புதன், 17 மே, 2023

சொல்லுவார்,வார்த்தை கேட்டு.



சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை யிகழ்வார் புல்லர்

நல்லவர் விசாரி யாமற் செய்வரோ நரிசொற் கேட்டு

வல்லியம் பசுவுங் கூடி மாண்டதோர் கதையைப் போலப்

புல்லிய ரொருவ ராலே போகுமே யாவும் நாசம். (45)


  • கேட்பார் சொல்லைக் கேட்டுத் தன் தோழனை இகழ்வாகக் கருதுபவர் ‘புல்லர்’.
  • நல்லவர்களை விசாரிக்காமல் தோழனை இழப்பார்களோ?
  • நரியின் சொல்லைக் கேட்டுப் புலியும் பசுவும் கூடி வாழ்ந்த கதை போல் புல்லியன் ஒருவனால் நல்லவன் வாழ்வு முடிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள