துவபீடம் ஓட்டமாவடியில் அமையப்பெற்றுள்ளது .
இலங்கை சட்டதிட்ட த்துக்கு மாறாக முஸ்லிம்களுக்கான தனியான காதிநீதிமன்றம் 
காத்தாங்குடி போன்று கல்முனையில் ஈச்சமர சாலை அமைக்கும் திட்டம் அரசியல் செல்வாக்குடன் அரச நிதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிந்தவூரில் முஸ்லிம்களுக்கு தனியான தொழில் நுட்பக்கல்லூரி அமைக்கப்பட்டமை
காத்தாங்குடியில்   நூதனசாலை  தொல்பொருளியல் அமைக்கப்பட்டு இன்டர்நேஷனல் ஜோக்கிரப்பில் இணைத்துள்ளனர்.
  கிழக்கில் பூர்வீக  வரலாறு கொண்ட தமிழர்களுக்கோ 
அல்லது சிங்களவர்கோ பொதுவான  பூர்வீக நூதனசாலை முழுமையானதாக  இல்லாத போது முஸ்லீம்களுக்கு பூர்வீக நூதன சாலை அமைத்து அதைஇன்டர்நேஷனல் ஜோக்கிரப்பில் இணைத்துள்ள கிஸ்புல்லாவின் நோக்கம் என்ன?
மட்டக்களப்பு கச்சேரியில் ஒரு குடிசையில் சில வரலாற்று சான்று பண்டய காலம் தொட்டு பாதுகாக்கப்படுகிறது  இது அரச அதிபரின்  கவலையீனம் காரணமாக இதுவரையில் நடவடிக்கை எடுக்காது முஸ்லிம்களுக்கு தனியே அனுமதி வழங்கியுள்ளார். 
மட்டகளப்பு நூதனசாலை ஏன் சர்வதேசமயப்படுத்த வில்லை அரச பண்டய நூதன சாலையை விட காத்தான்குடியில்  வரலாற்று தொல்பொருளியல்  நூதன சாலை எதற்கு?   
முஸ்லிம்களின் இஸ்லாமிய தீவிர மதபோக்கை இஸ்லாமிய வரலாற்றை நிறுவ  காத்தான்குடிக்கு முன்னெடுத்துச்சென்றுள்ளனர் இவை எதை காட்டி நிற்கிறது?
மட்டக்களப்பு மாவட்டமே  ஒட்டுமொத்த கிழக்கின் முக்கிய  தலைமையகமாகவும் ஆங்கிலேயர் காலம் தொட்டே மட்டக்களப்பு மாவட்டமே  ஒட்டுமொத்த கிழக்கின் முக்கிய  தலைமையகமாகவும்  இருந்துவந்துள்ள நிலையில் இதுவரை எவரும் சிந்திக்காத  தமிழின அழிப்பையும்  உலகவரலாற்றையும் இலங்கை வரலாற்றையும் மற்றும் செயலையும்  முஸ்லீம் தலைமைகளால்  முன்னெடுத்துச் செல்கின்றனர். 
இஸ்லாமிய. சட்டதிட்டங்களுடன் கூடிய சர்வதேச இஸ்லாமிய வங்கி மற்றும் காப்புறுதி நிதியம் கிழக்கு பகுதியில் தமிழ் கிராமங்கள் அடங்களாக சேவை அமையப்பெற்றுள்ளது 
இலங்கை அரச வங்கிகள் காப்புறுதி  சட்ட திட்டங்களை நிறுவனங்களை எதிர்த்து அமானா வங்கி  கடன் திட்டம் என இஸ்லாமிய இன்ரநசனல் வங்கி காப்புறுதி நிறுவனங்கள் கிழக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது .
மேலும் வீதிகளில் அரபு வாசகங்களும் இஸ்லாமிய வீதிக்கோபுரங்களும் அரச பொது கட்டிடங்களுக்கும் மதச்சாயம் பாடசாலை நூலகம் நூதன சாலை  பல்கலைக்கழக உட்பட    கடும்போக்கு இஸ்லாமிய சவுதி அரேபியா போன்று  பேரீச்ச மரங்களும் பொது வீதிகளில் நடப்பட்டுள்ளன .
இவை ஏனைய இன மதத்தினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
சர்வதேச இஸ்லாமிய சரியா சட்டத்தின் படி அமைந்த சுற்றுலா உல்லாச நீச்சல் தடாகத்துடன் கூடிய சுற்றுலா விடுதி
அரசு கிழக்கு மாகாணத்திற்கு வழங்கிய தொழில் பேட்டைகள் அனைத்தும் முஸ்லிம் ஊர்களில் நிறுவி முஸ்லிம்களுக்கு வேலைவாய்பு வழங்கியுள்ளனர்.
இஸ்லாமிய பகுதி
வைத்திய சாலைகளை நவினமயப்படுத்தியமை  பண்டய பாரம்பரிய  மாவட்ட வைத்திய சாலைகளை வீழ்ச்சி அடைய செய்தமை என முஸ்லீம் ஆக்கிரமிப்பு  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களை வறுமையான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
85வீதமான தமிழர்களுக்கு அபிவிருத்தி சென்றடயாமல் செய்த   முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக திட்டமிட்டு இச் செயல்களை  செய்து வருகின்றனர். 
கிழக்கில் தனியார் வைத்திய  சாலை ஆய்வுகூடம் ,சர்வதேச தரதிலான இஸ்லாமிய செல்வாக்கும் ஆதிக்கமும் உள்ள  வெளிநாட்டு தனியார் வைத்தியசாலை  கிளைகளையும் நிறுவியமை உள்ளிட்ட  முஸ்லிம் பகுதியில் முன்னெடுத்து செல்லும் இன்னும் பல செயற்பாடுகள் தமிழர்களைஅச்சமடைய வைத்துள்ளது.
குறிப்பாக அண்மையில் அரசாங்க அதிகாரி ஒருவர் முஸ்லீம்கள் சிலரின் அத்துமீறிய சட்டவிரோத காணி அபகரிப்பை தடுக்க முற்பட்ட போது சுடப்பட்டமையானது தமிழர்கள் மீது இஸ்லாமியர்கள் மறைமுக யுத்தம் ஒன்றை நடத்தி வருகின்றனர் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 


எனவே இதனை இனவாத பதிவாக கருதாமல் உடனடியாக இதற்கான வெளிப்படையான பதிலை முஸ்லீம் தரப்புக்கள் தந்தாக வேண்டும்.