வியாழன், 8 செப்டம்பர், 2022

அழுகை.!

 இதயத்தின் வலி ஏற்படுத்தும் தாக்கம்

எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகும் தருணம்,

உறவுகளால் ஏற்படும் மன உழைச்சல்

தாறுமாறான தவிர்க்க முடியா நினைவுகள், 

ஆற்றொனாத் துன்பம் அடி மனதில்

ஏற்றிய வலி இதயத்தில் இருக்கும்  வரை,


தங்கத்தை நெரிப்பிட்டு தரமாக்கி

தரத்தை நிர்ணயம் செய்வதுபோல்

உள்ளத்தை உருக்கி உணர்வுகள்  அழிந்து

வெள்ளத்தைப்போல கண்ணீர் புரண்டு

நெஞ்சத்தை தாக்கி யழித்து என்னையும்

கொஞ்சம் அழ வைத்துவிட்டது.


இறைவன்  அழுகையின்   மூலம்,

எதை நமக்கு உணர்த்துகிறான்,

வேதனனையைப் பிழிந்து,

கண்ணீராக்கி மன வலிகளைக் குறைக்கின்றது..

அனுபவம் எவ்வளவு பெரிய ஞானி,

அனுபவித்துப் பாருங்கள்  புரியும்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள