புதன், 31 ஆகஸ்ட், 2022

38ம் வருட திருமண நாள்.!!

 38ம்,வருட திருமண நாள்.!(31-8-2022)




"உருவத்தில் இளமை சென்று முதுமை வந்தாலும்-நம்

உள்ளத்திலே முதுமை சென்று இளமை உண்டாகும்."



#38#year#anniversary #wedding #


சனி, 27 ஆகஸ்ட், 2022

ஐந்தாவது ஆண்டு திருமண நன்நாள்.

 ஐந்தாவது ஆண்டு திருமண நன்நாள்.(27-07-1917).

எனது இளைய மகளும் மருமகனும், பேரப்பிள்ளைகளும் அமெரிக்கா பூஸ்டனில்

வாழ்கிறாரகள்,அவர்களின், ஐந்தாவது ஆண்டு திருமண நன்நாள் இன்று.




வாழ்க்கை வானில் சேர்ந்து பறக்க

சிறகை விரிக்கும் வானம்பாடி பறவைகள் நீங்கள்...

வரும் காலமும், வரப்போகும் காலமும் ச

சுற்றத்தோடும் நட்போடும் அமைய...

நம்பிக்கை சிறகுகள் முளைத்து 

வானம் தாண்டி பறந்து செல்லும் 

வெற்றி பறவைகள் நீங்கள்...

வெயில், மழை, புயல் 

என எத்துனை இடர் வரினும் 

இன்முறுவல் மாறாத இன்முகத்தோடு 

எளிமையும் வளமையையும் 

சேர்த்து வாழ்வீராக...

உனக்காக உன்னவளும் 

உனக்காக உன்னவனும் 

என்று தொடங்கி...

நமக்காக நாங்கள் 

என்று நினைவுக்கூறும் 

இன்னாள்...

நன்னாள், பொன்னாள்... 

ஆம். 

இது உங்கள் திருமண நாள்...

என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...!!

அன்புடன்,

அம்மா,அப்பா.


  https://goo.gl/pk9rXe

கரடிகள் சரணாலயம்,நோர்வே.

 Biorne parken




















அச்சமில்லை.!

 




அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


பாரதியார் கவிதைகள்.