புதன், 18 ஜனவரி, 2023

ஏறுதழுவுதல்.

 அந்தாதிக் கவிதை - 8 / "ஏறு தழுவல்"


"ஏறு தழுவல் தமிழன் விளையாட்டு
விளையாடி அவன் சேர்த்த வீரம்!
வீரம் கொண்ட காளை அடக்கி
அடங்கா எதிரிக்கும் அச்சம் கொடுப்பான்!
கொடுத்த வாக்கை என்றும் மாற்றாமல்
மாறாத நல்ல ஆட்சி அமைப்பான்!
அமைத்த கட்டிடங்களை அழகு ஆக்கி
ஆக்கிய நெறிகளை அறிமுகம் செய்வான்!
செய்த மல்யுத்தத்தில் தெரியும் வீரம்     
வீரத்தின் சிறப்பே ஏறு தழுவல்!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள