சனி, 19 மார்ச், 2011

பூமிக்கு அருகில் சந்திரன்.


சோதிட சாஸ்திரத்தில் சந்திரனின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.சந்திரன்
வழமையான தூரத்தில் இருக்கும் போது,கடலில் ஏற்படும் மாற்றங்களை,நாம் 
கண் கூடாகக் காண்கிறோம்.பௌர்ணமி தினத்தில் கடற்கரையை போய்த் 
தரிசித்தவர்களுக்குத் தெரியும்,கடலின் சீற்றம் எப்படி இருந்தது என்பது பொதுவாக பூரணை தினங்களில் கடலை,நம்பி வாழும் மீனவர்கள் கூட 
கடலுக்குச் செல்வதில்லை,காரணம் கடலின் சீற்றம்.இது வழமையான பூரணை 
நாட்களில் இலங்கை, இந்தியாவில் இருக்கும் மக்களின் நம்பிக்கை.இந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைய நாள்,பூமியில் இருப்பவர்களுக்கு ஒரு 
விசேடமான நாளாகத்தான் இருக்கும். இது சோதிட சாஸ்த்திர ரீதியாக 
வெளியிடப்பட்ட கருத்தும் கூட,நமது சோதிட நிபுணர்கள் சொல்வதை யாரும் 
நம்ப வேண்டாம், அமெரிக்காவிலுள்ள பிரபல சோதிடர் ஒருவர் கூறியதையும் 
பாருங்கள்.இது இன்றைய பிரித்தானியா  டெய்லி மெயில் பத்திரிகையில் 
வந்த ஒரு விளக்கம்.இதை இவர் 1980 களில் இப்படியான சுப்பர் மூன் வந்த நேரத்தில் எழுதியது.இதைப் படிக்க நமது வகுப்பறை வாத்தியாரின் வகுப்பில் 
சொல்லியிருப்பதைப் படிக்க,இங்கே போகவும். 

விஞ்ஞானிகளின் கருத்து என்ன என்பதை கீழ் வரும் காணொளி விளக்குகிறது 
எது சரி என்பதை நாம்தான் தீர்மானிக்கப்  போகிறோம் எப்போது நாளைக் 
காலையில்.அலைகளுக்கும் சந்திரனுக்கும் தொடர்பிருப்பதை ஒத்துக் கொண்டுள்ளவர்கள்,நில நடுக்கம்,எரிமலை வெடிப்பு என்பவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை .இதைப் படிக்க  காணொளியைப்    பார்க்க இதற்கு முந்திய 
இடுகைக்குச் செல்லவும்.  

Do People Act Odd When the Moon Is Full?